உலக நடப்பு

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் - அவுஸ்திரேலியா

1 week 1 day ago

Published By: RAJEEBAN    10 APR, 2024 | 10:13 AM

image
 

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இதனை தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீனதேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெட்டன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேசசமூகம் தற்போது சிந்திக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது  ஹமாசினை பலவீனப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180872

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

1 week 2 days ago
இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அக்பர் உசேன்
  • பதவி, பிபிசி செய்தி பங்களா
  • 9 ஏப்ரல் 2024, 11:55 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை.

இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, இரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இரான் எப்போது, எங்கு இந்தத் தாக்குதலை நடத்தும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ரமலான் மாதத்தின் கடைசி வாரத்திற்கு இடையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இரானுக்குள் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுமா அல்லது இராக் மற்றும் சிரியாவின் மண் இதற்குப் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கும் அதிகம் தெரியவில்லை.

இதற்கிடையில், இரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இது நடந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்கும்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்?

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால், இரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இரான் பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்களும் கேள்விக்குட்படுத்தப்படும்.

இதன் விளைவு, இரானை பலவீனமாகக் கருதும் இஸ்ரேல் எதிர்காலத்தில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும்.

இரான் முன் உள்ள சவால், அது தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ளக் கூடாது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அது நிரூபிக்க வேண்டும்.

ஆனால் சிரமம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தொடங்காமல் இரான் இஸ்ரேலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? மற்றொரு கேள்வி என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் திறன் இரானுக்கு இருக்கிறதா?

இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடும் திறன் இரானுக்கு இல்லை என்று மத்திய கிழக்கு விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான அலி சத்ரசாதே பிபிசியிடம் தெரிவித்தார்.

“இரான், தங்கள் நாட்டு மக்களுக்காகவாவது கண்டிப்பாக இஸ்ரேலுக்கு பதிலளிக்க வேண்டும். இது தவிர, தனது நட்பு நாடுகளுடன் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இரான், இஸ்ரேல் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஒரு வலுவான பதிலடியையும் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே இரான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்." என்கிறார் அலி சத்ரசாதே.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது இரானின் முன்னுரிமை அணுகுண்டு தயாரிப்பதே. ஒரு சில பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி 100 இஸ்ரேலியர்களைக் கொல்வதை விட அணுகுண்டு தயாரிப்பில் முன்னேறுவது தான் அந்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் தாக்குதலையும் இரான் தடுத்து நிறுத்தும்” என்றார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்.

ஹெஸ்புல்லாவின் நிலைப்பாடு என்ன?

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, பல இரான் ஆதரவு குழுக்கள் சிரியா, இராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய குழுக்களைத் தாக்கியுள்ளன. இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பவில்லை.

"இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள், அவ்வாறு தாக்குவது மிகவும் கடினம்." என்கிறார் அலி சத்ரசாதே.

உலகிலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுவாக உள்ளது ஹெஸ்புல்லா. இது ஒரு நாட்டின் இராணுவ அமைப்பு இல்லை என்றாலும், இதில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் போராளிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சிரியப் போரில் பங்கேற்றதன் மூலம், போர்க்கள அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லாவிடம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இருந்த போதிலும், இரான் சார்பாக ஹெஸ்புல்லா இனி இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹெஸ்புல்லா இஸ்ரேலின் வலையில் விழ விரும்பவில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும்.

இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுடன் நேரடிப் போரை நடத்தாமல் ஒரு குறியீட்டு பதிலடியை தான் இரான் எதிர்பார்க்கிறது என்று மத்திய கிழக்கு நிபுணர் சத்ரசாதே நம்புகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கில் இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு 'கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை' எடுக்கப்படும் என இரான் அச்சுறுத்தியது, ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.

சுலேமானியின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

தாக்குதலுக்கு முன்னதாகவே ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வர்ஜீனியா டெக்கின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அண்ட் இன்டர்நேஷனல் அஃபர்ஸைச் சேர்ந்த யூசுப் அஸிஸி பிபிசியிடம், “திரைக்குப் பின்னால் இரானுக்குள் இரு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இரான் அணுசக்தி நாடாக மாறுவதன் மூலம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் விரும்புகிறது, மறுபுறம் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கி பதிலடி கொடுக்க விரும்புகிறது.

இந்தச் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, அணுசக்தியை மேம்படுத்துவதுதான் இரானின் முன்னுரிமையாக இருக்கலாம் என்கிறார் அவர்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

மத்திய கிழக்கில் பெரிய போர் எதுவும் வெடிப்பதை இரான் விரும்பவில்லை. இரானுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களுக்கு அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

இரண்டாவதாக இரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புகின்றன.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள் இரானை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, இராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது ராணுவ வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்தக் கூடிய தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது.

எவ்வாறாயினும், சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறையால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "உங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம், விலகி இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

தனது சமூக ஊடகச் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இரானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக ஜம்ஷிதி கூறினார்.

இரானிடம் இருந்து அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வ செய்தி வந்துள்ளதாக அமெரிக்க செய்தி சேனலான சிபிஎஸ் (CBS) உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு எச்சரிக்கை கடிதத்தையும் அமெரிக்கா எழுதியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஒருபுறம், எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துணியக்கூடாது என்று இரான் விரும்புகிறது, மறுபுறம் மத்திய கிழக்கில் புதிய போரைத் தொடங்கவும் இரான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரான் குழப்பத்தில் உள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் பிபிசியிடம் பேசுகையில், “இரான் உண்மையில் ஒரு 'காகிதப் புலி' என்பதை உலகிற்கு காட்ட, இஸ்ரேல் ஒரு பதற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.

"இந்த விஷயத்தில் இரான் பதிலளிக்கவில்லை என்றால், அது ஒரு 'காகிதப் புலி' தான் என்றும், பதிலடி கொடுக்கும் திறன் அதற்கு இல்லை என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்," என்று ஒரு பெயர் கூற விரும்பாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி இராக்கில் படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது இரான் என்ன செய்யும்?

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு யூத நிறுவனங்களை இரான் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். யுரேனியத்தை சிறப்பாக செறிவூட்டுவதன் மூலம், அணு குண்டுகளை தயாரிக்க அதை பயன்படுத்த முடியும் அல்லது இரான் அணு ஆயுதங்களை மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை இரானுக்கு பாதகமாக அமையக்கூடும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இரான் இதைச் செய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்க முன்வரும்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் (Center for Strategic and International Studies) மத்திய கிழக்கு நிபுணர் ஜான் ஆல்டர்மேன், இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை இரான் எடுக்காது என்று நம்புகிறார்.

“இஸ்ரேலுக்கு பாடம் கற்பிப்பதில் இரானுக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக, தாங்கள் பலவீனமாக இல்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு காட்டவே இரான் விரும்புகிறது" என்று ஜான் கூறுகிறார்.

இரான் இனி எந்தப் பாதையில் செல்லும்? இந்த விவகாரம் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் முடிவைப் பொறுத்து தான் அமையும்.

https://www.bbc.com/tamil/articles/c3g7dr79gzjo

கனடா தேர்தலில் இந்திய தலையீடா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

1 week 3 days ago
08 APR, 2024 | 09:55 AM
image
 

புதுடெல்லி: கனடா தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்தது. இதன் காரணமாகவே தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிபெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

சீனா தலையீடு: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது சுமார் 11-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக சீன உளவுத் துறை பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு கனடா பொதுத்தேர்தலின்போது சீன தூதரகங்கள் சார்பில் பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கனடா அரசு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த சூழலில் கனடா தேர்தலில் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யாவின் தலையீடும் இருந்ததாக அந்த நாட்டு உளவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: கனடா பொதுத்தேர்தல்களில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டி உள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவது கிடையாது. இந்த கொள்கையை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறோம்.

உண்மையைச் சொல்வதென்றால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இந்தியா மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கனடா அரசு நியமித்த சிறப்பு ஆணையம் வரும் மே 3-ம் தேதி தனது முதல் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விரிவான அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/180663

காஸாவில் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு: ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

1 week 3 days ago
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மெரிலின் தாமஸ் மற்றும் ஜேக் ஹார்ட்டன்
  • பதவி, பிபிசி வெரிஃபை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அக்டோபர் 7 அன்று காஸா வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சுமார் 1200 பேரைக் கொன்றனர், நூற்றுக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இத்தாக்குதல் நடந்து ஆறு மாதங்களாகி விட்டன.

இதற்குப் பதிலடியாக, பணயக் கைதிகளை ஹமாஸ் பிடியிலிருந்து விடுவித்து அவர்களை வீடு திரும்பச் செய்வோம் என்றும் “ஹமாஸை அழித்து ஒழிப்போம்” என்றும் இஸ்ரேல் உறுதியளித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தொடரும் போரில், குறைந்தது 33,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் காஸா பகுதியின் பெரும்பகுதி அழிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றதுடன், காஸாவில் பூமிக்கடியில் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தும் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

பிபிசி வெரிஃபை (BBC Verify) இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. மேலும், இஸ்ரேலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்களை ஆய்வு செய்தது.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

யாஹ்யா சின்வார் உட்பட பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

எத்தனை ஹமாஸ் தலைவர்கள் இறந்தார்கள்?

அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்னர், காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுமார் 30 ஆயிரம் பேர் இருந்ததாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளபதிகளை மேற்கோள் காட்டி கூறப்பட்டது.

ஹமாஸின் மிகப்பெரிய தலைவர் இஸ்மாயில் ஹனியா உட்பட பல மூத்த அரசியல் பிரமுகர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆனால், அதன் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பலர் காஸாவிற்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.

போர் தொடங்கியதில் இருந்து சுமார் 13 ஆயிரம் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் தலைவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டது.

அக்டோபர் மாதம் முதல் இதுபோன்ற 113 பேரின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் போரின் முதல் மூன்று மாதங்களில் உயிரிழந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் வரை காஸாவில் எந்த மூத்த ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.

மார்ச் 26 அன்று, ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசாவை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இஸ்ரேலில் மிகவும் தேடப்படும் நபராகக் கருதப்படும் இசா, இப்போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்தத் தலைவர் ஆவார்.

அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஹமாஸ் இசாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.

கொல்லப்பட்ட மூத்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்களை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. ஆனால், இவர்கள் ஹமாஸின் உறுப்பினர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாது.

இப்பட்டியலில் ஹமாஸ் குழுவில் அல்லாதவர்கள் சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுள் ஒருவர் ஒருவர் முஸ்தஃபா துரையா. இவர், தெற்கு காஸாவில் சுயாதீன பத்திரிக்கையாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஜனவரி மாதம் அவரது வாகனம் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது.

மேலும், இப்பட்டியலில் சிலரது பெயர்கள் இருமுறை குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால், அவர்களின் பெயர்களை மொத்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை.

காஸாவிற்கு வெளியே உள்ள ஹமாஸின் அரசியல் தலைவரான சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றது.

எனினும், யாஹ்யா சின்வார் உட்பட காஸாவில் உள்ள பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாக நாங்கள் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.

“ஹமாஸின் உயர்மட்ட தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தால் அடைய முடியவில்லை” என, சர்வதேச நெருக்கடிக் குழுவில் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்கள் குறித்த மூத்த ஆய்வாளர் மைரவ் சோன்ஸ்சீன் கூறினார்.

"ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருந்து அப்பிரதேசத்தை விடுவிப்பதையும் இஸ்ரேலால் இன்னும் சாதிக்க முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் எத்தனை பணயக்கைதிகள் எஞ்சியுள்ளனர்?

இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 7 ஆம் தேதி 253 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள், தனித்தனி ஒப்பந்தங்கள் அல்லது கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் 109 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ராணுவ நடவடிக்கை மூலம் காப்பாற்றியது.

பணயக் கைதிகள் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்ட மூவரும் இவர்களில் அடங்குவர்.

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுள் உயிருடன் உள்ளவர்களில், இளையவரின் வயது 18 என்றும், மூத்தவரின் வயது 85 என்றும் கூறப்படுகிறது.

மீதமுள்ள 130 பணயக்கைதிகளில், இஸ்ரேலின் கூற்றுப்படி, 34 பேர் இறந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஹமாஸ் கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியாது.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட இரண்டு இளம் பணயக்கைதிகள் ஏரியல் மற்றும் ஃபிர். இருவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நேரத்தில், முறையே 4 வயது மற்றும் 9 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஹமாஸ் தனது சுரங்கப்பாதை வலையமைப்பு 500 கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளதாக கூறுகிறது, எனினும் இதை உறுதிப்படுத்த முடியாது.

ஹமாஸின் சுரங்கப்பாதை வலையமைப்பு எந்தளவுக்கு அழிக்கப்பட்டது?

ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்ததோடு, காஸாவில் பூமிக்கடியில் அக்குழுவினரின் மிகப்பெரிய சுரங்கப்பாதை வலையமைப்பையும் அழிப்பதாக இஸ்ரேல் உறுதியளித்தது.

ஹமாஸ் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக உணவு மற்றும் மக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ், "காஸா முனையை பொதுமக்களுக்கான ஒரு அடுக்கு என்றும், மற்றொரு அடுக்கு ஹமாஸ் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஹமாஸ் உருவாக்கிய அந்த இரண்டாவது அடுக்கை அடைய முயற்சிக்கிறோம்" என கடந்த அக்டோபரில் தெரிவித்தார்.

காஸாவின் சுரங்கப்பாதை வலையமைப்பு சுமார் 500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது என்று ஹமாஸ் முன்னதாக கூறியிருந்தது. இருப்பினும், இந்த தகவலை சுயாதீனமாக சரிபார்க்க வழி இல்லை.

இதுவரை எத்தனை சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன, அவை மொத்த எண்ணிக்கையில் எவ்வளவு என்று இஸ்ரேல் ராணுவத்திடம் கேட்டோம். அதற்கு, "காஸாவில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளதாக" இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஹமாஸ் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இஸ்ரேல் ராணுவம் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் அடியில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகளை நவம்பரில் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

இஸ்ரேல் ராணுவத்தின்படி, அது ஹமாஸின் கட்டளை மையமாக பயன்படுத்தப்பட்டது.

இஸ்ரேல் ராணுவம் இதுவரை எத்தனை நீண்ட சுரங்கப்பாதைகளை கண்டறிந்துள்ளது என்பதை அறிய, காஸாவின் சுரங்கப்பாதைகள் தொடர்பாக அக்டோபர் 7, 2023 மற்றும் மார்ச் 26, 2024 வரை அதன் சமூக ஊடக தளங்களிலும், டெலிகிராமிலும் வெளியிடப்பட்ட செய்திகளை பிபிசி சரிபார்த்தது.

இதில், 198 செய்திகளில், சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன. மற்றொரு 141 செய்திகள், சுரங்கப்பாதையை அழித்தது அல்லது செயலிழக்கச் செய்தது குறித்துக் கூறுகின்றன.

இந்த செய்திகளில் பெரும்பாலானவை சுரங்கப்பாதைகளின் இருப்பிடம் தொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல் ராணுவம் எத்தனை சுரங்கங்களை கண்டுபிடித்தது அல்லது அழித்தது என்பதை உறுதிப்படுத்த முடியாது.

காஸாவில் பூமிக்கடியில் உள்ள இந்த வலைப்பின்னல் அமைப்பிலான சுரங்கப்பாதை பாதைகளில் வெவ்வேறு அளவுகளில் அறைகள், அத்துடன் சுரங்கப்பாதை மேற்பரப்பை சந்திக்கும் ஒரு புள்ளி உட்பட பல கூறுகளால் ஆனது.

நாங்கள் பகுப்பாய்வு செய்த செய்திகளில், 36 செய்திகள், மொத்தம் 400 சுரங்கவாயிற்குழிகள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இஸ்ரேலின் ரீச்மேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சுரங்கப்பாதை வழி போர்களில் நிபுணருமான டாக்டர். டாப்னே ரிச்மண்ட், ஒரு சுரங்கவாயிற்குழியை சுரங்கப்பாதையுடன் ஒன்றாக தொடர்புப்படுத்துவது தவறாக வழிநடத்தும் என்று கூறுகிறார்.

இந்த சுரங்கவாயிற்குழிகளை அழித்த பிறகும் சுரங்கப்பாதை வலையமைப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறுகிறார். "இந்தப் போரில் சுரங்கப்பாதைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

 
போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு: ஹமாஸை ஒழிப்பதில் இஸ்ரேல் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

காஸாவில் பெரும்பாலான கட்டடங்கள் அழிக்கப்பட்டன.

பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்பு

காஸாவில் வாழும் பாலத்தீனர்கள் இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்காக பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 5 அன்று அமைச்சகம் வெளியிட்ட தரவின் படி, கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதைக் காட்டுகிறது.

ஹமாஸ் இலக்குகளை அழிக்க இஸ்ரேலிய படைகளின் முயற்சிகளுக்கு மத்தியில் பலர் இடம்பெயர்ந்துள்ளனர் அல்லது வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகள் பாழடைந்து, பரபரப்பாக இருந்த சாலைகள் தற்போது ஒன்றும் இல்லாமல் ஆகியுள்ளன.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 7 முதல், காஸாவின் 56 சதவீத கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளன என்று செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

போர் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகும், இஸ்ரேல் தனது போர் நோக்கங்களை அடைந்துவிட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c19x999dmlzo

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!

1 week 3 days ago
1712545039-More-than-90-killed-as-boat-s தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் படகு விபத்து- 90 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விபத்து ஏற்படும் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1376989

கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 முழு சூரிய கிரகணம் / Monday, April 8, the 2024 total solar eclipse]

1 week 3 days ago

கிரகணம் / Eclipse

[ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] 


கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு  ஊர் எடுத்த காதை
“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”
  
"கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து -ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி,
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!" 


ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி,  திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. 


நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது


"அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல"


அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


Indra Vizha chapter from Puhar Kandam in Silapathikaram [Poet: Illango Adikal], under the heading "One of the young men thus celebrated his beloved lady"[“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”], mentioned about eclipse as below.


“The Moon, in fear of Rahu, monster who
devours her on the days of her eclipse,
fled from the sky in search of shelter. 
framed in the dark clouds of you hair,
she reappeared then as your pallid face.
she chased away the hairs from your fair cheeks, 
painted two soot- black fish- shaped eyes,
and in the middle placed kumil flower,
that since then passes for your pretty nose.”


A solar eclipse occurs when the moon passes between the Sun and the Earth so that the Sun is fully or partially covered but this celestial spectacle also brings along with it a string of superstitions all over the world.


In India & Sri Lanka, people believe when the sun rays are covered by the moon, the atmosphere becomes polluted. Therefore, for the whole day -- about 12 hours of the day time -- people observe fast and do not eat any food in the polluted atmosphere. People pray during the eclipse period so that they did not indulge in any evil activity. The same is done during Lunar Eclipse but the period of fast is only nine hours.


“There are several false beliefs prevalent in our society regarding solar eclipse. Some people even lock themselves up in their homes to avoid ‘the bad rays’ from the eclipse,” Many also take a dip in holy rivers to cleanse themselves after the eclipse and some avoid cooking and eating during the eclipse. There are others who believe that pregnant women should refrain from coming out during the eclipse as it can lead to deformities in the foetus.

.
There is no basis in truth for these superstitions, All these superstitions originate when human beings do not have the knowledge to explain away natural phenomena.
The eclipse causes emission of UV rays and hence you should not watch it with naked eyes. This is one of the reasons; why it is not considered good. Later stories were built around it as above.


Lastly as per "panchangam" [பஞ்சாங்கம் / Hindu astrological almanac] the presence of Rahu and Ketu makes it bad time for a birth or to conduct any good ceremony. Actually there is no truth in it; if you trust science.

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?

1 week 5 days ago
இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES / ANADOLU

படக்குறிப்பு,

இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களை படிக்கும் காஸா மக்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டெஃபனி ஹெகார்டி & அகமது நூர்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

தாக்குதல்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் விடுத்த வெளியேற்ற எச்சரிக்கைகளில் குறிப்பிடத்தக்க பிழைகள் இருப்பதை பிபிசி பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தன. குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்த அந்த எச்சரிக்கைகளில் சில மாவட்டங்களின் பெயர்களும் அதில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

இத்தகைய தவறுகளால், சர்வதேச சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவதாகக் கருதப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கைகள் குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருப்பதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நிராகரித்துள்ளன.

பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்ட எச்சரிக்கைகள் என்பது பொதுமக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு கூறு மட்டுமே எனத் தனது அறிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

சூழ்நிலைகள் மோசமாக இருந்தால் ஒழிய, பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய தாக்குதல்களைப் பற்றிய முன்னெச்சரிக்கையை கண்டிப்பாக வெளியிட வேண்டுமென சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கூறுகிறது.

ஹமாஸுக்கு எதிரான தனது போரைத் தொடர்வதால், பொதுமக்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் தனது எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இந்த அமைப்பு காஸாவின் வரைபடத்தை நூற்றுக்கணக்கான எண்ணிடப்பட்ட தொகுதிகளாகப் பிரிக்கிறது. ஆனால் இந்த எண்ணற்ற தொகுதி அமைப்பானது காஸா மக்களுக்குப் பழக்கப்பட்டதல்ல.

மக்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படும்போது, தாங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருக்கிறோமா இல்லையா என்பதை காஸா மக்கள் கண்டறிய, அந்தப் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் ஆன்லைன் வரைபடத்தை (மாஸ்டர் பிளாக்) இஸ்ரேல் தயாரித்துள்ளது.

ஜனவரியின் பிற்பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சார்பாக எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியிடப்பட்ட ஒரு பதிவில், க்யூஆர் குறியீடு வழியாக மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகுவதற்கான இணைப்பு வழங்கப்பட்டது.

 
இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு,

காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது.

ஆனால் எங்களிடம் பேசிய காஸா மக்கள் சிலர், இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும், எச்சரிக்கைகளில் உள்ள பிழைகளைப் புரிந்துகொள்வதற்கும், வரைபடத்தைப் பார்த்து புதிய வழிகளைக் கண்டறியவும் கடினமாக இருப்பதை விவரித்துள்ளனர்.

ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் டெலிகிராமில் உள்ள ஐடிஎஃப்-இன் அரபி மொழி சமூக ஊடக சேனல்களை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அங்கு எச்சரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பதிவுகளை நாங்கள் கண்டோம்.

ஒரே எச்சரிக்கை மீண்டும் மீண்டும், சில நேரங்களில் சிறிய மாற்றங்களுடன், தொடர்ச்சியான நாட்களில் அல்லது வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

துண்டுப் பிரசுரங்களாக வெளியிடப்பட்டு, பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பகிரப்பட்ட எச்சரிக்கைகளையும் நாங்கள் தேடினோம். காஸா மீது 16 மில்லியன் துண்டுப் பிரசுரங்களை வீசியுள்ளதாக ஐடிஎஃப் கூறுகிறது.

டிசம்பர் 1 முதல் வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளில் பிபிசி கவனம் செலுத்தியது. ஏனெனில் சர்வதேச அழுத்தத்தின் கீழ் வந்த பிறகு, முன்பைவிட மிகவும் துல்லியமான வழிமுறைகளை வழங்கும் ஒரு வழியாக தனது பிளாக் அமைப்பை டிசம்பர் 1 முதல் ஐடிஎஃப் தொடங்கியது.

இந்தத் தேதிக்குப் பிறகு நாங்கள் கண்டறிந்த ஐடிஎஃப் அமைப்பின் பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் 26 தனித்தனி எச்சரிக்கைகளாகப் பிரித்தோம். பெரும்பான்மையானவர்கள் மாஸ்டர் பிளாக் அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டனர்.

 
இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன, ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன.

ஆன்லைன் எச்சரிக்கைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி செய்திகள் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாக ஐடிஎஃப் அமைப்பு பிபிசியிடம் தெரிவித்தது.

காஸாவில் சாலை மார்க்கமாகச் சென்று விரிவான அறிக்கைகளைப் பெறுவது சாத்தியமில்லை. தொலைபேசி நெட்வொர்க் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் பற்றிய ஆதாரங்களை பிபிசியால் சேகரிக்க முடியவில்லை.

பிபிசி கண்டறிந்த 26 தனித்தனி எச்சரிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் குறிப்பிட்ட தகவல்கள் உள்ளன. அவற்றை ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேற காஸா மக்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் அவற்றில் 17 பிழைகளும் இருந்தன. அவை,

  • சமூக ஊடகப் பதிவில் இருந்த 12 எச்சரிக்கைகள், அதில் தொகுதிகள் அல்லது சுற்றுப்புறங்கள் குறித்து பட்டியலிடப்பட்டிருந்தது, ஆனால் அதனுடன் உள்ள வரைபடத்தில் அந்தப் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.
  • ஒன்பது பகுதிகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதனுடன் இருந்த சமூக ஊடகப் பதிவில் பட்டியலிடப்படவில்லை.
  • பத்து எச்சரிக்கைகள், தொகுதிகள் இரண்டாகப் பிரித்து காட்டப்பட்டிருந்தன. ஆனால் பிரிக்கப்பட்ட தொகுதிகளின் எல்லையை நிர்ணயிக்கும் அளவுக்கு அந்த வரைபடம் விரிவாக இல்லை.
  • ஏழு எச்சரிக்கைகளின் வரைபடத்தில் ‘பாதுகாப்பு’ பகுதிகளை சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் வெளியேற வேண்டிய பகுதிகளையும் சேர்த்தே சுட்டிக் காட்டுகின்றன.
 
இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிழைகள் குறித்து நாங்கள் ஐடிஎஃப் அமைப்பிடம் கேட்டபோது, அது வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், ஒரு எச்சரிக்கையில் ஒரு மாவட்டத்தில் இருக்கும் பகுதிகள் மற்றொரு மாவட்டத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றொன்று இரண்டு பகுதிகளின் தொகுதி எண்களை இணைத்துக் கொடுத்துள்ளது. மூன்றாவதாக, பதிவில் பட்டியலிடப்பட்டுள்ள சில தொகுதிகள் காஸாவின் எதிர்பக்கத்தில் உள்ளது போல வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தப் பிழைகள் பற்றி நாங்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையிடம் கேட்டபோது, அவர்கள் வரைபடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து பதிலளிக்கவில்லை. ஆனால் சமூக ஊடக பதிவுகளின் செய்தி போதுமான அளவு தெளிவாக உள்ளது எனக் கூறினர்.

மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல வரைபடத்தில் அம்புகள் பயன்படுத்தப்படும்போது, ’அம்புகள் பொதுவான திசையைச் சுட்டிக்காட்டுகின்றன என்பது வெளிப்படையான ஒரு விஷயம்தான்’ எனவும் பதிவுகளின் செய்தியில் முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியது.

இந்தத் தவறுகள் மற்றும் பிழைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் ‘பயனுள்ள மேம்பட்ட எச்சரிக்கைகளை’ வழங்குவதற்கான இஸ்ரேலின் கடமையை மீறக்கூடும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் எதிக்ஸ், சட்டம் மற்றும் ஆயுத மோதல் பிரிவின் இணை இயக்குநர் ஜானினா டில் கூறுகிறார்.

“பெரும்பாலான எச்சரிக்கைகளில் பிழைகள் இருந்தாலோ அல்லது பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குத் தெளிவில்லாமல் இருந்தாலோ, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டிருக்கும் செயல்பாட்டை இந்த எச்சரிக்கைகள் உறுதி செய்யவில்லை என அர்த்தம்” என்று கூறுகிறார் அவர்.

“இந்த எச்சரிக்கைகளின் நோக்கம் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குவதாகும். அதன் பிழைகள் அவர்களின் செயல்பாட்டை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது,” என எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான குபோ மக்காக் கூறுகிறார்.

 
'பெரிய விவாதம்'
இஸ்ரேல் காஸா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் காஸா தொழிலதிபர் சலே பார்த்துள்ளார்.

காஸா நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சலே, டிசம்பரில் மத்திய காஸாவில் உள்ள நுசிராட்டில் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்த போது அங்கு மின்சாரம், தொலைபேசி சிக்னல்கள் இல்லை என்றும், நீண்ட நேரம் இணையத் தடை இருந்தது என்றும் கூறுகிறார்.

ஷெல் குண்டுகள் வீசப்பட்டதால், அருகிலுள்ள பள்ளியிலிருந்த மக்கள் கொல்லப்படுவதையும் மற்றவர்கள் தப்பி ஓடுவதையும் அவர் பார்த்துள்ளார். தனக்கு ஐடிஎஃப் அமைப்பின் வெளியேற்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

இறுதியில், எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள தரவு நெட்வொர்க்குகளை அணுகக்கூடிய சிம் கார்டு பயன்படுத்தும் ஒருவரைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியேறுவதற்கான எச்சரிக்கை குறித்த பதிவைக் கண்டார்.

"பல குடியிருப்புத் தொகுதிகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் எந்தத் தொகுதியில் வசித்தோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுவொரு பெரிய குழப்பத்திற்கு வழிவகுத்தது," என்று சலே கூறுகிறார்.

சலேவால் எப்போதாவதுதான் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. போருக்கு சற்று முன்பு பிரிட்டனில் வசிக்கும் அவரது மனைவி அமானிக்கு ஒரு செய்தி அனுப்பினார். அவரது மனைவியால், ஆன்லைனில் இருந்த ஐடிஎஃப் அமைப்பின் மாஸ்டர் பிளாக் வரைபடத்தை அணுகி, கணவர் சலே எங்கிருக்கிறார் என்பதைக் குறிப்பிட முடிந்தது.

ஆனால், முகநூலில் இருந்த வெளியேற்ற எச்சரிக்கையைத் திரும்பிப் பார்க்கையில், சலே தங்கியிருந்த தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்ததை தம்பதியினர் உணர்ந்தனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இறுதியில், சலே குழந்தைகளுடன் வெளியேற முடிவு செய்தார். ஆனால் அவரது குடும்பத்தில் சிலர் போர் அடுத்த கட்டத்தை எட்டும் வரை அங்கேயே இருந்தனர். சலே புரிந்துகொள்ள முயன்ற அந்த வெளியேற்ற எச்சரிக்கை குறித்த முகநூல் பதிவை பிபிசி பகுப்பாய்வு செய்தது. அதில் பல குழப்பமான அம்சங்கள் இருப்பதைக் கண்டோம்.

பதிவின் செய்தியில், 2220, 2221, 2222, 2223, 2224 மற்றும் 2225 ஆகிய தொகுதிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ஐடிஎஃப் அமைப்பின், இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஐடிஎஃப்-இன் ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்தில் இருப்பவை.

ஆனால் அந்தப் பதிவில் உள்ள வரைபடத்தில், ஆறு தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தொகுதி 2220 எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு,

பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜனவரியில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிரான வாதத்தின் ஒரு பகுதியாக, தனது தடுப்பு எச்சரிக்கை அமைப்பை சர்வதேச நீதிமன்றத்தின் முன்வைத்தது இஸ்ரேல் அரசு.

“இஸ்ரேல் அரசு குடிமக்களைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், முழுப் பகுதிகளையும் காலி செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிகமாக வெளியேற்றப்படும் வகையில் விரிவான வரைபடத்தை அரசு உருவாக்கியுள்ளதாகவும்” வாதிட்டனர் இஸ்ரேலின் வழக்கறிஞர்கள்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக முன்வைத்த ஒரு சமூக ஊடக எச்சரிக்கை பதிவில், இரண்டு பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது. பிளாக் 55 மற்றும் 99 ஆகியவை டிசம்பர் 13 வெளியிடப்பட்ட பதிவில் உள்ள செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் அவை வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

 
இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு,

பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது.

ஐடிஎஃப் அதன் அரபு ட்விட்டர் கணக்கு மூலம், வெளியேற்றப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள தங்குமிடங்களின் இருப்பிடம் பற்றிய தகவலை வழங்கி வருவதாகவும் இஸ்ரேலிய வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆனால் பிபிசி பகுப்பாய்வு செய்த அனைத்து பதிவுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களில் தங்குமிடங்களின் பெயர்கள் அல்லது அவற்றின் சரியான இருப்பிடங்களை வழங்கும் எந்த எச்சரிக்கையையும் நாங்கள் காணவில்லை.

பிபிசி பகுப்பாய்வு ஐடிஎஃப்-இன் பிளாக் சிஸ்டம் சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்துள்ளது. 26 எச்சரிக்கைகளில் ஒன்பது தொகுதிகளின் எண்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளின் பெயர்கள் கலவையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மற்ற ஒன்பது எச்சரிக்கைகளில் தொகுதி எண்கள் இல்லை. ஆன்லைன் மாஸ்டர் வரைபடத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அதற்குப் பதிலாக அவை சுற்றுப்புறப் பகுதிகளைத்தான் பட்டியலிட்டன. அதில் பெரும்பாலும் தொகுதிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன, எண்கள் இல்லை.

இந்த சுற்றுப்புறப் பகுதிகளின் சரியான தொகுதிகளைத் தீர்மானிக்க பிபிசியால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 32 பேரை உள்ளடக்கிய அப்து குடும்பம், போரின் தொடங்கிய நேரத்தில் காஸா நகரத்திலிருந்து மத்திய காஸாவிற்கு தப்பிச் சென்றது. பின்னர், டிசம்பரில், ஒரு விமானத்தில் இருந்து கைவிடப்பட்ட எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் அவர்களுக்குக் கிடைத்தது.

பிபிசிக்கு கிடைத்த குடும்ப வாட்ஸ்அப் குழுவில் உள்ள செய்திகள் மூலம், அந்த துண்டுப் பிரசுரத்திற்கு அர்த்தம் என்னவென்று இரண்டு நாட்களாக அவர்கள் வாதிட்டதால் அவர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை அறிந்துகொள்ள முடிந்தது.

அதில் வெளியேற வேண்டிய அக்கம்பக்கத்தினரின் பட்டியல் இருந்தது, ஆனால் குடும்பத்தாரால் அந்த இடங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிலிருந்த எச்சரிக்கை செய்தி, "அல்-புரிஜ் முகாம் மற்றும் பத்ர், வடக்கு கடற்கரை, அல்-நுஷா, அல்-சஹ்ரா, அல்-புராக், அல்-ரவ்தா மற்றும் அல்-சஃபா ஆகியவற்றின் சுற்றுப்புறங்களில் இருந்து வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது."

அவர்கள் அல்-சஹ்ரா மற்றும் பத்ரை ஆகிய பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அவை வாடி காஸா ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளன. "வாடி காஸாவின் தெற்கே உள்ள பகுதிகளில்" அல்-ரவ்தா அல்லது அல்-நுஷாவின் பகுதிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"அவர்கள் இங்கேயே தங்கி கடுமையான தரைப் போரில் சிக்கிக் கொள்ள வேண்டுமா, அல்லது இங்கிருந்து வெளியேறி, அவர்களுக்குக் கிடைத்த ஒரே தங்குமிடத்தை விட வேண்டுமா?" என்று அப்து குடும்பத்தினர் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர்.

 
இஸ்ரேல் காஸா மோதல்
படக்குறிப்பு,

இஸ்ரேலிய துண்டுப் பிரசுரங்களில் தவறாக குறிக்கப்பட்டிருந்த இடங்கள்

சிலர் "டேர் அல்-பாலாவில் உள்ள தங்குமிடங்களுக்கு" செல்லுங்கள் என்று கூறிய எச்சரிக்கை தகவலைப் பின்பற்றிச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் அந்த இடத்தைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்து திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அப்படி நாங்கள் இறந்தால், ஒன்றாகவே இறப்போம் என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

ஓரிகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ஜமோன் வான் டென் ஹோக் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டி நியூயார்க் கிராஜுவேட் சென்டரின் கோரே ஷெர் ஆகியோரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட காஸாவின் அழிவு குறித்த செயற்கைக்கோள் தரவு, அவர்கள் விட்டுச் சென்ற பகுதியைவிட அதிக அழிவைக் காட்டியது.

செயற்கைக்கோள் தரவுகள், அந்தக் குடும்பம் தப்பியோடிய டெய்ர் அல்-பாலா பகுதி இந்தக் காலகட்டத்தில் மிகவும் தீவிரமான தாக்குதலுக்கு உட்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை "இந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு அங்கு நிலவிய பொதுமக்கள் நடமாட்டம் குறித்த தரவுகளை" குறுக்கு சோதனை செய்ததாகவும், அவை குழப்பமானதாகவோ அல்லது முரண்பாடாகவோ இல்லை என்றும் கூறியது.

இந்த எச்சரிக்கைகள் மூலம் "காஸா பகுதியில் எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும்" அது கூறுகிறது.

https://www.bbc.com/tamil/articles/czrzxm1rg2do

மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை

1 week 5 days ago
03-1-750x375.jpg மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை.

கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில்,

H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல என்றும், இது ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவித்தார்.

இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்றும், இது கொவிட் 19 ஐ விட 100 மடங்கு ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1376792

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை

1 week 5 days ago

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

 

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்திலிருந்து விலகி ரஷ்ய படையில் இணைந்து கொண்ட படைவீரர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்று அறிக்கையிட்டிருந்தது.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பெரும் எண்ணிக்கையிலான போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தமிழர்கள் மீது பாரியளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குடியுரிமை மற்றும் மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் ஆகிய நலன்களை கருத்திற் கொண்டு பல இலங்கை படையினர் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

அண்மையில் ரஷ்யாவில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையர், இலங்கையில் இராணுவத்தில் இணைந்திருந்த போது வெறும் 20,000 ரூபா சம்பளத்தையே பெற்றுக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இரண்டு இலங்கையர்கள் அண்மையில் ரஷ்யாவின் Dontesk பகுதியில் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் மூன்று இலங்கையர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உலகில் சனத்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையிலான படை பலத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் படைவீரர்களின் எண்ணிக்கை 317,000 என உலக வங்கி அறிக்கையிட்டிருந்ததுடன் இது பிரித்தானியாவின் வழயைமான படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும்.

தமிழர் தாயகப் பிரதேசங்களின் சில இடங்களில் இரண்டு சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

ரஷ்ய இராணுவத்தின் உறுதி

கடந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் வெளிநாட்டு படையினரை ஆட் சேர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்ததுடன் ரஷ்ய கடவுச்சீட்டை துரித கதியில் பெற்றுக்கொடுக்கவும், மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் வழங்கவும் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் ரஷ்ய படையில் இணைந்து கொண்டுள்ளதாகவும் மேலும் பலர் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

இலங்கை இராணுவப் படையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்வதற்கான முகவர்களாக தொழிற்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினை நடத்திச் சென்ற இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் சுற்றுலா வீசாக்கள் மூலம் சென்று படைகளில் இணைந்து கொள்வதாகத் குறிப்பிடப்படுகின்றது.

ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை | Sri Lankan Army In Russia Ukraine War

அந்த வகையில் முதலில் இந்தியாவின் டெல்லிக்கு சென்று அங்கிருந்து போலந்து சென்று அசர்பைஜான் வழியாக உக்ரைன் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://tamilwin.com/article/sri-lankan-army-in-russia-ukraine-war-1712264758?itm_source=parsely-api

நியூயோர்க்கில் பூமி அதிர்வு.

1 week 6 days ago

நியூயோர்க்கில் பூமி அதிர்வு.

30 செக்கன்களுக்கு வீடு அதிர்ந்தது.வெளியே ஓடிப் போனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்கள்.

மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை கோரும் பிரேரணை

2 weeks ago

Published By: SETHU

04 APR, 2024 | 06:33 PM
image

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது.

காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை. 

எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். 

https://www.virakesari.lk/article/180455

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

2 weeks 1 day ago

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

25 வருடத்துக்குப் பின் 7.4 அளவில் நில நடுக்கம்.

இதுவரை 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.900க்கும் அதிகமானோர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

https://www.cnn.com/asia/live-news/taiwan-earthquake-hualien-tsunami-warning-hnk-intl/index.html

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை - தற்போதைய தகவல்கள்

2 weeks 1 day ago
தைவானில் 25 ஆண்டுகளில் காணாத அளவு பெரிய நிலநடுக்கம்

பட மூலாதாரம்,TVBS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய்
  • 3 ஏப்ரல் 2024, 03:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு (தைவான் நேரப்படி காலை 07:58 மணி) 15.5 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. இது ஒன்பது பின் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.

ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவே என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), தனது ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அதன் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்குகின்றன என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்
தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AP

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,NATIONAL FIRE AGENCY

ஹுவாலியன் மற்றும் பிற பகுதிகளில் இடிபாடுகளிலிம் கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களைச் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தைவானின் தேசிய தீயணைப்பு முகமையின் கூற்றுப்படி, சுரங்கப்பாதைகளிலும் பலர் சிக்கியுள்ளனர்.

ஹுவாலியனில் உள்ள யுரேனஸ் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டனர்.

தாய்பெயில், ஜோங்ஷான் மாவட்டத்தின் ஒரு கட்டிடத்தில் சிக்கிய லிஃப்டில் இருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டனர். நியூ தாய்பெய் நகரில் ஸிண்டியான் மாவட்டத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர்.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின

இடிபாடுகளின் காட்சிகள்

தைவானின் தலைநகர் தாய்பெயில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்கள், கட்டிடங்கள் பலமாகக் குலுங்குவதையும், அலமாரிகளில் இருந்து பொருட்களை தெறித்து விழுவதையும், மேஜை நாற்காலிகள் கவிழ்வதையும் காட்டுகின்றன.

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தைவானின் உள்ளூர் ஊடகங்கள், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டிடங்களின் காட்சிகளைக் ஒளிபரப்பின. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகளும் காட்டப்பட்டன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வாகனங்கள் நொறுங்கிக் கிடப்பதையும், கடைகளில் பொருட்களை கலைந்து கிடப்பதையும் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான டிவிபிஎஸ் (TVBS) ஒளிபரப்பிய காட்சிகள் காட்டுகின்றன.

தைவான் முழுவதும் மின்வெட்டு நிலவுவதாகவும், இணையச் சேவைகள் தடைபட்டிருப்பதாகவும் இணைய கண்காணிப்புக் குழுவான NetBlocks தெரிவித்துள்ளது.

 
தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

மலைகள் நிறைந்த தைவானின் உட்புறப் பகுதிகளில், நிலநடுக்கம் மிகப்பெரிய நிலச்சரிவை எற்படுத்தியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன

அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 3மீ உயரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் முன்னர் எச்சரித்திருந்தனர்.

ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்தது. ஆனால் மக்கள் ‘அதே தீவிரத்துடன் பின் அதிர்வுகள் குறித்து விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ‘கடந்து விட்டதாக’ கூறியது.

சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

"இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது," என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.

இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தனர், 5,000 கட்டிடங்கள் இடிந்தன.

தைவான் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆப்பிள் நிறுவனத்திற்கான செமிகண்டக்டர்ளை டி.எஸ்.எம்.சி நிறுவனம் தயாரிக்கிறது

உலகப் பொருளாதாரத்தில் தைவானின் முக்கியத்துவம் என்ன?

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (டி.எஸ்.எம்.சி) மற்றும் ஐபோன் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமான தைவான் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது, என்கிறார் சிங்கப்பூரில் இருக்கும் பிபிசியின் வணிகச் செய்திகள் நிருபர் பீட்டர் ஹாஸ்கின்ஸ்.

ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான குறைகடத்திகளின் (செமிகண்டக்டர்) முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனம் உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிப்பதுடன், அமேசான் கிண்டில், நிண்டெண்டோ மற்றும் சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டி.எஸ்.எம்.சி நிறுவனம் அதன் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அதன் சில தொழிற்சாலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றியதாகவும், தற்பொது அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

நிலநடுக்கம் அதன் தயாரிப்புச் செயல்பாடுகளில் என்ன தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தகவல்களை பிபிசி கேட்டபோது, அதற்கு ஃபாக்ஸ்கான் பதிலளிக்கவில்லை.

தைவானின் தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்க்யூட் போர்டுகள் மற்றும் மேம்பட்ட கேமரா லென்ஸ்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன.

நைகி, அடிடாஸ் போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கும் தைவானில் இருக்கும் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/ckvwwzq3jx9o

நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.

2 weeks 1 day ago

                                                    நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.

                           நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது.

                           நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது.

                          மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாசிங்டன் டிசி,நியூயோர்க்,இலினேஸ்,கலிபோர்ணியா போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.

                         ஆரம்பத்தில் நகரபிதாக்களில் இருந்து சகல பிரமுகர்களும் வரும் பேரூந்துகளை வரவேற்றார்கள்.நாளாந்தம் பேரூந்துகளின் தொகை கூடக்கூட வரவேற்பவர்களின் தொகையும் குறைந்துவிட்டது.
சரி வந்தவர்களை தங்க வைக்க என்று 2-3-4-5 ஸ்ரார் கொட்டல்களில் விட்டு நல்ல சாப்பாடுகளும் கொடுத்தார்கள்.வந்தவர்களின் தொகை கூடிக்கூடி ஒரு லட்சத்தைத் தாண்டும் போது தான் நிலமை மேசமாகிக் கொண்டு போவதை உணர்ந்தார்கள்.

                        மத்திய அரசோ மாநில ஆளுநரோ இதற்காக மேலதிக பணம் ஒதுக்கவில்லை.

                       கட்டிப் போட்டு பராமரிக்க பணம் இல்லை.எல்லோரும் விரும்பியபடி ஊர் சுற்றுகிறார்கள்.எங்கே போனாலும் களவு.பொலிசுக்கு கூப்பிட்டால் சம்பவம் நடந்து பலமணி நேரத்தின் பின்பே வருகிறார்கள்.

                       கையும் களவுமாக கள்வனைப் பிடித்தாலும் நீதிமன்றம் கொண்டு போனால் பிணை இல்லாமலே வெளியே வருகிறார்கள்.

                      அண்மையில் நியூயோர்க் நகரத்தில் 4-5 பேர் சேர்ந்து 2-3 பொலிசாருக்கு அடித்துவிட்டார்கள்.அவர்களைப் பிடித்து நீதிமன்றம் கொண்டு போனால் உடனேயே பிணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள்.

                      வெளியே வந்தவர்கள் பொலிசாருக்கு நடுவிரலைக் காட்டிக் கொண்டு போகிறார்கள்.

                    அடுத்தடுத்த நாள் மக்களின் கொந்தளிப்பால் அவர்களைத் தேடினால் கலிபோர்ணியா போய்விட்டார்கள்.பின்பு அங்கு எங்கோ ஒரு மூலையில் வைத்து பிடித்தார்கள்.

 

                                                                                                பெரிய பிரச்சனை

                                  பகலில் தெருத்தெருவாக கூட்டமாக திரிபவர்கள் திடீர் திடீர் என்று ஆள்அரவமற்ற வீடுகளுக்குள் கதவுகள் யன்னல்களை உடைத்து உள்ளே போய் களவும் எடுக்கிறார்கள் அப்படியே தங்கவும் செய்கிறார்கள்.

                                வீட்டுக்காரர் வந்து பார்த்து அவர்களைக் கலைக்க பொலிசைக் கூப்பிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நீ நீதிமன்றம் போய் முறையிடு.

                                அதேநேரம் வீட்டின் 

தண்ணீரையோ

மின்சாரத்தையோ

சமையல் காசையொ

நிற்பாட்ட முடியாது.அப்படி நிற்பாட்டினால் உங்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

 

                                     இன்று நியூயோர்க் பிரவுன்ஸ் என்னும் நகரத்தில் சந்தேகத்தில் ஒருவரை துரத்த ஒரு வீட்டு நிலக்கீழ் அறைக்குள் ஓடியிருக்கிறார்.பின்னே சென்ற பொலிசார் உள்ளே போனால் 7 பேர் உள்ளே.போதை வஸ்துகள் குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வெற்றுத் துப்பாக்கி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் அத்துடன் ஒரு 7 வயதுக் குழந்தை.

                                  அத்தனை பேரையும் நீதிமன்றம் கொண்டு போனால் கொலை வழக்கில் தேடப்பட்டவரைத் தவிர மற்றையோரை விடுவித்துள்ளார் நீதிபதி.

                                 வீட்டுக்காரர் மாதக் கணக்காக நீதிமன்றுக்கு அலைவதாக சொல்கிறார்கள்.

https://abc7ny.com/eight-suspected-migrants-arrested-in-the-bronx-after-police-found-them-squatting-with-guns-and-drugs/14605864/

Child found among guns, drugs in Bronx home occupied by several squatters.

 

NORWOOD, The Bronx (WABC) -- Police have arrested several suspected migrants who they found squatting with guns and drugs in the basement of a Bronx home.

The big bust happened last Wednesday when police received a call about a man with a gun just footsteps away from a school.

Officials say they chased 24-year-old Hector Desousa Villata, who is believed to be from Venezuela, into the home on Hull Avenue.

That is where police arrested him, long with seven other suspected migrants. One man, 22-year-old Javier Alborno, tried to flee with a weapon but was soon arrested.

When authorities obtained a search warrant, they found two more loaded guns, three loaded extended magazines, ammunition, and a bag of ketamine mixed with cocaine.

 

A 7-year-old child was also found in the home.

"Two of the people with the guns had open cases, one for an attempted murder in Yonkers, and one walking around with an open gun indictment, walking around," said NYPD Chief of Patrol John Chell.

A neighbor spoke out Tuesday and said the group had been squatting.

"They're squatters and the owner has been trying to get them out of the apartment for the longest period of time," said neighbor Alfred Munoz. "I think he has a court date set, apparently because they're squatters for more than 30 days..... they came, they were a disruptive force mainly because there were a lot of them. You didn't know who was staying, not staying there, and the owner of the building had a hell of a time trying to get them out."

Desousa Villata and the others were charged with criminal possession of a weapon, criminal possession of controlled substance and acting in a manner injurious to a child. Officials say all of the men, but two were released without bail.

 

Desousa Villalta was already charged with attempted murder for shooting another person in the leg during an argument in Yonkers.

The extent of the criminal activity at the house is the subject of investigation here while six of the suspects are out on release.

The suspect accused of shooting someone in the leg in Yonkers is out on supervised release. Some of the suspects are also under investigation in connection with a robbery pattern in Bergen County.

இந்தச் செய்தியை கூகிளில் மொழிபெயர்த்து போடலாம் என்று நினைத்தேன்.

இருந்தாலும் பண்டிதர் தம்பி @இணையவன் க்கு கூகிள் தமிழ் விளக்கம் குறைவாம்.அதனால் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டேன்.

இந்த செய்திகள் பற்றி  @ரசோதரன் @நீர்வேலியான்இன் அனுபவங்கள் தகவல்களை அறிய விரும்புகிறேன்.

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

2 weeks 2 days ago

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும்.

இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இஸ்ரேல், சிரியாவில் அவர் நடமாடியவேளை கொன்றிருக்கிறது. 2020 இல் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய மூத்த தளபதியான அல் சுலைமானியின் இழப்பிற்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கும் ஈரானின் மிக முக்கிய தளபதி இவரென்பது குறிப்பிடத் தக்கது. 

இவரது படுகொலைக்குப் பழிவாங்கியே தீருவோம் என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இஸ்ரேலுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நேரடியான மோதலொன்றைத் தவிர்க்க விரும்பும் ஈரான், தனது முகவர்களான லெபனானின் ஹிஸ்புள்ளாக்கள், யெமெனின் ஹூத்திகள், ஈராக் ‍- சிரியாவில் இயங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

https://edition.cnn.com/2024/04/02/middleeast/iran-response-israel-damascus-consulate-attack-intl-hnk/index.html

மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்களின் வாகனத்தை இலக்குவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச்சு - 7 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை

2 weeks 2 days ago

 

மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே  இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.    

கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். 

இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.   வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். 

சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது.

2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள்.

பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன.

இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். 

https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html

அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்

2 weeks 3 days ago

போன வாரம்  அமெரிக்கவின் பால்டிமோர் துறைமுகத்தில் அங்கிருக்கும் பாலத்துடன் மோதி பெரும் சேதத்தை உண்டாக்கிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த பொருட்கள் மிகவும் ஆபத்தான மற்றும் நச்சுத்தன்மையான கழிவுப் பொருட்கள் என்று அமெரிக்காவில் நடைபெற்ற முதலாவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

56 கொள்கலன்களில் 764 டன்கள் எடையுள்ள கழிவுப் பொருட்கள் - லித்தியம் -இரும்பு மின்கலங்கள் மற்றும் வெடிக்கக் கூடிய கழிவுகள் உட்பட - இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தன. இன்னமும் மிகுதியாக இருக்கும் அந்தக் கப்பலின் 4644 கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றது.

https://www.dailymirror.lk/breaking-news/Ship-was-carrying-US-toxic-waste-to-Sri-Lanka-Report/108-279925

 

ஆப்கானில் கண்ணிவெடியில் சிக்கி 9 சிறார்கள் பலி

2 weeks 3 days ago

Published By: SETHU    01 APR, 2024 | 01:15 PM

image
 

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறார்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். 

கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார். 

சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தபோது இக்கண்ணிவெடி வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படையெடுப்பு காலத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்துள்ளதாக அம்மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180130

தென்லெபனானை இலக்குவைத்து எறிகணை வீச்சு - ஐநாவின் கண்காணிப்பாளர்கள் காயம்.

2 weeks 4 days ago
31 MAR, 2024 | 10:28 AM
image
 

லெபனானின் தென்பகுதியில் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் ஐநாவின் மூன்று கண்காணிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிக்காக்கும் பிரிவு  தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஆளில்லா விமானதாக்குதலே இதற்கு காரணம் என லெபானான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என ஐநா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து தென்லெபானனை பிரிக்கும் ஐநாவால் வரையறுக்கப்பட்ட நீலக்கோடு வழியாக ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அருகில்  எறிகணை வீழ்ந்து வெடித்தது என ஐநா தெரிவித்துள்ளது.

அமைதிப்படையினரை இலக்குவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநா தெரிவித்துள்ளது.

லெபானின் உட்பகுதிகள் தாக்குதலிற்காக தெரிவுசெய்யப்படுகின்றன இதன் காரணமாக பெரும்மோதல் வெடிக்கலாம் என ஐநா பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180049

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’

2 weeks 4 days ago
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ 13-24.jpg

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

 

https://akkinikkunchu.com/?p=272568

 

Checked
Thu, 04/18/2024 - 20:34
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe