Yarl Forum

Full Version: 2005ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன் தமிழனைச் செய்தான்.....
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்
செய்தான்.....
கொலை செய்யப்பட்டவர்
<img src='http://www.yarl.com/forum/files/050116_jeyakumaran_125.jpg' border='0' alt='user posted image'>நேற்று இடம் பெற்ற இச் சம்பவத்தில் தனுசன் ஜெயக்குமாhர் 18 வயது என்பவர் ஏனைய நான்கு பேர் கொண்ட தமிழர் குழவினால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கத்திக்குத்தானவர் ஸ்பைசிலான்ட் மாhக்கற்றில் பணி புரிந்தவராவார். இவரை அவரது வேலையிடத்தில் வந்து அழைத்த இளைஞர் குழு அவரை காரினுள் துஸக்கிச் சென்றது இது பற்றி 42ம் பிரிவு காவல் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் தமது விசாரனை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இறுதியாக McLevin park அருகில் கத்திக்குத்துக்கு இலக்கான தனுசன் குற்றுயிராய்க் கிடப்பதை இரவு 9.15 மணிக்கு காவல் துறையினர் கண்டு பிடித்தனர். உடனடியாக Sunnybrook Health Sciences Centre இல் வைத்து சிகிச்சை அழிக்கப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது தனுசன் சாவடைந்தார். இது தொடர்பாக உடனடியாக இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவரையும் மற்றும் கடத்துவதற்க்கு பயன் படுத்தியதாக கருதப்படும் வாகனமும் தேடப்பட்டு வருகிறது இதற்க்கு தமிழ் மக்களின் ஒத்துழைப்பை ரொரன்ரோ காவல் துறையினர் வேண்டுகின்றனர். தகவல் தெரிந்தோர் 416-808-7400 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
ரஜீவன் அற்புதராஜா 20வயது
பிரான்கிளின் நேசராஜா 21 வயது
ரோகான் ஜோர்ச் 19 வயது ஆகியோரே கைத்து செய்யப்பட்டுள்ளனர்.
புருசோத்தமன் நடராஜ் என்பவர் தேடப்பட்டு வருகிறார்
கொலை செய்யப்பட்டவர்
நேசமுடன் நிதர்சன்
அடப்பாவிகளா.. எப்படியெல்லாம் தமிழன்ட பெயரை நிலை பிரபல்யப்படுத்தினம்.. :?
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
வணக்கம்,

விரக்தியின் விளிம்பில் புலத்து தமிழ் இளைஞ்ஞர்கள். பாதை மாறும் தடங்கள். இதை புரிந்து கொள்வரோ தமிழ் புத்திஜீவிகள்? இவர்களிடயே ஆயிரம் பிணக்கு, இதனால் புலத்து தமிழனின் நிலை எனி சூனியமோ?

அன்புடன்
மதுரன் Cry Cry Cry
என்ன விரக்தி இவர்களிற்கு பெற்றேர்கள் கவனமெடுக்க வேண்டும் வெறும்பொருள் பண்டம் மட்டும் தேடினால் போதாது பிள்ளைகள் போகிற பாதையையும் கவனிக்க வேண்டும்
இதுபோன்ற விடயத்தை தனியே பெற்றோர்மேல போட்டுவிட முடியாது.. அதுகள் என்ன செய்யிறது?

செத்த பெடியனுக்கு 18 வயது.. தாய் தேப்பன் நாட்டிலை.. அப்பிடிதானே?

குத்தினவன்ரை வயசுகளை பாரேன்.. 19-20-21... நல்ல எதிர்காலம் தமிழ் சந்ததிக்கு....
வணக்கம்,

அததானண்ண சொல்லுறன் புலம் பெயர்ந்த நாட்டில,ஆதரவுக்கு யாரும் இல்லாத இளஞ்ஞர்களும் இருக்கினம். அவர்களுக்கு சரியான முறையில் வளிகாட்ட யாரு இல்லாத விடத்து இது போன்ற தப்புக்களில் இடு படுகின்றார்கள். புலம்பெயர்ந்த நமது முதலாவது சந்ததியே, தன்களை திருத்திக் கொள்ளாத பொளுது இளஞ்ஞர்கள் என்ன செய்வார்கள். நமது சமூகம் பொறுப்புணர்ச்சி அற்று, நமக்கிடையே வேறுபாடுகளை காண்பதிலுமே குறியாக இருக்கின்றார்கள். பாவம் அந்த இளஞ்ஞர்களுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் சரியான அரவணைப்பு கிடைக்காமையினையிட்டு மனம் வருந்துகின்றேன். நமது சமூகம் இன்னும் மாற வேண்டும்.

அன்புடன்
மதுரன்
Quote:Mathuran



இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 114
வதிவிடம்: நோர்வே
எழுதப்பட்டது: செவ்வாய் தை 18, 2005 1:58 am Post subject:



வணக்கம்,

விரக்தியின் விளிம்பில் புலத்து தமிழ் இளைஞ்ஞர்கள். பாதை மாறும் தடங்கள். இதை புரிந்து கொள்வரோ தமிழ் புத்திஜீவிகள்? இவர்களிடயே ஆயிரம் பிணக்கு, இதனால் புலத்து தமிழனின் நிலை எனி சூனியமோ?

அன்புடன்
மதுரன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக

நாய்யள் பிடிச்சு ஒரு 40 வயசுவரை உள்ள போடனும் உது விரக்தி இல்லை கொழுப்பு 3 நேரம் சோறு விழுது இல்லையோ அது தான்
களி சாப்பிட்டா நாயள் திருந்தும் :evil: :evil: :evil: :evil: ஒருத்தனையும் விடப்படாது
இருக்கட்டும் செத்தவர் எப்படியாம் அவர் எந்த குறுப் :twisted: :twisted:
அபபு மதுரன் அப்பா அம்மா வை குறைசொல்லாதையப்பு எத்தனைய எண்டு அதுவள் செய்யிறது
விரக்தியில் வாழும் இளைஞர்கள் தண்ணியடித்தால் சொல்லாலம் அது விரக்கி என்று தற் கொலை செய்தாலும் அப்பிடி சொல்லலாம்.. மற்றவனைக் கொல்ல வேண்டும் என்பதோ... அடிதடியில் இறக்குவதோ? விரக்தியின் விளிம்பா? பிள்ளைகளின் பின் 24 மணிநேரமும் பெற்றோர்கள் சென்று அவர்களை கவனிக்க வேண்டும் என்கின்றீர்களா? ... இவர்களுக்கு வக்காலத்து ....;இளைஞர்களுக்கு எத்தனை போர் வழிகாட்ட தயாராய் இருக்கின்றனர். அதுவும் கனடாவைப் பொறுத்த வரை உங்கள் கரத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை....
நேசமுடன் நிதர்சன்
வணக்கம்,

அப்படியாயின் ஏன் இப்படி நடக்கின்றது? என்ன காரண்ம் என ஆராந்தீர்களா? வளிகாட்டிகள் தவறாக இருந்தால் சமூகமும் தவறாகும் என்பதுதான் எனது கருத்து. இது கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டிய தலைப்பு. இதனை வெளிப்படையாக விவாதிப்பதும் நன்றன்று, காரணம் நாம் இன்கு முன்வைக்கும் கருத்துக்கள் ஒருவேளை அவர்களை தட்டி கொடுப்பதுமாக அமைந்திவிடலாம். அனால் இதைபற்றி தமிழ் சமூகம் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுப்பது நன்று.


அன்புடன்
மதுரன்
அது தானுங்கோ... சுற்றியுள்ள சமூகம்தான் இதற்கு வழிகாட்டி...
எல்லாத்தையும்விட முக்கியமாக இவர்களை தவறான வழிக்கு கொண்டுசெல்வது சினிமா... இது என்னுடைய தீர்மானமான கருத்து..

தயவுசெய்து எனது பதிலை விவாதிக்கவேண்டாம்.. அதற்காக நான் சினிமா குற்றம் சொல்லவும் இல்லை.. சினிமாவில் நல்ல விடயங்களும் இருக்கு..

நல்ல விடயங்களை விட தீய விடயங்கள்தான் அதிகம் இளைஞர்களின் தலைக்குள்ளை ஏறுது..! நானும் ஒரு 20 வயது இளைஞன் என்ற வகையில் சொல்லுறன்...

சினிமாவிலை நாளுக்கு நாள் எவ்வாறு வன்முறைகளை செய்யலாம் என்று வழிகளை காட்டிக்கொடுக்கினம்...
அதை முதலிலை நிறுத்தினால் சரி இளம் சமூகம் கொஞ்சம் திருந்த வாய்ப்பிருக்கிறது.. :!:
போட்டாச்சா..நம்மாக்களத் திருத்தேலாது எண்டில்ல....திருத்தக் கூடியவ அங்கங்க இல்ல எண்டுற துணிவுதான் இவ்வளவும் செய்விக்கிறது....!

இப்ப பாருங்க 90- 95 குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக யாழ் மாவட்டம் இருந்தது..காரணம் உங்களுக்கே தெரியும்...சந்தர்ப்பம் கிடைச்சா தவறு செய்யத் துணிபவன் தான் சாதாரண மனிதன்...அவனே குற்றவாளியும் ஆகிறான்..கிடைக்கும் சந்தர்ப்பத்தம் நல்லதற்கா தீயதற்கா என்று நோக்கி....நல்லதை நாடுபவன்... மற்றவர்களையும் தங்களைப் போல நோக்கிறவன் தனக்கும் தீங்கு செய்யமாட்டான் மற்றவனுக்கும் செய்யமாட்டான்...! அந்த நிலை என்று வரும்...அது கொஞ்சம் கஸ்டம்... எனவே பொலீஸ்தான் வழிச்சு துடைக்க வேணும்...உதுகள....! :evil: Idea
இப்போது ரொன்ரோ தமிழர்களின் வாய்னளில் அடிபடும் இக் கொலைக்கு மூலகாரணம் குறிப்பிட்ட வழக் கொண்றிற்க்கு தனுசன் சாட்சியாக நீதிமன்றில் சாட்சி சொல்ல இருந்தார் என்பது. இவரின் பெற்றோர்கள் தாயகத்தில் இருக்கின்றனர். இவ் மிகவம் அமைதியான சுபாவம் உடையவர் என அவர் வேலைசெய்த கடைக்கு சென்று வரும் வாடிக்கையாளர்ள் தெரிவிக்கின்றனர். இவரசு பெற்றோரை கனடிய அரசாங்கள் கனடாவிற்க்கு ஸ்பொன்சர் செய்யவுள்ளதாகவும் அறியப்படுகிறது. எல்லாச் செய்திகளையும் குறிப்பாக தமிழ் தேசியத்திற்க் கெதிரான செய்திகளை முன்pன்று வழங்கும் இணையங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
நேசமுடன் நிதர்சன்
Nitharsan Wrote:இப்போது ரொன்ரோ தமிழர்களின் வாய்னளில் அடிபடும் இக் கொலைக்கு மூலகாரணம் குறிப்பிட்ட வழக் கொண்றிற்க்கு தனுசன் சாட்சியாக நீதிமன்றில் சாட்சி சொல்ல இருந்தார் என்பது. இவரின் பெற்றோர்கள் தாயகத்தில் இருக்கின்றனர். இவ் மிகவம் அமைதியான சுபாவம் உடையவர் என அவர் வேலைசெய்த கடைக்கு சென்று வரும் வாடிக்கையாளர்ள் தெரிவிக்கின்றனர். இவரசு பெற்றோரை கனடிய அரசாங்கள் கனடாவிற்க்கு ஸ்பொன்சர் செய்யவுள்ளதாகவும் அறியப்படுகிறது. எல்லாச் செய்திகளையும் குறிப்பாக தமிழ் தேசியத்திற்க் கெதிரான செய்திகளை முன்pன்று வழங்கும் இணையங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
நேசமுடன் நிதர்சன்

வணக்கம்,

அந்த படத்த பாத்தாலே தெரியுதல்லே. அந்த தனுசன் என்கிற பெடியன் ஒரு அப்பாவி போலத்தான் இருக்குது. தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் எப்பதான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவயள்? அப்படி தமிழ்ர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் எண்டு நினைத்தாலும் அவர்கள் நிக்கின்ற தளம் தவறானதாகவல்லவோ இருக்கின்றது.

அன்புடன்
மதுரன்
எது எப்படியோ.. பாவம் நல்ல ஒரு பிள்ளையை கொண்டுபோட்டுதுகள்.. :oops: :oops: :?
kuruvikal Wrote:போட்டாச்சா..நம்மாக்களத் திருத்தேலாது எண்டில்ல....திருத்தக் கூடியவ அங்கங்க இல்ல எண்டுற துணிவுதான் இவ்வளவும் செய்விக்கிறது....!

இப்ப பாருங்க 90- 95 குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக யாழ் மாவட்டம் இருந்தது..காரணம் உங்களுக்கே தெரியும்...சந்தர்ப்பம் கிடைச்சா தவறு செய்யத் துணிபவன் தான் சாதாரண மனிதன்...அவனே குற்றவாளியும் ஆகிறான்..கிடைக்கும் சந்தர்ப்பத்தம் நல்லதற்கா தீயதற்கா என்று நோக்கி....நல்லதை நாடுபவன்... மற்றவர்களையும் தங்களைப் போல நோக்கிறவன் தனக்கும் தீங்கு செய்யமாட்டான் மற்றவனுக்கும் செய்யமாட்டான்...! அந்த நிலை என்று வரும்...அது கொஞ்சம் கஸ்டம்... எனவே பொலீஸ்தான் வழிச்சு துடைக்க வேணும்...உதுகள....! :evil: Idea

வணக்கம்,

யாழ்ப்பாணத்தையும் ஐரோப்பிய நாடுகளையும் ஒன்றாக ஒப்பிடுவது தப்பு. புலம்பெயர்ந்து வாளுகின்ற நம்மவர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சிலர் நல்லவர்களாக புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. இவற்றை வெளிப்படையாக விவாதிக்க முடியாது. இவற்றிற்கு பல காரண்ங்கள் இருக்கலாம்.

அன்புடன்
மதுரன்
இங்கு பெற்றேர் இல்லாத இளைஞர்களிற்கு பல சுதந்திரங்கள உண்டு மற்ஐறயது காங் குறூப்புகள் உருவாவதற்கு தமிழக சினிமாவும் ஓரு காரணம்..உதாரணம் பலகுறூப்பின் பெயர்கள் சினிமா பெயர்களே.பிரான்சில் உதாரணம் மின்னல்.முக்காலா.தீனா.இப்படி இந்த இளைஞர்களை.இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் உள்வாங்கி அவர்கள் திறமைகழை ஆக்கத்திற்காகவே வெளிகொணடுவரமுடியும்.ஏன் புலம்பெயர்; வானெலிகளே இவர்களை அரவணைத்து செல்லலாம்.செய்வார்களா???
மதுரன்...இங்கு ஒப்பிட்டது யாழ்ப்பாணத்தையும் ஐரோப்பாவையும் அல்ல... தாயகத் தமிழர்கள் இடத்துக்கு இடம் கொள்ளும் கோலங்களையே.... தவிரவும்...யாழ்ப்பாணத்திலேயே புலிகள் ஆட்சியில் கொலை கொள்ளை என்று ஒதுங்கி இருந்தவர்கள்...இந்திய இராணுவம் வந்த போது எல்லாம் செய்தனர்தான்...அதேபோற்தான் புலத்துக்கு வந்தவுடனும் நிலைமாறுகிறார்கள்..தெளிவற்றவர்களாகிறார்கள் என்பதையே குறிப்பிட்டோம்...! அது உண்மையும் கூட...அவர்களோடு பேசும் போது இதைத் தெளிவாக அவதானிக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
kuruvikal Wrote:மதுரன்...இங்கு ஒப்பிட்டது யாழ்ப்பாணத்தையும் ஐரோப்பாவையும் அல்ல... தாயகத் தமிழர்கள் இடத்துக்கு இடம் கொள்ளும் கோலங்களையே.... தவிரவும்...யாழ்ப்பாணத்திலேயே புலிகள் ஆட்சியில் கொலை கொள்ளை என்று ஒதுங்கி இருந்தவர்கள்...இந்திய இராணுவம் வந்த போது எல்லாம் செய்தனர்தான்...அதேபோற்தான் புலத்துக்கு வந்தவுடனும் நிலைமாறுகிறார்கள்..தெளிவற்றவர்களாகிறார்கள் என்பதையே குறிப்பிட்டோம்...! அது உண்மையும் கூட...அவர்களோடு பேசும் போது இதைத் தெளிவாக அவதானிக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

வணக்கம்,

அப்படியா அப்படியானால் தங்கள், கருத்தும் எனது கருத்தும் சரியாகத்தான் இருக்கும்.

அன்புடன்
மதுரன்
இங்கு செய்திகள் வந்த பின் நிதர்சனத்தில் இது பற்றி செய்தி வந்துள்ளது. இதற்காய் நன்றிகளை தெரிவிப்பதோடு உடனடியான செய்திகளை வழங்க தமிழ் ஊடகங்கள் முன்வரவேண்டும். வெறும் தாயகத்தைப் பற்றிய அக்கறையிலும்.. தாயகச் செய்திகளையும் வெளியிடும் அதே நேரம் நமக்கருகில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும். நிதர்சனத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ள விடையங்களை இங்கே தருகிறேன்
நிதர்சனம்.கொம் செய்திகளில் இருந்து Wrote:றன்டோவில் நேற்று முன்தினம் இரவு தனு~ன் ஜெயக்குமாரன் (18) என்றளைக்கப்படும் தமிழ் இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொறன்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர் அவரது வேலை இடத்திற்கு சென்ற இளைஞர்கள் கேர்ஸ்டியொன்று மேற்படி இளைஞரை பலவந்தமாக காருக்குள் இழுத்துச் சென்றதாகவும்; இத்தகவலை பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து மக்லீவன் பூங்காவிற்கு அண்மையாக பொலிசாரால் அக்கரை கண்டு பிடிக்க முடிந்துள்ளதோடு சம்பவ இடத்தில் நின்ற இரு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கத்திக் குத்துக்காயங்களுடன் மீட்கப்பட்ட தனு~ன் சனிபூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். ரோறன்டோவில் இவ்வாண்டில் நடைபெற்ற முதலாவது கொலையென்று அறிவித்திருக்கும் ரொறன்டோ பொலிசார் இக் கொலையோடு தொடர்பு பட்டடுள்ளவர்கள் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் உடன் ரொறன்டோ பொலிசாருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.


புலம் பொயர்ந்த மண்னில் பொறுப்புணர்வற்ற இவ்வாறான சமுக விரோத நடவடிக்கைகளில் ஈடு படுவோர் பற்றிய தகவல்களை தமிழர்கள் பொலிசாருக்கு வளங்குவதற்கு தயங்குவது மேலும் பல கொலைகளுக்கு துணைபோவதாக அமையாலம் எனவே இவ்வாறான குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வளங்கி உதவுவதே சிறந்தாகும் என்று வயோதிபர் ஒருவர் தெரிவிக்கிறார்
கடந்த காலங்களில் இவ்வாறான சில கொலைகள் இடம் பெற்ற போதும் இதுவரை கொலையாளிகளை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது பற்றி பொலிசார் கூறுகையில் சம்மந்தப்பட்ட இன மக்களின் ஒத்துளைப்பின்மையே காரணம் என்று தெரிவிக்கின்றனர் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் சிறு முறண் பாடுகள். இளைஞர்களுக்குள் ஏற்படும் காதல் விவகாரங்கள் குறிப்பாக ஒரு பெண்னை இரு இளைஞ்ஞாகள் காதலிப்பதால் ஏற்படும் சிக்கல்களே இவ்வாற கொலைகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் தாய் தந்தையர் பிள்ளைகளை சரியாக வளிநடத்தாமல் பணம் சம்பாதிப்பதில் முளு நேரத்தையும் செலவிடுவதால் சிறு வயதில் கட்டுப்பாடற்று தமது போக்கிற்கு தவறானவாகளுடன் ஏற்படும் தகதா உறவுகளின் விளைவே இவ்வாறான தவறுகளுக்கு காரணமாவதாகவும் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் தமது பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளபர்த்தெடுப்பதற்கு பெற்றோர் முன்வரவேண்டும் எனவும் மேற்படி வயோதிபர் தெரிவிக்கிறார்
நிதர்சனத்திற்காக
நிமலராஜன் கனடா


இதில் பெற்றோரை குறை சொல்ல என்ன இருக்கிறது...போகதே என்றால் போயே தீருவேன் என்ற இளைஞர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். அப்பாவியைக கூட தீயவழியில் நடத்தக் கூடிய சக்தி கூடப்பழகும் நன்பர்களிடம் இருக்கிறது. பாடசாலை செல்லம் மாணவன் பாடசாலையில் சேரும் பிள்ளை யாரோடு சேருகிறான் என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
குறிப்பு: நான் high school மாணவன் என்ற ரீதியில் எங்களது மாணவர்கள் பற்றி நன்றாகவே அறிந்துள்ளேன்...

ரோகான் ஜோர் என்ற மூன்றவது நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தேன். அதில் சின்ன திருத்தம் அவர் தானாகவே காவல்துறையில் சரனடைந்துள்ளார்


நேசமுடன் நிதர்சன்