Yarl Forum
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- Netfriend - 10-20-2005

பாரிசில் உள்ள நம்ம சனம் எல்லாகலைகளிலிம் மற்றய புலத்தை வெண்டிறினம் எண்டுறீங்க... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :oops:


- kurukaalapoovan - 10-20-2005

மன்னிக்கவும் ஆங்கிலத்தில் எழுதுறதுக்கு. சரியான தமிழ் சொல்லுகள் தெரியாததால் சொல்ல வாறதை விளக்கிறது கடினம்.

It might be copied from the idea of "a promotional event to attract potential investors when you have a business idea". If its a forum to bring together the investors, entrepreneurs & innovators, then its a great idea. Our society needs such changes in attitudes towards economy & wealth creation.


- sabi - 10-20-2005

Netfriend Wrote:பாரிசில் உள்ள நம்ம சனம் எல்லாகலைகளிலிம் மற்றய புலத்தை வெண்டிறினம் எண்டுறீங்க... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: :oops:





அதெப்படி பரிசில் உள்ள எல்லாரையும் குறைசொல்லுவீங்கள்
இதுவரைக்கும் இப்படியான சடங்கைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. சாத்திரி ஐயா சொல்லித்தான் இப்படியும் செய்வார்கள் என்று தெரியும். யாரோ சிலர் செய்வதை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குறைகூறுவது சரியில்லை :x :evil:


- sathiri - 10-25-2005

கடந்த ஒரு மாத்தில் அய்ரோப்பாவில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் புலத்தில் எம்மவர் நிலை இன்p என்னாகும் என்கிற ஒரு கேள்வி குறியை போட வைத்துள்ளது

காரணம் புலத்தில் தமிழர் இன்னெரு தமிழரை கொலை செய்தது இது ஒன்றும் முதல் தடைவையோ புதிதோ அல்ல காரணம் இதற்கு முதலும் குழு சண்டைகள் இளைஞர் மத்தியிலான மோதல்கள் மற்றும் இன்னொருவர் மீதான பழி தீர்த்தல் என்று கொலைகள் நடந்துள்ளன ஆனால் இம்முறை நடந்த கொலைகள் இரண்டும் கணவர்மார் தங்கள் மனைவி பிள்ளைகளை கொலை செய்துள்ளனர் என்பதே.

அது மட்டுமல்ல இரண்டும் நன்கு திட்டமிடபட்டு நடந்தேறியிருக்கிறது . எனவே குழு சண்டை மோதல் கள் போல் இதனையும் கொலை தானே என்று சொல்லிவிட்டு காவல் துறை கவனிக்கும் என்று விட்டு பேசாமல் இருந்து விடலாம் தான் .

ஆனால் இதன் போக்கு புலத்தில் எதிர் காலத்தில் எமது இனத்தின் மீதே அய்ரோப்பியர்களினால் ஈழதமிழர் ஈவிரக்கமற்ற வன்முறையாளர்கள் கட்டியமனைவி பெற்ற குழந்தையை கொல்லுமளவிற்கு மனிதாபிமானமற்றவர்கள்: என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.

ஏனெனில் அய்ரோப்பாவில் ஏற்கனவேஅய்ரோப்பியர் மட்டுமல்ல அய்ரோப்பிய காவல் துறையும் சில இனத்தவரை அவர்கள் திருடர்கள் வன்முறையாளர்கள் என்று அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .அவர்கள் பட்டியலில் எமதினத்தை சேர்க்கும் பட்டியலில் எம்மவர் சிலர் ஈடுபடுகிறார்களே என்கிற கவலை எழுகிறது.

குழு மோதல்களில் என்று பார்தால் இளைஞர்களின் பொறுமையின்மை பக்குவமின்மை அவர்களின் வேகம் தாங்களே தங்களை கதா நாயகர்களாக நினைத்து செயல்படுதல்அதற்கு தீனி போடும் தென்னிந்தசினிமா இதனால் பெரிய காரணமேதுமற்ற சடுதியான கொலைகளே இதுவரை நடந்துள்ளது அதுவும் முன்றாவது நபர் மீது.ஆனால் அண்மையில் சுவிசில் தனது மனைவியையும் பிள்ளை களையும் கொலை செய்தவர் நன்கு திட்டமிட்டு செயல் பட்டிருக்கிறார்.

அவரது போதாத காலம் அவர் கொலை செய்து விட்டு வீட்டை கொழுத்தி விட்டு போக முற்பட்ட போது குற்றுயிராய் கிடந்த மனைவி அவரை பாய்ந்து கட்டி பிடிக்க அவரும் தீயில் கருகி இப்போ வைத்திய சாலையில் உயிருக்கு போராடியபடி இருக்கிறார். மற்றையது யெர்மனியில் அவரும் மனைவி பிள்ளையை கொன்று விட்டு தப்பிக்க முதல் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு யெர்மன்காரர் உசாரடைந்ததால் இப்போ காவல் துறையின் வசம்.

காரணம் என்னவென்று பார்த்தால் எல்லா குடும்பத்தினுள்ளும் வருகின்ற கணவன் மனைவி பிணக்குதான் சரி பிரச்சனை பெரிதானால் பேசாமல் இரண்டு பேருமே பிரிந்து வாள வசதிகளும் சட்டங்களும் அய்ரோப்பாவில் தாராளமாகவே உள்ளது அதன்படி செய்யலாமே? சரி கணவன் மனைவி பிரச்சனையென்றால் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள் ?? கடும்ப பிரச்சனைக்கு கொலைதான் முடிவா?? ஈழத் தமிழர் என்றால் வன்முறையாளர்களா?? கேள்வி இது விடை காலம் பதில் சொல்லட்டும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 10-25-2005

முழுப்பதிலாக இல்லாவிட்டாலும் முக்கிய அடிப்படைக் காரணங்களாக சொந்த அபிப்பிராயத்தில் உள்ளவை...

-1- விவாகரத்து சார்ந்த கொளரவப்பிரச்சனையும் அதற்கு காரணமாக இருக்கும் எமது சமுதாய அழுத்தமும்.

-2- வாழ்கைத்துணையைத் தீர்மானிப்பதில் காட்டப்படும் ஆரோக்கியமற்ற அணுகு முறை. முக்கியமாக வயது வந்தோரின் பிழையான வழிநடத்தல்கள்.

-3- அடிப்படை மனிதவிழுமியங்களைப் யதார்த்தபூர்வமாக உணர்த்தி சுயதெளிவில் பொறுப்புள்ள எதிர்கால சந்ததியை உருவாக்காது சமயரீதியாகவும் மூடநம்பிக்கை கலாச்சாரம் சார்பகவும் போதித்து எமது சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கும் சிறுவயதுப் பாடசாலைவிதானங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள்.


- Vasampu - 10-26-2005

வணக்கம் சாத்திரி

நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல . அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகளுள்ளன. பின் இவருடன் சேர்ந்திருந்தா என்பதே நானறிந்த தகவல். அதுபோல் ஜேர்மனியில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தைப் பற்றி தெரிந்தவர்களும் கருத்துச் சொல்ல மறுக்கின்றார்கள். அது ஏன்???????


- AJeevan - 10-26-2005

[quote=Vasampu]வணக்கம் சாத்திரி

நீங்கள் பொதுவாக ஐரோப்பாவில் நிகழ்ந்த இரு கொலைகளென குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஏன் இந்தக் கொலைகள் நடந்தன என்ற விபரம் எவரும் எழுதுவதில்லை. இதனால் நாங்களே எங்கள் சமுதாயத்தின் மீது சேறு புூசும்போது மற்றவர்கள் புூசுவதில் வியப்பென்ன. இது பற்றி நான் ஏற்கனவே வேறொரு பக்கத்திலும் எழுதியுள்ளேன். தவறுகள் சுட்டிக்காட்டபடவேண்டியதுவே. ஆனால் அதை விபரமாக எழுதுவதே முக்கியம். <b>சுவிஸில் நடந்ததாக நீங்கள் குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவியல்ல .</b>

வசம்பு

<span style='color:red'><b>சுவிசில் கணவன்-மனைவி என சாத்திரி கூறியது சரியானதே.</b>

கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே மணமானவர். ஆனால் கணவன் இறந்த பின்னர் அந்த பெண் கொலை செய்தவரை மணமுடித்திருந்தார்.(மறுமணம் செய்திருந்தார்)

முன்னைய கணவருக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இறந்த பெண்ணுக்கு இருந்தார்கள். இவர்களும் கொலை செய்யப்பட்டனர்.

மேலதிக விபரங்கள் தெரியவில்லை.</span>


- வினித் - 10-26-2005

þÈó¾Å÷¸û ¸Ã¦ÅðÊ º¡÷ó¾Å÷¸Ç¡?
«ôÀÊ¢ý
[url=http://www.' target='_blank'>http://www.<span style='color:red'>*********[/url]
<b>¾ÅÚ ¬Â¢ý þ¨¾ ¿£ì¸¢ Å¢¼×</b>õ





[size=9]இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
மன்னிக்கவும் இராவணன் அண்ணா


- sathiri - 10-26-2005

பண சடங்கு பற்றி கே எஸ் பாலசந்திரன் அவர்கள் ஒருபேப்பருக்காக எழுதியது http://www.orupaper.com/issue33/pages_K__18.pdf


- sathiri - 11-03-2005

இன்று புலத்தில் பலஊடகங்கள் பொருகி விட்டன அவ் ஊடகங்களால் எமது போராட்டத்தை பற்றிய தெளிவை எமது பேராட்டத்தின் நியாயங்களை எவ்வளவு தூரம் அந்தந்த நாடுகளில் அந்த நாட்டு மொழில் அந்த நாட்டுமக்களிற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின்பங்கு என்பது இந்த விடயத்தில் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது .புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் எவ்வளவு தூரம் உத்தியோக புர்வமாகவோ அல்லது நட்பு ரீதியான தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவுமில்லை

அதனாலேயே புலத்தில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்:பன பற்றிய விபரங்களோ அல்லது அதன் விளக்கங்களோ அய்ரோப்பிய மக்களிற்கு முறையாக சென்றடையவில்லை.அதற்கு மிக பெரிய உதாரணம் புலிகளின் மீதான அய்ரோப்பிய யுனியனின் சில நடவடிக்கைகளைஎதிர்த்து அண்மையில் பெல்யியத்தில் நடந்து முடிந்த ஊர்வலம்.

எல்லா தமிழ் ஊடகங்களிலும் ஒருமாத காலமாக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு பெல்யியத்தில் பதினைந்தாயிரம் மக்களிற்கு மேல் கூடி நடந்த மிக பெரிய அந்த பேரணி பற்றி பெல்யிய மற்றும் அய்ரோப்பிய ஊடகங்களிற்கோ மக்களிற்கோ தெரியாமல் போய்விட்டது.

ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது போல் நடந்து முடிந்து விட்டது.அந்த ஊர் வலத்திலும் தமிழ் ஊடகவியலாளர் எனப்படுபவர்களும் ......வழைமை போல அடையாள அட்டையை மார்பில் குத்திகொண்டு புகை படங்களிற்கு அளகு காட்டி பின்னர் நடந்தவற்றை அதனை ஒரு செய்தியாய் தயாரித்து குறிப்பாய் தாங்களும் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட புகை படங்களுடன் ஒரு செய்தியையே அதுவும் தமிழ் ஊடகங்களிற்கு மின்னஞ்சல் செய்ததோடு; அவர்கள் பணி முடிந்து விட்டது.

இதனை அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட யாரும் செய்திருக்லாம் அதற்கு புலம் பெயர் ஊடக துறை அதற்கொரு தலைவி என்றொரு தகுதியோ அடையாளமோ தேவையில்லையே.

அந்த மாபெரும் ஊர்வலத்தின் விபரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அய்ரோப்பிய ஊடகங்களினுடாக அய்ரோப்பிய மக்களிடம் எடுத்து சென்று அவர்களின் ஆதரவினை எமது பக்கம் பெற்றுதர தவறிய மாபெரும் தவறு புலம் பெயர் ஊடக தலைவியையே சாரும்.

அதுமட்டுமல்ல அய்ரோப்பிய ஊடகங்களில் செய்திகள் வெளிவராததை சுட்டி காட்டி தமிழ் தேசியத்திற்கொதிராக பிச்சை காசிற்காக எழுதும் எச்சிலிலை இணைய மற்றும் செய்தி ஊடகங்களின் நகைப்பிற்கும் நாம் ஆளாகி விட்டோம் என்பதே மிக பெரிய வேதனை. இனிமேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் அதற்கு பொறுப்பானவர்கள் பாத்து கொள்ள வேண்டும்

.இல்லாவிடில் அவர்களிற்கு நேரமின்மை இயலாமை என்றால் நல்ல வேகமும் திறைமையும் உள்ள இளம் சந்ததியினரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அவர்கள் பேசாமல் வீட்டிலிருந்து தொடர் நாடகம் பார்ப்பது மேல் . சிந்திப்பார்களா???


- vasisutha - 11-03-2005

உண்மைதான் சாத்திரி.. இந்த பேரணி நடந்தது தமிழ்
ஊடகங்களுக்கு மட்டும் தான் தெரியவந்திருக்கிறது.
இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட
ஒரு பேரணிபற்றி எந்த வேற்று ஊடக நிறுவனங்களும்
சிறு குறிப்புக் கூட வெளியிடவில்லை.


- KULAKADDAN - 11-03-2005

நீங்கள் சொல்வது உண்மை தான், சாதரணமான நிகழ்வுகளே உலக செய்தி நிறுவன செய்திகளில் இடம்பெறும் போது இம்மாதிரி பலர் கூடிய நிகழ்வு ஊடகங்களின் கவனத்துக்கு வராதது அல்லது அதை அவர்கள் பால் கொண்டு சேர்க்கமுடியாமல் போனது கவலைக்குரியது,


- Vasampu - 11-03-2005

சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா?? இங்கே தேசியத் தொலைக்காட்சி தேசிய வானொலி என்பன என்ன செய்கின்றன என்று உங்களால் சொல்லமுடியுமா??


- Nilavan. - 11-04-2005

இவர்களுக்கு ஊடகம் என்பது என்ன என்று தெரியவில். ஐரோப்பிய ஊடககங்களின் பணியை தமிழ் ஊடககங்கள் செய்ய முடியாது. ஐரோப்பிய ஊடகங்கள் தமது பணியை சரிவர செய்யவில்லை. என்று அவர்களின் நிர்வாகத்துக்கு அறிவிப்பதை விட்டு தமிழ் ஊடக வியலாளர்களை குறை சொல்வதில் என்ன இருக்கிறது? இப்படியான கூக்குரல்களால தான் தமிழ் ஊடககத்துறை இன்னும் வளராமல் இருக்கறது. பல திறமையானவர்கள் தாமும் தமது பாடும் என்றிருக்கின்றனர். வட அமெரிக்காவில் அந்த நாட்டு ஊடகங்கள் எங்கள் நிகழ்வுகளுக்கும் ஒரு முக்கியம் கொடுக்கிறது. அதற்க்கு காரணம் தமிழ் ஊடககங்கள் அல்ல மக்கள். உங்களை போன்ற மக்கள் ஊடகங்கள் மீத பழி சொல்லவே இருக்கின்றனர். ஆனால் அந்த நாட்டு ஊடகங்களுடன் நெருங்கி அவர்களுடன் கருத்து பரி மாற்றங்களில் குறிப்பாக நிகழ்ச்சிகள் பற்றிய அபிப்பிராயங்கள்...கருத்தெடுப்புக்கள் என்று பலவற்றையும் அவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம்... அவர்களுக:கு தமிழர்களும் எமது ஊடகத்தை கேட்கிறார்கள் பார்க்கிறார்கள் எனவே அவர்களது நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஆசை வரும்.. அதே போல அரசியல் hPதியிலும் கட்டிகளுடன் இணைந்து தமிழர் செயற்ப்படவேண்டும் அதை விடுத்து வெறுமனே தமிழ் ஊடகங்கள் மீத பழி போடுவதல் எந்த பயனும் இல்லை. இதற்க்கு ஒரு உதாரணமாக கனடிய தமிழர்களை எடுத்து கொள்ளுங்கள். ...(அவர்களே இன்னும் வளர்வதற்க்கு நிறை இருக்கிறது) அங்கே பொங்கு தமிழ் நடந்த போது அதை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது கனடிய ஊடககங்கள்... குறிப்பாக CityTV, CP24 மற்றும; 680AM OmniTV அதை விட பத்திரிகைகள்.. அதே போல சுனாமி தொடர்பாக நடந்த நிகழ்வுகள்...மற்றும் பல முக்கியமான நிகழ்வுகளாக அவர்கள் கருதும் நிகழ்வுகள் பற்றி அறிவித்தார்கள். அதற்க்கு காரணம் தமிழர்கள் இங்கிருக்கும் சமூதாயத்துடன் ஒன்றித்து தமது தனித்துவத்தை இழக்காமல் அதே நேரம் மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்ப்படுவதோடு..கனடிய ஊடகங்களுடன் அவர்கள் இணைந்து செயற்ப்படகின்றனர்... இங்கும் சன்TV இருக்கிறது..ஜெயாTV இருக்கிறது. T.V.I இருக்கிறது..மாருதி TV இருக்கிறது...அவற்றை மட்டுமே பாhத்து என்ன செய்ய முடியும்..... கொஞ்சம்..உங்களை சற்றி என்ன நடக்கிறது என்று அறிய உங்கள் நாடுகளின் தொலைக்காட்டி..வானொலி போன்ற ஊடககங்களையும் பாருங்கள் கவனியுங்கள்..நீங்கள் அவர்களின் நேயர்கள் வாசகர்கள் என்று அவர்கள் உணரும் போது உங்கள் அழைப்பின்றியே அவர்கள் உங்கள் நிகழ்வுகளுக:கு முன்னுரிமை கொடுப்பார்கள்...


- Nilavan. - 11-04-2005

Quote:சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா??

என்ன வசம்பு இது கூட புரியல்லையா..சாத்திரியின்ர சாத்திரத்தில யாராவது ஒரு அப்பாவியை பற்றி எழுதனும்எ ன்று தோன்றியிருக்குமு; உடன எழுதியிருப்பார்..இதையேல்லாம் பெரிதாய்எடுத்த யார் அது எனறு கேட்க அவர் பிறகு பேரை சொல்ல பிறகு...வலைஞன் அதை வெட்ட ஏன் அது..


- Vasampu - 11-04-2005

நிலவன் சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமன்றி திறைமையான தமிழ் ஊடகவியலாளர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை. உண்மையில் எனக்குத் தெரிந்த பல நல்ல ஊடகவியலாளர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று ஒதுங்கியே இருக்கின்றார்கள். பணத்தைக் கொடுத்து ஊடகவியலாளர் என்று தம்மைத்தாமே பிரகடனப்படுத்துவோர் தான் இங்கே கொக்கரித்துக் கொண்டு தெரிகின்றார்கள். இவர்களுக்கு மிண்டு கொடுக்க ஜால்ராக்கள் வேறை. :roll: :wink:


- வினித் - 11-04-2005

¿¡Ûõ ¸¡Åø þÕó¾Éý ²Ðõ ¦º¡øÖÅý¸§Ç ±ñÎ

¬½¡ø <b>Netherlands Ä RTL5 TV </b>Ä ÁðÎõ teletext Ä
§À¡ðÎ þÕó¾Ð


- Nilavan. - 11-04-2005

அது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு என்றோ இல்லாமல் போனது எனலாம்...நல்லதை செய்தாலும் குற்றம் சொல்லுவார்கள் கெட்டதை சொன்னாலும் குற்றம் சொல்லவார்கள்.. ஒரு ஊடகவியலாளர் என்பவன் தனது சிந்தனையில் தனது சமூகத்துக்காக எழுதவேண்டும் அல்லது செயற்ப்படவேண்டும்..ஆனால் இங்கு பல நல்ல மக்கள் சேவையில் உள்ள ஊடகங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. அது கவலை தரும் விடையம். இங்கு விமர்சனம் என்பது எப்படி எதற்காக எழுதுவதென்பது தெரியவில்லை. ஒருவனின் பிழையிருந்தால் அந்த பிழைழய மட்டுமே எமது சமூகம் பார்க்கிறது..அவனில் இருக்கு..சரியான நோக்கத்தை அவன் தன் சமூகத்துக்கு செய்தவற்றை ஒரு போதும் சீர்து}க்கி பார்ப்பதில்லை..


- Nilavan. - 11-04-2005

அது வசம்புவின் இந்த கருத்துக்கு எழுதப்பட்ட கருத்து:
நிலவன் சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமன்றி திறைமையான தமிழ் ஊடகவியலாளர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை.


- kurukaalapoovan - 11-04-2005

எங்கடை சனம் TTN அய் காசுகுடுத்து பாக்குமா எண்டபிரச்சனை இருக்கு. ஜரோப்பாவில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக இருக்கிற ஒரே ஒரு தொலைக்காட்சி TTN. தமிழீழ தேசியத்தொலைக்காட்சி (NTT) ஒளிபரப்புகளை ஜரோப்பாவிற்கு வளங்கும் ஒரே நிறுவனமும் TTN தான். ஒரு தேசிய தொலைக்காட்சி நிகள்சிகளை பணங்கட்டாமல் பார்க்க வழிசெய்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

பெரிய செய்திநிறுவனங்களைத்தவிர (BBC, CNN, AFP, Reuters, DW etc..) பல ஜரோப்பியநாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் இலங்கைத்தீவில் இல்லை. பலநிறுவனங்கள் இந்தியாவிலுள்ள வதிவிட செய்தியாளரால் தான் கவனிக்கப்படுகிறது.

பொதுவாக உள்ள குறைபாடு தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளைத்தவிர வேற்று மொழிகளில் தினந்தோடும் செய்திகள் வருவதில்லை. அதைவிடக்கேவலம் வாரம் மாதம் ஒருக்கால் எண்டு கூட ஒரு ஊடகத்திலும் சஞ்சிகை வடிவிலாவது வேற்று மொழிகளில் ஒண்டும் வருவதில்லை.

கடந்த 2...3 மாதங்களில்தான் லங்காசிறி, சைபர்நியூஸ் போன்றவர்கள் Altavista Babblefish தன்னியக்க மொழிபெயர்பின்மூலம் சில வேற்று மொழிகளில் செய்திகள் தருவதாக கூறிக்கொள்கின்றன. இந்த தன்னியக்க மொழிபெயர்பில் பல தவறுகள் இருப்பது மூலச்செய்தி செல்லபடும் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் இரண்டையும் வாசிக்கும் போது தெரியும்.

TTN subtitles இல் NTT செய்திகளை மீள் ஒளிபரப்பும் போது வேற்று மொழிகளில் போடலாம். TTN இயங்கும் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தராதரம் (DVB-S broadcast standard) இதற்கு இடமளிக்கிறது. மேலும் TTN பல்மொழி teletext ஒளிபரப்பு செய்யலாம். இதுக்கும் அவர்கள் தற்போது இயங்கும் தொழில்நுட்பமுறையில் இடமுண்டு.

ஜரோப்பிய மொழிகளை சரளமாக ஒலி ஒளிபரப்பு தரத்திற்கு கதைப்பதில் தான் தயக்கம் எண்டாலும் தட்டச்சு செயவதிலுமா?

பொறுப்புள்ளவர்கள் கவனமெடுத்து செய்வார்களா? :roll: