Jump to content

அவுஸ்திரேலியர்களின் இனவெறி (Racism)


Recommended Posts

_41271316_cricket_whites_203.jpg

தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக சிறீலங்கா வீரர்களும் குற்றம்சாட்டி இருக்கின்றனர்..!

தகவல்- பிபிசி.கொம்

( http://news.bbc.co.uk/sport1/hi/cricket/4661270.stm )

Link to comment
Share on other sites

இதற்கு முன்னரும் ஒருமுறை இலங்கையணி அவுஸ்ரேலியா சென்றிருந்த சமயம் விமானநிலையத்திலயே திவீர சோதனைகள் நடந்ததாக வீரர்கள் பேட்டி குடுத்திருந்தார்கள் ஒரு நாட்டுக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களை வி.ஜ.பி முறையில் கௌரவிக்க அந்த நாட்டு அரசாங்கமே தவறும் போது மக்கள் எம்மாத்திரம் .......... இதுக்கெல்லாம் சேர்த்து மச்சிலை தன்னும் அடிச்சு தூள் பண்ணிட்டு வாங்கோடா எண்டால் தலைகீழா எல்லா விளையாடுறாங்கள் பிறகென்ன செய்யிறது.........

Link to comment
Share on other sites

இங்கிலாந்து கால் பந்து ரசிகர்களுக்கு இருக்கிற வருத்தம் அவுஸ்ரேலியன் கிரிக்கட் ரசிகர்களுக்கு இருக்கு.. :evil: :evil:

Link to comment
Share on other sites

இங்கிலாந்து கால் பந்து ரசிகர்களுக்கு இருக்கிற வருத்தம் அவுஸ்ரேலியன் கிரிக்கட் ரசிகர்களுக்கு இருக்கு.. :evil:  :evil:

இங்கிலாந்து கால்ப்பந்து ரசிகர்களை அடக்க அரசாங்கம் முயற்ச்சிசெய்யுது.... பத்திரிகைகள் அப்படியானவர்களைக் கீழ்த்தரமான குலிகன்ஸ்" எண்ற வர்ணிக்குது

....... ஆனால் அஸ்ரேலிய அரசு அப்படி அல்ல... பத்திரிகைகளும் அப்படி செய்வதில்லை...... காரணம் என்ன எண்று தெரிவதில்லை....

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியாவில் விளையாட விரும்பவில்லை

ரசிகர்களின் தொல்லையால் முரளி விரக்திஅவுஸ்திரேலியாவில் இனிமேல் விளையாட விரும்பவில்லையென இலங்கையின் முரளிதரன் கூறியுள்ளார்.

sp26ct.jpg

அவுஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா பங்கு பெறும் முத்தரப்புத் தொடர் அவுஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடரில் ரசிகர்கள் முரளிதரனை நோக்கி `நோபோல்' என பல போட்டிகளில் கூச்சலிட்டனர். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனது பந்து வீச்சில் எந்தத் தவறும் இல்லை என சர்வதேச கிரிக்கெட் சபை முன்னால் நான் நிரூபித்துள்ளேன். விதிகளுக்கு புறம்பாக நான் பந்து வீசவில்லை. எனது பந்து வீச்சு, போட்டிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். ஒவ்வொரு போட்டியிலும் நான் பந்து வீசும் போது ரசிகர்கள் `நோபோல்' என கூச்சலிடுகின்றனர். நான் பவுண்டரியில் களத்தடுப்பு செய்யும்போதும் அதேபோல் கோஷங்கள் எழுப்புகின்றனர்.

மற்ற பந்து வீச்சாளர்கள் போல் தான் நானும். இனி வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய விரும்பவில்லை. ஆனால், இது தீர்க்கமான முடிவு அல்ல என்றும் முரளிதரன் தெரிவித்தார். இதேநேரம், முரளிதரனின் பந்து வீச்சில் எதுவித தவறுமில்லையென அவுஸ்திரேலிய நிபுணர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். முரளியின் பந்து வீச்சுகள் யாவும், குறிப்பிட்ட 15பாகைக்குள்ளேயே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

thinakural.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.