![]() |
|
இதுவும் ஒரு உயிர் தான்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இதுவும் ஒரு உயிர் தான்...! (/showthread.php?tid=6331) |
இதுவும் ஒரு உயிர் தான்...! - tamilini - 11-26-2004 <img src='http://img72.exs.cx/img72/1176/child.gif' border='0' alt='user posted image'> இதுவும் ஒரு உயிர் தான் பிறப்பெடுத்த காரணம் அறியாது பிறப்பின் பொருள் தெரியாது மகிழ்வின் நிறமறியாது படும் துயரின் காரணம் தெரியாது கொடுமை பல குறையாமல் கொண்டு சீர் குலைந்த நிலையில் உயிரினமாய் உருவெடுத்து பசி என்னும் கொடியமிருகம் ஆக்கிரமிக்க.. நோய் என்னும் அரக்கனுக்கு இரையாகி.. ஆறடி நிலம் எதற்கு அரை அடி போதும் என கடையிடம் போகும் இடமதை அறிந்தோ அறியாமலோ சென்றடைந்து.. தலைநிமிர தஞ்சமின்றி நிலம் தழுவிய படி இங்கு பாவம் செய்தவர்கள் எங்கோ இருக்க வழியறியாது வகையறியாது வண்ணச்சிறகு விரிக்க வேண்டிய சின்னச்சிட்டு சிலையாகி விட்டதா...?? கொத்திச் செல்ல வந்த கொடிய பறவை கூட கொடுமை கண்டு சற்று சிந்திக்கிறதா...?? முடியும் நேரம் என காத்திருக்கா...?? இல்லை முடிந்தும் பலன் ஏது என்று ஒதுங்கியதா...?? குந்த நிலம் வேண்டாம் அறிவுப்பசிக்கு கல்வி வேண்டாம் வயிற்றுப்பசி தீர்க்க அரைவயிறு சோறு போட ஆள் இல்லை...?? கொண்ட நோயின் குணம் அறிந்து.. கொள்ளுகின்ற நோய்க்கு தக்கன செய்ய ஒருவன் இல்லை காணதா கடவுளுக்காய்... கண்ட இடம் எல்லாம் சண்டை கண்ணால் கண்ட இந்த காட்சியை போக்க ஆள் இல்லை..?? வழிகள் தொலைத்தவரா இவர் -- இல்லை வழிகள் அற்றவரா .. களம் பல கண்டவரா காலம் இது போவதற்கென விட்டுவிட கருகிடும் காட்சியிது... முதிர்ந்த பழம் அல்ல... அரும்பாகா மொட்டு இது... விடியலே இல்லாமல் விடை பெறும் நிலவிது காணும் கண்களை ஒரு கணம் கலங்க வைக்கும் காட்சி இது ஒன்று காணாத காட்சிகள் எத்தனை...?? ஒரு இணையத்தில் இந்த படம் கண்ட பொழுது.. எனக்குள் எழுந்தவை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->www.tamilini.blogspot.com - aswini2005 - 11-26-2004 உயிர்வதை செய்கின்ற மனிதர் மத்தியில் ஒரு உயிரின் வýpலி பொறுக்காது தன்னையே அழித்த அந்த புகைப்படக்கலைஞனின் போட்டோ எங்கேயோ இருந்தது. பொறுங்கோ தமிழினி எடுத்தா கொண்டு வாறன். 10வருசம் முன்னாலஇ நடந்த சம்பவம் இது தற்போதுதான் தமிழினியன் கண்ணில் தெரிஞ்சிருக்கு. பறவாயில்லை. காலம் போனாலும் மனிதநேயமிக்க கவிதந்து அந்தப்படத்தையும் போட்ட தமிழினிக்கு நன்றிகள். - kavithan - 11-26-2004 நான் இதுவரை அறியாத சம்பவம் அதனை இங்கு இட்டு அதற்கு கவிவடித்ததுக்கு நன்றிகள்... - shanmuhi - 11-26-2004 Quote:விடியலே இல்லாமல் ¯ñ¨Á¾¡ý. ¸Å¢¨¾ «ரு¨Á... Å¡úòÐì¸û... - tamilini - 11-26-2004 kavithan Wrote:நான் இதுவரை அறியாத சம்பவம் அதனை இங்கு இட்டு அதற்கு கவிவடித்ததுக்கு நன்றிகள்... இது நடந்த போரு நீங்கள் சின்ன பிள்ளையாய் இருந்திருப்பியள் நமக்கே அப்ப ஒன்றும் தெரிய வாய்ப்பிள்ளை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 11-27-2004 தாலாட்டும் தாய் மடியும் கூடாகிப் போனதோ தாய் முலைதானும் வற்றிப் போனதோ ரவைக்குப் பஞ்சமில்லாத் தேசத்தில் இரைக்கு ஏங்கி வாடுதோ நாற்று.....! பிணந்தின்று பழகியது உயிர் சொச்சம் கண்டும் தன்னோடு தர்மம் காத்து ஒதுங்கி இருக்குது...! பிறப்பில் மானிதரெல்லாம் புறந்தல்ல போக்கிடமின்றி மனிதம் மண்டியிடுகிறது பூமித்தாயிடம்...! நேற்று வன்னியில் சிங்களத்தான் தடை போட என் உறவும் வாடியது மறவேன்...! வேட்டோடு வேட்டைக்கு அலையும் மனித மிருகங்கள் கொடும்பசி தீரும் நாளும் வாராதோ நிறத்தோடு இனம் மதம் சாதி பிரிவினையும் ஓயாதோ....! காக்கை குருவி கழுகு குரங்கு ஒற்றுமை காணீர் பகுத்தறிவில்லா ஜீவன் அனைத்தும் பகுத்தாய மனிதன் மட்டும் திறன் இழந்தான் விலங்கிலும் கேடாய்....! இயற்கையை வென்றானாம் விஞ்ஞானம் படைத்தானாம் ஆன்மீகமாம் அரசியலாம் நாகரீகமாம் உச்சியாம் அனைத்தும் இருந்தும் என்ன பயன்...! உயிர்கள் அனைத்தும் அணைத்து அரவணைக்கும் அன்பு தொலைந்ததே....! ஊருக்கு ஊர் வேலி போட்டு வேற்றுமை வளர்க்கிறான் இயற்கையா தந்த ஒரு பூமி கூறுகளாய் குண்டுகளின் வாழ்விடமாய்...! ஈயமும் கந்தகமும் காற்றோடு கலக்க சுவாசம் கூடப் பஞ்சமாகுது குடி நீரும் நஞ்சாகுது நாளை வாழ்வென்பது கருவறையோடும் சாத்தியமாமோ....???! தனக்குத்தானே குழி தோண்டும் மானிடனே கேள்....!!!!! அன்பின் கனதி அற்றுப் போவதற்கு இது ஓர் சாட்சி...! மனிதம் வாழ மாசில்லா அன்பு வேண்டும் இன்றேல்... நாளை நாகரிகத்தின் காலடியில் இது நிகழும் அன்று மனிதம் காக்க மனிதரும் இரார் மனிதனின் பெயரால் பாவங்களும் இராது பூமி மட்டும் நீயின்றி நிம்மதியாய் சுழலும்....! - வெண்ணிலா - 11-27-2004 kuruvikal Wrote:காக்கை குருவி அக்கா அண்ணா இருவரது கவிதைக்கும் வாழ்த்துக்கள். - hari - 11-27-2004 என்ன கொடுமை இது. ஏன் இவர்களை ஆண்டவன் படைக்கின்றான்? தமிழினி எங்கள் கண்ணுக்கு தெரியாமல் இதைபோல் எத்தனை ஆயிரம் கொடுமைகள் நடக்குதோ? என்னை பொருத்தவரையில் ஆண்டவன் என்று ஒருத்தன் இல்லை. - kavithan - 11-27-2004 குருவிகளின் கவிக்கு வாழ்த்துகள்.. - kuruvikal - 11-27-2004 வாழ்த்திறதோட இல்லாமல் உங்கள் உணர்வுகளையும் கவிதையாகத் தரலாமே.... உங்கள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-27-2004 அந்தப்படத்தை எடுத்தவர் இவர் தான் <img src='http://www.expreso.co.cr/centaurs/posts/bio/Carter.jpg' border='0' alt='user posted image'> படத்தினை தந்த பிரபா அண்ணாவுக்கு நன்றிகள்...! - hari - 11-28-2004 குருவிகளே என்னுடய உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் எனக்கு கொடுக்கதெரியவில்லை மன்னிக்கவும், என்னுடைய உணர்வுகளின் கவிதை வடிவம் உங்கள் இருவரின் கவிதையில் உள்ளது. என்னால் கவிதை எழுத தெரிந்திருந்தால் இந்த கொடுமைக்கு காரணமானவர்களை கவிதையால் சுட்டெறித்திருப்பேன். குணம் அறிந்து கொடுக்கவில்லை ஆண்டவன் அந்த வரத்தை. Quote:காணதா கடவுளுக்காய்... Quote:காக்கை குருவி - kuruvikal - 11-29-2004 hari Wrote:குருவிகளே என்னுடய உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் எனக்கு கொடுக்கதெரியவில்லை மன்னிக்கவும், என்னுடைய உணர்வுகளின் கவிதை வடிவம் உங்கள் இருவரின் கவிதையில் உள்ளது. என்னால் கவிதை எழுத தெரிந்திருந்தால் இந்த கொடுமைக்கு காரணமானவர்களை கவிதையால் சுட்டெறித்திருப்பேன். குணம் அறிந்து கொடுக்கவில்லை ஆண்டவன் அந்த வரத்தை. படைப்பாளிகளை விட படிப்பவனே பலதும் அறிகிறான்...அந்தளவில் எங்கள் எல்லோரையும் விட நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள்...அறிகிறீர்கள்...! அதுதான் உங்களுக்கு இந்தத் தன்னடக்கம் Hari...மன்னா நீங்கள் மக்களுக்கு நல்ல உதாரணமும் கூட...!
- kavithan - 11-29-2004 Quote:வாழ்த்திறதோட இல்லாமல் உங்கள் உணர்வுகளையும் கவிதையாகத் தரலாமே.... உங்கள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள்..! Quote:குருவிகளே என்னுடய உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் எனக்கு கொடுக்கதெரியவில்லை மன்னிக்கவும்,ஹரி அண்ணா இது எனக்கு கூறி உள்ளார் நீங்கள் கவலை படாதைங்கோ.. நான் தான் எழுதணும் .. எனக்கு இப்ப கொஞ்ச நாளாய் எழுத முடியலை ஒண்டும்..எழுதக்கூடிய மனநிலை வரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போது எழுதுகிறேன்.. நேரமும் தட்டுபாடு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 11-29-2004 kavithan Wrote:கொஞ்ச நாளாக உங்கள் மன நிலைக்கு என்ன நடந்தது?Quote:வாழ்த்திறதோட இல்லாமல் உங்கள் உணர்வுகளையும் கவிதையாகத் தரலாமே.... உங்கள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள்..!Quote:குருவிகளே என்னுடய உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் எனக்கு கொடுக்கதெரியவில்லை மன்னிக்கவும்,ஹரி அண்ணா இது எனக்கு கூறி உள்ளார் நீங்கள் கவலை படாதைங்கோ.. நான் தான் எழுதணும் .. எனக்கு இப்ப கொஞ்ச நாளாய் எழுத முடியலை ஒண்டும்..எழுதக்கூடிய மனநிலை வரும் <!--emo& - kavithan - 11-29-2004 Quote:கொஞ்ச நாளாக உங்கள் மன நிலைக்கு என்ன நடந்தது? நேரம் இன்மை தான் காரணம் வேறு ஒன்றும் இல்லை.. - hari - 11-29-2004 ஒகே , நீங்கள் படிக்கிறீர்களா? அல்லது வேலை செய்கிறீர்களா? - kuruvikal - 11-29-2004 hari Wrote:ஒகே , நீங்கள் படிக்கிறீர்களா? அல்லது வேலை செய்கிறீர்களா? இரண்டும் போல...! ஓடி ஆடுறதப் பாத்தாத் தெரியல்ல...! இதுதான் மேற்குலக வாழ்க்கை... ஓய்வில்லாமல் ஓடி ஆட வேண்டியதுதான்....மேற்கில கிழமை நாளில வேலைக்கு படிப்பு ஓட்டம் கிழமை முடியும் நாட்களில பப்பில ஆட்டம்....இதுதான் வாழ்க்கை...பொதுவானவையின்ர.... கவிதன் விதிவிலக்காக இருக்கலாம்...! மேற்கில நம்ம ஆக்களக் கேக்கிறியளா... அவை நிறைஞ்சிருக்கிற இடங்களில் அவைக்குத் தொழில் சிலேன் கடை நடத்துறது...பலசரக்கில இருந்து கொத்துரொட்டிக் கடை வரைக்கும் இருக்கு....கடைக்கே போய் வந்தா கருவாட்டு நாத்தத்துக்கு குறைவில்ல... தாங்களே பெற்றேல் நிலையம் நடத்தி தங்கட ஆக்களையே மலிஞ்ச விலைக்கு வேலைக்கு வைக்கிறது.... கண்ணுக்குத் தெரியாத இடத்தில் எண்டா... தொழிற்சாலைகளில் பப் வழிய விடுதிகள் வழிய....பெற்றாவில நாட்டாமை செய்யுற வேலை....என்ன இஞ்ச வேலைக்கு ஏற்ப யுனிபோம் தருவினம் அவ்வளவும் தான்...... ஊர் போல இல்ல... இங்க ஆண்களோட பெண்களும் சிகரட் தண்ணி தாராளம்... இங்கிலீஸ் சினிமா பிறீ சோ வீதிகளில பஸ் ஸ்ராண்டில பொது இடங்களில சர்வ சாதாரணம்..நம்மாக்களிலும் கலப்பு வாரிசுகள்...அதாவது அங்கத்த அப்பா அம்மாவுக்கு மேற்கில பிறந்ததுகள்... குறிப்பிடத்தக்க அளவில நடிக்கினம்.... அவையோட அங்கத்த வாரிசுகளும் குறைவில்லாமல்....! ஆனா ஒன்று பிள்ளையள் படிக்குங்கள்.... அங்க போல இங்கையும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒன்றைக் கவனிக்க மறக்காதேங்கோ... மேற்கில டாக்குத்தரும் ஒன்றுதான் சாதாரண தொழிலாளியும் ஒன்றுதான்.... பந்தா எல்லாம் காட்டேலாது...சம்பளம் கூடிக் குறையும்... கூடிறதப் பொறுத்து வரியும் கூட கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கும்....!இப்ப இவர்களின் பார்வையில தாயகம் என்பது ரூறீஸ்ட் பிளேஸ்.... கணவன் மனைவிகளின் பாரிய கவலை பிள்ளைக்களுக்கு சொல்லுறது நாங்க பாத்து வளர்ந்த பாம் றீ... இவங்களுக்கு தெரியாதப்பா....பனானா றீ.....அடுத்த சமருக்கு சிலேன் போய்த்தான் வரோனும்....இப்படியே வருடா வருடம் சொல்லுவினம்....! இது ஒரு விலாவாரியான பார்வை....மட்டுமே...! இப்ப இவையட்ட தமிழினி தந்த படத்தைக் காட்டிக் கேட்டியள் எண்டா...வாவ் வட் என் நைஸ் ஆட் எண்டுவினம்...உண்மை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-29-2004 அடேங்கப்பா இவ்வளவு விசயம் இருக்கா??? இக்கரைக்கு அக்கரை பச்சை என்றது செரியாத்தான் இருக்கு, ஆனால் இங்க வந்தால் பெரிய சினிமாக்கள் காட்டினம் உவையள், - hari - 11-29-2004 Quote:இப்ப இவையட்ட தமிழினி தந்த படத்தைக் காட்டிக் கேட்டியள் எண்டா...வாவ் வட் என் நைஸ் ஆட் எண்டுவினம்...உண்மை.அப்படியென்றால் பிணமாக நடமாடுதுகள் என்று சொல்கிறீர்கள், பேசாமல் சுடுகாட்டில் தாங்களாக போய் படுக்கவேண்டியதுதான்! |