ஊர்ப்புதினம்

குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

5 days 4 hours ago
images-19.jpg குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் ஆகும்.

இன்னிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து சில தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டு தொகையயாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கும் இது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1377581

இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

5 days 4 hours ago
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர்

மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2024/1377613

பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:

5 days 6 hours ago

 
பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை!
2034466636.jpeg

யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:

சுதந்திரம் எங்களது பிறப்புரிமை. அதை இன்னொருவர் எமக்கு எழுதித் தரவேண்டிய அவசியமில்லை. அதை இன்னொருவர் பறிக்கவும் முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் 6 நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுதந்திரக் காற்றை நீங்களாகச் சுவாசிக்க முடியாது. முன்னெடுப்புகள் இல்லாமல் எதையும் சாதித்து விடமுடியாது. இந்தியா ஒரு பெரிய நாடு. எத்தனையோ மொழிகளையும், எல்லைகள் அனைத்திலும் யங்கரமான பிரச்சினைகளைக் கொண் தொரு நாடு. ஆனால் அங்கு எல்லாமிருக்கிறது.
தமிழ் மக்கள் தங்கள் பாதையை எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதற்காக புரட்சிதான் செய்யவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லி விட்டு நான் வீட்டுக்குச் செல்லமுடியாது. யூதர்கள் அல்லது பலஸ்தீனியர்கள் முன்னர் எங்கு கண்டாலும் தங்களின் அடுத்த சந்திப்பு ஜெருசலேமில் என்று கைதட்டுவார்கள். நாங்கள் எங்களின் அடுத்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று கைதட்டுகின்றோமா? தற்போது தேசியம் கதைக்கிறவர்கள் ஆசியாவிலேயே பிஸியானவர்கள். வாழ்வதோ கொழும்பில். லண் டன் குடியுரிமையும் கொண்டுள்ள அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற சிறப்புரிமையையும் கொண்டுள்ளனர். பலஸ்தீனம் போன்று எமது மண் பறிபோகவில்லை. நாங்கள் தற்போது பலஸ்தீனியர்கள் போன்று அகதி முகாம்களிலிருக்கவில்லை. எங்கள் தாய்நிலத்தைப் பாதுகாப்பதற்கான போதிய அறிவு எம்மத்தியிலுள்ளது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் புரிந்துணர்வுப்பண்பு ஒவ்வொருவருக்கும் தேவையானதொன்று. ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றார்.

 

https://newuthayan.com/article/பிறப்புரிமையான_சுதந்திரத்தை_எவரும்_எழுதித்தர_வேண்டியதில்லை!

 

வட இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை;

5 days 6 hours ago

 

அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை;
975970258.jpg
 

அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளருக்கு விசாரணை; 
 

மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

மாதவன்.

வடமராட்சி இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் மற்றும் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 24ஆம் திகதி  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வாட்ஸப் சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்று வந்துள்ளதாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து நேற்றையதினம் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

 

https://newuthayan.com/article/அதிபர்_மற்றும்_கல்விப்_பணிப்பாளரை_விசாரணைக்கு_அழைத்த_மனித_உரிமைகள்_ஆணைக்குழு!

 

 

இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு

5 days 6 hours ago

 

இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்து-பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்பணிப்பையும் வலியுறுத்துகிறது.

 

http://www.samakalam.com/இலங்கையின்-இறைமை-பாதுகா/

 

 

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப் பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்கள் கையளிப்பு!

5 days 21 hours ago
10 APR, 2024 | 05:13 PM
image
 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிகளை விமானங்களுக்கு ஏற்றிச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தரைவழி நிர்வாகப்  பிரிவுக்கு மூன்று அதிநவீன பஸ்களை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வளாகத்தில்  இன்று புதன்கிழமை (10) நடைபெற்றது.

சுமார் 5 வருடங்களாக முக்கிய தேவையாக இருந்த பஸ்கள் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் சீனாவின் சைனா இன்டர்நேஷனல் மரைன் கொள்கலன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி விமானப் பயணிகள் தங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இந்த பஸ்களில் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

இந்த நிகழ்வில் துறைமுகங்கள், விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சச்சந்திர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோர் கலந்துகொண்டனர். 

20240410_101938.jpg

20240410_095007.jpg

20240410_093704.jpg

https://www.virakesari.lk/article/180926

போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் தினசரி 200 முறைப்பாடுகள்

5 days 21 hours ago
10 APR, 2024 | 03:57 PM
image

தங்களது பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தினசரி 200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போலி முகநூல் கணக்குகளை அகற்றுமாறு கோரி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் 1,500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முறைப்பாடுகளின் படி பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180910

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பு

5 days 21 hours ago

Published By: VISHNU

10 APR, 2024 | 06:44 PM
image
 

ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய எண்ணெய் அபிஷேகம் திங்கட்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/180935

நியாயம் இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை. 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஜனநாயகப் பலத்தை நிரூபிக்க வேண்டும் - சபா குகதாஸ்

6 days 1 hour ago

Published By: DIGITAL DESK 7

10 APR, 2024 | 03:50 PM
image
 

யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப்படவில்லை இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஐனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும் ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.

தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரோபாயமாக ஐனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம் பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.

எனவே இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் சனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றினைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/180868

வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம்

6 days 1 hour ago

Published By: DIGITAL DESK 3   10 APR, 2024 | 02:06 PM

image

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“தனியாருக்கு சொந்தமான 120 பரப்பு காணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த காணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த விகாரைக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் காணியை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைத் தொடருமானால் குடா நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மிக விரைவாக இந்த கட்டிடத்தை அகற்றி உரியவர்களிடம் காணியை கையளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். "

காங்கேசன்துறை, வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் வீதியோரத்தில் ஓராண்டாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் 'சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்றுங்கள் எங்களின் காணி எமக்கு வேண்டும். அமைதியை குலைக்கும் பொலிஸாரை நாங்கள் விரும்பவில்லை,'' என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

பிராந்திய காணி அதிகார சபையின் அனுமதியின்றி தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது." என இலங்கை இராணுவம்  ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

"கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது" என இராணுவம் கூறுகிறது.

14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/180909

நீதிமன்றம் உத்தரவிட்டும் இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை பொலிஸார் மீள வழங்கவில்லை

6 days 1 hour ago

Published By: DIGITAL DESK 3

10 APR, 2024 | 04:22 PM
image
 

இந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று சைவ வழிபாட்டு சடங்குகளை சீர்குலைத்து, வவுனியாவில் உள்ள ஆலய வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிசார் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளது.

வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட மூன்று இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பூஜைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை பொலிசார் இதுவரை மீள வழங்கவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களையும் விடுவிக்கக் கோரி, ஆலய நிர்வாகத்தினரும், கைது செய்யப்பட்ட எட்டு சைவத் தமிழர்களும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, ஏப்ரல் 04ஆம் திகதி, டெய்லருடன் கூடிய டெக்டர், ஒரு தண்ணீர் பௌசர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களை பொலிஸார் விடுவித்தனர்.

signal-2024-04-08-112103_002.jpeg

signal-2024-04-08-112103_003.jpeg

50 கிலோ அரிசி, 10 கிலோ உழுந்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள், பத்தி, கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளக்கு, மணி உள்ளிட்ட சில பொருட்கள் என சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இன்னமும் பொலிஸாரிடமே காணப்படுவதாக, ஆதிலிங்கேஸ்வர ஆலய நிர்வாக சபையின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி இரவு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து, வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் உள்ள வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எட்டு சைவர்கள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை மார்ச் 8 ஆம் திகதி இரவு பொலிசார் கைது செய்தனர்.  

இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் பொலிசாரிடம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்து மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், இராசரத்தினம் விநாயகமூர்த்தி (30), சுப்பிரமணியம் தவபாலசிங்கம் (35), துரைராசா தமிழ்ச்செல்வன் (28), மகேந்திரன் நரேந்திரன் (29), சிவம் லக்ஷான் (28), கந்தசாமி கௌரிகாந்தன் (24), திலகநாதன் கிந்துயன் (28) மற்றும் ஆலய பூசாரி தம்பிராசா மதிமுகராசா (45) ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதி, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் 8 பேர் முறைப்பாடு செய்தனர்.

தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும் அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர்  ஆலயத்தில் எதிர்காலத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்த இடமளிக்குமாறும், ஆலயத்திலிருந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பூசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மீள கையளிக்க ஏற்பாடு செய்யுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

https://www.virakesari.lk/article/180904

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய வாகனகளில் 200 கோடி ரூபா மோசடி!

6 days 1 hour ago

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க,
மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/298667

யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

6 days 1 hour ago
10 APR, 2024 | 12:52 PM
image
 

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் கிருஸ்னேந்திரனுக்கு எதிராக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

நீதிமன்றுக்கு தவறான தகவல்களை வழங்கி, மன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் மீதான விசாரணைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணையாளருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/180899

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை

6 days 1 hour ago
Iranamadu-Tank.jpg

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இந்த ஆண்டு 15,693 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் கீழான 2024ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்செய்கையினை முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் மற்றும் வட மாகாணத்தின் நீர்ப்பாசன குளங்களின் முறைமைகளே இம்முறை கிளிநொச்சியிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://thinakkural.lk/article/298632

”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்”- மனோ கணேசன்

6 days 5 hours ago
”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்”

கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று பொது தமிழ் வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்து உரையாடபடுகிறது. இதன் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்புகளில் கவனமாக ஆராய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விதமாக பொது பொது தமிழ் வேட்பாளர் போட்டி இடுவார் எனில் அவருக்கு தமிழ் வாக்காளர்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக  வாக்களிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்தது, இதன் மூலமாக முழு உலகிற்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் என்ன சொல்லப்பட உள்ளது என்பது தீர்மானிக்கப்பட  வேண்டும்.  பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன?  குறிப்பாக, அது பதின்மூன்றின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சில கட்சிகள், இன்று, ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என கோருகின்றன.  அவற்றின் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்துகளை முன்வைக்க, அந்த கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது.

ஆனால், பகிஸ்காரம் வேண்டாம். பொது தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச கோரிக்கைகள், நிலைபாடுகள், அபிலாசைகள் என்ன? என்பவை பற்றி உரையாட வேண்டும்.

தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெறலாம். மறுபுறம், தேர்தகள் ஆணையாளர் என்ன சொன்னாலும் கூட, ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே இவை அனைத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

இதற்கிடையில் எனது பெயரும் பொது தமிழ் வேட்பாளர் பரிசீலனையில் முன்மொழியபட்டு உள்ளது. பொது அரசியல் பரப்பில் நாடறிந்த தமிழ் கட்சி தலைவராக நான் இருக்கின்ற காரணத்தால் இப்படியான ஒரு யோசனை சொல்லபடுகிறது. இதை சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. இதுபற்றி நானும், எனது கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். ஆகவே இதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவை இல்லை. இங்கே பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காணமுன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன என தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் பிரதானமான தேவைபாடாகும் என தெரிவித்தார்.

-(3)

 

http://www.samakalam.com/தமிழ்-வேட்பாளரை-தேட-முன்/

 

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு - யாழ்ப்பாணத்தில் துயரம்!

6 days 7 hours ago

Published By: DIGITAL DESK 3   10 APR, 2024 | 09:27 AM

image
 

காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (09) காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசேதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/180863

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது - ஐக்கிய தேசிய கட்சி

6 days 7 hours ago

Published By: DIGITAL DESK 7   09 APR, 2024 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறாது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க யானை சின்னம் அல்லாத வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதானியுமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற இருக்கும் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இடம்பெறும் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்லும் பொதுத் தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் இடம்பெறாது.

அவ்வாறு நடத்தவும் முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர், ஒக்டோபர் காலத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும். பொதுத் தேர்தலுக்கு செல்ல இன்னும் காலம் இருக்கிறது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது நிச்சயமாகும். என்றாலும் அவர் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு ஒரு சின்னத்திலேயே போட்டியிடுவார்.தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் நடவடிக்கையின் அடித்தள நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது.

அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்வதே எமது நோக்கம்.  பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 80 வீதமானவர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கிறது என அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமான, சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றவரான ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது இலக்கு. அதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்னும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வர இருக்கின்றனர்.

சஜித் பிரேமதாசவும் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளி்க்க  முன்வர வேண்டும் என்றே நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முன்வருமாக இருந்தால் அதனை நாங்கள் மிகவும் அன்புடன் வரவேற்க தயாராக இருக்கிறோம்.

அதேநேரம் சஜித் பிரேமதாச எம்முடன் இணையாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் எமது நண்பர்கள் பலர் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்வார்கள். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதனை கண்டுகொள்ளலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/180842

ஆங்கில மொழியில் கற்பிக்க 2500 ஆசிரியர் நியமனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

6 days 8 hours ago

Published By: DIGITAL DESK 7

09 APR, 2024 | 05:33 PM
image
 

(எம்.மனோசித்ரா)

'அனைவருக்கும்  ஆங்கிலம்' வேலைத்திட்டத்தின் கீழ்  ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற  2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆங்கில மொழியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்துக்கான பாடங்களை கற்பிப்பதற்காக தற்போது அங்கீகரிக்கப்பட்ட  ஆசிரியர்கள் எண்ணிக்கை 4441 ஆக இருப்பினும், அதற்காக  6500 ஆசிரியர்களின் தேவை  காணப்படுகிறது.

பெரும்பாலான பாடசாலைகளில் தற்போது சேவையில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக நடவடிக்கைகள் திட்டமிட்டு, ஆங்கில மொழி மூலமான கற்பித்தல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளமை, 765 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட  மதிப்பீட்டின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளின் எண்ணிக்கையை, 2024ஆம் ஆண்டில் 1000 பாடசாலைகளாக அதிகரித்து  ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக  ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற  அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6500  வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்காக  ஆங்கில மொழி மூலமான பாடங்களைக் கற்பிக்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும்  ஜனாதிபதியும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/180840

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு!

6 days 20 hours ago

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கட்டுப்பண தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதிதாக அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் இனி ரூ. 2.6 மில்லியன் செலுத்த வேண்டும்.

அதேபோல், சுயேச்சை வேட்பாளர்கள் ரூ. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட 3.1 மில்லியன் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து குறித்த சட்டவிதிகளை திருத்துவதற்கான பிரேரணையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/298613

 

அரச வங்கிகள் மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்

6 days 21 hours ago
09 APR, 2024 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசுக்கு உரித்தான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்கள் காரணமாக கடந்த காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலையில் குறித்த வங்கிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தன.

எனவே அவ்வாறான சிரமங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவ்வங்கிகளில் மேற்கொள்ள வேண்டிய பல மறுசீரமைப்புகள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவினால் அடையாளங் காணப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதிகள் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கும் கட்டமைப்பு ரீதியான தேவைப்பாடுகளாகவும், உலக வங்கியினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி கொள்கை செயற்பாடுகளின் கீழான அடிப்படைச் செயற்பாடுகளாகவும் குறித்த மறுசீரமைப்புகளை துரிதமாக அமுல்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய குறித்த  மறுசீரமைப்பு யோசனைகளை அமுல்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/180829

Checked
Tue, 04/16/2024 - 11:15
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr