வாழும் புலம்

லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம்

6 days 3 hours ago

லண்டன், பாரிஸில் புலம்பெயர் இலங்கையர்களை சந்திக்கிறது உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் 6-8.jpg

லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மூவினங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா, இதுவரை இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களில் முதன்முறையாக புலம்பெயர் தமிழர்களையும் உள்வாங்கும் நோக்கிலேயே இச்சந்திப்புக்களை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்படுவரும் நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலக அதிகாரிகள் அண்மையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.

அதேபோன்று தெற்கிலும், குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை சந்தித்து உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

அதேபோன்று வடக்கு, கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள், முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாகப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பற்றிய தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாகத் திரட்டிவருவதாகவும், அவர்களுடனான முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாதம் ஆரம்பமாகும் எனவும் இடைக்கால செயலகத்தின் கொள்கைப்பிரிவு தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது லண்டன் சென்றிருக்கும் யுவி தங்கராஜா, எதிர்வரும் வார தொடக்கத்தில் பாரிஸிலும், 19 மற்றும் 20ஆம் திகதி வார இறுதி நாட்களில் லண்டனிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புக்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என மூவினங்களைச்சேர்ந்த இலங்கையர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் அதன்கீழ் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆணைக்குழு என்பன தொடர்பில் விளக்கமளிக்கவுள்ள யுவி தங்கராஜா, அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.

‘இதற்கு முன்னர் இலங்கையில் இயங்கிய ஆணைக்குழுக்களைப் பொறுத்தமட்டில், அவற்றில் புலம்பெயர் தமிழர்களோ அல்லது இலங்கையர்களோ பெரும்பாலும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலம்பெயர்ந்து சென்ற இலட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றனர்.

எனவே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதற்கோ அல்லது அச்செயன்முறையில் பங்கேற்பதற்கோ புலம்பெயர் இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதன் ஓரங்கமாகவே இச்சந்திப்புக்களை நடத்துவதற்கு உத்தேசித்திருக்கின்றோம்’ என யுவி தங்கராஜா தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=273568

34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

1 week 3 days ago
34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

K800__DSC5714-300x200.jpgதமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.

அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது.

தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.

கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

1.jpg
2.jpg
3.jpg
4.jpg
5.jpg
6.jpg
7.jpg
8-rotated.jpg
9-rotated.jpg
10-rotated.jpg
K800__DSC1573.jpg
K800__DSC1575.jpg
K800__DSC1576.jpg
K800__DSC1577.jpg
K800__DSC1582.jpg
K800__DSC1584.jpg
K800__DSC1604.jpg
K800__DSC1611.jpg
K800__DSC1614.jpg
K800__DSC1620.jpg
K800__DSC6221.jpg
K800__DSC6225.jpg
K800__DSC6230.jpg
K800__DSC6245.jpg
K800__DSC6315.jpg
K800__DSC6353.jpg
K800__DSC6355.jpg
K800__DSC6362.jpg
K800__DSC6364.jpg
K800__DSC6378.jpg
K800__DSC6380.jpg
K800__DSC6384.jpg
K800__DSC6388.jpg
K800__DSC6403.jpg
K800__DSC6417.jpg
K800__DSC6418.jpg
K800__DSC6427.jpg
K800__DSC6438.jpg
K800__DSC6444.jpg
K800__DSC6449.jpg
K800__DSC6454-rotated.jpg
K800__DSC6510-rotated.jpg
K800__DSC6460.jpg
K800__DSC6478.jpg
K800__DSC6484.jpg
K800__DSC6487.jpg
K800__DSC6493.jpg
K800__DSC6499.jpg
K800__DSC6505.jpg
K800__DSC6507.jpg
K800__DSC6513.jpg
K800__DSC6573.jpg
K800__DSC6576.jpg
K800__DSC6584.jpg
K800__DSC6589.jpg
K800__DSC6595.jpg
K800__DSC6604.jpg
K800__DSC6608.jpg
K800__DSC6612.jpg
K800__DSC6618.jpg
K800__DSC6622.jpg
K800__DSC6624.jpg
K800__DSC6626.jpg
K800__DSC6629.jpg
K800__DSC6630.jpg
K800__DSC6632.jpg
K800__DSC6634.jpg
K800__DSC6638.jpg
K800__DSC6640-rotated.jpg
K800__DSC6644-rotated.jpg
K800__DSC6646-rotated.jpg
K800__DSC6649-rotated.jpg
K800__DSC6652.jpg
K800__DSC6654.jpg
K800__DSC6658.jpg
K800__DSC6662.jpg
K800__DSC6664.jpg
K800__DSC6667.jpg
K800__DSC6668.jpg
K800__DSC6670.jpg
K800__DSC6673.jpg
K800__DSC6675.jpg
K800__DSC6703-rotated.jpg
K800__DSC6722-rotated.jpg
K800__DSC6678.jpg
K800__DSC6680-rotated.jpg
K800__DSC6684.jpg
K800__DSC6686.jpg
K800__DSC6692.jpg
K800__DSC6699.jpg
K800__DSC6707.jpg
K800__DSC6727.jpg
K800__DSC6730.jpg
K800__DSC6738.jpg
K1024__DSC5515.jpg
K1024__DSC5536.jpg
K1024__DSC5839.jpg
K1024__DSC5841.jpg
K1024__DSC5870.jpg
K1024__DSC5895.jpg
K1024__DSC6529.jpg
K1024__DSC6533.jpg
K1024__DSC6545.jpg
K1024__DSC6548.jpg
K1024__DSC6567.jpg
K1024__DSC6776.jpg
K1024__DSC6778.jpg
K1024__DSC6803.jpg
K1024__DSC6820.jpg
K1024__DSC7009.jpg
K1024__DSC7021.jpg
K1024__DSC7051.jpg
K1024__DSC7144.jpg
K1024__DSC7146.jpg
K1024__DSC7167.jpg

கல்வி

K800__DSC5552.jpg
K800__DSC5559.jpg
K800__DSC5567.jpg
K800__DSC5577.jpg
K800__DSC5580.jpg
K800__DSC5590.jpg
K800__DSC5598.jpg
K800__DSC5607.jpg
K800__DSC5614.jpg
K800__DSC5620.jpg
K800__DSC5630.jpg
K800__DSC5638.jpg
K800__DSC5644.jpg
K800__DSC5647.jpg
K800__DSC5654.jpg
K800__DSC5659.jpg
K800__DSC5667.jpg
K800__DSC5675.jpg
K800__DSC5680.jpg
K800__DSC5689.jpg
K800__DSC5695.jpg
K800__DSC5699.jpg
K800__DSC5703.jpg
K800__DSC5704.jpg
K800__DSC5714.jpg
K800__DSC5728.jpg
K800__DSC5743.jpg
K800__DSC5745.jpg
K800__DSC5750.jpg
K800__DSC5769.jpg
K800__DSC5779.jpg
K800__DSC5785.jpg
K800__DSC5787.jpg
K800__DSC5793.jpg
K800__DSC5795.jpg
K800__DSC5804.jpg
K800__DSC5808.jpg
K800__DSC5814.jpg
K800__DSC5817.jpg
K800__DSC5824.jpg
K800__DSC5832.jpg

தமிழ்த்திறன்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!

1 week 5 days ago
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!
Vhg ஏப்ரல் 05, 2024
1000219729.jpg

43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மீது தாக்குதல்

கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது.
 

https://www.battinatham.com/2024/04/blog-post_73.html

 

Toronto man, 43, facing multiple charges in Don Mills Station assault probe Woman allegedly assaulted while walking with her children, police say

Published Apr 01, 2024  • 

 

Suresh Nithiyananthan, 43.
Suresh Nithiyananthan, 43. Photo by Toronto Police

A 43-year-old Toronto man has been charged in connection with an alleged assault of a woman walking with her children near Don Mills Station over the weekend.

 

Suresh Nithiyananthan is charged with assault with a weapon, assault causing bodily harm, uttering death threats and mischief/damage to property not exceeding $5,000.

Police said that on Saturday at about 12:26 p.m., the victim was walking when a man made a comment toward her children, which prompted the victim to reply to the suspect. The man then allegedly kicked the woman before grabbing an object, striking her multiple times over the head and threatening to kill her. The victim dropped her phone, which ended up being broken, during the alleged assault.

The suspect fled on foot.

Anyone with information is asked to contact the police at 416-808-3300 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or 222tips.com.

https://torontosun.com/news/local-news/toronto-man-43-facing-multiple-charges-in-don-mills-station-assault-probe

யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”

3 weeks 5 days ago
23 MAR, 2024 | 09:32 AM
image

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார்.

போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார்.

suren.jpg

இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது.

எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல  வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்களுக்கு கிடைத்திருக்காது. இறுதிப்போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையை தவிர வேறு எந்த அச்சு ஊடகங்களும் வெளிவரவில்லை. பத்திரிகைப்பயணமும் அத்தோடு நான் எடுத்த ஒளிப்படங்களையும் உள்ளடக்கி “ போரின் சாட்சியம் ” என்ற நூலை உருவாக்கியுள்ளேன். இதில் சில இறுதிப்போர்க்காலத்தில் பணியாற்றிய  சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009 போர்நடைபெற்ற காலத்தில் நீங்கள் பார்த்திருந்த ஒளிப்படங்களுக்கான கதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.   போரின் மூலம் இனஅழிப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்களைக்கொண்ட இந்நூல் எதிர்வரும் 2024- ஏப்பிரல் 27 சனிக்கிழமை, அன்று மாலை 4 மணிக்கும் வன்கூவரிலும் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகின்றேன். 

என ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179478

கனடாவில் கார் களவு.

4 weeks ago

                                                        கனடாவில் கார் களவு.-_
                                                        
         அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன்.

          நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ.

         எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம்.

           சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம்.

            பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று.

             இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை.

             இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை.

              கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ?
  
               நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர்

1 month ago
தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் 4-18.jpg

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை

அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளைக் கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களின் தாயக மக்கள் மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டு வந்துள்ளது.

அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போதும், பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம் கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்றிட்டங்களிலும் நேரடியாகவும், எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம்.

எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்படக் கட்சி ஆயத்தமாக உள்ளது.

இலண்டன் நகரில் கட்சியின் கிளை

கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டது என்று சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும், வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்’ (ITAK FORUM) அமைக்கப்பட்டது என்றும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு.

இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=271070

 

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1 month 1 week ago

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம்.

----

By Alex Black, Kaitlin Lee

Posted March 7, 2024 4:11 am.

 

Last Updated March 7, 2024 12:27 pm.

The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa.

The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located.

A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries.

The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals.

The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo.

Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke.

One person has been taken into custody and police say there is no further threat to the public.

Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence.    

The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today.

“This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post.

Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement:

“I was devastated to learn of the multiple homicide in Barrhaven, one of the most shocking incidents of violence in our city’s history. We are proud to live in a safe community but this news is distressing to all Ottawa residents. Ginny and I are thinking of the family members and neighbours of the victims. Thank you to our emergency responders who are investigating and supporting those who are affected by this terrible event.”

Ontario Premier Doug Ford is also expressing condolences.

Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday.

“Obviously our first reactions are all ones of shock and horror at this terrible violence. We are expecting that the community reaches out to support family and friends as Canadians always do, and we expect the police of jurisdiction to be doing the work and keeping us all informed of this terrible tragedy.”

Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out.

Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website.

Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca.

Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live.

https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்

2 months 2 weeks ago
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
TorontoCanada
 2 மணி நேரம் முன்
 
 
 
Share
  • விளம்பரம்
 

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்த பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதன் போது, பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டனம்

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

 

 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பேரவை மீதான வெறுப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

எமது சமூகத்தினரால் கனடாவுக்குள் கொண்டு வரப்பட்ட சமாதானம், பாதுகாப்பு மற்றும் வன்முறையில் இருந்து விடுதலை ஆகிய மதிப்புகளுக்கு எதிராக குறித்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை எப்போதும் பன்முகத்தன்மை மற்றும் எங்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கும் சூழலை வளர்ப்பதற்காக செயல்படுகிறது. 

கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம் | Canadian Tamil Congress Toronto Office Fire Attack

 

 

 

இந்த நிலையில், நமது மதிப்புகள் மற்றும் நாம் விரும்பும் கொள்கைகளுக்கு எதிராக இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது.

 

https://ibctamil.com/article/canadian-tamil-congress-toronto-office-fire-attack-1706632055

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024.

2 months 3 weeks ago
தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024.
pongal-2024.jpg
K800_Pongal-2024-Konz-1.jpg
K800_Pongal-2024-Konz-2.jpg
K800_Pongal-2024-Konz-3.jpg
K800_Pongal-2024-Krefeld.jpg
K800_Pongal-2024-Pforzheim-1.jpg
K800_Pongal-2024-Pforzheim-2.jpg
K800_Pongal-2024-Pforzheim-3.jpg
K800_Pongal-2024-Pforzheim-4.jpg
K800_Pongal-2024-Sindelfingen-1.jpg
K800_Pongal-2024-Sindelfingen-2.jpg
K800_Pongal-2024-Sindelfingen-3.jpg
K800_Pongal-2024-Tuttlingen-1.jpg
K800_Pongal-2024-Tuttlingen-2.jpg
K800_Pongal-2024-Tuttlingen-3.jpg
K800_Pongal-2024-Velbert-1.jpg
K800_Pongal-2024-Velbert-2.jpg
K800_Pongal-2024-Velbert-3.jpg
K800_Pongal-2024-Wuppertal-1.jpg
K800_Pongal-2024-Wuppertal-2.jpg
K800_Pongal-2024-Wuppertal-3.jpg
K800_Pongal-2024-Wuppertal-4.jpg
K800_Pongal-2024-Wuppertal-5.jpg
K800_Pongal-2024-Wuppertal-6.jpg
K800_Pongal-2024-Aalen1.jpg
K800_Pongal-2024-Aalen2.jpg
K800_Pongal-2024-Aalen3.jpg
K800_Pongal-2024-Aalen4.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-1.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-2.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-3.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-4.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-5.jpg
K800_Pongal-2024-Bad-Schwalbach-8.jpg
K800_Pongal-2024-Borken-1.jpg
K800_Pongal-2024-Borken-2.jpg
K800_Pongal-2024-Borken-3.jpg
K800_Pongal-2024-Borken-4.jpg
K800_Pongal-2024-Borken-5.jpg
K800_Pongal-2024-Borken-6.jpg
K800_Pongal-2024-Darmstadt-1.jpg
K800_Pongal-2024-Darmstadt-2.jpg
K800_Pongal-2024-Darmstadt-3.jpg
K800_Pongal-2024-Darmstadt-4.jpg
K800_Pongal-2024-Darmstadt-5.jpg
K800_Pongal-2024-Dillingen-1.jpg
K800_Pongal-2024-Dillingen-2.jpg
K800_Pongal-2024-Dillingen-3.jpg
K800_Pongal-2024-Dillingen-4.jpg
K800_Pongal-2024-Dillingen-5.jpg
K800_Pongal-2024-Essen-1.jpg
K800_Pongal-2024-Essen-2.jpg
K800_Pongal-2024-Essen-3.jpg
K800_Pongal-2024-Essen-4.jpg
K800_Pongal-2024-Essen-5.jpg
K800_Pongal-2024-Freiburg-1.jpg
K800_Pongal-2024-Freiburg-2.jpg
K800_Pongal-2024-Freiburg-3.jpg
K800_Pongal-2024-Heilbronn-1.jpg
K800_Pongal-2024-Heilbronn-2.jpg
K800_Pongal-2024-Hildesheim-1.jpg
K800_Pongal-2024-Hildesheim-2.jpg
K800_Pongal-2024-Hildesheim-3.jpg
K800_Pongal-2024-Hildesheim-4.jpg
K800_Pongal-2024-Hildesheim-5.jpg
K800_Pongal-2024-Karlsruhe-1.jpg
K800_Pongal-2024-Karlsruhe-2.jpg
K800_Pongal-2024-Karlsruhe-3.jpg
K800_Pongal-2024-Karlsruhe-4.jpg
 
 

தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. – குறியீடு (kuriyeedu.com)

கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.

2 months 4 weeks ago
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.

யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞன் லண்டனில் குத்திக்கொலை

3 months ago
12 JAN, 2024 | 07:10 PM
image
 

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட இளைஞன் லண்டனில் குத்திக்கொலை | Virakesari.lk

நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

3 months 1 week ago
norway1.webp?resize=750,375&ssl=1 நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப் பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது.இளைஞன் யுவதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர்கள் எவராவது இதில் சம்பத்தப் பட்டுள்ளனரா என்பதை அறிவதற்காகப் பொலீஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை.  அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளதாகவும், அது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பில் காவற்துறையினர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நோர்வேயின் கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் (36 பேர்) கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வருடாந்த கொலை எண்ணிக்கை 30ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேலும் ஆறு கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1365101

Checked
Thu, 04/18/2024 - 08:33
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed