Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்


Recommended Posts

விதிமுறைகள்:

1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும்.

2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம்.

கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம்.

4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை)

சிறந்த கருத்தாளர் தெரிவு:

மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் முன்னைய மாதத்திற்கான சிறந்த கருத்தாளர் அறிவிக்கப்படுவார் (உ+ம் 2012 Feb முதல் வாரம் Jan 2012 இன் சிறந்த கருத்தாளர் அறிவிக்கப்படுவார்).

இறுதி முடிவு: போக்குவரத்து

வெகுமதி:

50 டாலர் அன்பளிப்பு சான்றிதழ் (அனுசரணை : போக்குவரத்து - 2012ம் ஆண்டு சனவரி தொடக்கம் 2012 டிசம்பர் வரை).

ஏதாவது காரணத்தின் நிமித்தம் குறிப்பிட்ட ஒரு மாதத்திற்கு சிறந்த கருத்தாளராக ஒருவரும் தெரிவு செய்யப்படாவிட்டால் அல்லது ஏதாவது காரணத்தின் நிமித்தம் வெகுமதியை சிறந்த கருத்தாளரினால் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் தொடர்ந்து வரும் அடுத்த மாதத்திற்கான வெகுமதியுடன் முன்னைய மாதத்தின் அல்லது மாதங்களின் வெகுமதி சேர்க்கப்படும்.

வெகுமதி மின்னஞ்சல் ஊடாக சிறந்த கருத்தாளருக்கு அனுப்பி வைக்கப்படும். தாம் வாழும் நாட்டில் உள்ள வியாபார நிறுவனத்தில் (உ+ம் எரிபொருள் நிரப்பு நிலையம், பல்பொருள் அங்காடி, உணவகம், ஏனையவை) பயன்படுத்தும் வகையில் அன்பளிப்பு சான்றிதழ் ( Gift Certificate ) அனுப்பபடும்.

யாழ் கருத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், யாழ் கருத்து கள பொறுப்பாளர் விரும்பும் வகையில் வியாபார ரீதியாக யாழ் இணையத்தை முன்னேற்றும் வகையிலும் எமது நிறுவனம் சார்பாக இந்த முயற்சியை செய்கின்றோம். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு யாழ் கருத்து களத்தில் எழுதுகின்ற உங்கள் ஆதரவு தேவை. நன்றி

முக்கியகுறிப்பு-கருத்தாளர்கள் எழுதிய கருத்து அல்லது ஆக்கம் யாழ் கருத்து களத்தில் தனித்துவமாக அவர்கள் எழுதிய சொந்த கருத்தாக/ஆக்கமாக அமைய வேண்டும். தங்கள் அல்லது வேறு வலை தளங்களில் நகல் செய்யப்பட்ட ஆக்கங்கள், கருத்துக்கள் சேர்க்கபட மாட்டாது.

பிழை திருத்தம்-முக்கியகுறிப்பு எனும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 306
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறந்த கருத்தாளர் தை மாதம் 2012- சாந்தி (மூன்று கருத்துக்கள் சிவப்பினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96373

shanthy

முல்லைமண்

  • photo-thumb-67.jpg
  • கருத்துக்கள உறவுகள்
  • bullet_black.pngbullet_black.pngbullet_black.png
  • 2,251 posts

  • Gender:Female
  • Location:Germany

Posted 05 January 2012 - 04:28 AM

கருத்திட்ட நிலாமதி , கோமகன் ,கவிதை , கல்கி நன்றிகள்.

snapback.pngkomagan, on 04 January 2012 - 06:33 PM, said:

இதுதான் எமது வாழ்வியல் நிஜம் . மிக்க நன்றிகள் சாந்தி உங்கள் தட்டி எழுப்பலுக்கு :( :( :( 1 . தட்டிக்கொண்டேயிருக்கிறார்கள் சிறைகளிலும் சித்திவதைக் கூடங்களிலிருந்தும் கருணாயாளர்களின் கண்கள் திறக்குமென்று ஆனால் கதவுகள் திறக்கிற வழிகளைத்தான் காணோம்.

Posted 05 January 2012 - 04:37 AM

snapback.pngகவிதை, on 05 January 2012 - 02:37 AM, said:

சிறைச்சாலைகள் என்பது, உடல்ரீதியிலான சித்திரவதைகள் என்பதையும் தாண்டி..... மனரீதியாக எவ்விதமான மனநிலையினை உருவாக்கி வதைக்கும் என்பதனை... இந்தக் கதையிலும் உணர்ந்தேன்.

இப்படியான பல கதைகளினை மனதுள் சுமந்து கொண்டு... அவர்கள் பாடுபட, நாமோ வெளியில் ஆடிப்பாடிக்கொண்டு திரிகின்றோம். :(

மனதினை நெருடிய கதை. மிக்க நன்றி அக்கா! விதை வேதனையிலும் வேதனை என்னவென்றால் தங்களுக்கு ஒரு நல்ல உணவைத் தாருங்கள் எனக்கேட்டுத்தான் பெறவேண்டிய நிலமையில் இருக்கிறார்கள். மாதம் ஒரு நாள் நல்ல உணவை வழங்கினாலே அவர்கள் மகிழ்வார்கள். புலம்பெயர்ந்த நாம் மனம் வைத்தால் அவர்கள் நிம்மதியை அடைய முடியும். யுத்தம் முடிந்ததோடு மறக்கப்பட்ட ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகளின் மறுவாழ்வுக்கு கொடையாளர்கள் முன்வந்து உதவினால் அவர்கள் வாழ்விலும் ஒளிபிறக்கும்.

(சோறுதான் தேவையென்றால் மகிந்தவுடன் டக்கண்ணாவுடன் கூட்டு வைக்கலாம் என்ற ஆலோசகர்கள் இங்கே ஓடிவந்து இலவச ஆலோசனைகளை அள்ளிக் கொட்ட வேண்டாமென்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்)

snapback.pngகல்கி, on 05 January 2012 - 03:35 AM, said:

உண்மைதான் . இக்கதையில் தொக்கி நிற்பவை துன்பமயமான அழுத்தங்கள்.

காதல், குழந்தை என அந்த பெண் அடைந்த துயரங்கள் மனதை நிச்சயம் வருத்தும். உண்மையில் நீங்கள் யாதர்த்தத்தை உரைக்கும் பாங்கு மிக நன்று. தொடரட்டும் உங்கள் நிஜங்களின் வரவுகள். வாசிக்கக் காத்திருக்கிறோம். உண்மையில் புலம் பெயர்ந்து வாழும் பலருக்கு அங்கு நடந்த பல உண்மைச்சம்பவங்கள் தெரியாது. அவர்களின் அவல வாழ்வு எமக்குப் புரியாது. இவைகளை அறியப்படுத்துவது நல்லது.

கல்கி அவர்களுக்கான விடுதலைக்கும் வாழ்வுக்கும் வழியமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களிடம் அதாவது புலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகருமாம் அசைத்துப் பார்ப்பதென்ற முடிவை 2012இல் எடுத்திருக்கு. பார்ப்போம் ஆயிரம் தமிழ் அரசியில் கைதிகளின் வாழ்வை காப்போமா இல்லை கைவிடுவோமா ?

Link to comment
Share on other sites

இந்த பகுதியை நடத்துவதற்கு அனுமதி தந்த நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றி.

முக்கிய குறிப்பு எனும் பகுதி தற்போது மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு;

முக்கியகுறிப்பு-கருத்தாளர்கள் எழுதிய கருத்து அல்லது ஆக்கம் யாழ் கருத்து களத்தில் தனித்துவமாக அவர்கள் எழுதிய சொந்த கருத்தாக/ஆக்கமாக அமைய வேண்டும். தங்கள் அல்லது வேறு வலை தளங்களில் நகல் செய்யப்பட்ட ஆக்கங்கள், கருத்துக்கள் சேர்க்கபட மாட்டாது.

உங்கள் பிரேரணைக்கு நன்றி உடையார். பிரேரணைகள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஏழு நாட்கள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இனிமேல் விதி முறையில் உள்ளவாறு பிரேரணை செய்யுங்கள். இம்முறை நீங்கள் சமர்ப்பித்த உங்கள் பிரேரணை ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது. நன்றி

சிறந்த கருத்துக்களை எழுதிய கருத்தாளர்களை பிரேரணை செய்ய விரும்புவர்கள் விதி முறையில் கூறப்பட்டவாறு செய்யுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி.

இம்முயற்சியின் மூலம் நிறைய வளர்ச்சியை இந்தக்கருத்துக்களம் காணும் என்பதில் ஐயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வமூட்டக் கூடிய.. பாராட்டத்தக்க நல்ல முயற்சி. இதில் வெற்றி பெறவும்.. வெற்றியடையவும் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

ஆமா

நான் 5 பெயரில் வந்தா எனக்குத்தானே தொடர் வெற்றி???

Link to comment
Share on other sites

யாழ் கருத்துக் களத்தில் கருத்துபகிரும் கள உறவுகள் வெறும் வேலைவெட்டி இல்லாமல் வந்து கருத்துப் பகிருவதில்லை . தங்கள் சிந்தனைகளில் உதிக்கின்ற சிந்தனைகளை கருத்துக்களம் சிறக்கப் பதிக்கின்றனர் . அந்தவகையில் ஒவ்வொரு கருத்துப்பதிவாளருமே முக்கியமாகின்றனர் . இதில் தரம் பிரிப்பது கருத்துக்களத்தில் விரிசல்களையே உருவாக்கும் என்பது வெள்ளிடைமலை . கருத்துக்கள உறவுகளை ஊக்குவிக்கும் முகமாக 2011ல் யாழ் கள உறவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது போக்குவரத்திற்குத் தெரியாதோ????? மேலும் இங்கு யாரும் காசுகளுக்காகத் தங்கள் கருத்துகளை விற்பதற்கு வரவில்லை . யாழ் கருத்துக்களத்தின் ஒற்றுமைகளை போக்குவரத்து செப்பனிட வேண்டுமே ஒழிய , விசக்கிரிமிகளைப் பரவ விடக்கூடாது . நண்பர் விசுகு பதிந்த கருத்தான < ஒருவர் பத்து வேறு முக அடயாளத்துடன் கருத்துக்களத்தில் கருத்துப் பதிந்தால் அவரே தொடர்ந்து வெற்றி ஈட்டுவாரா > என்ற கேள்வியையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை <_< <_< ^_^ ^_^ .

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

கருத்தாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அந்த 50 டொலர்களையும் கருத்தாளர்கள் நிச்சயமாக அவர்கள் எடுத்துக்க போவதில்லை தை யாழ் களத்திற்கோ இல்லை மக்கள் நலவாழ்விற்கோ தான் கொடுக்க போகின்றார்கள் சோ...ஒருவர் 5 தரம் 50 டொலர்ஸ வாங்கினாலும் அது யாழுக்கோ இல்லை மக்களுக்கோ தான் போகபோது......அப்பிடினு நான் நினைக்கிறன்......நீங்க?

Link to comment
Share on other sites

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம்/ஆர்வம் இல்லாதவர்கள் கலந்து கொள்ள தேவை இல்லை.

சிறந்த கருத்தாளரிற்கு அன்பளிப்பு தொகையாக $ 50 பெறுமதியான Gift Certificate வழங்கப்படும். அதை பெற்று கொள்ள அவர் முன் வராவிட்டால் அந்த தொகை அடுத்த மாதம் சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யபடுவரிற்கு கொடுக்கப்படும் அன்பளிப்பு தொகையுடன் சேர்க்கப்படும்.

அன்பளிப்பு சான்றிதழ் சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யப்படுபவர் வழங்கும் மின்னஞ்சலிற்கு அனுப்பப்படும். வேறு வகையில் உ+ம் பணமாக குறிப்பிட்ட வெகுமதி சிறந்த கருத்தாளராக தெரிவு செய்யப்படுபவரிற்கோ அல்லது வேறு அமைப்புகளிற்கோ கொடுக்கப்பட மாட்டாது.

ஒருவர் பத்து அல்லது ஆயிரம் ஐடியில் கருத்துக்களை இங்கு எழுதினால் அது அவரவர் திறமை, அவரவர் சொந்த நேரம். இங்கு மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்களை எழுதியவர் தெரிவு செய்யப்படுவார்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக் களத்தில் கருத்துபகிரும் கள உறவுகள் வெறும் வேலைவெட்டி இல்லாமல் வந்து கருத்துப் பகிருவதில்லை . தங்கள் சிந்தனைகளில் உதிக்கின்ற சிந்தனைகளை கருத்துக்களம் சிறக்கப் பதிக்கின்றனர் . அந்தவகையில் ஒவ்வொரு கருத்துப்பதிவாளருமே முக்கியமாகின்றனர் . இதில் தரம் பிரிப்பது கருத்துக்களத்தில் விரிசல்களையே உருவாக்கும் என்பது வெள்ளிடைமலை . கருத்துக்கள உறவுகளை ஊக்குவிக்கும் முகமாக 2011ல் யாழ் கள உறவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது போக்குவரத்திற்குத் தெரியாதோ????? மேலும் இங்கு யாரும் காசுகளுக்காகத் தங்கள் கருத்துகளை விற்பதற்கு வரவில்லை . யாழ் கருத்துக்களத்தின் ஒற்றுமைகளை போக்குவரத்து செப்பனிட வேண்டுமே ஒழிய , விசக்கிரிமிகளைப் பரவ விடக்கூடாது . நண்பர் விசுகு பதிந்த கருத்தான < ஒருவர் பத்து வேறு முக அடயாளத்துடன் கருத்துக்களத்தில் கருத்துப் பதிந்தால் அவரே தொடர்ந்து வெற்றி ஈட்டுவாரா > என்ற கேள்வியையும் தட்டிக்களிப்பதற்கு இல்லை <_< <_< ^_^ ^_^ .

நன்றி வணக்கம்

கோமகன் உங்களுடைய கவலை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும் அதற்கு அப்பாலும் நாம் கவனித்துத்தான் ஆகவேண்டும். நாம் எமக்குள்ளேயே எம்முடைய படைப்புகளை அதன் தராதரத்தை அறியவேண்டுமென்றால் அதற்கு எமக்கு ஒரு திறந்த களம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தளத்தைக் கொடுத்தாலும் எங்களுக்குள்ளேயே இருக்கக்கூடிய... இத்தகைய களங்களில் பயணித்துப் பண்படாத ஒரு தன்மை எங்களால் இந்தத்தளத்தை சரிவரப்பயன்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது. ஆதலால் எமக்குள் இருக்கக்கூடிய பல எழுத்தாளர்கள் திறமை இருக்குமளவுக்கு அறியப்படாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையை மாற்றவேண்டும் என்றால் இத்தகைய களம் அமைவது அவசியமாகிறது. இந்தக்களத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பாருங்கள். ஒரு பதிவு அதன் தரம் என்பது சும்மா எழுந்தமானத்தில் போட்டுவிடமுடியாதபடி ஒரு விதப்பொறுப்புணர்வுடன் பதியப்படும் நிலையைத் தோற்றுவிக்கும். அந்தப்பதிவை இடப்போகும் படைப்பாளிக்கு வெற்றி, தோல்வி என்ற இரண்டு வகையான உணர்வுகளுக்கும் ஈடுகொடுத்து பயணிக்கக்கூடிய மனோவலிமையை வழங்கும். ஒரு முறை தோற்றால் மறுமுறை வெல்வேன் என்ற நம்பிக்கையை ஊட்டும். அத்தோடு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பிற்குள்ளும் அந்தப்படைப்பாளிக்குள் உறக்க நிலையில் இருக்கக்கூடிய திறமைகள் விழித்துக்கொண்டேயிருக்கும். இது படைப்பாளிக்கு..

இனி அதற்கு கருத்திடுபவர்களின் கருத்துகளுக்கு...

இந்தக்கருத்துக்களத்தில் நன்றாக கருத்துகளை எழுதத் தெரிந்தவர்களும் வெறுமனே ஒற்றை வரியுடன் ஒரு பதிவை பாராட்டிவிட்டு நகர்ந்துவிடுகின்றனர். இங்கு நான் பார்த்த வரைக்கும் சிலபேர் விதிவிலக்கு அப்படிப்பட்ட விதிவிலக்கானவர்களில் நீங்களும் ஒருவர்.. நிற்க

இங்கு ஒரு பதிவை பார்க்கும்போது எல்லோருக்கும் ஒரேமாதிரியான கருத்துகள் தோன்றும் என்று கூறிவிடமுடியாது எனக்குத் தோன்றுவது உங்களுக்கோ...உங்களுக்குத் தோன்றுவது வேறொருவருக்கோ... தோன்றாது ஆனால் கருத்துப்பதிவு என்று வரும்போது எமக்கு புரிவதைக்கூட எழுதத் தயக்கம் காட்டும் மனோபாவம் பொதுவாக நம்மிடையே இருக்கிறது.. காரணம் நாம் சொல்லும் கருத்தை மற்றவர்கள் ஏளனிப்பார்களோ அல்லது மற்றவர்களுக்குப் புரியாததை நாம் எப்படி வெளிப்படுத்தினாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தம்மைத் தானே தாழ்த்திக் கொள்ளும் நிலைகள் கூட கருத்துப்பகர்வை எழுதுவதற்கு தடையான காரணிகளாக அமைந்து விடுகின்றன.

'சிறந்த கருத்தாளர்" என்ற இந்தப்பகுதி திறமைகளை தமக்குள்ளேயே முடக்கி கொண்டு இருக்கும் பலரை எழுதத்தூண்டும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை.

கருத்தெழுதுவது பணத்திற்காகவே இருக்கட்டும் அதுகூட நமக்குள் சிறந்த பதிவாளர்களையும் கருத்தாளர்களையும் வளர்க்கும் அல்லவா...சிந்தித்துப் பாருங்கள் கலை இலக்கிய ரீதியாக எமது படைப்பாளிகள் எத்தனைபேர் நல்ல வருமானத்தோடு எழுத்துலகில் வலம் வருகிறார்கள்? நாங்கள் வளர்க்கப்படவில்லை என்றும் வளரும் வாய்ப்புகள் இல்லை என்றும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்து கொண்டு குமுறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. எங்களுடைய கதையைத் திரைப்படமாக்குவதற்கும் தமிழ்நாட்டுக்கலைஞர்களை தேடிக்கொண்டே இருக்கிறோம். சிறந்த பேச்சாளர்களை எமக்குள் வளர்க்காமல் இன்னும் இரவல் பேச்சாளர்களுக்காக அலைகிறோம். இது ஒரு உதாரணமாகத்தான் சொல்கிறேன் இன்னும் ஆழமாகப் போகலாம்.

கோமகன் ஒன்று சொல்லட்டுமா...

புண்பட்டுப் புண்பட்டுத்தான் பண்படவேண்டும் அதுதான் நிலைக்கும்..... இருந்து பாருங்கள் இந்தக்களத்திற்குள்ளேயே எத்தனை திறமையானவர்களை இனிவரும் காலங்களில் நீங்கள் அடையாளங்காணப்போகிறீர்கள் என்று...

Link to comment
Share on other sites

பெரிய பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் சிறந்த தொழிலாளி 'Employee of the Month' என்று கொடுக்கிறார்கள். இது அந்த மாதத்துக்கு உரிய Employee of the Month தவிர, மற்றைய தொழிலாளர்கள் வேலை செய்யவில்லை சோம்பேறிகளாக இருந்தார்கள் என்று அர்த்தப்படுவது இல்லை. பொதுவாக சக தொழிலாளர்களினால் காரணங்களை பட்டியலிட்டு பிரேரணை செய்யப்படும் தொழிலாளர்களில் ஒருவரே 'Employee of the Month' ஆக Human Resources மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். 'Employee of the Month' எனும் முறை நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கும், தனிப்பட்ட தொழிலாளர்களின் முன்னேற்றங்களிற்கும் பல அனுகூலங்களை ஏற்படுத்தி கொடுக்கிறது, ஊக்குவிப்பாக அமைகிறது. ஏறக்குறைய அப்படியான ஒரு திட்டத்தை ஒத்ததே எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி ஆகும்.

பிழை திருத்தம்: எழுத்து ஒழுங்கு அமைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். ஒருவரின் ஆற்றல் வெளிப்படுகிறது ஊக்கம் தருகிறது .பொழுது போக்குமட்டுமன்றி காத்திரமான கருத்துக்களையும் எழுதவேண்டுமென எண்ண தோன்றும். இத்தகைய முயற்சி வரவேற்க வேண்டியதே.....

Link to comment
Share on other sites

பணத்தை மட்டுமல்ல பச்சையையும் நிறுத்திவிட்டால் இயல்பான கருத்துகள் தோன்றும். இல்லையேல் பணமும் பச்சையும் தான் என்ன எழுதவேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

மாற்றங்கள் வரும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது மனித இயல்பு. ஆனால், மாற்றங்கள் முன்னேற்றத்தை குறிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் முன்னேற்றம் ஏற்படாது.

வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது.

தனது கருத்தியல் நிலைப்பாட்டில் தெளிவு கொண்டவருக்கு பணமோ பச்சை வாக்குகளோ அவரது கருத்தியல் நிலைப்பாட்டில் அதிக ஆதிக்கம் செலுத்த முடியாது.

பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது.

பிழை திருத்தம்: குறிக்கின்றன - குறிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை மட்டுமல்ல பச்சையையும் நிறுத்திவிட்டால் இயல்பான கருத்துகள் தோன்றும். இல்லையேல் பணமும் பச்சையும் தான் என்ன எழுதவேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

இதை நாம் நிஜத்தில் இங்கு காண்கிறோம். சிவப்பு கண்டு பயந்து ஓடினவங்க போக.. இப்ப பச்சையை கண்டு பிரமிக்கிறவங்க.. நாளை பணத்தைக் கண்டு மிரளப் போறாங்க..!

எதுஎப்படி இருந்தாலும்.. இவற்றிற்கிடையே ஒரு சமநிலையை பேணிக் கொண்டு.. யாழின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய தன்மையை கருத்தில் கொண்டு நாம் ஒரு மாற்றம் உள்ள பாதையில் பயணிக்க வேண்டியதும் கட்டாயம். அப்போதுதான்.. புதிய வழிகள் தெரியும். இன்றைய பழகிப் போன.. பழைய வழிகளும் கூட..முன்னொரு காலத்தின் புதிய வழிகள் என்பதை நாம் மறந்து விடலாகாது. :):D:icon_idea:

Link to comment
Share on other sites

"வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது"

இது வெறும் ஊகம். தரமில்லாத புயத்தல். இவ்வளவுக்கு தரமோ பெரும்தன்மையோ இல்லாமல் எழுதுபவர்கள் மற்றவர்களை தரம் அளந்து பரிசளிக்க விழைவது நகைபுக்கிடம்.

பிள்ளை வளர்வதை இங்கே உதாரணமாக காட்ட முயல்வதில் அதன் பின் உள்ள தத்துவம் விளங்கவில்லை என்பதுதான் அர்த்தம்.

  1. குழந்தை வளர்வதை உதாரணம் காட்டி நேர்மையான கருத்துக்களை எழுத தேவையான மனச்சாட்சியைப் பணத்தால் வளர்க்க முடியும் என்பது இங்கே கூறப்படுகிறதாயின் அதை நம்புவது, யாரோ தன்னைத்தான் பணத்திற்கு விற்க முயலும் பாவியாகத்தான் இருக்க முடியும். மற்றயபடி தன் மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட எந்த மேதையாகவும் இருக்க வேண்டியதில்லை. இங்கே பரிசளிக்க தக்க இயல்பொன்றும் பிரசன்னமில்லை.
  2. இல்லை யாழின் வளர்ச்சியை இங்கே குறிப்பிட்டு, யாழ் வளர்வதை நான் எதிர்க்கிறேன் என்ற மறைமுகமான சாடலென்றால் அது பணத்தால் வளர்ந்தும் குணத்தால் வளரமுடியாமல் போய்விட்ட தாழ்ந்த மனபக்குவத்தைத்தான் காட்டுகிறது. யாழ் வளரவும் நிலைக்கவும் பணம் வேண்டுமாயின் சந்தா முதல், விளம்பரம் சேகரிப்போருக்கு உதவுவது வரை எதற்கும் நிபந்தனை அற்ற என் சம்மதம் நானும் எழுதிய திரிகளில் காணப்படுகிறது.
  3. பெற்ற தாய் தகப்பன் பார்த்துகொண்டிருக்க, வீட்டுக்கு வந்து சில நிமிடங்களில் யாழை வளராத பிள்ளையாகப் பெயர்கட்டி, அவசர சிகிச்சைக்கு இட்டு செல்வதாக நினைப்போர், விரும்பாத வளர்ச்சி என்று ஒன்று இருப்பதையும் அதைக் குறைப்பதற்கும் மருத்துவ உதவிகள் வேண்டபடுவதென்பதையும் அறிந்திராமல் இந்த உதாரணத்தை எடுத்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. வளராத பிள்ளைகளுக்கு மருத்துவத்தில் கொடுக்கும் மருந்து உலகில் எல்ல நாடுகளிலும் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கும் மருந்தாக இருக்க அதை இவ்வளவு அவசரமவசரமாக முன் பின் யோசியாமல் யாரவது யாழுக்கு கொடுக்க வேண்டுமென்று மிரண்டு பிடித்து வெற்றியும் கணடால் அது தனிபட்ட வியாபாரங்களுக்கு யாழ் பலியாக்கி போய்விடத்தான்போகிறது.

தங்களின் மனம் என்ற தாழ்வான அளவுகோலால் எல்லோரையும் அளக்கப் பார்ப்பது மனித குலத்திற்கு இதுதான் முதல்த் தடவை அல்ல. குருவுக்கு தட்ஷனை, வாத்தியாருக்கு சம்பளம், புததக ஆசிரியனுக்கு ரோயல்டி. ஆனால் கருத்தென்பது ஒவ்வொரு மனிதனிதும் ஆழ்மனத்திலிருந்து பிறக்கும் அதி உன்னதமாமான, நேர்மையான ஒரு தீர்ப்பு. அதை அவன் தனது சக்காக்களுக்கு கொடுக்கும் போது அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்த்தால் அந்த தீர்ப்பை வழங்குவான். கருத்தாளனை கற்பனை படைப்பாளியாக்குவதோ அல்லது பணத்திற்கு அன்றாடம் செய்யும் தொழிலை கடமைக்கு செய்யும் தொழிளாளியுடனோ ஒப்பிடுவது அறியாமை.

"பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது" இது கோழைத் தனமான, மட்டரக மிரடல் விடும் குணத்தைக் காட்டுகிறது. இப்படி மட்டரக மிரட்டல்களை விட்டு கஸ்பட்டவர்களை நிறைய விலைக்கு வாங்கினால் யாரையும் வாங்கலாம் என்ற மமதை மகிந்தா கூட்டத்திற்கு மாதிரி மற்றவர்களுக்கும் வரத்தான் செய்யும்.

போக்குவரத்தே போட்டியில் வெல்லத்தக்க கருத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்றுதானே வரையறுத்திருக்கு. அதற்கு அடிமையாகி பிச்சைக்கு கருத்து எழுதுபவர்கள் பணம் பண்ண வேண்டியதுதனே. ஆனால் அது தருமியின் தொழில். வாக்குக்காக அரசியல்வாதியும் பணத்திற்காக முதலாளியும் தங்கள் கருத்துகளை அர்ப்பணம் செய்துதான் வாழக்கை நடத்துகிறார்கள். இதில் எத்தனை வலிமையான வாதாட்டத்தை வைத்தாலும் உண்மையை மாற்ற முடியாது. தெளிந்த மனத்தில் பிறக்கும் கருத்துக்களை அப்படியே திறந்த மனத்துடன் எழுதும் ஒருவன் பணம் தான் இதய சுத்தியான கருத்தை தனக்கு பிறக்க வைத்தது என்று கூறுவானாயின் அவன் பணத்தினால்த்தான் தன் கற்பு வளர்கிறது என்று வாதாடும் விபச்சாரி. இருக்கும் திறமையை பணத்திற்கு விற்க முடியுமே தவிர பணம் எந்த திறமையையும் மனிதனுள் போடுவதில்லை. பணம் கடைசியாக வாங்கத் தக்கதுதான் ஒருவனின் மனச்சாட்சியான கருத்து.

மோகன் அண்ணாவின் இலவச சேவையில் யாழில் எழுதும் எமக்கு பணம் புதிதாக இருக்கலாம். ஆனால் பச்சை புதிதல்ல. யாழில் சில மதிப்புமிக்க அங்கத்தவர்கள் இதுவரை பச்சையை புறம்தள்ளிவிட்டுத்தான் தங்கள் சேவையை செய்கிறார்கள். (நான் சில பெயர்களை மட்டும் போடுவது அழகல்ல என்பதால் போடாது விடுகிறேன்). இவர்கள் பணத்தையும் புறம் தள்ளிவிட்டுத்தான் தங்கள் கடமைகளைத் தொடருவார்கள் என்பது எனது கருத்து.

யாழில் சில மெச்சத்தாக இயல்புகள் உள்ளன.

  1. சிலர் பல நல்ல சேவைகளை செய்து யாழுக்கு வருவோர் மனத்தில் விடுதலைப் போராடத்தை சோரவிடாமல் வளர்க்கிறார்கள்.
  2. சிலர் தொடர்ந்து வெளி இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டுவந்து பகிர்கிறார்கள்.
  3. சிலர் கதை கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தையும், கலையையும், ஆன்மீகத்தையும் பேணுகிறார்கள்.
  4. யாழ்த்தளம் தமிழீழம், தமிழ் நாடு, புலம் பெயர் நாடுகளில் எல்லாவற்றிலுமிருந்து ஒரு உறவாடல் தளமாகவும் இருக்கிறது.
  5. வேறு நான் கவனிக்காத சிறப்பம்சங்களும் யாழில் இருக்கலாம்.

கருதுகளுக்கு பரிசளித்து மற்றய இனிய இயல்புகளை வளரவிடாமல்த் தடுப்பது பலர் போகும் தோணியை ஒருபக்கத்தால் மட்டும் இழுத்து தோணியை நிலைசரியவைத்து தண்ணி கோல வைப்பது போலாகும்.

Link to comment
Share on other sites

"வளர வேண்டிய ஒரு குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படாமல் அது தொடர்ந்தும் மாற்றம் இன்றி ஒரேமாதிரியாகவே இருந்தால் அதை நாம் ஒரு குறைபாடாகவே பார்க்கிறோம். அந்த குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம் என மருத்துவ ஆலோசனைகளை நாடுகிறோம். வளர்ச்சி ஏற்படும் போது மாற்றங்கள் உண்டாவதை தவிர்க்க முடியாது.

குழந்தை சிறிது காலத்தில் வளர்ந்து ரீன் ஏஜை அடைகிறது. பின் திருமணம் செய்கிறது. இவை எல்லாம் வளர்ச்சி மாற்றங்களின் படிமுறைகள் ஆகும். ஆனால், குழந்தையில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிகளை விரும்பாது எப்போதும் அது ஒரே மாதிரியாகவே காணப்படவேண்டும் என நினைப்பது குறைபாடு எமக்குள் உள்ளதையே காட்டுகிறது"

இது வெறும் ஊகம். தரமில்லாத புயத்தல். இவ்வளவுக்கு தரமோ பெரும்தன்மையோ இல்லாமல் எழுதுபவர்கள் மற்றவர்களை தரம் அளந்து பரிசளிக்க விழைவது நகைபுக்கிடம்.

பிள்ளை வளர்வதை இங்கே உதாரணமாக காட்ட முயல்வதில் அதன் பின் உள்ள தத்துவம் விளங்கவில்லை என்பதுதான் அர்த்தம்.

  1. குழந்தை வளர்வதை உதாரணம் காட்டி நேர்மையான கருத்துக்களை எழுத தேவையான மனச்சாட்சியைப் பணத்தால் வளர்க்க முடியும் என்பது இங்கே கூறப்படுகிறதாயின் அதை நம்புவது, யாரோ தன்னைத்தான் பணத்திற்கு விற்க முயலும் பாவியாகத்தான் இருக்க முடியும். மற்றயபடி தன் மனத்தில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிட எந்த மேதையாகவும் இருக்க வேண்டியதில்லை. இங்கே பரிசளிக்க தக்க இயல்பொன்றும் பிரசன்னமில்லை.
  2. இல்லை யாழின் வளர்ச்சியை இங்கே குறிப்பிட்டு, யாழ் வளர்வதை நான் எதிர்க்கிறேன் என்ற மறைமுகமான சாடலென்றால் அது பணத்தால் வளர்ந்தும் குணத்தால் வளரமுடியாமல் போய்விட்ட தாழ்ந்த மனபக்குவத்தைத்தான் காட்டுகிறது. யாழ் வளரவும் நிலைக்கவும் பணம் வேண்டுமாயின் சந்தா முதல், விளம்பரம் சேகரிப்போருக்கு உதவுவது வரை எதற்கும் நிபந்தனை அற்ற என் சம்மதம் நானும் எழுதிய திரிகளில் காணப்படுகிறது.
  3. பெற்ற தாய் தகப்பன் பார்த்துகொண்டிருக்க, வீட்டுக்கு வந்து சில நிமிடங்களில் யாழை வளராத பிள்ளையாகப் பெயர்கட்டி, அவசர சிகிச்சைக்கு இட்டு செல்வதாக நினைப்போர், விரும்பாத வளர்ச்சி என்று ஒன்று இருப்பதையும் அதைக் குறைப்பதற்கும் மருத்துவ உதவிகள் வேண்டபடுவதென்பதையும் அறிந்திராமல் இந்த உதாரணத்தை எடுத்தது ஏமாற்றத்தை அளிக்கிறது. வளராத பிள்ளைகளுக்கு மருத்துவத்தில் கொடுக்கும் மருந்து உலகில் எல்ல நாடுகளிலும் மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்கும் மருந்தாக இருக்க அதை இவ்வளவு அவசரமவசரமாக முன் பின் யோசியாமல் யாரவது யாழுக்கு கொடுக்க வேண்டுமென்று மிரண்டு பிடித்து வெற்றியும் கணடால் அது தனிபட்ட வியாபாரங்களுக்கு யாழ் பலியாக்கி போய்விடத்தான்போகிறது.

தங்களின் மனம் என்ற தாழ்வான அளவுகோலால் எல்லோரையும் அளக்கப் பார்ப்பது மனித குலத்திற்கு இதுதான் முதல்த் தடவை அல்ல. குருவுக்கு தட்ஷனை, வாத்தியாருக்கு சம்பழம், புததக ஆசிரியனுக்கு ரோயல்டி. ஆனால் கருத்தென்பது ஒவ்வொரு மனிதனிதும் ஆழ்மனத்திலிருந்து பிறக்கும் அதி உன்னதமாமான, நேர்மையான ஒரு தீர்ப்பு. அதை அவன் தனது சக்காக்களுக்கு கொடுக்கும் போது அவர்களிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்த்தால் அந்த தீர்ப்பை வழங்குவான். கருத்தாளனை கற்பனை படைப்பாளியாக்குவதோ அல்லது பணத்திற்கு அன்றாடம் செய்யும் தொழிலை கடமைக்கு செய்யும் தொழிளாளியுடனோ ஒப்பிடுவது அறியாமை.

"பயம் இங்கு பலவீனத்தையே குறிக்கிறது" இது கோழைத் தனமான, மட்டரக மிரடல் விடும் குணத்தைக் காட்டுகிறது. இப்படி மட்டரக மிரட்டல்களை விட்டு கஸ்பட்டவர்களை நிறைய விலைக்கு வாங்கினால் யாரையும் வாங்கலாம் என்ற மமதை மகிந்தா கூட்டத்திற்கு மாதிரி மற்றவர்களுக்கும் வரத்தான் செய்யும்.

போக்குவரத்தே போட்டியில் வெல்லத்தக்க கருத்துகள் எப்படி இருக்க வேண்டும் என்றுதானே வரையறுத்திருக்கு. அதற்கு அடிமையாகி பிச்சைக்கு கருத்து எழுதுபவர்கள் பணம் பண்ண வேண்டியதுதனே. ஆனால் அது தருமியின் தொழில். வாக்குக்காக அரசியல்வாதியும் பணத்திற்காக முதலாளியும் தங்கள் கருத்துகளை அர்ப்பணம் செய்துதான் வாழக்கை நடத்துகிறார்கள். இதில் எத்தனை வலிமையான வாதாட்டத்தை வைத்தாலும் உண்மையை மாற்ற முடியாது. தெளிந்த மனத்தில் பிறக்கும் கருத்துக்களை அப்படியே திறந்த மனத்துடன் எழுதும் ஒருவன் பணம் தான் இதய சுத்தியான கருத்தை தனக்கு பிறக்க வைத்தது என்று கூறுவானாயின் அவன் பணத்தினால்த்தான் தன் கற்பு வளர்கிறது என்று வாதாடும் விபச்சாரி. இருக்கும் திறமையை பணத்திற்கு விற்க முடியுமே தவிர பணம் எந்த திறமையையும் மனிதனுள் போடுவதில்லை. பணம் கடைசியாக வாங்கத் தக்கதுதான் ஒருவனின் மனச்சாட்சியான கருத்து.

மோகன் அண்ணாவின் இலவச சேவையில் யாழில் எழுதும் எமக்கு பணம் புதிதாக இருக்கலாம். ஆனால் பச்சை புதிதல்ல. யாழில் சில மதிப்புமிக்க அங்கத்தவர்கள் இதுவரை பச்சையை புறம்தள்ளிவிட்டுத்தான் தங்கள் சேவையை செய்கிறார்கள். (நான் சில பெயர்களை மட்டும் போடுவது அழகல்ல என்பதால் போடாது விடுகிறேன்). இவர்கள் பணத்தையும் புறம் தள்ளிவிட்டுத்தான் தங்கள் கடமைகளைத் தொடருவார்கள் என்பது எனது கருத்து.

யாழில் சில மெச்சத்தாக இயல்புகள் உள்ளன.

  1. சிலர் பல நல்ல சேவைகளை செய்து யாழுக்கு வருவோர் மனத்தில் விடுதலைப் போராடத்தை சோரவிடாமல் வளர்க்கிறார்கள்.
  2. சிலர் தொடர்ந்து வெளி இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டுவந்து பகிர்கிறார்கள்.
  3. சிலர் கதை கட்டுரை, கவிதை என்று இலக்கியத்தையும், கலையையும், ஆன்மீகத்தையும் பேணுகிறார்கள்.
  4. யாழ்த்தளம் தமிழீழம், தமிழ் நாடு, புலம் பெயர் நாடுகளில் எல்லாவற்றிலுமிருந்து ஒரு உறவாடல் தளமாகவும் இருக்கிறது.
  5. வேறு நான் கவனிக்காத சிறப்பம்சங்களும் யாழில் இருக்கலாம்.

கருதுகளுக்கு பரிசளித்து மற்றய இனிய இயல்புகளை வளரவிடாமல்த் தடுப்பது பலர் போகும் தோணியை ஒருபக்கத்தால் மட்டும் இழுத்து தோணியை நிலைசரியவைத்து தண்ணி கோல வைப்பது போலாகும்.

மல்லையூரானுக்கு முடிவற்ர பச்சைகள் :) 2 . இதுதான் எங்களைப் போன்ற மனதில் உறுதி கொண்டவர்களின் எண்ண வெளிப்பாடு . தேசியத்தையும் அதுசார்ந்த வெளிப்பாடுகளையும் , காத்திரமான படைப்புகளையும் , கருத்துகளையும் வெளிக்கொண்டு வருபவர்கள் எங்களின் பின்னால் அணிதிரளுங்கள் . மாறானவர்கள் தாராளமாக பணத்திற்காக போக்குவரத்து நெரிசலுடன் பயணிக்கலாம் . மல்லையூரானின் நிலைப்பாடே எனது நிலைப்பாடாகும் . யாழின் நிர்வாகச் செலவுகளுக்காக எம்மால் பரிந்துரை செய்யப்பட்ட விடையங்களில் முடிவுகளை எடுக்கவேண்டியவர் மோகன் அண்ணையே ஒழிய மற்றவர்கள் அல்ல :icon_idea::icon_idea: .

நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும், Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும் நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

பிழை திருத்தம்: மல்லையூரன் - மல்லையூரான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே

சும்மா இருப்பதைவிட ஒன்றைச்செய்து பார்க்கவேண்டும் என்று முயற்சிப்பவர்களை எனக்குப்பிடிக்கும். அந்தவகையிலேயே

இதனையும் நல்ல முயற்ச்சி என்று வரவேற்றேன்.

ஆனால் எனக்குத்தெரியும் இதற்குள் நான் வரமாட்டேன் என்று.

பயங்கரவாதிகள் என்று தமிழனுக்கு முத்திரை குத்தியது போலத்தான் இதுவும்.

நல்ல எழுத்தாளன் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் பிழையானது.

Link to comment
Share on other sites

முற்றுமுழுதாக இந்த கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.

யாழ், வியாபாரம் செய்ய முடிவெடுத்தால் இப்படியான நிகழ்வுகளை தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

முற்றுமுழுதாக இந்த கருத்தை நான் நிராகரிக்கின்றேன்.

யாழ், வியாபாரம் செய்ய முடிவெடுத்தால் இப்படியான நிகழ்வுகளை தொடங்கலாம்.

இதான் சொல்றது, சிந்திச்சு செயற்படணும் நம்ம, போக்குவரத்து எங்கிறது!

கண்ணைமூடிகிட்டே இந்த மாததின் சிறந்த கருத்தாளர் நம்ம அர்ஜுன் அண்ணாவேதான்னு முதலே அறிவிச்சு இருந்தா,,

இப்பிடி ஆவேசமா நிராகரிச்சிருப்பாரா எல்லாதையும்?

இப்போ எவ்ளோ கலவரமாச்சு! :unsure:

Link to comment
Share on other sites

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும்,

Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும்

Mar 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு விசுகு அவர்களையும்,

Apr 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு Arjun அவர்களையும்

நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும்,

Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும்

Mar 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு விசுகு அவர்களையும்,

Apr 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு Arjun அவர்களையும்

நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

நல்லாத்தான் செயற்படுகிறார்கள்

ஒரு பக்கம் சந்தோசமாகத்தான் இருக்கு

நாங்கள் முன்பு செய்த முறைமை இதுதான்

நிர்வாகக்கூட்டங்களில் வந்து கண்டபடி அதிகம் கதைப்பவர்களை நிர்வாகத்தெரிவின்போது ஆமோதித்து பதவியில் இருத்திவிடுவது.

அப்புறம் புரியும் அவருக்கு அதன் சுமையும் வலியும். :D:icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ் நிர்வாகத்தின் அனுமதியுடன், உங்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில்,

Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும், Feb 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு கோமகன் அவர்களையும் நடுவர்களாக கலந்து சிறப்பிக்குமாறு எமது நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கிறோம். விதி முறைகள் ஏற்கனவே மேலே கூறப்பட்டு உள்ளன. சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளில் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்தினை எழுதியதாக கருதும் கருத்தாளரை நீங்கள் தெரிவு செய்து இந்த முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி

பிழை திருத்தம்: மல்லையூரன் - மல்லையூரான்

அண்ணோய்.............. போக்குவரத்து !! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி எண்ட கதையாய் நல்லத்தான் பம்பல் அடிக்கிறியள் . அதோடை என்ரை எட்டாம் வகுப்பு கதை ஒண்டையும் ஞாபகப்படுத்திபோட்டியள் . அதென்னெண்டால் , எங்கடை வகுப்பிலை என்ரை கூட்டாளி ஒருத்தன் இருந்தவன் . ஆள் செரியான நெம்பல் பார்ட்டி கண்டியளோ . நாங்கள் லோக்கல் அடிபிடியளுக்குக் கூட்டாளியைத் தான் இறக்குவம் . ஒரு நாள் அடிபாட்டில அடிவாங்கின பெடிக்குக் காயம் வந்திட்டுது . விசையம் எங்கடை வகுப்பு வாத்திக்குப் போய் வாத்தி எங்களுக்குச் சம்பல் அடி கண்டியளோ . இது நடந்தது ஒரு வெள்ளிக்கிழமை . பேந்து நாங்கள் ரெண்டு நாள் லீவையும் முடிச்சு திங்கள் கிழமை வகுப்புக்கு வர , வகுப்பு வாத்தியார் டாப்புக் கூப்பிடேக்கை சொன்னார் < என்ரை நெம்பல் கூட்டாளியை வகுப்புக்கு மொனிற்ரறாய் போட்டிருக்கிறன் > எண்டு ( நீங்கள் என்னடா எண்டால் நான் எழுதி அரை மணித்தியாலத்துக்குள்ளை...............) . பேந்து என்ரை கூட்டாளி குளப்படியே விடேலை . எங்களுக்கும் ஒரு கை குறைஞ்சு போச்செண்டால் பாருங்கோவன் . அதோடை அண்ணை எனக்கு என்னமொரு பாட்டும் ஞாபகம் வந்து துலையுது , கேளுங்கோ < கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா................ :lol: :lol: :icon_idea: :icon_idea: > .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.