![]() |
|
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! (/showthread.php?tid=2967) Pages:
1
2
|
குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்! - ANUMANTHAN - 10-09-2005 குரங்குகளுக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமாம்!மனிதர்களைப் போலவே குரங்குகளும் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றன. காரணம்இ ஆண் குரங்குதான் தங்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கும். இதை தாய் குரங்குகள் மதிப்பாக கருதுகிறது. எனவே தான் இந்த ஆண் குழந்தை ஆசை. இதுமட்டுமா? தன் ஆசையை நிறைவேற்றும் டிரிக்ஸ்சும் அதுக்கு தெரியுது... படித்து டாக்டரேட் பெற்றவர்களுக்கே தெரியாத விஷயம் இந்த குரங்குகளுக்கு தெரிந்திருக்குன்னா பாருங்க. ஒரு பெண் குரங்கு தொடர்ந்து எட்டு ஆண் குட்டியையே பெற்றெடுக்கும். அதன் பிறகுதான் பெண் குட்டி. இது எப்படி என்று ஆய்வு செய்த போது ஒரு பெண் குரங்கு ஒவ்வொரு முறை ஆண் குரங்குடன் இணை சேருவதற்கு முன்பாக ஒரு வித செடியின் இலையை தின்கிறது.இந்த இலையை பரிசோதித்த போது இதில் உள்ள வேதிப் பொருள் கர்ப்பப் பையில் சில ரசாயன மாற்றங்களை உண்டாக்கி ஆண் குழந்தை உருவாகும் தன்மையை ஏற்படுத்துகிறது என கண்டு பிடித்துள்ளனர். மேலும்இ கருப்பையில் உள்ள முட்டையை ஆணாகவோஇ பெண்ணாகவோ நிர்ணயித்து கருவுறச் செய்யும் தன்மையை சாப்பிடும் உணவு வகையால் மாற்றலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து அல்லவா? நன்றி-தினமலர் - kurukaalapoovan - 10-09-2005 ஆகா குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றதற்கு இன்னுமொரு ஆதாரம் கிடைச்சிருக்கு. - selvam - 10-09-2005 மனிதனுக்கும் குரங்குமனமென்பதாலென்னவோ ஆண்பிள்ளைகளை மனிதன் விரும்புவது போல குரங்ககளும் விரும்புகின்றன. - sankeeth - 10-09-2005 போச்சுடா! இனிப் பெண்களுக்கு தட்டுப்பாடுதான். கல்யாணம் செய்யாத ஆட்களெல்லாம் கெதியில செய்யுங்கோ.... நானும் அம்மாவை எனக்கு கெதியில பெண்பார்க்கச் சொல்லவேணும். :roll: :roll: - தூயா - 10-09-2005 குரங்குமா??? இங்க சிலர் இதையே காரணமா வைச்சு அம்மாட்ட பெண்பார்க்க சொல்லினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்
- Danklas - 10-09-2005 தூயா Wrote:குரங்குமா??? என்ன லொள்ளா?? பின்ன குரங்கில இருந்துதானே மனுதர்கள் வந்தவை எண்டு சொல்லுறாங்க.. அப்ப குரங்கிண்ட குணம் மனிதர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்?? என்ன சின்னா நான் சொல்லுறது சரியோ இல்லையோ?? (ஜோவ் சின்னா அதுக்காண்டி உடனே சாட்றீயையும் 10 :evil: யும் நினைத்துப்போட்டு பதில் எழுதிறதில்லை ஆமா.. :evil: :evil
- tamilini - 10-09-2005 தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- jeya - 10-09-2005 என்ன தமிழினி அக்கா இப்படி சொல்லிப்போட்டீங்கள்... - MUGATHTHAR - 10-09-2005 tamilini Wrote:தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo& இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ.... (ஆனா அந்த 10மாசமும் நீங்க படுத்தும் பாட்டிலும் பார்க்க நாங்களே பிள்ளையை சுமந்தா தேவலையப்பா....) - தூயா - 10-09-2005 தலையிடி தனக்கு வந்தா தான் தெரியும்..எல்லாம் பொன்ஸ்.அக்கா குடுத்த இடம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தாத்தா ஒரு தேத்தணி போட்டு தரவா? - tamilini - 10-09-2005 Quote:இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ....அப்ப பொன்னம்மாக்கா படுத்தியிருக்கா போல. :wink: - Mathan - 10-09-2005 MUGATHTHAR Wrote:tamilini Wrote:தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo& என்ன முகத்தார் அனுபவமுள்ள நீங்களே இப்படி சொல்றீங்க? அண்மையில் என்னுடைய கசின் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வீட்டில் அவர் பட்ட வேதனையும் வலியும் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை. பின்பு கசின் அவரை Hospitalக்கு அழைத்து சென்ற போது அவரின் மாமியாரை அழைத்து கொண்டு நானும் கூட சென்றிருந்தேன். அங்கு கசினையும் மனைவியையும் Labour ward room க்குள் அழைத்து சென்றதும் நாங்கள் அந்த வராந்தாவில் காத்திருந்தோம், அப்படி காத்திருந்த நேரம் வெவ்வேறு அறைகளில் இருந்து அலறல் சத்தங்களும் பிரசவ வேதனை குளறல்களும் கேட்டன, ஒவ்வொரு குழந்தையும் பெற்றெடுக்க அவர்கள் தம்மை எந்த அளவிற்கு வருத்த வேண்டி இருக்கின்றது என்பதை நேரடியாக அறிந்த போது உண்மையிலேயே தாங்க முடியவில்லை, இந்த அனுபவம் நான் இனி ஒருவரை திருமணம் செய்து அதன் பின்பு குழந்தைக்காக இப்படி ஒரு கஷ்டத்தை அவருக்கு கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியை மனதில் எழுப்பியது. நாம் என்னதான் எப்படிதான் செய்தாலும் அந்த 10 மாதம் குழந்தையை சுமந்து பெறுவதற்கு எதுவுமே ஈடாகாது என்றுதான் சொல்வேன், - Danklas - 10-09-2005 என்ன மதன் அழப்பண்ணுறீங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்னைபொறுத்தவரை முற்பிறப்பில் பாவம் செய்தவர்கள்தான் பெண்களாக பிறக்கிறார்கள்... இப்ப உதாரணத்துக்கு சின்னாவைப்பாருங்க வேலை->காசு->தண்ணி->திருப்பியும்வேலை->வேலைத்தளத்தில சுவிஸ் கேர்ள்ஸுடன் கடலை போட்டுட்டு->திரும்பவும்தண்ணி->வீடு->சின்னாச்சியுடன் டுயட்->நித்திரை->வேலை,சுவிஸ்,தண்,வீடு எண்டு என்னமா என் ஜோய் பண்ணிறார் எண்டு... :evil: :evil:
- kuruvikal - 10-09-2005 Mathan Wrote:MUGATHTHAR Wrote:tamilini Wrote:தொலைஞ்சினம். இனி ஆண்களே குழந்தைகளை பெற்றெடுக்கும் வசதியையும் கண்டு பிடிச்சா போச்சு. பெண்களுக்கு நின்மதி. :wink: <!--emo& நீங்கள் ஒன்றைப் பாத்திட்டே சா... கேட்டிட்டே இப்படிச் சொல்லுறீங்க... இவற்றைப் படிச்சவைக்கு எப்படி இருக்கும்...! பெண் எப்படியானவளாகத் தெரிவாள்...??! இப்ப புரியுதா... களத்தில கொட்டுறதுகளில எத்தினை குப்பை எண்டு...! ஆனா எல்லா மனிதருக்கும் எல்லா அனுபவமும் இருப்பதில்லை...அவையவை கிடைக்கும் போது அவரவர் பார்வைகளும் தெளிவு பெறும்...! மேற்கில் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனை லேபர் றூமுக்கு அழைப்பார்கள்... நீ உன் மனைவியை எவ்வளவு கஸ்டப்படுத்துகிறாய்...எவ்வளவு கஸ்டத்துடன் குழந்தையைத் தருகிறாள்...அவள் மீது நீ காட்ட வேண்டிய அன்பு பாசம் எவ்வளவு என்பதைப் புரிய வைக்கத்தான்....! எத்தனை பேர் புரிஞ்சுக்கிறாங்க...???! விட்டிட்டு அடுத்த கலியாணமும் முடிக்குதுகளே...???! அதுக்கு விமர்சனம் வேற... கவிதை வேற...ஆத்திரம் தான் வரும்...இப்படியானதுகளை பார்க்கும் போது..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-10-2005 மதன் நானும் சொன்னது அதைத்தான் அதாவது ஒரு பாPட்சை எழுதின மாணவனைவிட அவனின் பெற்றோருக்கு அதன் ரிசல்ஸ் வரும் போது எவ்வளவு துடிப்பிருக்கும் அதைப் போலத்தான் நாங்களும் எவ்வளவு துடிப்படைவோம் அதையே நாங்கள் செய்தால் அவ்வளவு துடிப்பிராதுதானே அதுதான் லேபவோட்டு க்கு வெளியே எங்களை அங்கை இங்கை அலைய விட்டு கஸ்டப்படுத்துவதைத்தான் சொன்னன் ஆனா இந்த கஸ்டம் தவிப்பெல்லாம் லெப ரூமால் கேட்டும் குழந்தையின் அழகுரலைக் கேட்டதும் எப்பிடித்தான் பறந்து போகுதோ தெரியவில்லை.................. - tamilini - 10-10-2005 இங்க பாருங்கோ கதை விடுற வடிவை. இப்படித்தவிக்கிறவை வீட்டில தான் டசின் கணக்கா பிள்ளையள் இருக்கும் போல :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-10-2005 பிள்ளை பழைய காலம் மலையேறிப்போட்டுது இப்பத்தைய இளம் குடும்பங்கள் எங்கையாவது 2க்கு மேலை பிள்ளை இருக்கோ இதுக்கு குடும்ப கஸ்டம் எண்டு கதை விடாதைங்கோ நீங்க.... - kuruvikal - 10-10-2005 அதேன் இரண்டு...ஒன்று காணாதா... முகத்தார்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Birundan - 10-10-2005 ஆஸ்திக்கொண்று அழகுக்கொண்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sankeeth - 10-10-2005 முகத்தார் எழுதியது: இப்பவும் இதையொண்டைத்தான் செய்யிறியள் அதையும் எங்கடை தலையிலை கட்ட ஆசையைப் பாருங்கோ.... (ஆனா அந்த 10மாசமும் நீங்க படுத்தும் பாட்டிலும் பார்க்க நாங்களே பிள்ளையை சுமந்தா தேவலையப்பா....) இப்படி புலம்பிறீர்களே! பிள்ளை பிறந்தவுடன் இவன் என்னுடைய பிள்ளை என்று பெருசாய் இனிசியல் போட்டு கொடுக்கிறீர்களே! :? :? |