Jump to content

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்


Recommended Posts

2018721180suhasini.jpg

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

அழகான கதாநாயகர்களை திரைப்படத்தில் அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி.

நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி திரைப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகை சுஹாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் சுஹாசினி கூறுகையில், நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

தற்போது வெளிவரும் திரைப்படங்களில் அழகான நடிகையை மட்டும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கதாநாயகர்கள் அழகாக உள்ளனரா என்று எவரும் பார்ப்பதில்லை. நடிகர்கள் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற அழகான கதாநாயகர்களை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=22108

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

ஏன் இந்த வேண்டாத வேலை? இதுக்குள்ள பெயர் வேற குறிப்பிட்டு சொல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுஹாஸினி!!

05-mani-suhasini200.jpg

சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே... தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் "ஏன், எதுக்கு, என்னாச்சி..." டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!

அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டவும் செய்வார், வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும்.

ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில் தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்). அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ஹை ஸ்டைல் காட்சிகள் அதில்).

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். அனால் சுஹாஸினியை சிடி வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.

"இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.

ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான்", என்றார் சுஹாசினி.

"அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா... மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்..." என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.

http://tamil.oneindia.in/movies/news/2011/01/5-suhasini-mani-rathnam-veppam-audio-launch.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இவரை நடிகையாக ஏற்றுக்கொண்ட அதே பக்குவத்துடன் அழகில்லாத நடிகர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரவிந்தசாமியும், அஜீத்தும் அழகென்றால் மணிரத்தினத்தை விட்டுப்போட்டு அவர்களுடன் போய்ச் சேரலாமே???

Link to comment
Share on other sites

சுஹாசினி என்னதான் தப்பா சொல்லிட்டா?

நானு ரொம்ப நேசிக்குற ,,

ரகுனாதன் சகோதரம் என்னைய அடிச்சாலும் பரவாயில்ல..........

உண்மைய சொல்லணும்போல ஆசை........!

நானு காட்டப்போற .........இவங்க முகத்த பாருங்க...

இந்த கப்பிள்ஸ பார்த்தா,,,

டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மூடு வருமா?

Virudhagiri%2BTamil%2BMovie%2B_2_.jpganbesivam3.jpgSivaji%20The%20Boss_222.jpgஆனா ஆணுங்களுக்கு மட்டும்,,, அவங்க பேர்த்தி வயசு உள்ள.......

கியூட் கேர்ள்ஸ் ,, ரொமான்ஸ் பண்ண..சினிமாவுல கேக்குது!!

Link to comment
Share on other sites

.

என்னுடைய Business Card அச்சடிக்க ஒரு Printer இடம் போனேன். அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. Card Design களைப் பற்றி விளங்கப் படுத்துவதற்காக அவள் ஒரு படத்தைக் காட்டினாள். உன் பார்வை எங்கே செல்கின்றது பார்த்தாயா என்றாள். என் பார்வை அப்படத்தில் உள்ள ஒரு பிரகாசமான பகுதியை நோக்கிச் சென்றது.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

Link to comment
Share on other sites

.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

ஆக, தமிழ் சினிமா ஹீரோக்கள் ஹீரோயின்களை உயர்த்துறதுக்காக தங்களையே தியாகம் செய்யினம்..! அப்பிடியா? :lol:

Link to comment
Share on other sites

ரஜனியைப் பார்க்க கண்ணுக்கு வலியாகவும், ஷிரேயா கண்ணுக்கு இதமாகவும் இருக்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை நடிகையாக ஏற்றுக்கொண்ட அதே பக்குவத்துடன் அழகில்லாத நடிகர்களையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரவிந்தசாமியும், அஜீத்தும் அழகென்றால் மணிரத்தினத்தை விட்டுப்போட்டு அவர்களுடன் போய்ச் சேரலாமே???

:)

.

என்னுடைய Business Card அச்சடிக்க ஒரு Printer இடம் போனேன். அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. Card Design களைப் பற்றி விளங்கப் படுத்துவதற்காக அவள் ஒரு படத்தைக் காட்டினாள். உன் பார்வை எங்கே செல்கின்றது பார்த்தாயா என்றாள். என் பார்வை அப்படத்தில் உள்ள ஒரு பிரகாசமான பகுதியை நோக்கிச் சென்றது.

நானும் எவ்வளவோ கஸ்டப்பட்டு அறிவு - லீ இணைச்ச சிவாஜி படத்தில் ரஜனியைப் பார்க்க முயற்சி பண்றேன். பார்வையோ ஷிரேயாவின் கண், இமை, மூக்கு, உதடு இன்னு ஆராஞ்சிட்டே போகுது...

அதை தான் எந்த ஒரு ஆணும் செய்வார்.  

நீங்கள் கலாசார பாடம் எடுக்காமல் உண்மையை  கூறி உள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

உண்மைதான் நடிகைகள் தங்கள் வயதுக்கு ஏத்த கணவன் மாரை தேர்வு செய்ய வேண்டும் அப்ப தான் வாழ்க்கை இனிக்கும் . . இயக்குனரை கட்டுவேன் நடிகரை கட்டுவேன் என்று அடம் பிடித்து அடுத்தவள் புருஷனை ஆட்டையை போட வேண்டாம். உ+ம் ராதிகா, நயன்தாரா ஸ்ரீதேவி இப்பிடி பலர். சுகாசினிக்கும் மணி க்கும் எத்தினை வயசு வித்தியாசம் எண்டு சொல்ல முடியுமோ??? தமிழ் சினிமாவில் முதலில் தமிழர்கள் நடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

கெளதம் மேனனின் படங்களில் வரும் கதாநாயகர்கள் தமிழ் அல்லாத பெயருடன் கறுப்பு நிறம் இல்லாமலும், ஆங்கிலப் பெயர்களை கொண்டும் காணப்படும்; அதே நேரத்தில் அவரின் வில்லங்கள் தூய தமிழ் பெயர் கொண்டு கருப்பு நிறத்தில் காணப்படுவர்

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகாசினி தனது முகம் அழகா என்று கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

அவவுக்கு தான் ஒரு ஜெனோலியா, அமலா பால், சினேகா என்ற நினைப்பு.

Link to comment
Share on other sites

சிலவேளை ஆபிரிக்க ஆண்களை அழகு என்டு சொல்கிறாவோ

Link to comment
Share on other sites

கெளதம் மேனனின் படங்களில் வரும் கதாநாயகர்கள் தமிழ் அல்லாத பெயருடன் கறுப்பு நிறம் இல்லாமலும், ஆங்கிலப் பெயர்களை கொண்டும் காணப்படும்;

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

என்னாது ,,,

கத நாயகர்கள் பேரு தமிழ்ல இல்லாம, ஆங்கிலமா?? எப்போ எங்கே??

மின்னலேல வர்ற மாதவன் ..பேரு ராஜேஷ் .சிவகுமார்??அது?

காக்க காக்க சூர்யா ... பேரு அன்பு செல்வன்... அந்தபேரு?

வாரணமாயிரம் சூர்யா நேம்.. கிருஷ்ணன் .. அது?

அப்புறம்..வி.தா.வருவாயா.. கார்திக்??? சிம்பு?

ஆமா .........

எதையுமே பொதுமேடைலகூட வெளிப்படையா பேசுறாரு அவரு..!

நம்மாளுங்க,,ஆளையாளு முகம் பார்க்கமுடியாத,,,இணையதளத்துலகூட சொதப்புவாங்களே?!

தமிழ்விரோதபுத்தி,, நம்மளவிட சுஹாசினிகிட்டயா ,, ஜாஸ்தியா இருக்கு? :)

தமிழ்சிறி:

சுகாசினி தனது முகம் அழகா என்று கண்ணாடியில் பார்க்க வேண்டும்.

அவவுக்கு தான் ஒரு ஜெனோலியா, அமலா பால், சினேகா என்ற நினைப்பு.

சூப்பரு........

நாங்கமட்டும் ...சுஹாசினி கருத்துமேல கோவம் வந்தாகூட...

ஜெனிலியா,,,அமலா பால்.. சினேஹா போலவா இவன்னு ,,

கொலவெறியோட சண்டை ஆரம்பிச்சுக்குவோம்...

ஆனா அவமட்டுமில்ல ,,, ஐ மீன்....சின்ன வயசு பொண்ணுங்க எல்லாமே,,,,

கோவம்வந்தா கூட,,, விஜயகாந்த்,, ரஜினி ...மட்டுமா பேரழகனா ஏத்துக்கணும்,,,?!!

உண்மை பேச விரும்பாத ...

நீங்க மனசு மயங்கும் ,,,மெளனகீதமா சிறி? :)

Link to comment
Share on other sites

சுகாசினி எனும் பார்பனத்தியின் தமிழ் விரோத பார்ப்பன புத்தி, தன்னைப் போன்ற குறும் பார்வை கொண்டவர்களையே தூக்கிப் பிடிக்கு,ம்

நிழலி, உங்களிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைப் பிரயோகங்களை எதிர்பார்க்கவில்லை. :(

ஆனா அவமட்டுமில்ல ,,, ஐ மீன்....சின்ன வயசு பொண்ணுங்க எல்லாமே,,,,

கோவம்வந்தா கூட,,, விஜயகாந்த்,, ரஜினி ...மட்டுமா பேரழகனா ஏத்துக்கணும்,,,?!!

சுகாசினி சின்ன வயது கதாநாயகர்களைத் தேடவில்லை. அவர், நிறத்தில் வெள்ளையானவர்களைக் குறிப்பிடுகிறார். அது தான் தவறு. இளவயது கதாநாயகர்கள் பலர் உள்ளனரே? அரவிந்த சாமி ஒன்றும் வயதில் குறைந்தவர் இல்லை. இப்போதுள்ள "இளம்" நாயகர்களில் வயது கூடியவர் அஜித் தான்.

Link to comment
Share on other sites

சுகாசினி சின்ன வயது கதாநாயகர்களைத் தேடவில்லை. அவர், நிறத்தில் வெள்ளையானவர்களைக் குறிப்பிடுகிறார். அது தான் தவறு. இளவயது கதாநாயகர்கள் பலர் உள்ளனரே? அரவிந்த சாமி ஒன்றும் வயதில் குறைந்தவர் இல்லை. இப்போதுள்ள "இளம்" நாயகர்களில் வயது கூடியவர் அஜித் தான்.

ஆஹா 'Eas சகோதரம்... நீங்களுமா?

எப்போ ஆவது கருத்து எழுதுறீங்க,,, எதிர்த்து நான்,,, ஏதாச்சும் சொன்னா...

வாய் காட்டுறாரு அறிவிலி என்னு சொல்லுவீங்களா?

ஒண்ணே ஒண்ணுமட்டும் மனசில ஒதைக்குது...

சுஹாசினி சொன்னது தப்புன்னு.... எந்த பொண்ணாச்சும் வந்து...

சொல்லணுமே..யாழ்ல!

அப்போதானே... சூர்யாவுக்கு ஜோடியா பறவைமுனியம்மாவ போட்டா,,,

அது எவ்ளோ தப்புன்னு நாம புரிஞ்சுக்கலாம்! :)

Link to comment
Share on other sites

ஆஹா 'Eas சகோதரம்... நீங்களுமா?

எப்போ ஆவது கருத்து எழுதுறீங்க,,, எதிர்த்து நான்,,, ஏதாச்சும் சொன்னா...

வாய் காட்டுறாரு அறிவிலி என்னு சொல்லுவீங்களா?

உங்கள நான் அப்படி சொல்வேனா சகோதரம்? :lol:

வயதான கதாநாயகர்கள் வேணுமின்னு நான் கேட்கல.

அவங்க சொல்லவந்த முறை சரியில்லை.

அவங்க அழகுன்னு சொன்னவங்க எல்லாம் வெள்ளையா இருக்கிறதால வந்த பிரச்சனை.

அழகுக்கும் வெள்ளைக்கும் முடிச்சுப்போடுவது சரிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிழலி கூறியதில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. சுகாசினி சார்ந்த சமூகமும் பத்திரிக்கைகள் அடங்கலாக மீடியாக்கள் கலைஞர்கள் அனைவருமே தமிழர் விரோதப் போக்கினைக் கடைப்பிடிப்பவர்கள். இவரின் சிறிய தகப்பன் கமலகாசன் மவுன ராகம், குருதிப்புணல் போன்ற படங்களின் மூலம் தான் எவ்வாறு தமிழருக்கு விரோதமானவர் என்பதைக் காட்டியுள்ளார். இவரது கணவர் மணிரத்தினம் ரோஜா மும்பாய் போன்ற படங்களினூடாக தனது தீவிர இந்திய தேசியவாத விசுவாசத்தை முன்னிறுத்தியிருக்கிறார். சுகாசினி கூட பலமுறை தமிழக மக்களை தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். குஷ்பு விடயத்தில் இவர் எடுத்துக்கொண்ட போக்கு இவரை சிலகாலம் தலைமறைவாக இருக்கும்படி ஆக்கியது. இப்போது மீண்டும் முருக்கை மரம் ஏறியிருக்கிறார்.

அவர் சொல்லும் கதாநாயகர்களைப் பாருங்கள், அஜித், எம்.ஜி.ஆர், அரவிந்தசாமி....இவர்களுள் எவர் தமிழர். எம்.ஜி ஆரை விடுங்கள். அவர் வித்தியாசம், ஆனால் தமிழின விரோதப் போக்குடைய அஜித் போன்றவர்களை இவர் தூக்கிப் பிடிப்பதேன்??

இவர் அழகான நடிகர்கள் என்று கூறுவதன் அர்த்தம் வெள்ளைத்தோல் என்பதுதானே?? தமிழனுக்கு ஏது வெள்ளைத்தோல்?? தமிழர் எப்போதுமே கறுப்புத்தான். தமிழகத்திலுள்ள பிராமணர்களுக்கு மட்டுமே வெள்ளைத்தோல்.

எத்தனையோ தரமான தமிழ் நடிகர்கள் இருக்கிறார்களே?? அது இவரின் கண்ணுக்குத் தெரியவில்லையா???

அண்மையில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் வந்த கருத்துக்கணிப்பொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இப்போது தமிழகத்து ரசிகர்கள் சாதாரணமான, நாளாந்த வாழ்க்கையில் தாம் காணும் கதாப் பாத்திரங்கள் போன்ற நடிகர்களையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதிக பணம் செல்வழித்து மும்பய் இறக்குமதிகள், ஆந்திர, கேரள இறக்குமதிகளை விட தமிழகத்து நடிகர் நடிகைகள் நடித்த குறைந்த் பட்ஜெட் படங்கள் நன்றாக ஓடுகின்றன.

இன்னும் ராம ராவண சிக்கலில் வாழ்ந்துவரும் இந்திய பிராமனண இனம் தமிழர்களை இன்னும் இராவணன்களாகப் பார்ப்பதனால்த்தான் இந்தப் பிரச்சினையே.

Link to comment
Share on other sites

அறிமுக படுத்திட்டாலும் உங்காளு(மணிரத்தினம்) இருட்டுக்குள்ள தானே படம் எடுப்பார்.. ^_^

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

உப்படியே பிராமணனைத் திட்டுவதிலேயே காலம் தள்ளுங்கோ, உறுப்படியா எதுவும் நடக்காது, பிராம்ணனைத் திட்டுடுவது ஈழத் தமிழனின் வங்குரொத்து நிலையையே காட்டுகிறது

Link to comment
Share on other sites

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

அந்தப்படத்திலை எனக்கு புடிச்சகட்டம் கமலின்ரை கராட்டி அடி......புரூஸ்லி கமலிட்டை பிச்சைவாங்கோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்ததிலேயே தமிழர்களுக்கு விரோதமான படமென்றால் கமலின் மவுன ராகம் தான் .

மெளனராகம் கமலின் படமா இல்லையே?...கார்த்திக்,மோகனின் படமல்லவா :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.