Jump to content

இந்தியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் 2006


Recommended Posts

1வது டெஸ்ட் போட்டி

நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில்

Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள் முடிவில் 1 விக்கட் இழப்புக்கு 410ஓட்டங்களை பெற்றது.

V Sehwag - 254

*R Dravid -128

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஆடுகளங்கள் பொதுவாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதே வழக்கம் (சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை தன்னகத்தே கொண்ட ஒரு அணி) ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த போட்டி நடந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு இரு அணியினருக்;கும் சாதகமாக அமைந்து விட்டதால் போட்டி அவ்வளவு விறுவிறுப்பாக அமையவில்லை. . . .

ஸ்கோர் விபரம்(1வது இன்னிங்ஸ்)

பாகிஸ்தான் - 679/7 dec

இந்தியா - 410/1

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06...T1_13-17JAN2006

ஆட்ட நாயகன் -V Sehwag - 254runs

58060.jpg

Naved-ul-Hasan dismissed Virender Sehwag just 4 runs short of a world record partnership,

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

முதல் விக்கெட்டுக்கு இன்னும் 4 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் அது 50 வருட உலக சாதனையை முறியடித்திருக்கும்....

Link to comment
Share on other sites

பாகிஸ்த்தான் VS. இந்தியா 2வது ரெஸ்ற் போட்டியை நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp :arrow: View :arrow: Media Library :arrow: SHOUTcast tv :arrow: and then search "cri ".. Enjoy :wink: :P :P

Link to comment
Share on other sites

2வது டெஸ்ட் போட்டி

இன்று Faisalabad.நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் சென்ற முறையைப் போல பெரியதொரு இலக்கான 588 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Afridi - 156 Inzam haq - 103 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் சிறப்பாக விளையாடி 603 என்ற பெரிய இலக்கை அடைந்தனர் இந்திய அணி சார்பில்

Rahul Dravid -103 Dhoni -148 Luxman -90 pathan -90 வெறும் 15ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா இருக்க பாகிஸ்தான் தமது 2வது இன்னிங்சை தொடங்கியது துடுப்பாட்டத்துக்கு எற்ற களம் எண்ட படியாலை வீரர்களில் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசித்தார்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 490ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது அணி சார்பாக Younis Khan -194 Mohammad Yousuf -126 அடுத்து இருந்த 14 ஓவர்களில் இந்தியா விக்கட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றது

இந்த ஆடுகளமும் துடுப்பாட்டக்காரருக்கு சாதகமாக இருந்தபடியாலை ஆட்டம் பெரிதாக வரவேற்பை பெற்றிருக்கவில்லை வீரர்கள் தங்களுக்கு நல்ல துடுப்பாட்ட பயிற்சியாக எடுத்துக் கொண்டார்கள்

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 588 மற்றும் 490

இந்தியா - 603 மற்றும் 21/0

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-25JAN2006.html

58370.jpg

Younis Khan 83 and 194

Link to comment
Share on other sites

இந்திய அணியினரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

cri44yz.jpg

கராச்சி அருகே ஒரு உணவு விடுதியில், சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன்

cri23nk.jpg

ஆழ்ந்த யோசனையில் சவுரவ் கங்குலி. அருகில் சச்சின்

cri51az.jpg

தங்கள் குடும்பத்தினருடன் சச்சின், சவுரவ்

படங்கள் நன்றி - தினமணி

Link to comment
Share on other sites

21 வயதான இர்பான் பதான் உலக சாதனை..

Pak vs IND 3வது ரெஸ்ற் மச்சில் முதலவது ஆட்ட நாள் தொடக்கமான இன்று இந்திய அணியின் வேகப்பந்து & ஓப்பினர் போலர் இர்பான் பதான் ஹட் ரிக் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், அதுவும் முதலாவது ஓவரிலேயே 3 விக்கட்டுக்களை விழ்த்தியது இதுவே முதல் தடவை..

3வதும் கடைசியுமான ரெஸ்ற் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்தபடி தற்பொழுது நிகழ்ந்து வருகிறது, இந்த ரெஸ்ரில் பாகிஸ்த்தான் அணித்தலைவர் இன்சமாமுல் ஹக் விளையாடவில்லை, யுனிஸ்கானே கப்டன்,

இன்று ஆரம்பமான 3வது ரெஸ்ற் போட்டில், இந்திய அணி டொஸ்ஸில் வெற்றி பெற்று, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, பாகிஸ்த்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சல்மான் புற் மற்றும் இம்ரான் Fஅறற் களம் இறங்கினர், வழமையான இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர் இர்பான் பதான் பந்தை வீசினார், அவரின் முதலாவது ஒவரில் 4வது பந்தில் (அதாவது 0.4) சல்மான் புற் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் ராவிட்டிடம் பிடிகொடுத்து டக்கில் ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து வந்தார் அணித்தலைவர் யுனிஸ் கான் LBW முறையில் பதானின் அடுத்தபந்தில் (0.5) வெளியேறினார், அதன் பிறகு வந்த அனுபவம் வாய்ந்த வீரர் என பாகிஸ்த்தான் நம்பி இருந்த முகமட் யூசும் (முதலில் யுசவ் யூகானா என்று கிறிஸ்தவ சமயத்தை சார்ந்திருந்த இவர் பின்னர் இஸ்லாம் சமயத்துக்கு மாறி முகமட் யுசவ் என்று மாற்றிக்கொண்டார்) 0.6 பத்தானிபந்தில் கிளின் போல்ட் ஆகினார், இர்பான் பதான் உலக சாதனையை (அதாவது முதலாவது ஓவரில் 3 விக்கட்களை வீழ்த்தியது) படைத்தார்,, :idea:

584742tf.jpg

ஹட் ரிக் விக்கட் {முகமட் யுசவ் கிளின் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கிறார்}

584756kp.jpg

இந்திய அணியின் ஒல்ரவுண்டர் இர்பான் பதான், உலக சாதனை படைத்த வெற்றிக்களிப்பில்..

இந்த ஹட் ரிக் சாதனை மிக முக்கியமானது, ஏனெனில் ரெஸ்ற் போட்டியில், அதுவும் முதலாவது ஓவரில் அதுவும் அனுபவம் வாய்ந்த யுனிஸ்கான், யூசவ் முகமட் ஆகியோரை வீழ்த்தியது இர்பாபன் பதானுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, :idea:

இர்பான் பதானுக்கு வாழ்த்துக்கள்... :idea:

Link to comment
Share on other sites

மிக நாட்களுக்குப்பின் இந்தியஅணிக்கு ஒரு சகலதுறை ஆட்டக்காரன இர்பான் பத்தான் கிடைத்தது ஒரு கொடை..... .2வது ரெஸ்டில் துடுப்பாட்ட திறமையை காட்டிய இவர் இந்த போட்டியில் முதல் ஓவரில் ஹட்ரிக் மூலம் பந்து வீச்சில் உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார் ஆங்கிலேயரின் ஆதிக்கமான கிரிக்கெட் விளையாட்டில் ஆசிய வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்துவது எமக்கு பெருமைதானே............

இர்பான் பத்தானுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கும் ஒரு வாசிம் அக்கிரம் வந்தாச்சு என்றீங்கள்.. பர்தானுக்கு வாழ்த்துக்கள். இந்த வேகத்திலேயே சென்றால் நிச்சயம் அவருக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு..! :P :idea:

Link to comment
Share on other sites

இந்தியா மிகவும் ஆபரமாக பாகிஸ்த்தானிடம் 341 ஓட்டங்களால் மண்ணை கவ்வியது,,, :P :(:lol: இதன் மூலம் பாகிஸ்த்தான் இந்தியாவின் மண்டையில் "நச்" எண்டு கடப்பாறையால் ஓங்கி போட்டமாதிரி மிகப்பெரிய வெற்றியையும், வெற்றித்தொடரையும் தனதாக்கிக்கொண்டது,,,, :P :P :P

I am VERY VERY HAPPY

Link to comment
Share on other sites

3வது டெஸ்ட் போட்டி

பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி

இன்று கராச்சியில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 341 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் கிண்ணத்தை கைப்பற்றியது ஏற்கனவே நடந்த 2போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது எல்லோருக்கும் தெரியும் 5நாட்கள் கொண்ட போட்டி இந்திய வீரர்களின் சகிக்கமுடியாத விளையாட்டால் 4கு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது

இனி 3வது டெஸ்ட் போட்டி பற்றிய சிறு விபரணம்

நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது

1ம் நாள்

1வது இன்னிங்ஸ்சில் முதல் நாளிலேயே சகல விக்கட்டுகளையும் இழந்து 245ஓட்டங்களை மட்டுமே பெற்றது முதல் ஓவரிலேயே இர்பான் பதானிடம் ஹட்ரிக் முறையில் 3விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு Akmalபெற்ற 109 ஓட்டங்கள் மூலம் இந்த இலக்கையாவது அடைய முடிந்தது அடுத்து களம் இறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முதல்நாள் ஆட்டமுடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 74ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

2ம் நாள்

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து இறுதியில் 238ஒட்டங்களை மாத்திரமே பெற்றது அணி சார்பாக Yuvaraj singh -46 Irfan Pathan -40 Ganguly - 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் அடுத்து 2வது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மிகவும் நிதானமாக விளையாடியது ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுகள் இழப்புக்கு 174ஓட்டங்களைப் பெற்றிருந்தது

3ம் நாள்

முதலாவது இன்னிங்சில் முதல் பந்திலேயே அவுட் ஆன Youns Khan(77) Mohamed YousufT(97) மிகவும் சிறப்பாக விளையாடினர் இருவராலும் சதம் அடிக்கமுடியாமல் போனது துர்அதிஷ்டமே அதன் பிறகு வந்த Faisal Iqbal (139) Afridi(60) Abdul razaq (90)தங்கள் பங்குக்கு சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்த வழி செய்தார்கள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 5விக்கட் இழப்புக்கு 511ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் ஆட்டமிழந்த ஜந்த வீரர்களும் 50 ரண்களுக்க மேலே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது

4ம் நாள்

இன்றும் பாகிஸ்தான் நிதானத்துடன் விளையாடியது Faisal Iqbal(136) சதத்தினை புர்த்தி செய்ய Abdul razaq (90) 10 ஓட்டங்களால் அந்த வாய்ப்பை தவற விட்டார் மதிய இடைவேளைக்கு சற்று முன்னதாக 7 விக்கட்டுகளுக்கு 599ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது கிட்டத்தட்ட 600க்கு மேலை ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் போலவே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது குறிப்பாக Yuvaj singh(122) தவிர வேறு எவருமே சரியாக ஆடாததால் இந்தியா அணி சகல விக்கட்டுகளையும் இழந்து ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதன் மூலம் 3 டெஸ்ட்களை கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1 : 0 என்ற நிலையில் டெஸ்ட் தொடருக்குரிய கிண்ணத்தை கைப்பற்றியது

ஸ்கோர் விபரம்

பாகிஸ்தான் - 245 மற்றும் 599/7 dec

இந்தியா - 238 மற்றும் 265

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-02FEB2006.html

Man of the Match: Kamran Akmal

Player of the Series: Younis Khan

58520.jpg58613.jpg

Link to comment
Share on other sites

இந்த 3வது ரெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்று தெரிந்துகூட இந்திய பந்து வீச்சாளர்களின் அசட்டைத்தனமோ அல்லது இயலாமைத்தனமோ இந்தியாவை படு தோல்வி அடையச்செய்துவிட்டது,,

உண்மையில் இந்திய பாகிஸ்த்தான் அணிகள் விளையாடினால் இரு அணிகளும் மற்றைய உலக அணிகளுடன் விளையாடுவதைப்போல் இல்லாமல் மிகவும் மூர்க்கத்தனமாக விளையாடுவார்கள், காரணம் தென் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா பாகிஸ்த்தான் நாடுகளுக்கிடையில் எரிச்சல் பொறாமை..

இந்த 3வது ரெஸ்ரில் 2வது இன்னிங்க்சை பார்த்தபொழுது சிரிப்புத்தான் வந்தது, ஏனெண்டால் இந்திய அணியினரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் (என்ற நினைப்புள்ள வீரர்கள்) சேவாக், லக்ஷ்மன், சச்சின் ரெண்டுல்கார் ஆகியோர் முகமட் அசிவின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறியதுதான்,, அதைவிட தோனி, பதான் போன்ற வீரர்கள் தங்களின் நாடுகளி வைத்து தூள் பறத்தினது போல பாகிஸ்த்தானில் வைத்து அப்படி செய்யலாமென்று நினைத்தது தவடுபொடியாகிவிட்டது, இன்றைய போட்டியில் இந்திய அணி மிகவும் திணறியது என்று சொல்லவேண்டும்,, இன்றை போட்டியில் சதம் அடித்த யுவராஜ் சிங்க் உட்பட அனைவரும் பாகிஸ்த்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் தோற்றுவிட்டனர்,,, :P கிட்டத்தட்ட 2 நாட்கள் 600 ஓட்டங்களை எடுக்கவேண்டும், சுலபமானதும் கூட ஏனெனில் பல போட்டிகளில் இந்திய பட்ஸ்மெங்கள் பாகிஸ்த்தனை வாங்கு வாங்கு என்று வாங்கினார்கள், ஆனால் இறுதியும், முக்கியமானதுமான போட்டியில் கோட்டை விட்டுவிட்டார்கள்,,, :oops: :( :P

முகமட் அசீவ், அப்துல் ராசாக், கம்ரன் அக்மால், டனிஸ் கனேரியா, சஹித் அப்ரிடி, போன்றவர்கள் அசத்தலான விளையாட்டின் மூலம் மிகவும் ஒரு கெளரவமான வெற்றியை பாகிஸ்த்தான் அணி பெற்றுள்ளது என்று சொன்னா மிகையாகாது,,, :idea: :idea:

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

Link to comment
Share on other sites

விளையாட்டை விளையாட்டாகப் பாக்கவேணும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுகள் இவை..............இந்தியாவை பொறுத்தமட்டில் தலைக்கனம் கூடின ஆட்டக்காரரே அணியில் இருகிறார்கள் இதுக்கு காரணமும் இந்தியா மக்கள்தான் சினிமா ஹீரோவை தூக்கி வைப்பது போல கிரிக்கெட் அட்டக்காரராயும் ஹீரோவாக்கிப் பாக்கிறார்கள் இவ்வளவு அனுபவமுள்ள ஆட்டக்காரர் இருந்தும் கூட இந்திய அணியால் இந்த தோல்வியை தடுக்க முடியவில்லையே பாகிஸ்தானை பொறுத்த மட்டில் அணித்தலைவர் விளையாட நிலையிலும் (இன்சாம் ஹக்) அவர்களின் அசத்தலான விளையாட்டுக்கு எந்த கிரிகெட் ரசிகனும் தனது பாராட்டை தெரிவிப்பதில் தப்பில்லை...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

நல்ல செய்தி!! :P :P :P

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஒரு அணி கூட மரண அடி வாங்கி கொண்டிருக்கிறதாமே? திரும்பி வரும் போது குற்றுயிரும், குலை உயிருமாக தான் வரும் என்று பேசிக் கொள்கிறார்களே?

உண்மைதானப்பா,, எனக்கு பயங்கர கவலை,, பின்ன 2 போட்டிகளில் இலங்கை அணி வென்றுவிட்டது, இந்தியாவிடம், நியுசிலாந்திடம் அடிவாங்கினமாதிரி இந்த வி.பி போட்டிகளிலும் பயங்கரமா அடிவாங்கும் இலங்கை எண்டு நினைச்சன்,,, சா,,,, :oops: :(:lol:

2007 உலககிண்ணப்போட்டிக்கு பிறகு இலங்கை அணி சிம்ப்பாவே, கென்யா அணிகளுடன் போட்டி போடவே கஸ்ரப்படும்,, அப்படி ஆகனும் என்றுறதுதான் என்னுடைய ஆசை,,, :wink: :P

Link to comment
Share on other sites

வெற்றி தொல்விகளெல்லாம் விளையாட்டில் சகஜம்தானே.....

நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். :(

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

Link to comment
Share on other sites

பெரிய இலக்கு நோக்கி நிதானமாக முன்னேறி இருக்க வேண்டிய இந்திய அணியின் நிதானமில்லாத துடுப்பாட்டமும்.. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களத்தை இரண்டாவது இன்னிங்ஸில் சரியாகப் பயன்படுத்தாமையுமே தோல்விக்கு காரணம்..!

பாகிஸ்தான் மேலே சொன்ன இரண்டையும் தமக்குரிய வகையில் செய்து வெற்றியைத் தமதாக்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணிக்கு எமது வாழ்த்துக்கள்..!

அப்படியே போட்டித் தொடரை முழுமையாக கிரமமாக இங்கு பதிந்த முகத்தாருக்கு சிறப்பு நன்றிகள்..! :P

நம்மட வாழ்த்தையும் பாகிஸ்தான் அணிக்கு சொல்லுங்கோ பிள்ளையள்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

_41281764_pkngal1.jpg

போட்டியின் போது Virender Sehwag க்கின் மிடில் ஸ்ரம் Mohammad Asif இன் பந்துவீச்சில் புடுங்கி வீசப்படும் காட்சி...!

இதைத்தான் யாழ்ப்பாண நகர வழக்கில்.. "போடுறா மச்சான் பொல்லுப் பறக்க" என்பார்கள்..! :wink: :P

நன்றி - படம் பிபிசி.கொம்

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காமல் நட்புணர்வுடன் விளையாட்டு செய்திகளை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடுங்கள்.

நீங்கள் சொல்லவ்து சரி தான் எனக்கு என்ன தான் நடந்தாலும் இந்தியா Cricketல் தோல்வி அடைந்த கஸ்டமாக இருக்கும் சின்ன வயதில் இருந்து சப்போர்ட் செய்ததால :):lol: அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தால் சொல்லவே வேண்டாம் :twisted:

Link to comment
Share on other sites

3வது ரெஸ்ரில் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கட் அணி மேல் இந்திய ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள் என அறியமுடிகிறது, லக்கியின் வாயில் மண்ணை போட்டுவிட்டார்கள்,, :oops: :)

சச்சின் மேல் வெறுப்பு ஏற்படுவதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள், காரணம் அவர் இப்பொழுது சரியாக ஆடுவதில்லை என்றும், இருந்து இருந்துவிட்டு சுமார ஆடிவிட்டு போகிறார்கள் என்று இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்,, இக்கட்டான நேரத்தில் போட்டியை றோவில் முடிக்கலாம் என்று சச்சினை நம்பி இருந்த நேரத்தில் கிளின் போல்டாகி போனது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாத்ததை ஏற்படுத்தி உள்ளது,, :idea:

ராவிட்டை ஒரு இரும்பு திரை என வர்ணித்தார்கள் வாயை பாகிஸ்த்தான் வேக பந்துவீச்சாளர்கள் அடைத்துவீட்டார்கள்.. :lol:

இந்த நிலையில் பாகிஸ்த்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ( மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் ஒரே ஒரு வீரர்) சோகிப் அக்தர் மீது ஒரு புகார் எழுதுந்துள்ளது, அதாவது அவர் பந்தை எறிவதாக அந்த புகாரை இந்திய அணியின் பயிற்சியாளர் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார், 3வது ரெஸ்ற் 2வது இன்னிங்க்ஸில் சோகிப் அக்தர் வீசிய புயல் பந்து சச்சினின் ஹெல் மட்டை பலமாக தாக்கியது, அவர் அக்தர் பந்து வீசிய முறையை ரீவியில் பலமுறை பரிசிலித்தபொழுது அக்தரின் எல்போ வளைவதாக தெரிவித்துள்ளனர், ஏற்கனவே 3 முறை குற்றம்சாட்டப்பட்டு ஐ.சி.சி யினால் பரிசோதனைக்கு உட்படுத்தி தவறில்லை என்று தீர்ப்பு கூறிய பின் மீண்டும் இந்தியா பயிற்சியாளர் புகார் கூறியிருப்பது மீண்டு பாகிஸ்த்தான் இந்திய அணிகளிடயே சர்ச்சயை உருவாக்கி உள்ளது,, :oops:

நானும் பார்த்தேன் (ரீவியில்), அக்தர் சில வேளைகளில் பந்தை எறிவது போலத்தா தெரிகிறது, 151கி,மி வேகத்தை தாண்டி பந்து வரும்பொழுது அவரின் கை மடிவதாக நேற்று ரிவியில் காண்பித்தார்கள்.. :idea: :roll:

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அணிக்கு இருந்த வியாதி இந்திய அணிக்கும் வந்திட்டுதோ...தெரியல்ல..! முரளியைப் போட்டு படாதபாடு படுத்தினாங்க..கடைசியில என்ன ஆச்சு..??! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.