Jump to content

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்


sathiri

Recommended Posts

சாத்திரியின் பதிலுக்கு நன்றி.

முதல் தரம் வாசிக்கையில் கதையின் உள்ளீட்டம் மனதை குத்தியதால், சாத்திரியாரின் எழுத்து வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டிருப்பதை கவனிக்கவில்லை.

நாரதரின் கருத்துத்தான் எனதும். தோல்விக்கான காரணிகள் தெரிந்தால்தான் எதிர்காலத்திலேயாவது அவற்றைத் தவிர்க்கலாம்.

ஆபிரிக்க நாடொன்றிலிருந்து சிறிலங்காவிற்கான ஆயுதக் கப்பல் ஒன்றை புலிகள் கடத்திச் சென்றதிலிருந்து (1998?) , இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் புலிகளுக்கான கடல்வழி ஆயுத வழங்கலை தடுக்க வேண்டியதன அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

ஆயுத வழங்களில் செய்த நெளிவு சுளிவுகளை சர்வதேச அரசியலிலும் செய்யாதது தோல்விக்கான காரணங்களில் ஒன்று என நினைக்கிறேன்.

சாத்திரி குசும்பு தாங்க முடியல...கழுத்தில் கட்டுவது பட்டி....மாத்திவிடுங்கள்.

தமிழில் புதிய முயற்சி, நன்றாக இருந்தது. விட்டுவிடுங்களேன். :lol:

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து உங்கள் வழமையான கதை சொல்லும் பாணியிலிருந்து ரொம்ப விலகி அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்.உரு படம் பாத்த மாதிரி இருந்திச்சு்ஆனால் முடிவின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுசா விடுபடவில்லை.பி.கு -உங்கள் நகைச்சுவை எழுத்தையும் தொடரவும். :)

Link to comment
Share on other sites

சாத்ஸ் அண்ணோய்! கதை சூப்பர். :) 8 இன்னும் கொஞ்சம் ஆழமாப் போயிருந்தால்.... பதின்மக் காலத்து "ஒளித்துவைத்த புத்தகக் கதைகளும்" ஞாபகத்துக்கு வந்திருக்கும். :wub::lol: பரவாயில்லை, அளவோடு நிப்பாட்டிட்டிங்கள். :D

அதுக்காகச் சொல்லவில்லை.

உண்மையிலும் இந்தக் கதை மிகவும் அருமை. அதைவிட முற்றிலும் (98%) உண்மைத்தன்மை உடையதென பல வகையிலும் ஈழமக்கள் அனைவருக்கும் தெரியும்.

அண்ணை மறைக்காமல் சொல்லுங்கோ...... அந்த "ரிசி" என்பவர் யார்? :lol:

சூப்பர் : மிக அருமை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை மறைக்காமல் சொல்லுங்கோ...... அந்த "ரிசி" என்பவர் யார்?

அது றிசி.. அதை திருப்பிப் போடுங்கோ..

Link to comment
Share on other sites

சாத் அதையும் எழுதவும், நடந்தவை பற்றி அறிய ஆவல். இந்தப் பையன் நாம் சொல்லி எழுதுவானா :rolleyes:

நண்பர் ஒருவரும் தொடர்பு கொண்டு இந்த கதையை முழுதுமாக விபரங்களோடு நாவலாக எழுதும்படி கேட்டிருந்தார். அந்தளவு நேரம் எனக்கு கிடைப்பது கஸ்ரம் பாக்கலாம்

சாத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க

நான் இக்கதையை வாசிக்கவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

ஏனெனில் நானொரு விசுவாசி.

நன்றி.

அச்சாப்பிள்ளை அப்படியே கண்ணைமூடிக்கொண்டே இருக்கவேணும் ^_^

Link to comment
Share on other sites

சாத்திரி பதிலுக்கு நன்றி,

அளப்பரிய தியாகங்கள், சாதனைகள் எல்லாம் செய்தவர்கள் சில்லறைத் தனமாக அழிக்கப்பட்டத்தை நம்ப முடியாமல் இருக்கிறது.

இயக்கம் அழிக்கப்பட்டதற்க்கு பல காரணக்கள் கூறப்பட்டாலும், சர்வதேச வழங்கல் ஊடுருவப்பட்டு அழிக்கப் பட்டதே பிரதானமான காரணி.இதன் பின்னாலையே ஒரு சர்வதேசச் சதி இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு வருக்குத் தெரிந்ததை எழுதுவதன் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும்.

முக்கியமாக அமெரிக்க உளவு அமைப்பும் ரோவும் இதில் முக்கிய பங்காற்றி உள்ளன.இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தற்போதும் எம் மத்தியில் உலாவலாம் அரசியல் செய்யலாம்.இவர்களை அடையாளம் காண எங்களுக்கு உண்மையில் என்ன நடந்த்து என்பது தெரிய வேண்டும்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பை உடைப்பதில் இந்தியா இறுதியாகவே பங்கெடுத்திருந்தது. ஆனால் பல வருடங்களாகவே அமெரிக்காவும் .கனடாவும் இதற்கான முயற்சியில் இறங்கியிருந்தன.

ஜரோப்பவும் அதற்கு உதவியது.இந்தியா விடம் இதுபற்றிய நீண்டகால தயாரிப்பு எதுவும் இருந்திருக்கவில்லை. அது இலங்கையரசை பலப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது

அதற்கு புலிகள் 2001 ல் கொண்டுவந்த மாற்றங்களும் வசதியாய் போய்விட்டது. புதியவர்களின் அனுபவமின்மையை அவர்கள் தங்களிற்கான சாதமாக பயன்படுத்திவிட்டனர்.

Link to comment
Share on other sites

நேற்று இரவு வாசித்தேன் .உண்மையில் ஜேம்ஸ் பொன்ட் படம் பார்ப்பது போலிருந்தது .அவர்தான் போகுமிடமெல்லாம் ஒவ்வொரு ஆளை மடக்கிவிடுவார் .

இருப்பினும் இது எங்கள் போராட்டம் சார்ந்தது என்று பார்க்கையில் விரக்திதான் மிஞ்சுகின்றது .

ரோகனும் ,ரிசியும் யார் ?

ஜேம்ஸ்பொண்ட் படங்களைவிட திரில்லான விடயங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள். உதாரணம் இலங்கையரசு வாங்கிய ஆயுதத்தை புலிகளிடம் கொண்டுசென்று சேர்த்தது. அதுபற்றி நேரம் கிடைக்கும் போது ஒரு பதிவு; போடுகிறேன்.

றோகனும் றிசியும் நல்ல நண்பர்கள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றே வாசிக்க நினைத்தேன் முடியவில்லை.

கதை முடியும் வரை விடாமல் வாசிக்க வைத்தது.

நல்லதொரு எழுத்தாக்கம். நிச்சயமாக நாவலாக வெளியிட்டால்

நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

கஞ்சாவைப்பற்றி எழுதாவிட்டாலும் விறுவிறுப்புக் குறைந்திருக்காது சாத்திரி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சம்பவங்கள் கதையை விட, திரை படத்தினை விட திகிலாக இருக்கும் ஆனால் அதை சிறிதும் குன்றாமல் எழுத்து வடிவில் கொண்டுவருவதுதான் மிகச்சாமர்த்தியமாக விருக்கும் அது எல்லாருக்கும் கை வருவதில்லை அரிதாக சிலருக்கு கை வந்து விடுகிறது. பொறாமையாக இருக்கிறது எப்படி இப்படி எல்லாம் எழுதுகின்றார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழர்களைப் பற்றிப் பெருமை பேசிப் புளித்துப் போன தமிழர்களுக்கு புதியபாணியில் உண்மைகளை எழுதுவதும் பழங்கதைகள் பேசிப் பெருமூச்சுவிட உதவும்தான்.

விசுகு அண்ணா போன்றவர்களின் அளவுக்கு மிஞ்சிய விசுவாசம் பற்றியும் ஒரு உண்மைக் கதை எழுதினால் நல்லது!

Link to comment
Share on other sites

இம்முறை சாத்திரி கதையை அசத்தீட்டீங்கள்.

இந்தக்கதையில் வாழ்ந்த றோகன் போன்ற பலரது வரலாறுகள் எழுதப்படாமல் மௌனமாக மௌனிக்கப்பட்டுவிட்டது. தங்களை ஒறுத்து வெறுத்து வாழ்ந்த பல வரலாறுகள் இன்று !!!!!!!!!!!!!!!!

மீண்டும் வருவேனென்றும் ஒரு நாள் சந்திப்போமென்றும் போன அந்தத்தோழனுக்காக காலம் தாழ்த்திய கண்ணீர் வணக்கங்கள்.

அது றிசி.. அதை திருப்பிப் போடுங்கோ..

காவடி கெட்டிக்காரன்தான். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

அருமையான உரை நடையில் எழுதியிருக்கிறீர்கள்.....

கள உறுப்பினர் சயந்தன் அண்ணா ''ஆறாவடு'' என்ற நாவலை நாவலை வெளியிட்டிருக்கிறார்....... அதே பாணியில் நீங்களும் நாவலொன்றை எழுதலாமே..... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க

நான் இக்கதையை வாசிக்கவில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

ஏனெனில் நானொரு விசுவாசி.

நன்றி.

ஏன் விசுகண்ணா நீங்கள் விரதமா ?

Link to comment
Share on other sites

சூப்பர் சாத்திரி ...எனக்கு இந்த கதையின் உள்ளடக்கத்தில் எனக்கு அக்கறையும் இல்லை ..ஆர்வமும் இல்லை ஆனால் .இந்த கதை கொண்டு போன விதம் நன்றாக இருக்கிறது..உங்களையும் உந்த சர்வதேச தர எழுத்தாளர் போட்டியில் ஈடுபட வைத்து காப்டன் பதவி தரப்போறாங்கள் ,,பார்த்து சாத்திரியார் :lol:

நாகேஸ் உந்த பதவியளை யாருமே இப்ப கணக்கிலை எடுக்கிறேல்லை. அப்பிடி பாத்தால் நான் எப்பவே லெப்.கேணல் :lol: :lol: கருத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

சாத்திரி, அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

நிச்சயமாக நீங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒரு நாவல் எழுதவேண்டும்.

Link to comment
Share on other sites

சாத்திரி, அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

நிச்சயமாக நீங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கி ஒரு நாவல் எழுதவேண்டும்.

விளங்கினதோ சாத்திரி உதைத்தான் வருசககலக்கா சொல்றம் நாவலாக எழுதுங்கோண்டு கேக்கிறியளில்லை. ஒரு நாவலுக்கான வேலையை துவங்குங்கோ. பலருக்கு தெரியாத வரலாறு எழுதப்படாம் இருக்கிறது. பிள்ளையார் சுழியை போடுங்கோ.

Link to comment
Share on other sites

நாவலாக எழுதுவதே சிறந்தது.அத்தோடு உண்மைகளை உண்மைகளாக எழுதவும்.

நேரம் எடுத்து ஆறுதலாக எழுதலாம் சயந்த்தன் எழுதின மாதிரி.வரும் காலத்திற்க்கு இவை அவசியம் ஆனது.

நாங்கள் எழுதாவிட்டால் பலர் புனைவுகளை வரலாறாக எழுதுவார்கள்.வருங்க்காலச் சந்த்ததி உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு உண்மை தெரிந்த்தால் தான் நண்பர்களையும் எத்ரிகளையும் அறிவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமாக சேர்ந்து உசுப்பேற்றி சாஸ்திரியை நடு றோட்டில நிறுத்திற பிளான் போல :lol:

Link to comment
Share on other sites

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை வாசிக்க நெஞ்சு கனக்கிறது.விசுகு மாதிரி வாசிக்காமலே விட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் சாத்திரி எழுதுவதற்கும்

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சாத்திர் எழுதுவதற்கும்

நிறையவே வேறுபாடு.

Link to comment
Share on other sites

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

Link to comment
Share on other sites

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

ஏற்கனவே நிறைய பொழிப்புரைகள் இணையங்களில் எழுதப்பட்டுள்ளன. புலிகளில் இருக்கும் ஆத்திரத்தை இப்படியும் சிலர் காட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடி நீங்க விட்டிட்டு இருக்க கண்டவனெல்லாம் இயக்க வரலாற்றுக்குள் புனைவைக் கலந்து கதையெழுதி.. பெரிய எழுத்தாளராகிறாங்கள்.......

சிங்கங்கள் வாய்திறக்கும் வரைக்கும் மட்டுமே வேட்டைக்காரர்களது புனைவுகள் வரலாறாகக் கொள்ளப்படுமாம்..

Link to comment
Share on other sites

இந்த கதைக்கு அதிகமானவர்கள் கருத்திட்டிருப்பதால் கவிதை .வசி.அர்ஜீன்.காவடி.சுபேஸ் அலை .ரதி. வாத்தியார் மற்றும் அனைவரிற்கும் நன்றிகள். பெரும்பாலும் கதைகளிற்கு கருத்து தெரிவிக்காத சுகன் மற்றும் இன்னுமொருவன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள் நன்றிகள். எமது போராட்டத்தின் தோல்வியின் பின்னர் நாவல் எழுதும் ஆசை எனக்கு இருந்ததில்லை

சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களைக்கூட விரக்தியில் அழித்துவிட்டிருந்தேன் நினைவில் மட்டும் நிற்பவைகளை வைத்து முயற்சிக்கிறேன்.

எழுதக் கூடியவர் என்பதால் தெரிந்தவைகளை எழுதுவது நல்லது.

விஷயம் தெரிந்த பலரும் நடந்த சம்பவங்களை மறந்து விட்டார்கள். ஞாபகமுள்ள சிலரிற்கும் எழுதும் திறமையில்லை.

பிறகு, புனைவு போராட்டக் கதைகள் எழுதுபவர்கள் மேல் ஆத்திரப் பட்டு பிரயோசனமில்லை. எதிர்காலத்தில் அவைதான் வரலாறாக மாறும்.

Link to comment
Share on other sites

சிங்கங்கள் வாய்திறக்கும் வரைக்கும் மட்டுமே வேட்டைக்காரர்களது புனைவுகள் வரலாறாகக் கொள்ளப்படுமாம்..

கடைசி வரை வாயே திறக்கமல் விட்டால்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.