![]() |
|
சீதனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சீதனம் (/showthread.php?tid=8174) |
சீதனம் - இனியவன் - 09-04-2003 நண்பர் ஒருவரது பிரச்சனை. அவரது அக்காவிற்கு திருமணமப் பேச்சு நடைபெற்றுள்ளது. சீதனமாக 30 இலட்சம் ரூபாவும், யாழ்ப்பாணத்தில் (நகரை அண்டிய பிரதேசத்தில்) காணியுடன் சேர்ந்த வீடு சீதனமாகத் தரவேண்டும் என கேட்டுள்ளார்களாம். நண்பர் கஸ்ரப்பட்டு இப்பணத்தை உழைத்த அனுப்புவதா? அல்லது சீதனம் பெறாது வரும் ஒருவருக்கே அக்காவை திருமணம் செய்து வைப்போம் எனக்கூறி தற்போது நடைபெற்ற பேச்சினைக் குழப்புவதா? இங்கே சீதனம் பற்றி ஏற்கனவே பலர் பலவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். இவரின் பிரச்சனைக்கு ஆரோக்கியமான நல்லதொரு தீர்வினைத் தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Alai - 09-04-2003 [b]30 இலட்சம் கேட்டாரா..? பேராசை பிடித்த மாப்பிள்ளை. - Alai - 09-04-2003 இவ்வளவு பேராசை பிடித்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்று அக்கா சொல்லுவாராயிருந்தால் அது எங்களுக்குப் பெருமை. - Alai - 09-04-2003 [b]கரும்பு தின்னக் கூலி கேட்கும் அந்தப் பேராசைக் காரனை வேண்டாம் என்று சொல்லி விடுவதுதான் சிறந்தது. - Paranee - 09-04-2003 மாப்பிள்ளை என்ன தொழில் (தொழில் இல்லைப்போல இருக்கின்றது. அதுதான் சீதனம் கேட்கின்றார்) 30 தானே கேட்டார். பரவாயில்லை. எங்கேயோ பஞ்சப்பிரதேசத்தில் இரு;ந்திருக்கின்றார். இப்ப 30 கேட்பது சகஜம். 50ஜையும் தாண்டிவி;ட்டது. தாயகத்தில் அதுவும் கனடா வதிவிட உரிமை உள்ள மாப்பிளை. கொழும்பிலை வீடும் வேணும். :oops: :oops: :oops: :oops: - இனியவன் - 09-04-2003 விடுபட்ட தகவல்: பெண்ணும் நிரந்தர அரச உத்தியோகத்தில் மாதந்தம் 8000 ரூபாய் சம்பளம் பெறுகின்றார். - Paranee - 09-04-2003 அப்ப அடித்து திரத்தவேண்டியதுதான். - tamilchellam - 09-04-2003 வணக்கம், சீதனம் கொடுப்போர் இருக்கும் மட்டும் சீதனம் வாங்குவோர் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சீதனத்தை ஒழிப்போம். நட்புடன், தமிழ்செல்லம். - Manithaasan - 09-04-2003 கைகாலெல்லாம் அந்த மா...பிள்ளைக்கு சரியாக இருக்குத்தானே..8000 ரூபாய் ஊதியம் பெறும் பெண் அவருக்கு சோறு போட்டால் போதாதோ? இப்படி 30 இலட்சமும் யாழ்ப்பாண நகருக்குள் வீடும் காணியும் கேட்கும் மனநோயாளிக்கு பொம்பிளையைக் கொடுக்க நினைப்பதே கூடாது..அந்த மனநோயாளர் இப்போது எங்கே வாழ்கிறாராம்.? வெளிநாட்டில் பெண்ணின் உறவுகள் இருப்பதால் எத்தனை இலட்சமும் கேட்கலாமென நினைப்பது கொடுமையிலும் கொடுமை..இங்கு வெளிநாட்டில் வாழ்கின்ற எல்லோரும் வங்கிக் கொள்ளையில் பொருளீட்டுகிறோம் என தாயகத்தில் வாழும் சிலர் நினைப்பது வருந்தத் தக்கது. - Mullai - 09-04-2003 முப்பது இலட்சத்தையும் வங்கியில் போட்டுவிட்டு வாழ்நாள் புூராவும் சந்தோசமாக வாழலாமே. திருமணம் என்பது ஆண்டவன் அமைத்து வைத்த மேடை என்று அக்காள் பவானி என்பவரை திருமணம் செய்யவந்த பூந்தமல்லியைச் சேர்ந்த கோபால் என்பரை மணமுடிக்க விருப்பின்றி இரவோடு இரவாக மணமகள் பவானி ஓட்டமெடுத்தார். மணமகளைக் காணாது பெற்றோர் கவலையடைந்தனர். இந்த நிலையில் மணமகளின் தங்கை மாதுவை திடீரென மணமகளாக்கினர். திருமணம் என்பது ஆண்டவன் அமைத்த மேடை, ஆண்டவனே அதைத் தீர்மானிக்கிறான் என்று கூறிய கோபால் மணமகளின் தங்கையை மண முடித்தார். பழைய பழமொழி ஒன்றை துணைக்கழைத்து இருவரும் மணமுடித்தனர். நன்றி அலைகள் - sethu - 09-04-2003 30 இலட்சம் கொடுத்து திருமணம் முடித்துவைத்தால் வரும் மாப்பிளைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் எனவே மாப்பிள்ளையின் சவாலை நேருக்கு நேர் மச்சானாகப்போபவர் எதிர்கொண்டால் மச்சானுக்கும் மதிப்பு பெண்னுக்கும் மதிப்பு. - sOliyAn - 09-04-2003 30 லட்வமென்றால் என்ன 3 ரூபாய் என்றால என்ன.. சீதனம்தானே.. சீதனம கொடுக்க மனமில்லாவிட்டால் வேறு மாப்பிளை பார்க்கவேண்டியதுதான். - Mathivathanan - 09-05-2003 கனடாவிலை சீதணம் வாங்கக்கூடாது.. குடுக்கக்கூடாது எண்டு சட்டம் இருக்கோ.. அதை முதலிலை சொல்லுங்கோ.. பதில் எழுத.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilchellam - 09-05-2003 கனடாவில் சீதனம் வாங்கக்கூடாது கொடுக்கக் கூடாதா...... தமிழ்மக்கள் அங்கு இருக்கினம் தானே ? ? நட்புடன், தமிழ்செல்லம். - Mathivathanan - 09-05-2003 இனியவன் Wrote:நண்பர் ஒருவரது பிரச்சனை. அவரது அக்காவிற்கு திருமணமப் பேச்சு நடைபெற்றுள்ளது. சீதனமாக 30 இலட்சம் ரூபாவும், யாழ்ப்பாணத்தில் (நகரை அண்டிய பிரதேசத்தில்) காணியுடன் சேர்ந்த வீடு சீதனமாகத் தரவேண்டும் என கேட்டுள்ளார்களாம். நண்பர் கஸ்ரப்பட்டு இப்பணத்தை உழைத்த அனுப்புவதா? அல்லது சீதனம் பெறாது வரும் ஒருவருக்கே அக்காவை திருமணம் செய்து வைப்போம் எனக்கூறி தற்போது நடைபெற்ற பேச்சினைக் குழப்புவதா? இங்கே சீதனம் பற்றி ஏற்கனவே பலர் பலவிதமான கருத்துக்களை வைத்துள்ளார்கள். இவரின் பிரச்சனைக்கு ஆரோக்கியமான நல்லதொரு தீர்வினைத் தாருங்கள். <!--emo& இனியவன் Wrote:விடுபட்ட தகவல்: பெண்ணும் நிரந்தர அரச உத்தியோகத்தில் மாதந்தம் 8000 ரூபாய் சம்பளம் பெறுகின்றார். இங்கு கொடுப்பவருக்கும் பிரச்சனையில்லை.. வாங்குபவருக்கும் பிரச்சனையில்லை.. ஏங்குபவருக்குத்தான் பிரச்சனை.. ஒன்றில் அப்பெண்ணுக்காக ஏங்குபராகவோ.. இல்லை பிள்ளைக்காக ஏங்குபவராகவோ இருக்கலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- veera - 09-06-2003 சீதனம் என்பது காட்டாயம் என்ற நிலையை சமகாலம் தாண்டிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்வோம் எனும் மனப்பாங்கு ஆண்கள் மத்தியில் வெகுவாக குறைந்துதான் உள்ளது. எனவே சீதனம் என்பது தற்காலத்தில் அவரவர் பெருமைக்குரிய விடயமாகவும்,கௌரவமாகவும் தான் காட்சியளிக்கிறது.ஆக இது நல்ல சமிக்ஞை.இனிவரும் காலத்தில் சீதனம் உதாசீனப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்கள்.....<b>sOliyAn</b>, Quote:சீதனம கொடுக்க மனமில்லாவிட்டால் வேறு மாப்பிளை பார்க்கவேண்டியதுதான். - sethu - 09-06-2003 உத நடக்குற கதையோ? தமிழன் கலாச்சாரத்தில் அதுவும் ஒண்டு அதை மாற்ற முடியாது. - sOliyAn - 09-06-2003 நடக்கும்.. ஒரு இலட்சம் சீதனம் பெற்றோரின் நிர்ப்பந்தத்தில் வாங்கிவிட்டு.. அதே பெண்ணை 5 இலட்சம் கட்டி வரவழைத்து திருமணம் செய்த எத்தனையோ இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.. ஆக.. சீதனம் இன்றி திருமணம் செய்யவும் நிறைய இளைஞர்கள் உள்ளார்கள். - sOliyAn - 09-06-2003 இதே வேளையில் பெண்ணிடம் திருமணம் வாங்கினாலும்.. பெண்ணின் சகோதரிகளை தமது பணத்தில் வரவழைத்து.. அவர்களுக்கு சீதனம் கொடுத்து சிறப்பாக திருமணம் செய்து வைத்த இளைஞர்களும் நிறையவே புகலிடத்தில் உள்ளார்கள். - sOliyAn - 09-06-2003 பிழைதிருத்தம்: பெண்ணிடம் திருமணம் - பெண்ணிடம் சீதனம் (மேலே திருத்திவிட்டு தயவுசெய்து இதை நீக்கிவிடுங்கள்) |