Jump to content

எனது ஆய்வு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனிய இயந்திரங்களின் படத்தை மாத்திரம் போட்டிருக்கு. பங்கு பற்றியவரகளின் படங்களையும் போடணும். நிறையவெ படித்து பட்டங்கள் பெற்று எமது தமிழீழத்துக்கு நிச்சயம் சேவை செய்வீர்கள் என எண்ணுகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

 

நன்றி அண்ணா...

 

மேலும்...

 

அண்ணா.. இந்த ஆய்வைச் செய்தவன் நான் என்றாலும் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது. நான் ஒரு பொதுப் பொழிப்புரை தான் எழுத முடியும். பல்கலைக்கழக அனுமதி இன்றி சில விடயங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தானது. இங்கு இணைக்கப்பட்ட படங்கள் எவையும் பல்கலைக்கழகச் சொத்துக்களின் நேரடி இணைப்பு அல்ல. அவற்றை ஒத்த இணையத்தில் அனுமதிக்கப்பட்ட வெளியார் இணைப்புக்கள்.

 

(என்னிடம் ஆய்வு சாலையில் எடுத்த சில படங்கள் இருந்தாலும்.. எனது ஆய்வு ரிப்போட்டுக்காக எடுத்தது.. அவற்றை இங்கு இணைக்கவில்லை. copyright இல இருந்து பல பிரச்சனைகளை அது கொண்டு வரலாம்.)

 

குறிப்பாக இன்று இங்கிலாந்தில் இத்துறையில் படிக்க விசேட பாதுகாப்பு அனுமதி பெற வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உயிரியல் தொழில்நுட்பம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம் என்ற வகையில் சில கடுமையான நடைமுறைகளை பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகின்றன. அவற்றிற்கு உட்பட்டுத்தான் நாங்கள் விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். ஏன் வில்லங்கங்களை வீணா விலைக்கு வாங்குவான்.

 

யாழ் கள விதியும் இப்போ இதில் கூடிதல் தடை போட்டுள்ளது. :):icon_idea:

 

  •  

    ஆயுதங்களை தயாரித்தல், ஏவுகணை, இரசாயன ஆயுதம், உயிரியல் ஆயுதம் போன்ற பேரழிவு ஆயுதங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான எந்தவித கருத்துகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

     

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

ஒமேகா 3 முக்கிய கொழுப்பு அமிலங்களில் ஒன்று. அதனை நாளாந்த உணவில் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதை நாளாந்த உணவில் எடுக்க முடியாத சூழலில்.. குளிசை வடிவில் எடுக்கலாம் அதனால் பிரச்சனைகள் இல்லை.

மல்ரி விற்றமின்.. என்பதும் கூட சரியான அளவில் எடுக்கப்பட்டால் பக்க விளைவுகள் வராது. ஆனால் மக்கள் மல்ரி விற்றமினை அது சத்து தருகிறது என்ற ஒரு எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பின்விளைவுகளுக்கு சந்தர்ப்பம் உள்ளது.

விற்றமின்கள் சிறிய அளவில் ஆனால் முக்கியமான தேவைப்படுகின்ற உணவுக்கூறுகள். அவற்றை சரியான அளவில் எடுக்காவிட்டாலும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக எடுத்தாலும் பிரச்சனை. இதனை உணர்ந்து நாளாந்த உணவில் அவற்றை எடுக்கக் கூடிய வகையில் நிறை உணவை வகுத்து உண்டு வருவதே சிறப்பு. அதற்கு சந்தர்ப்பமில்லாத வேளையில் வைத்திய ஆலோசனைகளின் கீழ் மல்ரி விற்றமின் எடுக்கலாம் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி உள்ளெடுப்பது நன்றல்ல..! :icon_idea:

நன்றிகள் அண்ணா தகவலுக்கு கையோடு ஒரு க்ரில் ஆயில் உம் ஒரு men's multi vitamin tablet வாங்கிட்டன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா தகவலுக்கு கையோடு ஒரு க்ரில் ஆயில் உம் ஒரு men's multi vitamin tablet வாங்கிட்டன் :D

 

இவற்றை உள்ளெடுக்க முதல்.. எதற்கும் உங்கள் குடும்ப நல ஆலோசகரின் கருத்தினையும் கேட்கவும். உங்களின் உடல்நிலைக்கு ஏற்ப அவர்கள் தரும் சிபாரிசே சிறந்தது..! :)

Link to comment
Share on other sites

  • 3 months later...

இப்படியான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க  வேண்டும். உதயம் முடிந்தால் ஒரு தனித் திரி (வாழும் புலத்தில்) திறந்து இதைப் பதிக்கவும்.

 

மன்னிக்கவும் நிழலி, இத்திரியை அதன் பிறகு பார்க்கவில்லை. இப்போது இதற்கான காலம் கடந்து விட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பின்னரான ஆய்வுகளை  யாழ் களத்துடன் பகிர முடியுமா நெடுக்ஸ்?

 

மேலும் இரண்டு ஆய்வுகளை மட்டும் செய்திருக்கிறன்.

 

1. prokaryotic drug resistance mechanisms (மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் பொறிமுறைகள் சம்பந்தப்பட்டது)

 

[இது பற்றி மக்கள் அறிய வேண்டிய விடயங்களை ஒரு செய்தியின் அடிப்படையில் இங்கே ஒரு பதிவில் இட்டிருக்கிறோம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=118842 ]

 

2. BP (Beyond petroleum முன்னர் British petroleum என்றிருந்தது ) நிறுவன BP post-gulf of Mexico disaster strategy சம்பந்தப்பட்டது. (முகாமைத்துவக் கல்விக்கானது.)

 

இவை இரண்டும் சாதாரணமா மக்களுக்கு இலகுவில் புரிய வைக்கக் கூடியவை அல்ல. அவர்கள் இவற்றை விரிவாக.. தெரிஞ்சுக்கனுன்னு ஒரு பெரிய அவசியத்தையும் கொண்டிருக்கல்ல. மக்கள் தெரிய வேண்டியது.. அனுபவிக்க வேண்டியது.. இவற்றின் விளைவுகளையே. நமக்கும்.. இவற்றில் எந்தளவை இங்க எழுதலாம் என்ற ஒரு நெருக்கடி உள்ளது. அந்த வகையில் தவிர்த்திட்டம்.

 

நன்றி நுணா உங்கள் ஆர்வத்திற்கு. :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.