Yarl Forum
கருணாவை எதிர்த்தவர் கொலை! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கருணாவை எதிர்த்தவர் கொலை! (/showthread.php?tid=7097)

Pages: 1 2 3 4


கருணாவை எதிர்த்தவர் க - Mathan - 05-31-2004

கருணாவையும் அவரது குழுவினரையும் வெளிப்படையாக எதிர்த்த வீரகேசரி பத்திரிகை மற்றும் லண்டன் IBC தமிழ் நிருபர் நெல்லை நடேசன் சுட்டு கொல்லப்பட்டார், இவர் முன்பு EPRLF அமைப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Asian Tribune


- Mathan - 05-31-2004

A Tamil Journalist who openly opposed Colonel Karuna's Group shot and killed.


Batticaloa, 31 May: Nellai G.Nadesan, a Batticaloa based correspondent of Virakesari a leading Tamil daily newspaper based in Colombo, Sri Lanka and the IBC Radio run by the Liberation of Tigers of Tamil Eelam in London was shot and killed this morning in Batticaloa.

According to unconfirmed police reports, Iyathurai G. Nadesan (49) was shot and killed when he was going to a temple in the town of Batticaloa - which is located 222 kilometers (136 miles) east of Colombo.

The report further adds that gunmen might have ambushed near the said Hindu temple and fired the fatal shots at Nadesan.

Nadesan from Jaffna but continued to reside in Batticaloa, started as a leading member of Eelam People Revolutionary Liberation Front (RPRLF) and was in charge of the media in the former North-East Provincial Council for which A. Varatharaja Perumal was then the Chief Minister.

Earlier on 03 April 2000, a grenade was lobbed at the house of G. Nadesan located in the high security zone of Batticaloa town. The explosion said to had damaged the electricity connection to his house and parts of its verandah.

Nadesan left the EPRLF and became an ardent supporter of the Liberation Tigers of Tamil Eelam and was alleged that he wrote many reports openly name-calling former LTTE military Commander Colonel Karuna Amman as "Traitor of the Tamils," despite being warned by the breakaway faction of the LTTE (Karuna group) to desist from using inflammatory languages, while filing news items to the London based IBC radio.

According to reports, on numerous occasions Nadesan had been threatened and warned for his news reporting.

Nadesan is survived by his wife and three children.

- Asian Tribune -


- Mathan - 05-31-2004

Tamil journalist killed in Sri Lanka

Associated Press, Mon May 31, 2004 02:26 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) Unidentified gunmen on Monday shot and killed an ethnic-Tamil journalist in eastern Sri Lanka - , police and his newspaper said. ``He was one of our best correspondents, fearless and did not take sides,'' Ratnasabatathy said of Nadesan, 49, who had worked for the paper, Sri Lanka - 's largest selling Tamil daily, for two decades.
Nadesan is survived by his wife and three children.

There has been unrest in Sri Lanka - 's east since the main Tamil Tiger rebel group, which has signed a cease-fire with the government, crushed a 6,000-strong factional revolt last month. Dozens of people have been killed in the violence.

European cease-fire monitors have warned that the slayings could threaten the fragile peace process.


- Mathan - 05-31-2004

இந்த சம்வம் குறித்த மற்றய பத்திரிக்கை செய்திகள் ...

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/nadesan_a.jpg' border='0' alt='user posted image'>
Mr. Aiyathurai Nadesan

http://www.khaleejtimes.com/DisplayArticle...on=subcontinent

http://www.alertnet.org/thenews/newsdesk/COL236887.htm

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12121


Re: adsd - Mathivathanan - 05-31-2004

மௌன அஞ்சலியோ..? வானொலிகூட அழுது..
:?: :?: :?:


- Eelavan - 05-31-2004

இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள்


- Mathivathanan - 05-31-2004

Eelavan Wrote:இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள்
பலியெடுக்கிற ஆசை எனக்கு இல்லை.. பட்டம் குடுத்துவங்களாச்சு எடுத்தவங்களாச்சு.. இது அவங்கள் பிரச்சனை..
Idea Idea Idea


- Eelavan - 05-31-2004

கருநாகம் அடங்கிவிட்டது படம் மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறது

இதற்குப் பெயர்தான் மட்டக்களப்பு அபிவிருத்தி,அபிவிருத்தி செய்யத்தானே தனியாகப் போனான் என்று ஆலவட்டம் பிடித்தவர்களெல்லோரும் பாருங்கள் முதலில் கல்வித்துறை இப்போது ஊடகத்துறை ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மக்களைக் கடிக்கும் போது தெரியும்


- Mathan - 05-31-2004

மூத்த ஊடகவியலாளர் ஐp.நடேசனின் படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டித்துள்ளனர்

காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 18:30 ஈழம்

தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் உரிய உழைப்புக்களை மேற்கொண்டு அயராது பாடுபட்டவர், தனது எழுத்துத்துறையால் தமிழ்த் தேசியத்தின் கூர்மைப்படுத்தலுக்கு ஓயாது அறைகூவல் விடுத்தவர், தமிழ்த் தேசியத்திற்கு மாறான நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் வன்மையாக மறுதலித்தவர். தமிழினத்தின் விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்தின் நியாங்களை எழுத்துத் துறையால் வலியுறுத்தியவர்.

இத்தகைய ஒரு தேசியப் பற்றாளரை தமிழினம் இழந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கண்டன அறிக்கையில் தங்களது ஆழ்ந்த துயரத்தையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவத்தையும் இங்கே புதினம் வாசகர்களுக்காகத் தருகிறோம்:


தமிழ்த் தேசியப் பற்றாளரும் மூத்த ஊடகவியலாளருமான ஜி;.நடேசன் அவர்களின் கண்மூடித்தனமான படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாக கண்டிக்கின்றனர்

அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
31-05-2004

தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் உரிய உழைப்புக்களை மேற்கொண்டு அயராது பாடுபட்டவர் தனது எழுத்துத்துறையால் தமிழ்த் தேசியத்தின் கூர்மைப்படுத்தலுக்கு ஓயாது அறைகூவல் விடுத்தவர் அற்புதமான கருத்துக்களை முன்வைத்தவர் தமிழ்த் தேசியத்திற்கு மாறான நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் வன்மையாக மறுதலித்தவர். தமிழினத்தின் விடுதலைக்கான விடுதலைப் போராட்டத்தின் நியாங்களை எழுத்துத்துறையால் வலியுறுத்தியவர்.

இனத்தின் விடுதலைக்கான நியாங்களை வலுப்படுத்தும் ஆணித்தரமான கருத்துக்களையும் தமிழனத்தின் போராட்டத்திற்கு வலுவ10ட்டும் புள்ளி விபரங்களையும், தரவுகளையும் அவ்வப்காலங்களில் தனது ஆக்கங்கள் மூலம் வெளிப்படுத்தியவர் நிகழ்காலத்தோடு எதிர்காலத்தை இணைத்து தமிழ் சமூகம் சுதாகரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டுதல்களையும் மேற்கொண்டு ஊடகவியலாளனுக்குரிய சிறந்த பண்பிணை கொண்டவர்.

யுத்த, சமாதான காலத்தில் இன்னல்களை அனுபவித்த தமிழ் மக்களின் வாழ்வியல் துன்பங்களை விடுதலையுடன் கூடிய இயல்பு வாழ்க்கைக்காக மக்கள் கொண்ட ஏக்கங்களை உள்ளுரிலும் உலக நாடுகளிலும் வெளிக்கொண்டு வந்ததன் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கை குரலாக விளங்கியவர். தமிழ்த் தேசிய தலைமையின் கீழ் மிகுந்த மதிப்பும் பற்றுதியும் நம்பிக்கையையும் பெற்றவர் அந்த தலைமையின் நம்பிக்கைக்குரிய தகமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தமிழ்த்தேசிய தலைமையின் கீழ் மக்கள் அணிதிரளவேண்டிய வரலாற்று அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியவர். உண்மை நியாயம் என்பவற்றின் பக்கமாக அசையாது நிலையெடுத்து நின்றவர் ஆபத்துக்கள் எதிர்நோக்கிய போதும் தனது நிலையில் இருந்து சிறிதும் மாறுபடாது வரலாற்றில் தான் வரித்த பாத்திரத்தை முழுமைபடுத்தியவர்.

கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் தமிழ்மக்களின் நேச சக்திகள் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகும் சமாதானம் நிலவிவரும் இக்காலத்திலும் இத்தகைய கொலை நடவடிக்கைகள் மூலம் சமாதானத்திற்கெதிரான சக்திகள் தமது அடாவடித்தனங்களை மேற்கொண்டுவருகிறார்கள் இந்நடவடிக்கையானது இத்தீவில் வாழும் மக்களை மீண்டும் இன்னலுக்குள் உள்ளாக்கும் வரலாற்றுக்காலத்திற்கே இட்டுச்செல்லும்.

எனவே இந்நிலையை கருத்தில் எடுத்து அரச படைகளும் அப்படைகளுடன் இணைந்து செயற்படுபவர்களும் இக்கொலைகளை நிறுத்திக் கொள்வதே இக்காலத்தின் கட்டாயமாகும்.

மூத்த ஊடகவியலாளர் ஜி.நடேசன் அவர்களின் இழப்பினால் தாழாது துயறுற்றிருக்கும் குடுப்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் பிரிவு அவர் குடும்பத்திற்கு எவ்வளவு தாக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியதோ அதேயளவுக்கு பத்திரிகை உலகிற்கும் எமக்கும் எமது தேசத்தின் வரலாற்றிற்கும் ஏற்படுத்தியிருக்கிறது.


- Mathivathanan - 05-31-2004

யார் செய்தாலும் கொலை கொலைதான்..

சிறு பிள்ளைகளை கொண்றபோது கண்டனம் தெரிவித்ததற்கு களத்திலிருந்து தூக்கி வீசியவர்கள் மத்தியில்.. ஆண்டவா..


- Mathan - 05-31-2004

ஊடகவியலாளர் நடேசன் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைதாகவில்லை

ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 19:04 ஈழம் ஸ

இன்று காலை மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் பிரேத பரிசோதனை முடிவடைந்திருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையிலுள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் சம்பந்தமாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

கடுமையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இவர் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனையின் இறுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கொலை சம்பந்தப்பட்ட முழுமையான தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டுகின்றனர். மட்டக்களப்பில் தற்போது பதற்றம் நிலவுவதனால் சாட்சியமளிப்பதற்கு பொதுமக்கள் எவரும் முன்வரவில்லையென்று பொலிசார் கூறுகின்றனர்.

நடேசன் கொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், ஊடகவியலாளர்கள் பலரும், பிரமுகர்கள் பலரும் தமது கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்திருக்கின்றனர்.


- Mathan - 05-31-2004

சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு 'நாட்டுப்பற்றாளர்" பட்டம் வழங்கி கௌரவம்

ஜ வன்னியிலிருந்து கிருபா ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 20:23 ஈழம் ஸ

இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும், ஈழத்தமிழரின் துன்பங்களை நடுநிலை வகித்து, பத்திரிகா தர்மத்துடன் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த அமரர் ஐp.நடேசன் அவர்களுக்கே, விடுதலைப் புலிகள் இப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.

அரசியற்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

யுத்த சமாதான காலங்களில் இன்னல்களை அனுபவித்த தமிழ்மக்களின் வாழ்வியல் துன்பங்களையும், விடுதலையுடன் கூடிய இயல்பு வாழ்க்கைகளில் மக்கள் கொண்ட ஏக்கங்களையும் உள்ளுரிலும், உலகநாடுகளிலும் பரப்புரை செய்து, தமிழ்த்தேசியத்தி;ன் எழுச்சிக்கும் அதன் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் பணியாற்றிய அமரர்.ஜி.நடேசன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 'நாட்டுப்பற்றாளர்" என்னும் நிலையை வழங்கிக் கௌரவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


- Mathan - 05-31-2004

இந்த சம்வம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள கருணா தரப்பு (அல்லது அவர்களில் பெயரில் செய்தி வெளியிடுபவர்கள்) இந்த கொலையை கண்டிக்கவில்லை என்பதுடன் செய்தியாளரை "வன்னிப் புலிகளின் செய்தியாளர்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


- Mathivathanan - 05-31-2004

BBC Wrote:இந்த சம்வம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள கருணா தரப்பு (அல்லது அவர்களில் பெயரில் செய்தி வெளியிடுபவர்கள்) இந்த கொலையை கண்டிக்கவில்லை என்பதுடன் செய்தியாளரை \"வன்னிப் புலிகளின் செய்தியாளர்\" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெருப்பு தளத்தில் அவதானித்தேன்.. தங்களுக்கு எதிராக உண்மைக்குப்புறம்பான செய்திகளை சொல்லியதாக குறிப்பிட்டுமிருந்தார்கள்..
:?: :?: :?:


- tamilini - 05-31-2004

ஏது எப்படியே! அண்ணாரது இழப்பு தமிழ் மக்களுக்கு பாதகம் தான். அண்ணாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திபோம்.
காய்த்த மரம் எப்பவும் கல்லடி படும்.

Cry Cry Cry


- Kanthar - 05-31-2004

Eelavan Wrote:கந்தர்,தம்பு ஆகியோரையும் காணமுடியவில்லை.
கந்தர் அனேகமாக இன்னொரு கருணா வெளிப்பட்டால் வருவார் என நினைக்கிறேன்

அப்ப அந்த நேரம் நெல்லை நடேசனாகதான் வீரகேசரியில எழுததொடங்கி, ஜி நடேசன் எண்டு உந்த ஊடகங்கள் எல்லாம் இப்ப சொல்லுது.நடேசனை ஊரிலையே எனக்கு தெரியும். அடிக்கடி வாசிக சாலையில காணலாம் இவரை. இதெல்லாம் நான் சொல்லுறது எண்பது தொடக்கத்தில.
அதுக்கு பிறகுதானே புளியமரத்தில ஏறிச்சுது உந்த முனியள்.................கையில ஆயுதத்தோடை......முனியளுக்குள்ளை சண்டை.........பேந்து சனத்தில பாய்சுது...
இண்டை வரைக்கும் எத்தின உயிரை குடிச்சும் அடங்கேல்லை...........

நடேசன் என்ன அரசியலை சொன்னார் எண்டதை விட கொலை கலாச்சாரம் இப்பிடியே போனால் ஒருத்தரும் மிஞ்சாது

வேண்டாம் இந்த விளையாட்டு
முதல்ல தொடங்கினவை முதல் நிப்பாட்டுறதுதான் நியாயம்


- Mathivathanan - 05-31-2004

கந்தர்.. திரும்ப தொடங்க அடிக்கல் நாட்டி ஆயத்த வேலைகள் நடக்கிது.. உதுகள் திருந்தாதுகள்..


- kuruvikal - 06-01-2004

ஏன் அமெரிக்கா நாட்டுது உப்படி எத்தனை அடிக்கல்கள்... எத்தனை காலமா...அதைக் கேட்க யாருமில்ல....இப்படித்தான் இலங்கையிலும் பெரிய முனியள் ஆட்டிவைக்குதுகள்...சிறிய முனிகள் ஆடுதுகள்....முனிக்கு குழை அடிப்புத்தான்.....அதுக்கு அதின்ர பாசையில பதில் சொல்லுறதுதான்....முனியடக்க வழி....எட பொடியள்...குழையடிப்பை கெதியில செய்யுங்கோடா....இல்ல முனியாட்டம் கூடிப்போயிடும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- kuruvikal - 06-01-2004

சிங்கள அரசினதும் (குறிப்பாக சந்திரிக்காவின் அரசினதும்)சிங்கள இராணுவத்தினதும் அதன் கூலிப்படைகளினதும் செயல்களை மக்களுக்கும் வெளியுலகத்துக்குக் காட்டும் பத்திரிகையாளர்களைக் கொல்வதென்பது சந்திரிக்காவுக்கும் அதன் இராணுவத்திற்கும் பிரியமான செயல்கள்....அன்று யாழில் ஈபிடிபி....இன்று மட்டக்களப்பில் கருணா தேசவிரோதக் கும்பல் என்று....அவற்றை தந்திரமாக தங்கள் காரியங்கள் செய்து முடிக்கப் பயன்படுத்துகின்றன.....!

அன்று ஒரு நிமலராஜன் இன்று ஒரு நடேசன்...இது எமது தலைவிதியல்ல...எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் எதிரியை கூண்டோடு எமது மண்னில் இருந்து அகற்ற வேண்டும் என்பதையும் அதன் பின்பே எமக்கு சகலவிதமான உரிமைகளும் என்பதை எமது தலையில் இடித்து தெளிவாகச் சொல்லி இருக்கிறது....!

இதை தந்திரோபாயமாக கையாள வேண்டியது மக்களினதும் அவர்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பு.....!

:evil: Idea :evil:


- Mathivathanan - 06-01-2004

சிங்களப்பகுதியளிலை அமெரிக்கனே வந்து இருக்கிறான்..
போய் இருக்கிறது தமிழன்தான்..
அமெரிக்கனல்லவே.

தமிழ்ப்பகுதிகளிலை கொண்டுவந்து இருத்தினதும் அமெரிக்கனையல்லவே.. சிங்களவனைத்தானே..

பிறகேன் அமெரிக்கனை கூப்பிடுறியள்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தமிழ்ப்பகுதியளிலை தமிழன் இருக்கவே பயப்பட்டு சிஙகளப்பகுதியளிலை போய் அடைக்கலம் கேக்கிறான்... அது என்னத்துக்கு குருவிகாள்..?