Jump to content

பாமினி


Recommended Posts

" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?"

எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .

"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".

கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .

"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".

பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .

"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".

"என்னகதை ?"

"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?

அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .

"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மாநில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".

பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .

" எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்க்கு வாறான் . இந்தக் கேணியடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது . பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".

என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .

"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".

பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதியில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .

"சொல்லு பாமினி".

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............

"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".

அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் .

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர்

அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:( :( :( :( :( :(
Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

Link to comment
Share on other sites

ஆம்! விடுதலைப்புலிகள் தவறான பாதையில் திசை திருப்பப்பட்டார்கள் இது தான் உண்மை.அவர்களுக்கு தேவையான நேரத்தில் பணம் போய் சேரவில்லை,சரியான சந்தர்பங்களில் தேவையான ஆயுதங்கள் அல்லது அதற்கான ரவைகள் கிடைக்கவில்லை.போர் நிறுத்தகாலத்தில் பணப்பற்றாக்குறையால் போராளிகளை வீடுகளுக்கு அனுப்ப நேர்ந்தது.ஒரு சில கட்டத்தில் போர் முனையில் இருந்த போராளிகளுக்கு சாக்கிலேட் அனுப்ப பட்டது.அச் சந்தர்பத்தில் பெண் போராளிகள் எமக்கு சாக்கிலேட்டில் விட உள் ஆடைகள் தான் முக்கியமாயுள்ளது.அதனை முதலில் வழங்குங்கள் என்ற கேள்வி எழுந்தது.இப்படித்தான் கள நிலைமை இருந்தது.மொத்ததில் பாலா அண்ணாவின் மறைவின் பின் தவறான பாதையில் தான் நாம் அனைவரும் பயணித்தோம் இதுதான் உண்மை.ஏன் இப்போது கூட ஏகன் என்பவர் சனல்4 தொலைக்காட்சி தலைவரின் இருப்பை அறிய முற்படுகிறது என்று இணையங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.இப்படியே கேட்டு கேட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.இலங்கை அரசு புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று உதவி கோரினார்கள்.ஒருசில ஆதாரத்துடன்,இனப்படுகொலை நடந்துமுடியும் வரை அனைவரும் அமைதி காத்தார்கள்.இலட்சக்கணக்கில் படுகொலை நடந்தேறியது.இப்போ ஒரு சிலர் விழித்துகொண்டார்கள் அல்லது தமது இருப்பை இலங்கையில் தொடர இருக்கிறார்கள் எனலாம்.இப்படித்தான் காலம் ஓடுகிறது.இதில் எங்களுக்கு சாதகமாக ஏதும் அமைந்தால் கச்சிதமாக பிடிக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.

தலைவன் ஒரு வழிகாட்டி. தானே உங்களை செல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. நாம் ஒன்று பட்டு (இங்க தான் இடிக்குது) காட்டிய வழியை பாவித்து முன் செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளது

அதற்கும் ஒரு காரணம் இருந்தது , நாங்கள் அதிமேதாவிப் புத்திசாலிகள் என்ற உளப்பாங்கே :):):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

நான் என்றுமே விமர்சனத்திற்கு கட்டுப்பட்டவன் ரதியக்கா . முக்கியமாக உங்களைப்போல் சுயவிமர்சனத்திற்கும் கட்டுப்பட்டவன் . உங்கள் தபால் பெட்டியை திறந்து பாருங்கோ ரதியக்கா :) :) :) .

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன்,

இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

வணக்கம் கோமகன்,

இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அகூதா . பாமினி எனது கதைதான் . கிராமிய வழக்கு என்றபடியால் இலக்கணரீதியாகத் தவறுகள் உண்டு . முடிந்தளவில் திருத்தியுள்ளேன் :):):) .

Link to comment
Share on other sites

கோமகன்,

இந்தக்கதையில் நீங்கள் கூற விரும்பும் கருத்துப்பொருள் கடந்த (பரிமளம்), நிகழ் (பாமினி), சரியாக நிலைமைகளை ஆராய்ந்து நடக்காவிட்டால், எதிர்கால (பமி) கதைகளாக நீடிக்கும்.

கருத்துப்பொருள் என்னவென்றால் 'சந்தர்ப்பங்களை பயன்படுத்தல்' என்பதாகும்.

அந்தவகையில் கடந்தகாலத்தில் பாமினி கூறுவதற்கும், அவவின் பாட்டியார் பரிமளம் கூறுவதும் அரசியல் வரலாறு. இங்கே பமி, பாமினியின் பேத்தியார் நாளை எம்மைவைத்து கண்ஸ்க்கு கதை கூறாமல் சுதந்திரமாக வாழ இன்றைய சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

கனடா நாட்டுச் சட்டத்திற்கும் விதிக்குள்ளும் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதை மீறினால் தூக்கி கட்டுநாயக்காவில வீசிடுவாங்கள்.

ஒரு அமைப்பிற்கு.. ஒரு நிறுவனத்திற்கு.. ஏன் இணையத்திற்கு.. விதிகள் சட்டதிட்டங்கள் அவசியமானவை.

Governance அரசுக்கு மட்டுமல்ல.. இணைய உலகில்.. ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. தகவல்தொழில் நுட்பம் அதை இன்று வலியுறுத்தியும் வருகிறது.

இயக்க விதி அற்றவர்கள் இயக்கமற்று போனதையும்.. இயக்க விதி கொண்டவர்கள்.. நீண்ட காலம் இயங்கியதையும் நாம் காண்கிறோம். யாழ் விதியோடு இருப்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக அதன் பெருமை சொல்லி வளர முடிந்திருக்கிறது. அதை யாழ் என்றும் காப்பது அவசியம்.!

இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தை மீறுவோர்.. சட்டவிரோதிகள்.. அதேபோல்.. மக்கள் பொது விருப்பை மீறுவோர் துரோகிகள்.. விதிகளை மீறுவோர்.. விதிமீறிகள்..! இவர்கள் எல்லோரும் தண்டனைக்குரிய மனிதர்களே..! :icon_idea:

Link to comment
Share on other sites

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

அண்ணை சொல்லுறார் எல்லாரும் கவனமாய் கேளுங்கோ!!!!!!......அது சரி இஞ்சை இருக்கிறதுகள் எல்லாம் கூன் குருடு செவிடுகள் தானே....அவர் சொல்லுற தெய்வ வாக்கெல்லாம் இதுகளுக்கு எங்கை விளங்கப்போகுது...

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea::rolleyes::(

யாழில அறி - விக்கப்படாத மட்டு நீங்கள்தானாம் உண்மையோ?

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

Link to comment
Share on other sites

அண்ணை சொல்லுறார் எல்லாரும் கவனமாய் கேளுங்கோ!!!!!!......அது சரி இஞ்சை இருக்கிறதுகள் எல்லாம் கூன் குருடு செவிடுகள் தானே....அவர் சொல்லுற தெய்வ வாக்கெல்லாம் இதுகளுக்கு எங்கை விளங்கப்போகுது...

கூன் குருடு செவிடாக மனதில் இருப்பதே ஊனம்

Link to comment
Share on other sites

இந்தியா இலங்கை ஒப்பந்தத்திலை இணைச்ச வடக்கு கிழக்கு கூட இப்ப இல்லை

Link to comment
Share on other sites

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.

மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

ஆரந்தப்புதுத்தலைவர் அர்யுன் ? :o

"உன் கண்ணில் இருக்கும் துரும்பை பார்ப்பதை விடுத்து , அடுத்தவன் கண்களில் ஊதாதே" என்று ஜேசுநாதர் சொல்லி இருக்கிறாராம் :):D

யேசுநாதர் இப்ப எங்கையிருக்கிறார் துரோகி ? :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.

ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.

சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.

காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .

வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

கள விதி:

4. உரையாடல்

"நீ, வா, போ, அவன், அவள்" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

"நீர், உமது, உமக்கு, உம்முடைய" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

http://www.yarl.com/...showtopic=22182

அர்ஜீன் தொடர்ந்து பல தடவைகள் மேற்படி பல களவிதிகளை மீறி எழுதி வருகிறார். நாகரிமான முறையில் கருத்தை முன் வைக்க முடியாத நிலையில் கள விதிகளை சகட்டு மேனிக்கு மீறி வருகிறார். இது மற்றைய உறவுகளும் களவிதிகளை மீறி எழுதத் தூண்டுவதோடு.. வேண்டாத பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகிறது. இதுவே அவர் இங்கு பதிவிடுவதன் நோக்கமாகக் கூட இருக்கலாம். நிர்வாகம்.. எனிமேலும் பொறுமை காப்பது இவர்கள் விடயத்தில் இவர்கள் திருந்த இடமளிக்கும் என்று தெரியவில்லை.

அர்ஜீன் கள விதிகளை மதித்து திருந்தும் வரை அவரின் பின்னூட்டலுக்கு பதிவிட மாட்டோம். அதுமட்டுமன்றி அவர் எம் பின்னூட்டல்களை மேற்கோள் காட்டியோ.. குறிப்பிட்டோ கள விதிகளை மீறிப் பதிவிடுவதை நாம் விரும்பவில்லை என்பதை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டுகின்றோம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.