Jump to content

ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்


Recommended Posts

ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தர இடம்பெற இந்தியாவிற்கு தார்மிக உரிமை உள்ளது பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லி,

""ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் போன்றவற்றால் உலக நாடுகள் இந்தியாவை அங்கீகரிப்பது அதிகரித்து வருகிறது. எனினும், நிரந்தர இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன'' என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார்.

நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் அளித்த பதில்கள் வருமாறு:

வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்புத் துறைகளில் இந்த அரசு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நட்புணர்வுடன் அணுகச் செய்வதற்கு எங்கள் அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளது.

தேசிய நலனில் அக்கறையுடன் சிறப்பான வெளியுறவுக் கொள்கையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பாகிஸ்தானுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.

உலகில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசிய நாடுகள், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடன் உறவு மேம்பட்டுள்ளது. சர்வதேச வளர்ச்சி நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பும் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு குழுவின் விரிவாக்கத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற இந்தியாவுக்கு தார்மிக உரிமை உள்ளது. சர்வதேச கடமை, பொறுப்பு, திறன் மற்றும் செயல்பாடுகளால் நம் நாட்டை உலக நாடுகள் பல அங்கீகரித்துள்ளன. எனினும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதில் சில தடைகள் உள்ளன. சர்வதேச அணுசக்தி விவகாரத்தில் மத்திய அரசு பணிந்து போவதாக கூற முடியாது. இதில் நாங்கள் தெளிவான நோக்கங்களை கொண்டுள்ளோம். இதில் மிகுந்த கவனத்துடன் குறைந்தபட்ச எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆக்கபூர்வ அணுசக்தி தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அணுசக்தி பாதுகாப்பு மேலும் உறுதிப்படும்.

ஈரான் விவகாரத்தை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாகவே இதற்கு நாம் தீர்வு காண வேண்டும் என நான் நம்புகிறேன். ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. எனவே, தனது சர்வதேச கடமையை ஈரான் முழுவதுமாக நிறைவேற்றியாக வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/VIRA/html/int_vie...iew.asp?key=170

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் கோரிக்கையை அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் கவனமாக பரிசீலனை செய்யும் என்று நம்புவோம்.

பரிசீலனையில் எதுவித தவறும் இடம்பெறாது என நம்புவோம்.

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.