Jump to content

சிறிலங்காவின் சுதந்திர நாள்


ukraj

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் போருக்கான ஒத்திகையை நடத்தியுள்ளன.

சுதந்திர நாள் உரையாற்றிய பின்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சஇ இராணுவத்தினரது அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இது வழமையான ஒரு நடவடிக்கையாக இருப்பினும் இராணுவ அணிவகுப்பு தொடர்பாக சிறிலங்காவின் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்த வர்ணணையாளர்இ "நிலத்திலும் கடலிலும் வானிலும் நாங்கள் பலமானவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது எங்கள் இராணுவ அணிவகுப்பு" என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா விமானப் படையின் எம்.ஐ.-24 ரக விமானமும் தாக்குதல் உலங்கு வானூர்திகளும் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் ஜெட் விமானங்களும் அணிவகுத்தன.

இவை அனைத்துமே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்பாக தமிழர்கள் மீது பாரிய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 2000 ஆம் ஆண்டு யாழ். சமரில் பயன்படுத்தப்பட்ட செக் தயாரிப்பு மல்ரி பரல் ரொக்கெட் லோஞ்சர்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

சிறிலங்கா சுதந்திர நாளையொட்டி 25 குண்டுகளுடன் மரியாதை செலுத்தப்பட்ட பின்பு அந்நாட்டுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய கடற்படை அதிகாரி ஜி.கே. தசாநாயக்கஇ "நாங்கள் இப்போது முழுப் பலத்துடன் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

காலி முகத்திடலில் நடைபெற்ற சுதந்திர நாளில் உரையாற்றிய மகிந்த் ராஜபக்சஇ நாம் எந்த ஒரு தீர்வையும் பலவந்தமாக திணிக்கமாட்டோம். எமது அமைதி முயற்சிகள் வெளிப்படையாக இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு தரப்பிலிருந்தும் விடுக்கப்படுகிற அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

இந்த ஆவேச முழக்கத்துக்கு நேர் எதிராகஇ இன்னும் சில நாள்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்தப் போகிறோம் என்றும் மகிந்த தெரிவித்தார்.

நன்றி - புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
200602040051fh.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
200602040062ox.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
200602040049re.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

200602040074vs.jpg

200602040089op.jpg

200602040097pv.jpg

200602040100wi.jpg

200602040115au.jpg

200602040125zd.jpg

200602040133yy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா தூயவா மற்ற செய்திகள் எல்லாம் உமக்கு அவசியமானதோ?

சும்மா ஏன் ...... புண்ணாக்குகிறீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நான் சொல்லவில்லையே!!

இந்தச் செய்தி தமிழ்மக்களுக்கு தேவையில்லாத ஒன்று என்ற அர்த்ததில் மட்டும் தான் சொல்லுகின்றேன். எம்மை ஆக்கிரமிக்கும் நாட்டின் சுதந்திர தினம் எப்படி இருந்தால் எமக்கென்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.