Jump to content

இனிய நினைவுகளின் வாசம்.


Recommended Posts

கதையை லிங் கொடுத்திருப்பதால் பலர் படிக்கவில்லை போலிருக்கு. அதனால் அதனை முழுமையாக இங்கே இணைத்து விடுகின்றேன் சாந்தி அக்கா.

இனிதான நினைவுகளின் வாசம்

எழுதியவர்: சாந்தி ரமேஷ் வவுனியன்

அந்தமண்ணைக் கால்கள் மிதித்த போது ஏதோவொரு பரவசம். பிரியத்துக்கினியவரை நெடுநாள்

பிரிந்திருந்து மீண்டும் சந்தித்தாற்போலிருந்தது அந்தநாள். வீதிகள் யாருமற்று

நெடுநாட்கள் வாகனங்கள் ஓடாததன்

அடையாளமாக புற்கள் முளைத்து வீதியின் இருமருங்கும்

கால்வைக்க முடியாது பற்றைகளாயிருந்தது. இத்தனையையும் தாண்டி அந்தப்பிரதேசத்தினுள்

போயாகிற்று.

இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான எங்களது பாடசாலை வளவு அந்த அரக்கர்களின்

பிடியிலிருந்து மீண்டு நாங்கள் போனபோது எங்களுக்கெல்லாம் கல்விதந்த சரஸ்வதி

குடியிருந்த அந்தக்கோவில் இடிபாடுகளின் நடுவே சிதிலமாக்கப்பட்டுக் கிடந்தது. தென்றல்

பட்டசைந்து இ அழகின் இருப்பிடமான அந்த அழகிய குரோட்டன்களெல்லாம் காய்ந்து

சருகாகி....எங்களுக்குக் காப்பரணாயிருந்த அந்தப்பனைகள் வட்டுமட்டும் மிஞ்சி.....ஆறாத

வடுக்கள் தாங்கி பாலையாய்க் கிடந்தது.

அந்தச் சிதைவுகளை நிமிர்த்திச் சுவர்களாக்கி கூரைகள் எழுந்து ஓலைகளால் வேயப்பட்டு

வகுப்புகளான அந்த ஓலைக்கூரையொன்றின் கீழ் எங்கள் வகுப்பு. அதன் எதிர்க்கூரையில்

எங்களிலும் மூத்தவர்களின் வகுப்பொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்பு வந்ததில்

எங்களுக்கு விருப்பமில்லைத்தான். ஏனெனில் எங்களால் சுதந்திரமாகச் சத்தமிட்டுக்

கதைக்கவோ இ கும்மாளமிடவோ முடியாது. எங்களின் சத்தங்களை அடக்க அவர்கள் வந்து

விடுவதால் எங்களது கும்மாளமிடும் அந்த இடைவேளையே இப்போ தடைவேளையாகியிருந்தது.

இப்போதெல்லாம் ஏனோ அவர்களில் யாரையும் பிடிப்பதில்லை. தோழி செல்வாவுடன்

கிடைக்கின்ற மணித்துளிகளையெல்லாம் கதைத்துக் கதைத்தும் அவை காணாது வீதியில் இ வீட்டு

வாசலில் இ வழிபாட்டு இடங்களில் இ குச்சொழுங்கைகளிலெல்லாம் எங்களது ஓயாத கதை ஓயாது

போக.....இப்போ அவர்களின் கண்காணிப்பு அவர்களைக் கருநாகங்களாகவே காட்சிதர

வைக்கிறது. அவர்களி;ன் புன்னகைக்குப் பதிலான எனது புன்னகைகூட இப்போ மறந்து விட்டேன்.

ஏனெங்களோடை இப்ப கதைக்கிறீங்களில்ல....? ம்....கோவமே.....?

ஓமோம் இப்ப உனக்குத் தான் இதாலை பெரிய கவலைபோலை......!

அவனது தோழர்கள் அவனைக் கேலிபண்ணிய போது என் விழிகள் அவர்களைக் கோபித்துக்

கொண்டது.

ஏன் கதைக்கிறீங்களில்ல.....? என்ன கோவம் ?

அந்த அழகிய விழிகளின் மேல் வளைந்திருந்த பிறையின் வடிவான புருவங்கள் உயர்ந்து

வினாவியபோது அவனது நண்பர்கள் மீதும் அவன் மீதுமிருந்த கோபத்தை அவனது வார்த்தைகள்

தூரமாக்கி தள்ளியது. மீண்டும் மீண்டும் அவன் விழிகள் என்மீது விழுந்த ஒவ்வொரு

நொடியிலும் புதிதுபுதிதாய் இனிமைகள் இதயத்தில் விழுந்து புரண்டன. அந்த நினைவுகளெல்லாம்

ஒருசேர நான் அவன் வசமாக நாளெழுதிச்சென்றது அந்த மணித்துளிகள்.

ஏதோ மாற்றங்கள் என்னில்....நான் மாறிப்போனதான உணர்வு....மனப்பரப்பில் என்னை

உரசும் அவனது விழிகள்..... அந்த இனிய அதிர்வுகளில் நனைந்து கிடந்த என் இதயத்துக்குள்

குடிவந்து இனிதான குயிலின் ராகமிசைத்து என்னை அசைத்து....அந்தச்சுகந்தத்தில் என்னைக்

கரைத்து..... என்னுயிரின் அதிர்வெல்லாம் அவனாகி.....

அந்தா உன்ர சரக்கு வருகுது.....

அவனது தோழர்களின் மெல்லிய குரல்களெல்லாம் என் காதுகளிலும் வந்து விழுந்தன.

இப்போது என் பின் ஒருசோடி கண்கள் மொய்ப்பதை என்னால் உணர முடிகிறது. என் வீட்டு

வாசல்தாண்டும் போது மட்டும் அந்த உந்துருளி வேகம் குறைந்து எதையோ உச்சரித்துப்

போகிறது. எனக்காக அந்த உந்துருளி காத்திருக்கிறது. எனது வாசம்தேடி அந்த நிழல் என்னைத்

தொடர்கிறது. மாலைவேளைகளில் என்வாசலில் புதிது புதிதான இசையதிர்வுகள். அந்தக்

கைகளில் என் பெயரின் வாசம். ஓ....அவனும் என்னை நேசிக்கிறான்.

உதட்டின் கீழ் வார்த்தைகள் யாகம் செய்து கொண்டிருந்தன. வார்த்தைகளைக் கோர்த்து

உதடுகள் உச்சரிக்க எத்தனித்தாலும் ஏதோ ஒன்று என் தொண்டைக்குழியில் வந்து நின்று

அனைத்தையும் அழுத்தி வைத்திருக்கும். லட்சோப லட்சம் வார்த்தைகள் தொண்டைக்குளிக்குள்

விழுந்து கிடந்தது. அந்த ஞாபகங்களில் தகிப்பில் மணிக்கணக்கில் மனசு இறக்கை

கட்டிப்பறந்து திரியத்தொடங்கியது.

பார்வைகள் மட்டும் பேசிக்கொள்ள உதடுகள் மௌனவிரதமிருந்தன.....தனிமையில் அந்த

நினைவுகளில் குளித்து எழுவதில்தான் எத்தனை ஆனந்தம். அலட்டல் என்ற பட்டம் மாறி

அவனிப்போ மௌனியாக இ என் மனசைக்கரைத்த கள்வன் அவன்இ என் காதல் தீபம் இ என்

கனவுகளின் இராசகுமாரன் இ அந்த விழிகள் காணாமல் என் விழிகள் அழுதநாளும் இ

அந்தப்புன்னகை படாமல் என் நந்தவனம் கருகிய நாளும் அவன் சுவாசம் நுகராமல் என் சுவாசம்

துடிக்க மறந்த கணங்களும் இ அவன் பெயரை என் உள்ளங்கைகள் பேனா மை தொட்டு வர்ணம்

தீட்டிய நாட்களுமாக அந்த நினைவுகள் என்னில் உயிர் தந்த கணங்கள்.

அந்த விழிகளின் வழியே ஊற்றெடுத்துப் பாயும் ஒவ்வொரு பார்வையும் இதயத்தை ரம்மியம்

மிகுந்த இனிய பொழுதுகளால் வருடிச்செல்லும் இனிய வருடல்கள். அந்தக் கரிய கேசம் கலையும்

ஒவ்வொரு கணமும் என்னையும் அசைத்து அதிர வைக்கும். அந்த உதட்டின் மேல் பூத்திருக்கும்

அந்தக்கரிய பூந்தோப்பில் விழிகள் விழுந்து எழமுன்னம் அந்த இதழ்கள் சிதறும்

பூமழையில் நனைந்துவிடும் என்னிதயம். பின் மீண்டெழுந்து வர நிமிடங்கள் கரைந்து விடும்.

அந்த அழகினைச் சுமந்து போகும் உந்துருளியின் பின் தொடரும் என் விழிகள்.....என்

விழிகள் அவன் வழியில் விழுந்து கிடப்பதை அவன் வரவில் மீண்டும் துளிர்த்து எழுவதை

அவனறியான். ஆனால் அவன் விழிகள் பேசிச்செல்லும் வார்த்தைகள் உயிர் தந்து என்னை

உயிர்ப்பித்து....காதல் என்னைக் கரைத்து அவனில் என்னை அணிந்து விட்டுப்

போய்விட்டது.

அன்று வகுப்பு நண்பி தர்சினியின் பூப்புனித நீராட்டுவிழா. அவளது அழைப்பின் பேரில்

நானும் செல்வாவும் தர்சினி வீட்டுக்குப் போயிருந்தோம். பந்தலில்

வடிவமைக்கப்பட்டிருந்த மணவறையில் தர்சினி நின்றிருந்தாள். எங்களை அவளது பார்வை

வரவேற்று மகிழ்ந்தது.

கமராவுடன் நின்ற அந்த விழியோடு என் விழிகள் மோதிக்கொள்கிறது. கனவா என அதிர்ந்து

மீண்டும் விழிகளை எறிகிறேன் அந்தத்திசை நோக்கி. ஆம் சந்தேகமேயில்லை அது

அவன்தான். என் நந்தவனத்தில் தன் பார்வைப் பூக்களை அள்ளியெறிந்து என் நாட்களை

நந்தவனமாக்கியவன். நீண்ட சில காலங்களாக அமைதியாய்க் கிடந்த என் உதடுகளுக்கு அழகிய

வார்த்தைகளை வரம் தந்து போனது. நானும் அவனும் நிறையப்பேசும் வாய்ப்பை தர்சி

ஏற்படுத்தித் தந்திருந்தாள்.

தர்சியை எப்பிடித் தெரியும் ?

அப்பான்ரை அக்காதான் தர்சியின்ரை அம்மா.

ஓ....தர்சியப்ப உங்களுக்கு மச்சாள்.

ம்....அந்தா அதான் என்ர அம்மா இ இந்தா இந்த வரிசையிலை இருக்கிறவதான் என்ரை

அக்கா.

அப்பா எங்கை ?

அவர் இறந்திட்டார்.

நான்தான் அம்மாக்குச் செல்லப்பிள்ளை இ அக்காவுக்கு ஆசைத்தம்பி.

அவன்தன்னைப்பற்றியும் இ தன்குடும்பத்தையும் பற்றிச் சொன்னான். அவனைப்பற்றி

அறிந்ததில் அலாதி மகிழ்வு.

அது நாங்கள் விடைபெறும் நிமிடங்கள். விழிகளுக்குள் இன்னும் நிறையவிடயங்கள் நிறைந்து

கிடந்ததை அந்தப்பார்வைகள் சொல்லிக்கொண்டிருந்தன.

அடுத்த கிழமையிலையிருந்து பள்ளிக்கூடத்துக்கு நான் வரமாட்டன்.

ஏன் ?

அடுத்தமாதம் சோதினை வருகுது அதாலை வீட்டிலை பெடியள் சேந்து படிக்கப்போறம்.

இந்த விலாசத்துக்குக் கடிதம் போட்டா எனக்குக் கிடைக்கும். எந்த விலாசத்துக்கு நான்

கடிதம் போட வேணுமெண்ட விலாசத்தை நீங்க தந்தா நான் பதில் போடுவன்.

செல்வான்ரை வீட்டுக்குப் பதில் போடுங்கோ எனக்குக் கிடைக்கும்.

விலாசங்களை ஏந்திக்கொண்டு விரல்கள் நர்த்தனமிட்டுக்கொண்டிருக்க விடைபெறும் நேரம்

ஓடிவந்து மணிக்கூட்டில் தங்கியது.

நல்லபடியா சோதினை பாஸ்பண்ண என்ர வாழ்த்துக்கள்.

புன்னகையோடு எனது வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப்போனான். அதுவரை எங்களைக்

கவனித்த செல்வா முணுமுணுக்கத் தொடங்கினாள்.

தர்சியின்ரை அப்பா அவனை தர்சிக்கெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். அவன்ரை

அம்மாவும் அப்பிடித்தான் நினைச்சுக்கொண்டிருக்கிறா. இதுக்கை நீ நிக்கிறது சரியில்லை.

பிறகு பிரிஞ்சு அழுகிறதைவிட இப்பவே தொடர்பை அறுக்கிறது நல்லதெண்டு நினைக்கிறேன்.

செல்வாவின் வார்த்தைகள் ஆயிரம் சாட்டைகள் ஒன்றானதாய் வந்து விழுந்து என்

இதயக்கதவுகளை உடைத்துக் கொண்டு உள்நுளைந்து கொண்டன. செல்வாவின் ஒவ்வொரு

சொற்களிலிருந்தும் புதிதாய் ஒரு புயல் மையங்கொள்ளத் தொடங்கியது.

அமைதியாய் இனிய கனவுகளில் மிதந்த மனம் ஆழ்கடலின் சுழியில் அகப்பட்டுத் துடித்தது.

ஆனால் அவனை இழந்துவிடத்தயாராயில்லாத மனம் வரும் தடைகளையெல்லாம் உடைத்து விடும்

துணிவைப்பெற்றதாய் நிமிர்ந்து கொண்டது. அந்த நிமிர்வோடு அவனிடமிருந்து வந்த

முதல்கடிதத்துக்குப் பதிலெழுதினேன். புதிதான ஒரு உலகின் சஞ்சாரத்தில் நமது கடிதங்கள்

நம்மை நகர்த்திக் கொண்டிருந்தது. நாங்கள் கடிதங்களில் இ நமது கையெழுத்துக்களில்

நம்மைத் தொலைத்துக் கொண்டோம்.

காதலின் மென்கரங்களின் தாலாட்டில் நாங்கள் தொலைந்து போனோம். அந்த உலகு எங்களைத்

தன்னோடு சேர்த்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த அந்த நாள் வராமலே இருந்திருக்கலாம்.

என்னடி தங்கைச்சி உவன் தம்பிக்குக் கடிதங்கள் வருகுது ?

ஆரும் பெடியள் போடுவங்களம்மா.

இல்லைப்பிள்ளை உவர் எங்கெயோ விழுந்திட்டார் போலைகிடக்கு.

நீங்களம்மா உங்கடை காலத்திலை நிக்கிறியள். சும்மாயிருங்கோ அவனப்பிடியொண்டும்

செய்யமாட்டான்.

இந்தா பார்பிள்ளை இந்தக்கடிதத்தை....!

என் கையெழுத்துக்களைக் கண்ட அவன் அக்கா திகைத்துப் போனாள்.

அவன் தனக்கு விரும்பினமாதிரிச் செய்யட்டுமனம்மா....

ஓ.....ஓ......ஓ.....நீயுமவருக்கு உதவியே.....

அம்மாவுக்கும் அக்காவுக்குமிடையிலான இந்தச் சலசலப்பில் அவனும் சிக்கிக்கொண்ட போது

அங்கு பூகம்பமே வெடித்தாற்போல அவனுள்ளிருந்த எரிமலை வெளிக்கிழம்பி அம்மாவின் மீது

சீற.....அம்மா ருத்திரதாண்டவமாடியதன் விளைவு அவனையும் வாய்நீட்டிப்பேச வைத்துவிட்டது.

ஒரு பிள்ளையெண்டு செல்லம் தந்து வளத்தனான். எனக்கே துரோகமேடா தம்பி.

இல்லை இதிலை மட்டும் தலையிடாதைங்கோம்மா......

ஓமோம் நீர் பெரிய மனிசன்தானே நீர் நினைச்சமாதிரி நடக்க பாப்பமொருக்கா நீயோ

நானோண்டு.....

அம்மாவுக்கும் மகனுக்குமிடையிலான தர்க்கம் நீண்டு அவன் அம்மா எட்டுமைல் தள்ளியிருந்த

என்னுருக்குப் பேரூந்தேறி வந்திறங்கிறங்கினார்.

தர்சியும் தர்சியின் அப்பாவும் என் வீட்டு வாசலில் வந்து நின்று என்னை அழைத்தார்கள்.

அவர்களுடன் அவனது அம்மாவும் நின்றிருந்தா.

வா தர்சி இ வாங்கோ மாமா....

இஞ்சை விருந்துக்கு நாங்க வரேல்ல நீரோ அந்த அழகி.....?

அவன் அம்மா விழித்த விழிப்பு உள்வீட்டிலிருந்த என் அக்காமாரையும் இ அம்மா இ

அப்பாவையும் வெளியே அழைத்தது. அயல் வீடுகளின் வேலிகளுக்கால் பலதலைகள் முளைத்து

விடுப்புப்பார்த்துக் கொள்ள அவன் அம்மாவின் வாயிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு

வார்த்தைக்குள்ளிருந்தும் 100வாற்ஸ் தணலிருந்தது. அத்தனை மோசமான வார்த்தைகள் என்னை

வதம் செய்து கொண்டன. தர்சி வாயடைத்து நிற்க அவள் அப்பா என்னைத் தங்கள் குடும்பத்தை

நிம்மதியாக விடு எனக் கேட்டுக்கொண்டார்.

இனிமேல் அவனுக்குக் கடிதம் போடுறது. சந்திக்கிறதெண்டு நான் கேள்விப்படக்குடாது.

பிள்ளைக்கு நல்ல புத்தியைச் சொல்லித் திருத்துங்கோ.

சொல்லிவிட்டு அவனது அம்மா என் வீட்டுப்படலையைத் தாண்டிவிட அக்காமார் இ அம்மா இ

அப்பா எல்லோருமே என்னில் நெருப்பாகின்றனர்.

உனக்குக்காதல் கேக்குதே காதல்....ம்....அடி செருப்பாலை....அப்பாவின் கைகள்

கன்னங்களைத் தாக்கியது. அம்மாவின் வார்த்தைகள் அணுக்குண்டைவிட

மேலானதாய்....அக்காமாரின் பார்வைகள் அவர்கள் செய்யாத தவறொன்றை நான் செய்து

விட்டதாய் என்னை எரித்தது. சின்னக்காவின் காதலுக்கு நெருப்பெடுத்த அப்பா பின்னர்

அமைதியாகி அவள் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியவர் என்னில் வீரபத்திர அவதாரமெடுத்து

என்னை எதிர்த்தார் இ ஏசினார் இ திட்டினார் இ செத்துவிடு என்றுகூடத் திட்டினார்.

அவன் அம்மாவின் வார்த்தைகளில் பொசுங்கிக்கிடந்த என் ஆத்மாவை

வீட்டிலுள்ளோரெல்லாம் ஆளுக்கொரு அவதாரங்களாய் மாறி வதைசெய்ய நான்

தனியாய்.....அழுதழுது சிவந்த விழிகளும் இ அடிவாங்கித் தடித்த உடலுமாக அவனை மறந்துவிட

முடியாமல் தினம்தினம் செத்தபடி.....

விழியோடு மொழிசொன்ன அவன் விழிகள் என் கடிதங்கள் காணாமல் ஏமாந்ததை செல்வாவிற்கு

அவன் எழுதிய கடிதத்தை செல்வா என்னிடம் தந்தாள்.

முன்னுக்கே நான் சொன்னான் ஆனா நீ கேக்கேல்ல.....இந்தக் கடிதத்தோடை இனி

அந்தத்தொடர்பை நிப்பாட்டு.... இதுவும் ஒரு அனுபவமெண்டு மறந்திடு....

செல்வா அப்போதும் அவனை மறந்துவிடு என்றே சொன்னாள். அவளுக்கு என் மௌனம் விடையானது.

என் நினைவுகளை விட்டு அவன் தொலையாமல் என்னுடனேயே ஒட்டியிருந்தான். குண்டு வீச்சுக்கள்

இ இடப்பெயர்வுகள் தொடராய் நாங்களும் ஊர் விட்டு அடுத்த ஊர்போய் சிலமாதங்கள்

கழிந்தது.

அந்த மாதங்கள் கழிந்து ஒரு நாள் மதியம் எதிர்பாராத அந்தச்சந்திப்பு. சுட்டெரித்துக்

கொண்டிருந்த மாசிவெயிலில் அவன் வந்துகொண்டிருந்தான். என்னைத்தாண்டிப் போனவன் என்

அருகே திரும்பி வந்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டது என் புலன்கள். சின்னதாய்

தாடிவளர்த்திருந்தான். அந்தக்காந்தக் கண்களில் இன்னும் அதே வசீகரம் ஒட்டியிருந்தது.

அன்று மாலை தன்னூர்க்கோவிலில் சப்பறத்திருவிழா எனவும் அங்கு என்னையும் வரும்படியும்

சொல்லிவிட்டுப் போனான்.

செல்வா இண்டைக்கு மட்டும் வாடி....இனிமே உன்னைக் கேக்கமாட்டன்.

அவனைச்சந்திக்கப் போவதற்கு வரமறுத்த செல்வாவைக்கெஞ்சி என்னோடு வரச்சம்மதிக்க

வைத்து வீட்டிலும் செல்வாவுடன் கோவிலுக்குப் போவதாக அனுமதி வாங்கி மாலை கோவிலுக்குப்

போய்விட்டோம். மதியம் சொன்னபடி அவன் வந்திருந்தான். சின்னதாய் முகத்தில்

குடியிருந்த தாடியைவழித்து அழகாயிருந்தான். ஏதோ ஒரு புத்துணர்வு அவனில் இருந்தது.

சனநெரிசலிலிருந்து விலகி என்னிடம் வந்தான்.

எங்கடை பிள்ளையார் வீதிக்கு வாங்கோ கனக்கக்கதைக்க வேணும்.

செல்வாவைக் காவலுக்கு நிறுத்திவிட்டு அவனது உந்துருளியின் பின் என் உந்துருளி

போய்க்கொண்டிருந்தது. அது மைம்மல்ப்பொழுதாகையால் ஒருவரது முகம் ஒருவருக்கு அடையாளம்

தெரியாதிருந்தது. பிள்ளையார் மேற்கு வீதியில் அவனது உந்துருளி நின்றது. இருவரது

உந்துருளியும் அருகருகே நிற்க சற்று நேர அமைதியின் பின் அவன்தான்

கதையைத்தொடக்கினான்.

அம்மா உங்கடை வீட்டை வந்து சத்தம் போட்டது எனக்குத் தெரியாது. தர்சி சொன்னவள்.

அம்மா அப்பிடித்திட்டினதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். ஆனா நான் மாறேல்ல.

என்னாலை மாறவுமேலாது. நீங்களும் மாறமாட்டீங்களெண்டு நம்பிறன். எங்கையிருந்தாலும்

உங்களை மறக்கமாட்டன். அம்மாவை எப்பிடியும் மாத்துவன். அதுமட்டுக்கும் காத்திருங்கோ.

தனது நிலைப்பாட்டினை அவன் விளக்கி என் பதிலுக்காகக் காத்திருந்தான்.

அவனை இழந்துவிட நானும் தயாரில்லை என்பதை அவனுக்கு விளக்கியபின் விடைபெற்றுக்

கொண்டேன். ஊர் எல்லைவரை வந்து வழியனுப்பிவிட்டுப் போனான். அதுதான்

கடைசிச்சந்திப்பு என எந்த அசரீரியும் கேட்கவில்லை. ஆனால் அந்தச்சந்திப்பின் பின்

நாம் சந்திக்கவேயில்லை. இருவரும் இருவழியில்.....

இறுதிவரை பிரியோம் என்றும் இணைந்திருப்போம். காலம் நமக்கானதொரு சந்திப்பை

மீண்டும் நிச்சயம் ஏற்படுத்தித் தரும். அதுவரை நாங்கள் தனிவழியே போனாலும்

நினைவுகளில் நிறைந்திருப்போம். நாங்கள் தனித்திருப்போம். மீண்டும் ஒருநாள் நாம்

சந்திப்போம். அவனது கடைசிக்கடிதம் இன்றும் இனிக்கிறது.

அவன்.....? நான்......?

காலம் தேய்ந்து தேய்ந்து அமைதியாய்க் கரைந்து எங்கள் காதலையும் கரைத்து......

இனிதான நினைவுகளின் வாசம் இன்றும் இனிக்கிறது.....

நன்றி - தமிழமுதம்

Link to comment
Share on other sites

இறுதிவரை பிரியோம் என்றும் இணைந்திருப்போம். காலம் நமக்கானதொரு சந்திப்பை

மீண்டும் நிச்சயம் ஏற்படுத்தித் தரும். அதுவரை நாங்கள் தனிவழியே போனாலும்

நினைவுகளில் நிறைந்திருப்போம். நாங்கள் தனித்திருப்போம். மீண்டும் ஒருநாள் நாம்

சந்திப்போம். அவனது கடைசிக்கடிதம் இன்றும் இனிக்கிறது.

அவன்.....? நான்......?

காலம் தேய்ந்து தேய்ந்து அமைதியாய்க் கரைந்து எங்கள் காதலையும் கரைத்து......

இனிதான நினைவுகளின் வாசம் இன்றும் இனிக்கிறது.....

காதலை காலம் கரைத்துவிட்டதா? இன்றுவரை சந்திக்கவில்லையா :lol:

Link to comment
Share on other sites

இன்னும் அவர்கள் சந்திக்கவே இல்லையா? :lol:

நல்ல கதையின் இனைப்பை தந்த சாந்தி அக்காவிற்கும் கதையை இங்கு இனைத்தமைக்கு மதனுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

ரொம்ப மனதை தொட்டு விட்டது..சந்திக்கவே இல்லை எனும் போது.. :cry: :cry:

நன்றி சாந்திஅக்கா..அழகான ஒரு கதை கொடுத்தமைக்கு :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.