![]() |
|
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376) |
- aathipan - 08-24-2004 ஆசிரியர்: ஏதாவது ஒரு உயிரினத்தின்படத்தை வரையுங்கள் பார்க்கலாம். சிறிது நேரம் கழித்து ஒரு மாணவன் வரைந்ததைப்பார்த்து... முட்டாள் என்ன வரைந்துள்ளாய். வேறும் நெளிநெளி கோடு மட்டும் போட்டு என்னை ஏமாற்றப்பார்க்கிறாயா? மாணவன்: நான் வரைந்தது மண்புழு ஐயா - aathipan - 08-24-2004 ஒரு மாணவன்: எனது கணித ஆசிரியருக்கு பெரும்பாலான கணக்குகளுக்கு விடை தெரிய வில்லை. மற்ற மாணவன: எதைவைத்துச்சொல்கிறாய்.... முதல் மாணவன்: தினமும் வீட்டில் செய்துவா என அதிக கணக்குகளை கொடுத்தனுப்புகிறார். - kuruvikal - 08-24-2004 ஆசிரியை : இரண்டையும் மூன்றையும் கூட்டு பார்க்கலாம் மாணவன் கதிரையில் இருந்து எழும்பி வெளியில் செல்ல முற்படுகிறான்... ஆசிரியை : கூட்டச் சொன்னா எங்கே போறாய்..??! மாணவன் : தும்புத்தடி எடுக்கப் போறன் ரீச்சர்...! - பரஞ்சோதி - 08-24-2004 ஆகா, குருவிகள் தன்னுடைய பள்ளி அனுபவத்தை சொல்கிறாரே! இன்னமும் சொல்லுங்கள் நண்பரே!. - shanmuhi - 08-24-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 08-24-2004 ஒருவன்: எப்படி நீயும் உன் மனைவியும் சண்டையின்றி வாழ்கிறீர்கள்... மற்றவன்: இதிலேன்ன கஸ்டம் நான் எப்போதும் விட்டுக்கொடுத்து நடப்பேன் அவள் அதை ஏற்க்கொள்வாள். அவ்வளவுதான்.. ஒருவன்: அப்படி எதை விட்டுக்கொடுப்பாய்... மற்றவன்: நான் எதைச் செய்தாலும் தவறு என்று அவள் சொல்லுவாள் நான் ஆம் என்று விட்டுக்கொடுத்துவிடுவேன்.. - aathipan - 08-24-2004 ஒருவர்: பரம்பரையாக நாம் பேசும் மொழியை ஏன் தாய் மொழி என்கின்றோம்... மற்றவர்;: மனைவிதான் அதிகம் பேசுகிறாள்... கணவன் எங்கே வாய்திறக்கிறான். - kuruvikal - 08-24-2004 யானை ஒன்று ஆற்றங்கையில் உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்தது... அவ்வேளை ஒரு கட்டெறும்பொன்று அவசரஅவசரமாக வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தது...யானை கட்டெறும்பைப் பார்த்துக்கேட்டது.. யானை : என்ன எதையோ தேடுகிறாய் போல் இருக்கே.....?! அதற்கு எறும்பு : ம்ம் ... நான் போட்டிருந்த சங்கிலியை இங்கு வைத்தேன் எடுத்தனியா என்று....! - aathipan - 08-24-2004 ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி புதிதாக கணணி வாங்கி இருந்தார். அவரது பெண் உதவியாளர் அதை இயக்குதற்கு உதவிசெய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கணணி இரகசிய சொல் கேட்டது. பெண் உதிவியாளர் மேலதிகாரியைப்பார்த்து எந்த இரகசிய வார்த்தையை தட்டச்சுசெய்வது என்று கேட்டார். பெண் உதவியாளரை கவர நினைத்த அந்த அதிகாரி "______" என்ற வார்த்தையை கூறி தட்டச்சு செய்யும்படி பணித்தார். ஆனால் கணணி அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. கணணி ஒரு சிறு அறிவிப்பை வெளியிட்டது. உங்கள் "______" சிறிதாக இருப்பாதால் கணணி அதனை வெளியே தள்ளுகிறது. - kuruvikal - 08-24-2004 விஞ்ஞான ஆய்வுசாலையில்... ஆசிரியை : பருந்தின் பார்வைக் கூர்மை எப்படிப்பட்டது...?! மாணவன் : பருந்தைப் பிடிச்சுத்தாங்க.. பிளேட் வைச்சிருக்கிறன்... தீட்டிப் பாத்துச் சொல்லுறன்..! - kavithan - 08-24-2004 கலக்குது நகைச்சுவை...... - paandiyan - 08-25-2004 aathipan Wrote:ஒரு நிறுவனத்தின் மேலதிகாரி புதிதாக கணணி வாங்கி இருந்தார். அவரது பெண் உதவியாளர் அதை இயக்குதற்கு உதவிசெய்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கணணி இரகசிய சொல் கேட்டது. பெண் உதிவியாளர் மேலதிகாரியைப்பார்த்து எந்த இரகசிய வார்த்தையை தட்டச்சுசெய்வது என்று கேட்டார். பெண் உதவியாளரை கவர நினைத்த அந்த அதிகாரி "______" என்ற வார்த்தையை கூறி தட்டச்சு செய்யும்படி பணித்தார். ஆனால் கணணி அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளவில்லை. கணணி ஒரு சிறு அறிவிப்பை வெளியிட்டது. உங்கள் "______" சிறிதாக இருப்பாதால் கணணி அதனை வெளியே தள்ளுகிறது. ###################################### றொம்பத்தான் லொள்ளு ஆதிபன் - aathipan - 08-25-2004 ஒருத்தி: என் கணவனும் நானும் விவாகரத்து செய்தமைக்கு காரணம் எங்கள் இருவருக்கும் இடையே சமயம் சம்பந்தமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டதே. மற்றவள்: அப்படியென்ன சமயம் சம்பந்தமான கருத்துவேற்றுமை.. ஒருத்தி: அவர் தானே கடவுள் என்று நினைத்தார்.. நான் இல்லை என்று நினைத்தேன். அவ்வளவுதான் - aathipan - 08-25-2004 ஒருவன்: எனது மனைவி ஒரு தேவதை.. மற்றவன்: கொடுத்துவைத்தவன் நீ என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள். - aathipan - 08-25-2004 திருமணமோதிரத்தை தவறான விரலில் அணிந்துள்ளாய் என்று நினைக்கின்றேன். உண்மைதான் தவறான கணவனைத்தேர்ந்தெடுத்தகாரணத்தால் தவறான விரலில் அணிந்துள்ளேன். - aathipan - 08-25-2004 திருமணமான ஒரு ஆணுக்கு எது அழகு? மூடியவாயும் திறந்த பணப்பையும் - aathipan - 08-25-2004 சிறுமி ஒருத்தி தன் தாயிடம் கேட்டாள் " அம்மா உன் வயது என்ன?" அதற்குத்தாய் கோபமுடன் அடுத்தவர் வயதை அறிவது நாகரிகம் அற்ற செயல்" என்று அடக்கினாள் மறுபடியும் சிறுமி கேட்டாள் "அம்மா உன் எடையென்ன?" "இது அநாவசியமான கேள்வி " என்றாள் தாய். " அம்மா எதற்காக அப்பா உன்னை விவாகரத்து செய்தார் " "உன் வயதுக்கு ஏற்றால் போல் பேசக்கற்றுக்கொள் அதோபார் எதிர்வீட்டுச்சிறுமி அவளுடம் போய் விளையாடு போ" என்று விரட்டிவிட்டாள் தாய் சிறுமிகள் இரண்டுபேரும் விளையாடிபொழுது போக்கினர். பின் தன் சந்தேகங்களை எப்படித்தீர்ப்பது என்று இரண்டாம்சிறுமியைக்கேட்டாள் முத்ல் சிறுமி. அதற்கு இரண்டாமவள் ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப்பார்த்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுரை கூறினாள். அதன்பின் சிறுமி இரவு அவள் தாயைப்பார்த்து உன் வயது 34. உன் எடை 76 கிலோ. உன்னை அப்பா விவாகரத்து செய்ததற்கான காரணம் Sexல் F(fail) வாங்கி இருக்கிறாய்... எல்லாம் ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தில் உள்ளதே என்றாள். - tamilini - 08-25-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 08-25-2004 தமிழினி ஒரு நகைச்சுவை எழுதுங்களன்... கவிதைகள் மட்டும்தான் எழுதுவீங்களா? - tamilini - 08-25-2004 உங்கள் நகைச்சுவையில நாங்கள் நனைகிறோம்.. ம் எழுதுவம் முயற்சி செய்கிறேன்...! |