![]() |
|
புதிதாய் ஒரு வானம்பாடி.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புதிதாய் ஒரு வானம்பாடி.......... (/showthread.php?tid=3359) |
புதிதாய் ஒரு வானம்பாடி.......... - sakthy - 09-11-2005 பூக்கள் கீழே விழுந்தாலும் சிரிப்பதை நிறுத்தவில்லையே மணமும் மறவில்லையே மாறாக - நாம் மட்டும் ஏன் இப்படி ? மாற்றிக் கொள்ள முயலுவோம். முயன்று வெற்றி கொள்வோம் பூக்களைப் போல்................ - lollu Thamilichee - 09-11-2005 Quote:கீழே விழுந்தாலும் வாசிக்க நல்லா இருக்கு.. யோசித்தால் என் சின்ன மூளை கேட்குது.. "நீ செத்தால் எப்படி சிரிப்பாய்?" என்று..!! :-) தப்பா எடுக்காதீங்கோ...!! - RaMa - 09-12-2005 நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் - Mathan - 09-12-2005 சக்தி இது உங்கள் சொந்த கவிதையா? - Rasikai - 09-12-2005 சக்தி கவிதை அருமை. ம்ம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். - Rasikai - 09-12-2005 Mathan Wrote:சக்தி இது உங்கள் சொந்த கவிதையா? ஆகா மதன் தொடங்கிட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sakthy - 09-12-2005 வாழ்த்துக்கு நன்றிகள்.உங்களின் ஆசிகளோடு என் கவி கிறுக்கள்கள் தொடரும்............... - sakthy - 09-12-2005 புதிதாய் நான் உங்கள் இதயங்களுடன் கைகுலுக்க அதற்கு முன் சுய அறிமுகம் பாரதி நேசித்த என் பெயரை பிறந்ததோ தமிழர் தேசத்தில் இருப்பதோ தமிழகத்தில் விரும்புவது பாரதியின் கவிதைகளை மழலையின் சிரிப்பு மழைக்குளியல் மொட்டைமாடி நிலவு கரன்ட் இல்லா இரவு தனிமையின் இனிமை முடிவே இல்லா நிலக்கடல் சிவப்பு ரோஜா வெறுப்பதோ பொய்களையும்,பொறமையையும் காத்திருப்பதோ என் தேசத்தில் கால்வைக்கும் நாளுக்காய் இது போதும் இப்போதைக்கு வருவேன் மீண்டும்............. - கீதா - 09-12-2005 சக்தி உங்கள் இரண்டு கவிதையும் அருமை நன்றியுங்கோ - அனிதா - 09-12-2005 கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sakthy - 09-12-2005 போர் சந்தையில் நம் முகவரியை தொலைத்துக் கொண்டோம் அகதி என்னும் பெயருடன் எமக்கு நாமே அடையளம் கண்டு கொண்டோம் நாட்டை பிரிந்து அயல் நாடுகளில் அடைக்களம் ஆனாலும் - நம் உறவுகளை தேடும் பயணத்தில் நானும் உங்களுடன்..... - Rasikai - 09-12-2005 கவிதை என்றவுடன் பெண்கள் காதல் பற்றித்தான் எழுதுகிறார்கள். நீங்களும் அவ்வாறு இல்லாது நிஜத்தை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் சக்தி. கவிதைகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது. - Birundan - 09-12-2005 கவிதைகள் நன்றாக உள்ளது சக்தி வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 09-13-2005 வணக்கம் சக்தி ..கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்.. - வெண்ணிலா - 09-13-2005 3 கவிதையும் அருமை. தொடருங்கள் சக்தி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2005 Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& வாழ்த்து சொல்லுவதுடன் நீங்களும் எழுதலாமே அனித்தா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- ப்ரியசகி - 09-13-2005 vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& ம்ம்..அனி எழுதுற..நீங்கள் பார்க்கலையா.. அதுசரி என்ன நிலாவுக்கு இன்றைக்கு விடுமுறையோ? :roll: - lollu Thamilichee - 09-13-2005 கவிதை நன்றாக உள்ளது..!! Rasikai Wrote:கவிதை என்றவுடன் பெண்கள் காதல் பற்றித்தான் எழுதுகிறார்கள்.. நீங்கள் காதலித்து இருக்றீர்களா??... அல்லது ஏதாவது கவிதை எழுத முயற்சித்து இருக்றீர்களா?? எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை..எழுதபடுறிற விடயம் நன்றாக உள்ளதா என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்..! அதைவிடவும் ரசனை முக்கியம்.. கேட்ட செவிஉள்ளவர்கள் கேட்கட்டும்.. ரசிக்க மனசுள்ளவர்கள் ரசிக்கட்டும்..!! சிலபேருக்கு காதல் பிடிக்காது.. மற்றவர்களுக்கு சழுதாயம் சம்மந்தமான கவிதை பிடிக்காதும்.. இது எல்லாம் மனசில இருக்கு..!! பிடிக்கவில்லை என்றால் பாராட்டு தேவைஇல்லை.. ஆனால் உதாசினம் ஊடாகது..!! தட்டிக்குடுக்க தேவைஇல்லை.. தளர்ந்துபோக விடக்குடாது..!! வள்ளுவர் துவங்கி.. இளைஞ்ன் வரைக்கும் காதல் பற்றி எழுதிஉள்ளார்கள்... பெண்கள் இப்போதுதான் எழுதும் சுகந்திரம் பெற்றுள்ளார்கள்..அதுவும் நிஐபெயர் குறிப்பிடுவதில்லை!! அதனால் பெண்கள் என்று போதுவாக குறிப்பிடாதீர்கள்..! "தேவதாஸ் அது செய்தார்..சாஐகான் இது செய்தார்.. நீங்கள் பெண்கள் ஆண்களுக்காக என்ன செய்தீர்கள்" என்று கேட்குறாங்க.. கவிதையே சலித்து போனால் அப்புறம் நான்க எங்க தாஜ்மகால் கட்டுறது?? தட்சமயம் பெண்களால் முடிந்தது கவிதை ஒன்றுதான்.. அதையாவது விட்டுவைக்களாமே???? மன்னிக்கனும்.. இது என் அபிப்பிராயம்..!! - ப்ரியசகி - 09-13-2005 Quote:தட்சமயம் பெண்களால் முடிந்தது கவிதை ஒன்றுதான்
- வெண்ணிலா - 09-13-2005 ப்ரியசகி Wrote:vennila Wrote:Anitha Wrote:கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். <!--emo& காலில் சின்ன விரலில் காயம் வந்திட்டுது. சோ நடக்க முடியல்லை. அப்போ ஓரிடமும் போகல்லை. அதுதான் யாழ் வந்தேன்.
|