Yarl Forum
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- Puyal - 03-20-2006

மின்னல் அவர்களுக்கு

தங்களின் கேள்விக்கான பதில் சரியா என்பதை உறுதிப்படுத்தங்களேன்

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.


- nallavan - 03-20-2006

மணக்கொடைத் தடைச்சட்டம் வந்தது தை -1995. சரியா?
---------------------------------
பல்குழல் எறிகணைத்தாக்குதல் முதன்முதல் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது, தள்ளாடி முகாம் மீதான எறிகணைத் தாக்குதலின்போதே. (அது முகாம் தகர்ப்பு அன்று). ஆனால் அதற்கு முன் ஓயாதஅலைகள் இரண்டில் (செப்ரெம்பர் 98)அவ்வாயுதம் புலிகளாற் பயன்படுத்தப்பட்டதாகவும் கதையுண்டு. அது உண்மையென்றே நான் நம்புகிறேன்.


- Puyal - 03-20-2006

முயற்சிக்குப் பாராட்டுக்கள்

தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் அமுலிற்கு வந்த ஆண்டு 01.09.1995

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.


- Puyal - 03-20-2006

எனது கேள்வி:

47) யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்?

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.


- Puyal - 03-22-2006

ஈழவர்களே தொடர்ந்தும் இப்பக்கத்தடன் இணைந்திருங்கள்.


47வது வினாவிற்காகச் சிறியதொரு தரவு - Puyal - 03-22-2006

கற்சிலைமடுவிலுள்ள இவனது சிலைக்கு கப்டன் வொன் றிபேக் என்னும் ஆங்கிலத் தளபதி இவரின் வீரத்தை மதித்து மரியாதை செலுத்தினாராம்.

:?: .


- கறுப்பி - 03-22-2006

பண்டாரவன்னியன்


- Puyal - 03-22-2006

கறுப்பி

பண்டாரவன்னியன் என்பது சரியான விடை.

முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


- Puyal - 03-22-2006

உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்?

தரவு தேவைப்படின் களத்தில் எழுதவும்.


- கறுப்பி - 03-22-2006

அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம்


- Puyal - 03-22-2006

கறுப்பி

உங்களுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் விடை சரி


- Puyal - 03-22-2006

தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?


- Puyal - 03-22-2006

எனது கேள்வி:

49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?

மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும்.


- கறுப்பி - 03-22-2006

இவர் சுயேட்சையாக போட்டியிட்டவரா............. இவருக்கும் ஊர்காவற்துறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா


- Puyal - 03-22-2006

கறுப்பி எழுதியது

இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டவரா........... இவருக்கும் உர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா

ஆம் சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார்........ பெரும்பாலும்
இவருக்கும் ஊர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் எனவும் நம்புகின்றேன். ஆனால் உறுதியாக என்னால் கூற முடியாமலுள்ளது


- Sujeenthan - 03-22-2006

தந்தை செல்வா. விடை சரியா?


- Puyal - 03-22-2006

சுஜி முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

ஆனால் பதில் தவறு.


- கறுப்பி - 03-22-2006

49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?

¾ó¨¾ ¦ºøÅ¡.


- Puyal - 03-22-2006

கறுப்பி

விடை தவறாக உள்ளது. தந்தை செல்வா சுயேச்சையாகப் போட்டியிட்ட மாதிரியாகத் தகவல் எதுவும் தெரியவில்லை

தொடர்ந்தும் முயற்சித்தப் பாருங்கள், உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர் என்பதில் சந்தேகமில்லை.


- கறுப்பி - 03-22-2006

¿ÅÃò¾¢Éõ ±ýÀÅḠþÕì¸Ä¡õ.
«ôÀÊ¢øÄ¡Å¢ð¼¡ø ¦¾Ã¢Â¡Ð. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->