Yarl Forum
Breaking News - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: Breaking News (/showthread.php?tid=7412)



- Mathan - 11-17-2005

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை: தமிழ்செல்வன்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எப்போதுமே தங்களது அக்கறையின்மையை, ஆர்வமின்மையைக் காட்டியிருக்கிறார்கள் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனாதிபதி தேர்தல்கள் பொதுவாக தங்களை ஒடுக்கி வைத்த சிங்கள பேரினவாத தலைமைத்துவம் அதிகாரத்துக்கு வருவதையே குறியீடாக காட்டியது என்று தமிழ் மக்கள் கருதிவந்துள்ளார்கள் என தமிழோசைக்கு அளித்த சிறப்புப் பேட்டியொன்றில் தமிழ்ச்செல்வன் கூறினார்.

யுத்தம் உக்கிரமாக ஏவிவிடப்பட்டபோது, இடைக்காலத்தில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வைக் கொண்டுவருவோம் என்று சிங்கள அரசியல்வாதிகள் கூறி தேர்தல்களில் நின்றபோது தமிழ் மக்கள் மனங்களில் சிறிதளவு நம்பிக்கை தோன்றிய சூழ்நிலைகள் ஏற்பட்டது உண்மை ஆனால் அந்த நம்பிக்கைகள் நிறைவேறவில்லை என்றார் அவர்.

இந்த முறையும், ரனில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரது ஆட்சிக்காலங்களிலும், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் ஏற்படவில்லை தமிழ் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிலையை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

BBC Tamil


- வினித் - 11-17-2005

<span style='font-size:25pt;line-height:100%'>பாண்டிருப்பில் குண்டுவெடிப்பு: 2 இளைஞர்கள் பலி
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 14:19 ஈழம்] [அம்பாறை நிருபர்]
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 இளைஞர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.</span>
<b>வீடு ஒன்றில் வெடிகுண்டை இவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தபோது இந்த சமப்வம் நடைபெற்றதாக கல்முனை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது வீட்டில் வேறு எவரும் இருக்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சத்தத்தினால் பாண்டிருப்பு கிராமமே அதிர்ந்ததாக அப் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.</b>


- kurukaalapoovan - 11-21-2005

நெடுந்தீவில் 2 கடற்படையினரைக் காணவில்லை. தீவு ஆக்கிரமிப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தேடுதலில் 10 இளைஞர்கள் கைது.
http://www.eelampage.com/?cn=21887
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16382


- shanmuhi - 12-22-2005

இருபாலைக்கும் கோப்பாய்க்கும் இடையில் வெடிச்சத்தம் கேக்கிறது கைக்குண்டு ஒண்று வெடித்துள்ளது. - தொடர்ந்து துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கின்றது

ஜ வியாழக்கிழமைஇ 22 டிசெம்பர் 2005 ஸ ஜ கனகசபை ஸ
ஆமி சுட்டுக்கொன்டு இருக்கிறார்கள் மேலதிக தகவல் வெளியே சென்று எடுக்கமுடியாது தெடரும். அதற்கு அருகில் இருந்து இந்த தகவல் பதிவாகிறது.

nitharsanam


- N.SENTHIL - 12-28-2005

More deaths in eastern Sri Lanka

Sri Lankan government forces are facing an upsurge in violence
At least two suspected Tamil Tigers have been shot dead by Sri Lankan troops in the east, a day after a Tamil parliamentarian was killed in the area.
Military officials say the rebels were killed when they allegedly attacked the soldiers and they fired back.

On Sunday, Tamil MP Joseph Pararajasingham, 71, was shot at close range at a church in Batticaloa.

Both the Tamil Tigers and the government have blamed each other over the killing.

"When we were clearing an area... two terrorists tried to attack our troops," military spokesman Brigadier Prasad Sarasinghe is quoted as saying by AP of the latest attack.

Two civilians were also killed in the north-eastern town of Trincomalee, reports say.

Increased violence in recent weeks has deeply concerned international mediators, who say the 2002 ceasefire is in grave danger.

Killing

Mr Pararajasingham represented the Tamil National Alliance (TNA) party in parliament.

The TNA is linked to the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Police said at least eight other people, including Mr Pararajasingham's wife, were injured in the shooting at a crowded midnight service at St Mary's church in Batticaloa, 300km (190 miles) east of the capital, Colombo.

The motive for the killing was unclear.

À¢.À¢.º¢ ¦ºö¾¢


The Tigers said "chauvinistic forces have taken away this patriot who has worked for the Tamil nation's liberation and promotion of human rights".

Meanwhile the government said the Tigers had planned the killing, as they "were desperately trying to divert the attention elsewhere and create mayhem and havoc while eschewing political discussions".

The Tamil Tigers have been fighting for a fully-independent ethnic homeland since 1983.


- Mathan - 12-28-2005

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொலை

யாழ் பருத்தித்துறை வீதியின் - சங்கிலியன் வீதிச் சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த முற்பட்டதாகவும், அதன்போது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டதாகவும், கைக்குண்டு ஒன்றும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவரே இராணுவத்தின் மீது கைக்குண்டு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இராணுவத்தினர் சடலங்களை யாழ் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இறந்தவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலங்களையும், சம்பவ இடத்தையும் யாழ் மாவட்ட பதில் நீதவான் திருமதி சரோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உரும்பிராய், புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களில் இராணுவத்தினர் மீது இன்று நடத்தப்பட்ட இருவேறு கைக்குண்டு தாக்குதல்களில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி புலோலி பகுதியில் நேற்று நடைபெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் குறைந்து பதற்றம் நிலவியதாகவும் பருத்தித்துறை நகரில் கடைகள் பூட்டபட்டிருந்ததாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிபிசி தமிழ்


- Mathan - 12-28-2005

யாழில் இராணுவம் துப்பாக்கிச் சூடு - இரண்டு மாணவர்கள் பலி

யாழ். நல்லூருக்கு அருகே, பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள முத்திரைச்சந்தியில் காவலில் நின்ற சிறீலங்கா இராணுவத்தினர், அப்பகுதியில் NP துயு- 5773 என்ற இலக்கமுடையமோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் அப்பகுதியில் பயணித்த இரு சாதாரண மாணவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கட்டளை பிறப்பித்தபோது, நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இராணுவம் கூறியுள்ளதுடன், அவர்களிடமிருந்து கிரனைட் ஒன்றையும் மீட்டதாகக் கூறுகிறது.

அப்பகுதியில் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவல்களின்படி, இவர்கள் இருவரும் எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை என்பதுடன், இவர்களை நிறுத்தும்படி இராணுவம் பணிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இN த வேளை இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இருவேறு கிரனேற் வீச்சு சம்பவங்களில் இரண்டு ராணுவத்தினர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் இருவரது உடல்களையும் யாழ்மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் அவர்கள் யாழ் வைத்தியசாலையில் பார்வையிட்டுள்ளார்.

சங்கதி


- Mathan - 01-09-2006

யாழில் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்- பொங்கலுக்குப் பின் தாக்குதல்: சிங்கள நாளிதழ் தகவல்

சிறிலங்கா இராணுவம் மீது தைப்பொங்கலுக்குப் பின்னர் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று சிறிலங்கா படைத்தரப்பு கருதுவதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

விடுதலைப் புலிகள் தமது விமானப்படையிடம் உள்ள இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கரும்புலித் தாக்குதலை அல்லது விமானத் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் உதவியுடன் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் ஆர்.பி.பி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி விமானத் தளத்திற்குச் செல்லும் விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக யாழ். குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே பொருத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யாழ். நோக்கிப் பயணமாகும் விமானங்கள் மீது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தி விமானங்களைச் சுட்டுவீழ்த்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான செய்தி:

வடக்கிற்குச் செல்லும் விமானங்களை தரையிறக்கும்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாழ்வாகப் பறக்கையில் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த 6 ஆம் நாள் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளைஇ கட்டுவன் கடற்பிரதேசத்தினூடாக இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்பே விமானங்களை தரையிறக்கும் போது அவற்றின் பாதுகாப்பிற்காக இந்தக் கடற்பிரதேசத்தில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்


- Mathan - 01-09-2006

Quote:விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே <b>பொருத்தப்பட்டுள்ளதாக</b> புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

<img src='http://www.virginiaguard.com/news/june2002/P0002152.JPG' border='0' alt='user posted image'>

ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தோளில் வைத்து செலுத்தப்படுவதாக நினைத்தேன் :roll: :?:


- வர்ணன் - 01-09-2006

Mathan Wrote:
Quote:விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே <b>பொருத்தப்பட்டுள்ளதாக</b> புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

<img src='http://www.virginiaguard.com/news/june2002/P0002152.JPG' border='0' alt='user posted image'>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தோளில் வைத்து செலுத்தப்படுவதாக நினைத்தேன் :roll: :?:

ஆம் ரஷ்ய சாம்7 போலதான் அமெரிக்காவின் ஸ்ரிங்கர் ஏவுகணையும் தோழில் காவிச்செல்லப்படுபவை எண்டு நானும் நினைக்கிறேன்.
சிறிலங்காபுலனாய்வுத் துறை ஒழுங்கா என்னத்தைதான் சொல்லி இருக்கு? :wink:


- நர்மதா - 01-09-2006

ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தோளில் வைத்து செலுத்தப்படுவது தான் இது அமரிக்காவின் தயாரிப்பு சாம் ஏவுகனையை விட பல சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு கெடுத்தது அவர்கள் அதை கறுப்ப சந்தைக்கு விட்டுவிட்டார்கள் தற்போது இதை கறுப்பு சந்தையில் வாங்கலாம் இலங்கை இராணுவஅதிகாரிகளின் அறிவு கூர்மையை மெச்சவோண்டும் 1990களில் விடுதலைப்புலிகள் சாம் ஏவுகணைகளை முதலில் பயன்னடுத்தியாக கூறினார்கள்
<img src='http://img238.imageshack.us/img238/6797/223rz.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img255.imageshack.us/img255/9959/anti0013zj.png' border='0' alt='user posted image'>
<img src='http://img255.imageshack.us/img255/4580/kpatas7cl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img260.imageshack.us/img260/1719/stiger22bc.jpg' border='0' alt='user posted image'>


- Double - 01-13-2006

<img src='http://img218.imageshack.us/img218/707/kattu6dt.jpg' border='0' alt='user posted image'>
Thanks to
www.Thinakkural.com