Jump to content

பாராளுமன்றத்தில் கண்ணாம்பூச்சி விளையாட்டு


Recommended Posts

குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை

பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது.

குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்க முற்பட்ட போது, கிஷோர், சிவனேசன் ஆகியோர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர்.

ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயும் இன்னும் சிலரும் இணைந்து தமிழ்க் கூட்டமைப்பினரை வசைபாடினர்.

நேருக்கு நேர் மோத அழைத்த அளுத்கமகே

இந்நிலையில் டக்ளஸுக்கு ஆதரவாக களத்திலிறங்கிய பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி ` வாய்ப்பேச்சை விட்டுவிட்டு துணிவிருந்தால் டக்ளஸுடன் நேருக்கு நேர் சபைக்கு நடுவே மோத வருமாறு அழைத்தார். அதையடுத்து சிவாஜிலிங்கம் சவாலையேற்று சபைக்கு நடுவேயிறங்க

வினோநோகராதாலிங்கம் எம்.பி. தடுத்துவிட்டார்.

இக் களேபரத்தின் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட ரவிராஜ், கஜேந்திரன் ஆகியோர் அமைச்சர் டக்ளஸை திட்டித் தீர்த்தனர். டக்ளஸும் சளைக்காது ஏட்டிக்குப் போட்டியாக வசைபாடினார். இதனால் பாராளுமன்றம் சிறிது நேரம் அமளிதுமளிப்பட்டது. அவ்வேளை சபைக்குள் நின்ற படையினர் மற்றும் அதிகாரிகள் ஆச்சரியமடைந்த நிலையில் காணப்பட்டனர்.

கட்டித் தழுவிய டக்ளஸ் - சிவாஜி

டக்ளஸுடன் மோதவருமாறு பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்க் கூட்டமைப்பினரை மீண்டும் அழைக்க சிவாஜிலிங்கம் சபைக்கு நடுவேயிறங்க, டக்ளஸும் சபைக்கு நடுவே இறங்கினார். இருவரும் மோதிக் கொள்ளப் போகிறார்கள் என்ற அதிர்ச்சியில் பலர் பார்த்திருக்க, இருவருக்கும் நடுவே பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நிற்க ஒருவரும் எதிர்பாராத வகையில் சிவாஜியும் டக்ளஸும் ஒருவரையொருவர் கட்டித் தழுவியவாறு சிரித்தனர்.

சிவாஜியை இழுத்து சென்ற வினோ

ஆயினும், உடனடியாக தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.யான வினோநோகராதலிங்கம் ஓடிவந்து சிவாஜிலிங்கத்தை இழுத்துச் சென்றார். இதன் பின்னர் அவர்களுக்கிடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன் பின்னர் டக்ளஸுக்கும் அரசுக்கும் எதிராக கோஷமெழுப்பியவாறு தமிழ்க் கூட்டமைப்பினர் சபையை விட்டு வெளியேறிச் சென்றனர்.

நன்றி தினகுரல்.... :idea:

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களுக்கு டக்கிள்சின் (எனது) ஒரு வேண்டுக்கோள், பாராளுமன்றத்தில் சிங்கள பேரினவாதிகளோடு சண்டை செய்யுங்கள், மோதுங்கள், அதைவிட்டுவிட்டு என்னோடு மோதாதீர்கள், நாயின் வேலை தனது எஜமானார் போடு எலும்புக்கு நன்றி உணர்வோடு வாலை ஆட்டுவதுதான், சோ அதை நான் நன்றாக செய்துகொண்டு இருக்கிறேன், அது எனது கடமையும் கூட,, ஆனால் நீங்கள் ஏகோபித்த தமிழர்களின் ஆதரவோடு பாராளுமன்றம் வந்தவர்கள், ஆகவே ஒரு பயனுள்ள வகையில் பாராளுமன்றத்தில் உங்களின் நேரங்களை செலவிடுங்கள், அதைவிட்டுவிட்டு டக்கிளஸோடு மோதாதீர்கள்,,

எனக்கோ எனது கட்சிக்கோ எந்தவித குறிக்கோளும் இல்லை,, ஆகவே நான் சொல்வதை கவனத்தில் எடுக்காதீர்கள், எனது பேச்சை, ஆப்பு இழுத்தவர், சித்தசுவாதினமற்ற சித்தார்த்தன் போன்றவர்களின் காமெடிப்பேச்சுக்களை தமிழ்மக்கள் கணக்கில் எடுக்காதபொழுது தமிழ்மக்களின் பிரதி நிதிகளாக பாராளுமன்றம் வந்த நீங்கள் அங்கே எங்களின் பேச்சை சிரியசாக எடுத்து ஆத்திரப்பட்டு உணர்ச்சிவசப்படுவது எந்த விதத்தில் நியாயம்? :roll:

சிங்களகுள்ள நரிகள் ஏத்திவிட்டு கூத்துபார்ப்பது எதற்காகத்தெரியுமா? என்னோடு மோதவிட்டுவிட்டு அந்த சாக்கில் உங்களை போட்டுத்தள்ளுவதுதான், அதை செய்துவிட்டு உங்களின் தலைமைமீது பழியை போடுவதற்கு,,, ஆகவே புரிந்துகொள்வீர்கள்,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

என்ன அங்கிள் உங்களுக்கும் மப்பா இல்லை நகைச்சுவை பகுதியில போட வேண்டியதை இங்க மாத்தி போடடுட்டீங்களா :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

மகிந்தானந்த அளுத்கமகே பிறகு கூறினார்

சா நல்லதொரு குத்துசண்டை போட்டியை காசு குடுக்காம் பாப்பம் எண்டு இருந்தன் கடைசிநேரத்திலை கவுத்துப் போட்டாங்களே..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தானந்த அளுத்கமகே பிறகு கூறினார்

சா நல்லதொரு குத்துசண்டை போட்டியை காசு குடுக்காம் பாப்பம் எண்டு இருந்தன் கடைசிநேரத்திலை கவுத்துப் போட்டாங்களே..............

ஏன் முகத்தார்!!

சபாநாயகர் தெரிவில் நடந்ததை அவர் பார்க்கவில்லையோ? :wink:

Link to comment
Share on other sites

மோதவிட்டு கழுத்தறுக்கப்பாத்தவைக்கு ஏமாத்தமா இருக்கும். பாலிமண்டுல கதிரையிருக்கிற வரை டக்களஸ் தமிழனாக இருக்கமாட்டார். அவர் பதவி கொடுக்கிறதுகளை வி;ட்டு எங்களுக்குப் பரிஞ்சு பேசினா கிடைக்கிற பாதுகாப்பு அம்போ தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.