Jump to content

லண்டனுக்கு வந்த திமிங்கிலம்


Mathan

Recommended Posts

லண்டனுக்கு வந்த திமிங்கிலம்

தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது.

திமிங்கிலத்தின் பயணத்தின் ஒளிப்பதிவை இந்த இணைப்பில் காணலாம்.

நன்றி - http://news.bbc.co.uk/1/hi/england/london/4633878.stm

Link to comment
Share on other sites

சின்ன திமிங்கலமோ? அது தான் பயம் இல்லமால் பக்கத்தில் நின்று பார்க்கின்றார்கள்.

நன்றி இனைப்புக்கு மதன்

Link to comment
Share on other sites

41238716whaleap4163cr.jpg

தேம்ஸ் நதியூடாக லண்டன் மத்திய பிரதேசத்துக்கு வந்த திமிங்கிலம் அங்கிருந்த வெற்று படகொன்றில் மோதி இலேசான இரத்த கசிவுக்கு உள்ளாகியிருப்பதை படத்தில் காணலாம்.

41238124gallerybridge1gy.jpg

திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக தேம்ஸ் நதி பாலமொன்றில் கூடியிருக்கும் மக்கள். படம் - Rob Fenwick

41238126galleryparliament1tu.jpg

பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே காணப்படும் திமிங்கிலம்

_41238128_gallery_police.jpg

இந்த திமிங்கிலத்தை போலிஸ் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் அமைப்பை சேர்ந்த படகுகள் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

படங்கள் நன்றி - பிபிசி இணையம்

Link to comment
Share on other sites

வடிவாப் பாருங்கோப்பா அது திமிங்கலமோ அல்லது சின்ன நீர்ழூள்கி கப்பலோ தெரியாது தாடிக்காரன் திரும்பவும் அல்பம் விட்டிருக்கிறதாக ரிவியள்ளபேச்சு!!!

Link to comment
Share on other sites

சின்ன திமிங்கலமோ? அது தான் பயம் இல்லமால் பக்கத்தில் நின்று பார்க்கின்றார்கள்.

திமிங்கில வகைகளில் northern bottle-nosed whale என்று அழைக்கப்படும் இது சிறியது தான். இது குறித்த மேலதிக தகவல்களையும் மற்றய திமிங்கில வகைகளுடனான ஒப்பீட்டையும் இந்த படத்தில் காணலாம்.

41238958bottlenosewhale4164aa.gif

நன்றி - பிபிசி இணையம்

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

நன்றி மதன் உங்கள் தகவல்களுக்கு

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

நன்றி மதன் உங்கள் தகவல்களுக்கு

நானும் கேள்விப்பட்டிருக்கிறன் கப்பலோ படகோ தெரியல :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நேற்று இரவு ஒரு வேலை நிமிர்த்தமாக சென்றல் லண்டன் சென்றிருந்தேன். அத்திமிங்கிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதென்ன வல்லிபுரக்கோயில் தீத்தக்கரை மாதிரி சனக் கூட்டம், தேம்ஸ்ஸைச் சுத்தி!!! யாருக்குத் தெரியும், உத்த திமிங்ஸ்ஸும் ஈழ்பதீஸாரை கும்பிடு போட வந்தவரோ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம் ஒரு கப்பலை ஆட்களுடன் விழுங்கியதாக அறிந்த ஞாபகம். விபரங்கள் ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

உதிலென்ன ஆச்சரியம் :!: இங்கு முழுக் கோயிலேயே உண்டியலான் விழுங்கும்போது :x :x :evil: :evil: திமிங்கிலம் கப்பலை விழுங்குவதற்கென்ன :lol::lol:

Link to comment
Share on other sites

லண்டனுக்கு வந்ததிமிங்களத்தை கையேந்திக்கும்பிடும் ஜெயதேவன்

039386089tr.jpg

039396797zy.jpg

039402012md.jpg

Link to comment
Share on other sites

அதென்ன வல்லிபுரக்கோயில் தீத்தக்கரை மாதிரி சனக் கூட்டம், தேம்ஸ்ஸைச் சுத்தி!!! யாருக்குத் தெரியும், உத்த திமிங்ஸ்ஸும் ஈழ்பதீஸாரை கும்பிடு போட வந்தவரோ???????

பாருங்கப்பா சந்தில சிந்து பாடுறதை.......பாத்து உண்டியலை விளுங்கிப் போடும்..... மறக்காம உண்டியலிலயும் காசு போடச் சொல்லுங்கோ... :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா.......

பார்த்தால் திமிங்ஸை ஈழ்பதீஸ் சிவலிங்கம் போலத்தான் கிடக்குது :lol::lol: ஓம் கரகர கரகர..... :lol::( திரும்ப ஒருக்கால் எல்லோரும் பார்த்திட்டு வந்து உண்டியலையும் நிறையுங்கோ :x :evil:

Link to comment
Share on other sites

41241134thrashgetty1io.jpg

திமிங்கிலத்தை இன்று கைப்பற்றிய மீட்பு பணியாளர்கள்

திமிங்கிலம் ஒரு ஆழ்கடல் வாழ் உயிரினம் இது ஆழம் குறைந்த தேம்ஸ் நதியில் தொடர்ந்து இருந்தால் அது உயிர் பிழைப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. தேம்ஸ் நதியில் தினமும் பயணிக்கும் படகுகளிலும் அதன் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களின் தூண்களிலும் மோதி காயமடைய கூடிய சந்தர்ப்பங்களும் நிறையவே உண்டு. ஏற்கனவே வெற்று படகொன்றில் மோதிய சிறிய அளவிளான இரத்த கசிவுடன் காணப்படும் இந்த திமிங்கிலம் கடலுடன் தொடர்புடைய திசையை நோக்கி பிரயாணம் செய்யாமல் மேன் மேலும் நகரின் உட்பகுதியை நோக்கி சென்று வந்தது. இதனால் தற்போது திமிங்கிலத்தை தேம்ஸ் நதியில் இருந்து மீட்டு மீண்டும் ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகின்றது.

படம் நன்றி - பிபிசி இணையம்

Link to comment
Share on other sites

நானும் கேள்விப்பட்டிருக்கிறன் கப்பலோ படகோ தெரியல :roll: :roll:

இதை ஒரு முறை செய்தியில் நானும் பார்த்தேன் ஆனால் எனக்கும் மேலதிக விபரம் எதுவும் தெரியவில்லை

Link to comment
Share on other sites

திசை தடுமாறி லண்டனுக்குள் உட்பிரவேசித்த திமிங்கிலம் அதனை மீளவும் ஆழ்கடலுக்கு அனுப்பும் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்துவிட்டது.

மேலதிக தகவல்கள் ...

http://news.bbc.co.uk/1/hi/england/london/4635874.stm

Link to comment
Share on other sites

திசை தடுமாறி லண்டனுக்குள் உட்பிரவேசித்த திமிங்கிலம் அதனை மீளவும் ஆழ்கடலுக்கு அனுப்பும் மீட்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்துவிட்டது.

மேலதிக தகவல்கள் ...

http://news.bbc.co.uk/1/hi/england/london/4635874.stm

சொன்னமில்ல கொன்றிடுவார்கள் என்று..! கடவுளும் கைவிட்டிட்டுட்டான்..!

மனிதர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட திமிங்கிலத்துக்காக குருவிகளின் அனுதாபங்கள்..! :roll: :shock: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் அந்த திமிங்கிலக்குட்டி..கழிமுகத்த

Link to comment
Share on other sites

காயம்..ஸ்றெஸ் (stress) போதிய சுவாச வாயு இன்மை.. மாசடைந்த சூழல்...இது போன்ற காரணங்களையே அதன் இறப்புக்கு முதன்மையாகக் கூறலாம்..!

குறித்த திமிங்கலம் மீது தேவையற்ற கலவரத்தை அழுத்ததை பிரயோகித்ததன் மூலமே அதன் இயல்பான செயற்பாடு குழப்பட்டு..அதிகம் காயப்படவும்..அதுக்கு போதிய அளவு சுவாச வாயுவை உள்ளெடுக்க சந்தர்ப்பம் அளிக்கவும் இடமளிக்கப்படவில்லை. திமிங்கிலங்கள் மீன்களைப் போலல்லாது மனிதர்களைப் போல சுவாசப்பை கொண்டு வாயுப்பரிமாற்றம் மூலம் சுவாசச்செயன்முறை செய்பவை. அவை இயல்பாக நீரின் மேல் மட்டத்துக்கு வந்து சுவாச வாயுவை பரிமாறிச் செல்ல வேண்டும்..கலவர சூழலில்..இது போதிய சாத்தியமாக இருந்திருக்காது..!

குறித்த திமிங்கல இனமும் எண்டேஞ்ஜர்..அருகிவரும்.. இனங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்ட இனமாகும்..! :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஊரில மனிதனையே கொல்லுறாங்கள் அதை விட்டுட்டு இதுக்கு கவலைப்பட்டுக் கொண்டு நிக்கிறியள்......

Link to comment
Share on other sites

_41242022_thames_whale_416.gif

தேம்ஸ் நதியூடாக உட்பிரவேசித்த திமிங்கிலம் Greenwich, Tower Bridge, Waterloo Bridge, Westminster Bridge பகுதிகளூடாக சென்று மேன் மேலும் லண்டனின் மத்திய பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. இது ஆழ்கடலுக்கு மீளவும் செல்வதற்கு எதிரான திசை என்பதுடன் நெருக்கமான ஆழம் குறைந்த பகுதி. இந்நிலையில் திமிங்கிலத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அதனை மீளவும் ஆழ்கடல் பகுதிக்கு அனுப்புவதை தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த மீட்பு நடவடிக்கையின் போது திமிங்கிலம் அழுத்ததுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் அது தானாவே இறந்திருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.