![]() |
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271) |
- sathiri - 09-26-2005 புலத்திலை எங்கடையாக்கள் வந்து கஸ்ரபட்டு உழைச்சு முன்னேறி இண்டைக்கு பல வியாபார நிலையங்கள் தொழில் நிறுவனங்கள் எண்டு பொருளாதார ரீதியிலை கொடி கட்டி பறக்கினம் சந்தோச பட வேண்டிய விடயம் . ஆனால் பாருங்கோஉந்த வியாபார நிறுவனங்களிலை குறிப்பா பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலை உள்ள எங்கடை வியாபார நிலையங்களிலை பல நிதந்தர வதிவிட அனுமதிபத்திரம் இல்லாத எங்கடை ஆக்களை எங்கடைமுதலாளி மார் மிக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கமர்த்தி வைச்சிருக்கினம் அதை விட அவர்களிற்கு ஒரு நாளைக்கு 12 மணிநேர வேலை வாங்கினம் அதுமட்டுமில்லை அவைக்கு சாப்பாட்டு நேரம் கூட ஒரு 30 நிமிடம் தான். சில வியாபார நிறுவனங்களிலை அவையே உள்ளுக்கை ஒரு அறையிலை சமைச்சு அங்கை15 நிமிசத்திலை சாப்பிட்டிட்டு உடைனை வெழல தொடங்க வேணும் வாரத்திலை ஆறு நாள் சில நேரம் 7 நாளும் வேலை செய்யவேணும் அவர்களிற்கான அடிப்படை ஓய்வு நாளே அடிப்படை சம்பளமோ கொடுப்பதில்லை.இது எல்லாவற்றையும் யார் செய்கிறார்கள் என்றால் எம்மவர்களாலேயே எம்மவர்களிற்கு செய்கிறார்கள் என்பதுதான் வெதனையான விடயம். இந்த மதலாளிமார் தாங்கள் வந்த புதிதில் புலத்தில் எவ்வளவு சிரமங்கள் துன்பங்கள் பட்டார்கள் என்பதை சுலபமாகவே மறந்து விட்டு பேப்பர் இல்லாதவர்கள் தானே இவர்களால் சட்டபடி என்ன செய்து விட முடியும் என்கிற திமிரிலேயே இப்படி அவர்களை போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். தொழிலாளரும் தங்களிற்கு விசா இல்லாத காரணத்தால் வெளியில் எங்கும் போய் வேலை செய்ய முடியாத காரணத்தாலும் வந்த கடன் குடும்ப நிலை காரணமாக பல்லை கடித்து கொண்டு வேலை செய்கிறனர். அவர்களிற்கு அடிப்படை ஓய்வு வசதிகள் தான் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சம்பளமாவது ஒழுங்கா கொடுக்கிறார்களா?? என்றால் அதுவும் இல்லை.இது கறுப்பின அடிமைகள் வெள்ளையர்களால் விடுதலை செய்யபட்ட பின்னர் தங்கள் நாட்டிற்கு போய் சிலர் தங்கள் ஆட்களையே பிடித்து வந்து வெள்ளை காரனுக்கு வித்தகதை மாதிரி இருக்கு - RaMa - 09-26-2005 ம்ம் வேதனைக்குரிய விடயம் சாத்திரி. இவர்களே எங்களுடைய ஆட்களை இப்படி வருத்தினால் மற்றவர்களிடம் எப்படி விடுதலையை எதிர்பார்ப்பது? - vasisutha - 09-26-2005 சமுகக் காவலர்கள் இந்த விசயத்திலும் கவனம் எடுக்கலாமே? தமிழ்க் கலாச்சாரத்தை மட்டும் தான் பாதுகாத்து கடிதம் போடுவினமோ? 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- MEERA - 09-26-2005 ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும். உயர்வான சம்பளத்துடன் சராசரி மணித்தியாலத்துடன் ஒரு வேலையை செய்ய வேண்டடியது தானே.......?; - Danklas - 09-26-2005 MEERA Wrote:ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும். அமா லண்டனில விசா இல்லாத ஆட்களுக்கெண்டு வெளி நாட்டு அமைச்சர் பதவி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், எண்டு பெரிய பதவிகள் குடுக்கினம் பாருங்க... :evil: :twisted: - MEERA - 09-26-2005 ஆ இப்படி உங்களுக்கு பிரச்சனை இருந்தால் இப்படி தான்.......... - MEERA - 09-26-2005 மற்றது உங்களுக்கு வீசா இருக்கிறதோ இல்லையோ வேலை செய்ய அனுமதியிருந்தால் நீங்கள் சட்டப்படியாக வேலை செய்யலாம். - vasisutha - 09-26-2005 Danklas Wrote:MEERA Wrote:ஏன் இவர்களிடம் வேலை செய்ய வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-26-2005 உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது. எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர். விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு. - MEERA - 09-27-2005 <!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->உந்த நிலையில் தவிப்பவர்களிற்கு ஆங்கிலம் அறவே தெரியாது. பொதுவாகவே அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறைகளோடு தமது நிலையை எடுத்துக்கூறி அறுவுரை கேக்க பயம், தயக்கம். ஊரில குடும்பம் படுற அவதிகளை யோசிச்சுப்போட்டு பல்லைகடிச்சுக் கொண்டு 1 pound 170 ரூபா எண்டு கணக்குப்பாத்துட்டு தும்படி தான். இருக்கிற நாட்டின் அடிப்படை சட்டவிதிகளை அறியாதவைக்கு வாறதுக்கு வேண்டின கடனை அடைக்க வேணும், வீடு கட்ட வேணும், மகள் சகோதரிக்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு என்று பல பாரங்களோடு இருக்கும் போது 6-7 நாள் வேலை 30 நிமிடம் இடை வேளையெல்ல பெரியபிரச்சனையாக தெரியாது. எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர். விசாவும் இல்லாமல், வேலை செய்ய அனுமதியும் இல்லாமல் உத்தியோகபூர்வமாக இப்படியொருவர் இருக்கிறார் என்ற எந்தவித தடையங்களுமின்றி பலர் உள்ளனர். இவை இந்தியர் சீனர்கள் மத்தியிலும் உண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> why he / she can take exam in Tamil... - வியாசன் - 09-27-2005 இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர். ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?) - Birundan - 09-27-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->இதிலை லண்டன் முதலாளிமார் ஒருபடி மேல் . இலங்கையிலிருந்து ஆட்களை கொண்டுவந்து நாள் முழுவதும் முறித்து எடுத்துவிடுகின்றனர். ஒரு இலட்சம் ருபா சம்பளம் ஒரு மாதத்துக்கு இல்லை ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் வேலைசெய்துவிட்டு நாட்டுக்கு போகவேணும். எங்கடை ஆட்கள்(முதலாளிமார் லேசுப்பட்டவையா?)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இவர்களுக்கு கருட புராணப்படி. ரத்தம் உறுஞ்சும் அட்டைகள் கொண்டு தண்டனை கொடுக்கப்படவேண்டும். :twisted: :twisted: :twisted: - kurukaalapoovan - 09-27-2005 அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர். ஆம்பி பிருந்தன், பேஸ் பேஸ் நன்ன அய்டியா கொடுக்கிறேள். - sathiri - 09-27-2005 தம்பி மீரா எங்கை கனநாளா ஆளை காணேல்லை பரீட்சையள் முடிஞ்சுதா ?? சரி விசயத்திற்கு வருவம் குறுக்காலை போனவன் சொன்னது போலை இப்படி முறிஞ்சு வேலை செய்பவர்களிற்கு மொழிப்பிரச்சனையும் வாழுகின்ற நாட்டு சட்டதிட்டங்கள் சரியாக தெரியாத நிலையிலுமே உள்ளனர் - sinnappu - 09-27-2005 ஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா :? :twisted: :? :? :? :? hock: hock: hock: hock:
- Mathan - 09-27-2005 kurukaalapoovan Wrote:எனக்கு தெரிந்த ஒருவர் கார் ஒட பழகிவிட்டார் ஆனால் வாகனச்சாரதி பத்திரம் இல்லை. எடுப்பதற்கு சிக்கலாக இருப்பது theory test இக்கு ஆங்கிலம் தெரியாது. குதிரையோட ஒருவரை தேடிந்திருந்தவர். ஏன் அப்படி? ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு தமிழில் எழுத வசதி இருக்கே :? :roll: - kurukaalapoovan - 09-27-2005 kurukaalapoovan Wrote:அவர் குதிரையோட தேடித்திருந்தது 6 -7 வருடங்களிற்கு முன்னர். அய்யா சாமி, அவர் குதிரையோடத் தேடித்திரிஞ்சது 6-7 வருசத்துக்கு முதல் எண்டு முதன் முறையிலேயே விழைக்கமாக எழுதாதற்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. :oops: தமிழில் எழுதும் வசதி 1998 களில் இல்லையென நினைக்கிறேன். அடுத்ததா ஆதாரம் வேணுமே சாமி? - Mathan - 09-27-2005 இல்ல குறுக்ஸ் இப்ப தான் நீங்க மீராக்கு பதில் எழுதியிருந்ததை பார்த்தன், 1998 இருந்ததோ இல்லையோ என்று எனக்கு தெரியா. ஆதாரம் முடிஞ்சா தாங்கோ. அதுசரி என்ன என்னை ஆதாரம் கேட்பதாக சொல்றீங்க - MEERA - 09-28-2005 முன்னர் உங்களுக்கு ஆங்கிலத்தில் போதிய முதிர்ச்சி இல்லை என்றால் நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளரை தெரிவு செய்யலாம்.. பிறகு இதை துஷ்பிரயோகம் செய்ததால் கேள்விகளை தமிழில் பதிவு செய்தார்கள்..... - Mathan - 09-28-2005 ம் முன்பு theory test எடுக்க போனவர்கள் தமிழ் மொழிபெயர்பாளர்களை கூட்டி செல்ல கூடியதாக இருந்தது. அப்படி சென்ற மொழிபெயர்பாளர்கள் அதற்குரிய விடைகளையும் சொல்லி பரீட்டையை பாஸ் பண்ண உதவினார்கள், இது பின்பு அரசாங்கத்திற்கு தெரிய வந்ததால் இந்த முறையை மாற்றி கணனியில் தமிழ் மூலம் பரீட்சை எடுக்கும் முறையை கொண்டு வந்தார்கள். |