![]() |
|
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி (/showthread.php?tid=587) |
- Jude - 04-01-2006 Niththila Wrote:ஜூட் அண்ணா உண்மையில் உங்களுக்கு இது தொடர்பான தகவல் தேவை எனில் என்னுடன் தனிமடல் மூலமாகவோ அல்லது வேறு ஒரு தலைப்பிலோ இது பற்றி விவாதிக்கலாமே எனக்கு அமெரிக்க பல்கலைக்கழக அனுமதி நடைமுறை பற்றி தெரியாது ஆனால் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் எப்படி அனுமதி எடுப்பது என்பது பற்றி எழுத முடியும் எவ்வளவு சாதூரியமாக தனது வேண்டுகோளை தெரிவித்திருக்கிறார் நித்திலா!. பாராட்டத்தக்கது. நாரதர் அவர்கள் பார்த்துப்பழக வேண்டிய அணுகுமுறை. உதவிக்கு நன்றி தங்கையே. எனது உறவினன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தான் அவனும் என்னைப்போல வறுமையும் கொடுமையுமான வாழ்வு புரிந்த, அந்த சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் மேல் இரக்கம் கொண்ட மனிதனாக வளர்வான். இங்கே அமெரிக்க, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் வந்து படித்துவிட்டால், இந்த நாரதரைப்போல ஒரு காலத்தில் சுயநலவாதியாக வந்துவிடுவான். அந்த பாவத்தை நான் செய்யக்கூடாது அல்லவா? "நான் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகம். அந்த ஏழைகளுக்கு உள்ளதையும் தேசியத்துக்கு பயன்படுத்த எடுத்துவிடுவோம்" என்று நிற்பான். அவன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே போக வேண்டும். - வர்ணன் - 04-01-2006 அது எல்லாம் இருக்கட்டும் யூட் அண்ணா..! நாங்க -அதாவது - கூலி வேலை - செய்யுறவங்க அமெரிக்க அரசை தேர்வு செய்யும் உங்க கபசிற்றிக்கு முன்னால- உங்கட - கருத்தை வாசிக்க -எதிர்த்து பேச- எங்களுக்கு - ஏதும் தகுதி இருக்கா? 8) - Jude - 04-01-2006 வர்ணன் Wrote:அது எல்லாம் இருக்கட்டும் யூட் அண்ணா..! தம்பி வர்ணன் அமெரிக்கா ஒரு மக்களாட்சி நாடு. மக்களாட்சியில் குடியுரிமையுள்ள மக்கள் எல்லாரும் வாக்கு போட்டு அரசை தெரிவு செய்கிறார்கள். அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்பளத்துக்கு (கூலிக்கு) வேலை செய்பவர்கள்தான். நீங்கள் மட்டுமல்ல, நானும் கூலிவேலை தான் செய்கிறேன். ஆக கூலி வேலை செய்பவர்கள் பெரும்பான்மையினர் அமெரிக்க அரசை தெரிவு செய்கிறார்கள். அது சரி தமிழீழ தேசம் வேண்டும் என்று பற்றோடு இருக்கிறீர்கள். தமிழ்ப்பற்று நிறைய இருக்க வேண்டாமா? நீங்கள் எழுதிய <b>"கபசிற்றி"</b> என்ற ஆங்கில வார்த்தைக்கு <b>கொள்ளளவு</b> என்ற அருமையான தமிழ்வார்த்தை இருக்கிறதே? தெரியாதா? - வர்ணன் - 04-01-2006 யூட் அண்ணா "கபசிற்றி" என்ற ஆங்கில வார்த்தைக்கு கொள்ளளவு என்ற அருமையான தமிழ்வார்த்தை இருக்கிறதே அப்பிடியும் ஒரு தமிழ் வார்த்தை இருக்கு என்னு -தெரிந்து கொள்ள-அமெரிக்க அரசை - தெரிவு செய்யும் உங்களுக்கு தமிழ் அறிவு இருக்கா? ஆச்சரியம்!! - narathar - 04-01-2006 ஜூட், உமது சுய நலமற்ற நல்ல மனதைப் புரிந்துகொள்ளாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.இப்படி தன்னலமற்ற ஒரு நல்ல சேவயாளன் அமெரிக்காவில் இருந்து யாழ்ப் பல்கலைக் கழக ஏழை மாணவர்களுக்காகப் பரிந்து,கூலை நியமிக்க பரிந்துரை செய்கிறீர் . ஒருக்கா நான் கூலை நியமிக்கச் சொல்லவில்லை என்கிறீர்,இப்போது ஏழை எளிய யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் முன் நேற வேண்டுமாயின் கூல் வந்தால் தான் உண்டு என்கிறீர். ஒ இது தான் பச்சோந்திகளின் உருமாற்றம் என்பதுவா? நல்ல பகிடி, உம்மைப் போன்ற சுய நலமற்ற மனிதர்கள் தான் எமக்கு வழி காட்டிகள். நீர் தேசிய ஆதராவளர் போல் வேடமிட்டு இடை இடையில் செய்யும் நக்கல் நளினங்களும்,யாழ்ப் பல்கலைக் கழகத்தில் படிக்காததால் மற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்கின்ற பாணியில் சொல்லும் கருத்துக்கள் ஒன்றும் யாழ்க் களத்திற்கு புதிதல்ல.இதில் உம்மை ஒரு சுய நலமற்ற மனிதராகக் காட்டி நான் எனது சுய நலத்தால் தான் இவ்வாறு எழுதுகிறேன் என்று சொலுகிறீரே,எனக்கு இதில் என்ன சுய நலம் இருக்கிறது,இதில் எனக்கு என்ன பயன் இருக்கிறது என்று விளக்குவீரா? 1) நீர் சுய நலமற்ற மனிதரா? 2)யாழ்ப் பல்கலைக் கழககிற்கு கூல் வந்தால் எப்படி ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறுவார்கள்? 3) அப்படியாயின் ஏன் மாணவர்கள் அவர் வருவதை எதிர்க்கிறார்கள்? 4)எவ்வாறு நான் கூலின் நியமனத்திற்கு எதிராக எழுதுவது எனது சுய நலனின் நிமித்தம் ஆகும்? 5) சிறிலங்கா அரசாங்கம்,இராணுவம் ,ஜேவிபி, தமிழ் மகான்,மற்றும் நீர் எல்லோரும் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒன்றாகப் பாடுபடுகிறீர்களா? 6) நீர் கூலின் நியமனத்தை ஆதரிக்கவில்லயாயின் இதில் இன்னும் என்ன எழுதிக் கொண்டிருக்றீர்? விளங்கவில்லை? ஓ இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்,விவாதம் என்னைப் பற்றியாதக இருப்பதால், நான் எந்த அமெரிக்க பல்கலைக் கழகத்திலும் படிக்கவில்லை, மேலும் நான் இலங்கைப் பல்கலைக் கழகம் ஒன்றிலும் படித்திருகிறேன்.உமது தர்க்கத்தின்படி எனக்கு எங்கிருந்து வந்திருக்கும் இந்த சுய நலம்? ம் இன்னும் வேறு எதாவது என்னைப் பற்றி மோசமாக எழுத முடியுமா என்று யோசியும்,அதன் மூலம் தானே கூலின் நியமனத்தை நியாயப் படுத்தலாம். - kurukaalapoovan - 04-12-2006 <b>யாழ்பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது?</b> <i>தமிழ்சமூகத்தின் பார்வையில்</i> http://www.mousegroup.net/tamilsociety/10....iversity-01.htm - KULAKADDAN - 04-12-2006 kurukaalapoovan Wrote:<b>யாழ்பல்கலைக்கழகத்தில் என்ன நடைபெறுகிறது?</b> என்ன ஐந்து பக்கத்தோட முடியுற கதையே ......... நடந்த 2 பொட்டுகேடை சொல்லவே 5 பக்கம் தேவையா இருக்கு. எல்லத்தையும் சொல்ல வெளிக்கிட்டா பெரிய ஒரு பாரதமே எழுதலாம் போல இணைப்புக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ThamilMahan - 04-12-2006 ±ø§Ä¡ÕìÌõ Á£ñÎõ Žì¸õ. ¦¾¡Æ¢ø Å¢ºÂÁ¡¸ ¦ÅÇ¢ä÷ ¦ºøÄ§ÅñÊ ²üÀð¼¨Á¢ɡø þí§¸ ¸Õò¾¡¼ ÓÊÂÅ¢ø¨Ä. Áýɢ츧ÅñÎõ. «ÐºÃ¢ ¯Ð þýÛõ ÓÊ§ÂøÄ§Â? ¿¡ý ±í¨¸ Å¢ð¼É¡ý ±ñ§¼ ÁÈóЧÀ¡Éý. |