Jump to content

தேவதைகளின் தீட்டுத்துணி


Recommended Posts

சிறுவர்களைப் படையில் சேர்த்தது தொண்ணூறுகளிலேயே நடைபெற்றதுதானே..! பின்னர் சமாதான நேரத்தில் வீடுகளில் புலிகள் ஒப்படைத்த நிகழ்வுகளும் நடந்ததல்லவா? (பிறகு இறுதி யுத்தத்தில் மீண்டும் சிறுவர்களைச் சேர்த்திருப்பார்கள்.) ஆகவே தவறு நடந்தது பேச்சுவார்த்தை காலத்துக்கு முன்பும்தானே.. இதை சர்வதேச அங்கிகாரத்தினால் வந்த மமதை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை..! :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply

சாத்திரி "தலைமைச் செயலகம்" ஆட்கள் மாதிரிக் கதைக்கின்றீர்கள் <_<

முந்தியெண்டால் போட்டுவன் எண்டு செல்லியிருப்பன். ஆனால் இப்ப அழுதிருவன்.என்று... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோ கர்ணனின் புத்தகைத்தை நானும் வாசித்தேன் , அங்கே நடந்தவற்றை ஆளமான பார்வை இன்றி ,மேலோட்டமான நக்கல் கலந்த நடையோடு எழுதி இருந்தார்.புலிகள் சர்வதேசம் வகுத்த திட்டத்துக்குள் ஏன் போனார்கள்? சர்வதேசம் போராட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கான இராணுவ நெருக்குதலைச் செய்கிறது என்று தெரிந்தும், அதே சர்வதேசத்திடம் கருணை காருண்யம் என்பவற்றை எவ்வாறு எதிர்பார்த்தனர்.அமெரிக்கா முதல் நோர்வே வரை சர்வதேசத்தை நெறிப்படுத்தியது இந்திய ஆளும் கும்ப்பல் என்பதை ஏன் அறியாது இருந்தனர்? இவை தான் ஆளமாகப் பார்க்கும் எவருக்கும் எழக்கூடிய கேள்விகள்? இறுதி வரை சுருங்கும் நிலப்பகுதிக்குள் செல்வதால் பெரும் இழப்புக்களைத் தவிர்க்கலாம் என்று ஏன் நினைத்தனர்? இவ்வளவு இழப்புக்களும் ஏற்படுவதை அறிந்தும் ஏன் சர்வதேசம் பார்த்துக் கொண்டு இருந்தது?

இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று தான் புலிகள் சர்வதேச புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியாதபடி அவர்களை சிலர் தவறான தந்திரோபாயத்தில் வழி நடாத்தி உள்ளனர் என்பதே.புலிகளின் போராட்டம் சரியானது அவர்களின் அரசியல் சரியானது ஆனால் தந்திரோபாயம் அல்லது முலோபாயம் பிழையான கருதுகோள்களின் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தது.அதனைச் சரியாக வழி நாடாத்தி இருக்கக் கூடியவர்கள் புலிகளின் வழிகாட்டிகளாக இருக்கவைல்லை.இது சமாதான காலத்தில் நிகழ்ந்த ஒரு ஊடுருவலாக இருக்கலாம்.முழு உண்மைகளும் ஒரு நாள் வரத்தான் செய்யும்.ஆனால் இங்கு அர்ஜூன் சொல்லும் காரணங்களுக்காக புலிகள் தோற்க்கவில்லை என்பது இதுவரை வெளியாகிய தகவல்களில் இருந்து நாங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

யாரவர் அன்ரன் பாலசிங்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஓடிறவனை வைச்சு போராட்டம் நடத்த முடியாது என்றிருந்த காலம்.. ஒரு கரந்தடிப்படையாக இருந்த காலம். ஆளணி இன்றி நிலங்களை தக்க வைக்க முடியாது என்றிருந்த காலத்தில் தான் புலிகள் என்ன சிங்கள இராணுவமும் ஓட ஓட கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது.

கட்டாய ஆட்சேர்ப்பு என்பது போர்க் காலத்தில் கள நிலைமைக்கு ஏற்ப நிகழ்கின்ற ஒன்று தான். பெரிய பெரிய நாடுகளே அதை செய்திருக்கின்றன.

இன்று புலிகள் வென்றிருந்தால்.. அந்த கட்டாய ஆட்சேர்ப்புக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும்.. இன்னொருவருக்கு வெளிநாட்டு வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தால்.. இவர்கள் இன்று வந்து இப்படி கதை எழுதி இருக்கமாட்டார்கள்.

நாங்கள் அறிய தங்கள் குடும்பத்திற்கு பாஸ் எடுக்க வெளிநாட்டுக்குப் போக.. ஒரு பிள்ளையை இயக்கத்துக்கு அனுப்பிப் போட்டு போனவர்களையும் பின்னர் மாமன் மச்சானை வைச்சு அழுது குளறி அந்தப் பிள்ளையையும் வெளில எடுத்த ஆக்களையும் காண முடிந்தது.

போராட்டத்தை மக்கள் மயப்படுத்தல் என்பது வார்த்தையில் எழுத இலகு. செயல் வடிவத்தில் செய்வது அது ஒன்றும் அவ்வளவு இலகு அல்ல. இன்று ஒபாமா.. ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் இராணுவத்தில் இணையக் கேட்டால்.. அல்லது அப்படி சட்டம் இயற்றினால் அவரை மக்கள் தூக்கி எறிய அதிக நேரம் எடுக்காது. 100% மக்களை போராட்டத்தின் பால் ஒருங்கிணைக்க முடியாது. பெரும்பாலான மக்களை இணைத்துக் கொண்டு அது அரசியல் ரீதியாக இருக்கட்டும்... இராணுவ ரீதியாக இருக்கட்டும்.. சர்வதேச ரீதியாக இருக்கட்டும்.. போராட்டத்தை நடத்த விடுதலைப்புலிகள் வலுவாக முயன்றே உள்ளனர். விடுதலைப்புலிகள் அந்த விடயத்தில் பெரிய தவறிழைத்ததாக சொல்ல முடியாது.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த புலம்பெயர் மக்களிடம் போராட்டத்தை கையளித்தனர். அரசியல் ரீதியில் போராட கூட்டமைப்பிடம்.. மாற்றுக் குழுவினரை உள்ளடக்கிய ஒரு அமைப்பிடம் வழிமுறைகளைக் கையளித்தனர். இராணுவ ரீதியில் வடக்குக் கிழக்கு வாழ் மக்களைக் கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விடுதலைப்புலிகள் சர்வதேச அணுகுமுறைகளை சரியாக மதிப்பிடவில்லை என்பது சுத்தப் பொய். 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையை மீளக் கேளுங்கள். நாங்கள் சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில்.. புலம்பெயர் மக்களிடமே இந்தப் போராட்டத்தை கையளிக்க விரும்புகிறோம் என்று தேசிய தலைவர் சொல்லி விட்டார். ஆக சர்வதேசத்தின் தமிழர்களுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க வேண்டிய பணியை புலம்பெயர் மக்கள் சரியாகச் செய்திருந்தால்.. தலைவரின் எண்ணம் இன்று ஈடேறி இருக்கும்.

இன்னொன்றையும் சொன்னார்.. பூகோள பொருண்மிய மாற்றங்கள்.. தெற்காசியாவில்.. ஆசியாவில் புதிய பொருண்மிய சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில்.. அதற்கேற்ப நாம் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். சீனாவின் அபரிமித பொருண்மிய வளர்ச்சி.. இந்திய - சீன பொருண்மிய போட்டி.. ஆதிக்கப் போட்டி இவற்றை எல்லாம் தேசிய தலைவர் மதிப்பிட்டதன் பின்விளைவே அவரின் அந்தகைய கூற்றுக்கள்.

இவை குறித்து.. நாம் அன்று ஆராய்ந்து செயற்படத் தவறிவிட்டு.. இன்று போர்க்களத்தில் அத்துணை சவால்களுக்கும் மத்தியில் நின்று போராடி வீழ்ந்த வீரர்களை பழிப்பதிலும்.. அவர்களில் குறை பிடிப்பதிலும் நேரம் செலவு கொண்டு திரிகிறோம்.

இதனால்.. எதை சாதிக்கப் போகிறீர்கள்... உங்களால்.. கட்டாய ஆட்சேர்ப்பின்றி ஒரு போராட்டத்தை நடத்தி தமிழீழத்தை அடைய முடியும் என்றால் அதை செய்து காட்டுங்கோ. இப்பதானே புலிகள் இல்லையே உங்களுக்கு சவால் விட. அழிந்து போய் விட்ட புலிகளுக்கு வகுப்பெடுத்து எனி எந்தப் பயனும் இல்லை. அவர்கள் செய்தது எல்லாம் தவறு என்றே வைத்துக் கொள்வோம். எனவே இன்றுள்ள புத்திமான் பலவான்கள்.. புலிகளுக்கு புத்திமதி சொல்லுறதை விட்டு.. அதே புத்திமதிகளை தாங்கள் கையில் எடுத்து.. தமிழீழம் அமைக்கலாமே..??! ஏன் செய்ய முன் வருகிறார்கள் இல்லை.

வன்னியில் உள்ள ஒரு தொகுதி மக்களுக்கு செருப்பு கொடுக்கக் கூட நம்மால் ஒற்றுமையாக செயற்பட முடியவில்லை.. இதில்.. போராட்டத்தை கட்டாய ஆர்சேர்ப்புக்கு இடமின்றி நடத்தி நாடு பிடிக்க முடியுமாமில்ல.

அது முடியும்.. எப்போது என்றால்.. நாம் தொழில்நுட்ப ரீதியில் சர்வதேசத்தை விஞ்சி நிற்கின்ற போது.. அது சாத்தியம். அதற்கு நமக்கு நாடு தேவை. பல்கலைக்கழகங்கள் தேவை. விஞ்ஞானிகள் தேவை. இராணுவ தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவர் அன்ரன் பாலசிங்கமா?

இல்லை தமிழ்செல்வனாய் இருக்கும் :unsure:

Link to comment
Share on other sites

புலிகள் ஓடிறவனை வைச்சு போராட்டம் நடத்த முடியாது என்றிருந்த காலம்.. ஒரு கரந்தடிப்படையாக இருந்த காலம். ஆளணி இன்றி நிலங்களை தக்க வைக்க முடியாது என்றிருந்த காலத்தில் தான் புலிகள் என்ன சிங்கள இராணுவமும் ஓட ஓட கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது.

கட்டாய ஆட்சேர்ப்பு என்பது போர்க் காலத்தில் கள நிலைமைக்கு ஏற்ப நிகழ்கின்ற ஒன்று தான். பெரிய பெரிய நாடுகளே அதை செய்திருக்கின்றன.

இன்று புலிகள் வென்றிருந்தால்.. அந்த கட்டாய ஆட்சேர்ப்புக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும்.. இன்னொருவருக்கு வெளிநாட்டு வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தால்.. இவர்கள் இன்று வந்து இப்படி கதை எழுதி இருக்கமாட்டார்கள்.

நாங்கள் அறிய தங்கள் குடும்பத்திற்கு பாஸ் எடுக்க வெளிநாட்டுக்குப் போக.. ஒரு பிள்ளையை இயக்கத்துக்கு அனுப்பிப் போட்டு போனவர்களையும் பின்னர் மாமன் மச்சானை வைச்சு அழுது குளறி அந்தப் பிள்ளையையும் வெளில எடுத்த ஆக்களையும் காண முடிந்தது.

போராட்டத்தை மக்கள் மயப்படுத்தல் என்பது வார்த்தையில் எழுத இலகு. செயல் வடிவத்தில் செய்வது அது ஒன்றும் அவ்வளவு இலகு அல்ல. இன்று ஒபாமா.. ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் இராணுவத்தில் இணையக் கேட்டால்.. அல்லது அப்படி சட்டம் இயற்றினால் அவரை மக்கள் தூக்கி எறிய அதிக நேரம் எடுக்காது. 100% மக்களை போராட்டத்தின் பால் ஒருங்கிணைக்க முடியாது. பெரும்பாலான மக்களை இணைத்துக் கொண்டு அது அரசியல் ரீதியாக இருக்கட்டும்... இராணுவ ரீதியாக இருக்கட்டும்.. சர்வதேச ரீதியாக இருக்கட்டும்.. போராட்டத்தை நடத்த விடுதலைப்புலிகள் வலுவாக முயன்றே உள்ளனர். விடுதலைப்புலிகள் அந்த விடயத்தில் பெரிய தவறிழைத்ததாக சொல்ல முடியாது.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த புலம்பெயர் மக்களிடம் போராட்டத்தை கையளித்தனர். அரசியல் ரீதியில் போராட கூட்டமைப்பிடம்.. மாற்றுக் குழுவினரை உள்ளடக்கிய ஒரு அமைப்பிடம் வழிமுறைகளைக் கையளித்தனர். இராணுவ ரீதியில் வடக்குக் கிழக்கு வாழ் மக்களைக் கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விடுதலைப்புலிகள் சர்வதேச அணுகுமுறைகளை சரியாக மதிப்பிடவில்லை என்பது சுத்தப் பொய். 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையை மீளக் கேளுங்கள். நாங்கள் சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில்.. புலம்பெயர் மக்களிடமே இந்தப் போராட்டத்தை கையளிக்க விரும்புகிறோம் என்று தேசிய தலைவர் சொல்லி விட்டார். ஆக சர்வதேசத்தின் தமிழர்களுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க வேண்டிய பணியை புலம்பெயர் மக்கள் சரியாகச் செய்திருந்தால்.. தலைவரின் எண்ணம் இன்று ஈடேறி இருக்கும்.

இன்னொன்றையும் சொன்னார்.. பூகோள பொருண்மிய மாற்றங்கள்.. தெற்காசியாவில்.. ஆசியாவில் புதிய பொருண்மிய சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில்.. அதற்கேற்ப நாம் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். சீனாவின் அபரிமித பொருண்மிய வளர்ச்சி.. இந்திய - சீன பொருண்மிய போட்டி.. ஆதிக்கப் போட்டி இவற்றை எல்லாம் தேசிய தலைவர் மதிப்பிட்டதன் பின்விளைவே அவரின் அந்தகைய கூற்றுக்கள்.

இவை குறித்து.. நாம் அன்று ஆராய்ந்து செயற்படத் தவறிவிட்டு.. இன்று போர்க்களத்தில் அத்துணை சவால்களுக்கும் மத்தியில் நின்று போராடி வீழ்ந்த வீரர்களை பழிப்பதிலும்.. அவர்களில் குறை பிடிப்பதிலும் நேரம் செலவு கொண்டு திரிகிறோம்.

இதனால்.. எதை சாதிக்கப் போகிறீர்கள்... உங்களால்.. கட்டாய ஆட்சேர்ப்பின்றி ஒரு போராட்டத்தை நடத்தி தமிழீழத்தை அடைய முடியும் என்றால் அதை செய்து காட்டுங்கோ. இப்பதானே புலிகள் இல்லையே உங்களுக்கு சவால் விட. அழிந்து போய் விட்ட புலிகளுக்கு வகுப்பெடுத்து எனி எந்தப் பயனும் இல்லை. அவர்கள் செய்தது எல்லாம் தவறு என்றே வைத்துக் கொள்வோம். எனவே இன்றுள்ள புத்திமான் பலவான்கள்.. புலிகளுக்கு புத்திமதி சொல்லுறதை விட்டு.. அதே புத்திமதிகளை தாங்கள் கையில் எடுத்து.. தமிழீழம் அமைக்கலாமே..??! ஏன் செய்ய முன் வருகிறார்கள் இல்லை.

வன்னியில் உள்ள ஒரு தொகுதி மக்களுக்கு செருப்பு கொடுக்கக் கூட நம்மால் ஒற்றுமையாக செயற்பட முடியவில்லை.. இதில்.. போராட்டத்தை கட்டாய ஆர்சேர்ப்புக்கு இடமின்றி நடத்தி நாடு பிடிக்க முடியுமாமில்ல.

அது முடியும்.. எப்போது என்றால்.. நாம் தொழில்நுட்ப ரீதியில் சர்வதேசத்தை விஞ்சி நிற்கின்ற போது.. அது சாத்தியம். அதற்கு நமக்கு நாடு தேவை. பல்கலைக்கழகங்கள் தேவை. விஞ்ஞானிகள் தேவை. இராணுவ தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தேவை.

நெடுக்ஸ்.. மிகச்சிறந்த கருத்துக்கள்..! நன்றி.. :rolleyes:

Link to comment
Share on other sites

யார் எவர் என்று தெரியாது ஆனால், உன்னிப்பாக நடந்த நிகழ்வுகளைக் கவனியுங்கள்.ரணிலின் ஆட்ச்சி கலைக்கப்பட்டு சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் நிகழ்கிறது.சிறிலங்கா இராணுவம் நிலை குலைந்து நிர்வாகச் சீர்கேடுகளுக்குள் சிக்கி நிற்கிறது.புலிகள் சந்தர்ப்பத்தைப் பாவித்து சாதகமான இராணுவ நகர்வுகள் எதனையும் மேற்கொள்ளாமல் சிறிலங்கா அரசே இந்தமுறை போர் நிறுத்ததை மீறட்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.இதன் அர்த்தம் புலிகளுக்கு நோர்வேயினூடாக நாங்கள் உங்களை அங்கீகரிப்போம் நீங்கள் பேசாமல் இருந்தால் என்னும் நம்பிக்கை வழங்க்கப்பட்டமையே.எமக்கு இங்கு அனூகூலம் கிட்டும் என்னும் நம்பிக்கையே புலிகள் அமைதியாக இருக்க அடிப்படைக் காரணம்.எமக்கு விரிக்கப்பட்டிருக்கும் சர்வதேச வலையே இது எம்மை அழிக்கவே இவர்கள் திட்டம் இடுகிறார்கள் என்று புலிகள் நம்பி இருந்தால், புலிகளே தமக்குச் சாதகமான கால கட்டத்தில் களத்தில் படைய நகர்வுகளை மேற்கொண்டிருப்பர்.ஆனால் நடந்தது என்ன? சிறிலங்காவின் பயிற்ச்சிகள், ஆயுதக் கொள்வனவு படை நகர்வுகள் எல்லாவற்றியும் புலிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.சிறிலங்கா அரசு பலம் பெறப் பெற சர்வதேச ரீதியான கைதுகள் ஆயுதக் கப்பற் தாக்குதல்கள் வலுப் பெற்றன.இவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடாத்தப்பட்டன.பேச்சுவார்த்தை களினூட்டாக அங்கீகாரம் என்னும் மாயமானைக் காட்டி ,சிறிலங்கா அரசு பலப்படுத்தப்பட்டு புலிகளின் வலையமைப்பு ஊடுருவப்பட்டு அழிக்கப்பட்டது. பேசுவார்த்தைகளினூடாக அங்கீகாரம் என்பதை பலரும் நம்ப்பி இருக்கலாம்.ஆனால் இவை எல்லவற்றையும் வகுத்தது புது தில்லி.அதன் நோக்கங்கள் மேற்க்கின் நோக்கங்களில் இருந்து வேறு பட்டது.ஆனால் திரு நாவுக்கரசு போன்றோர் நாம் இந்தியாவிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்னும் வகையில் உரையாடிக் கொண்டிருந்தனர்.ஒரு சதி வலை பின்னப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அதனை முறையடிப்பதற்கான நகர்வுகளை மேற் கொள்ளாமல் நிகழும் மாற்றக்ங்களுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தமையே ஈற்றில் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து விட்டது. நிகழும் அரசியல் இராணுவ நகர்வுகள் பற்றி புலிகள் அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அதற்கேற்றவாறு தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள் என்று மற்றவர்களைப் போல் நானும் நம்பினேன்.ஆனால் இப்படி தம்மைச் சுற்றி நடப்பவை பற்றி அறியாமல் அவர்கள் பிழையாக வழி நடாத்தப்படுவார்கள் என்று நான் நினைதிருக்கவில்லை.இதன் பின்னணியில் மிகப் பெரும் நம்பிக்கைத் துரோகம் நிகழ்ந்து இருக்க முடியும், அதன் மையமாக கேபி இருந்து இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது......நடந்தவையாகவே இருக்கட்டும். இனியாவது .............? .......................முன்னெடுப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஓடிறவனை வைச்சு போராட்டம் நடத்த முடியாது என்றிருந்த காலம்.. ஒரு கரந்தடிப்படையாக இருந்த காலம். ஆளணி இன்றி நிலங்களை தக்க வைக்க முடியாது என்றிருந்த காலத்தில் தான் புலிகள் என்ன சிங்கள இராணுவமும் ஓட ஓட கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது.

கட்டாய ஆட்சேர்ப்பு என்பது போர்க் காலத்தில் கள நிலைமைக்கு ஏற்ப நிகழ்கின்ற ஒன்று தான். பெரிய பெரிய நாடுகளே அதை செய்திருக்கின்றன.

இன்று புலிகள் வென்றிருந்தால்.. அந்த கட்டாய ஆட்சேர்ப்புக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும்.. இன்னொருவருக்கு வெளிநாட்டு வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தால்.. இவர்கள் இன்று வந்து இப்படி கதை எழுதி இருக்கமாட்டார்கள்.

நாங்கள் அறிய தங்கள் குடும்பத்திற்கு பாஸ் எடுக்க வெளிநாட்டுக்குப் போக.. ஒரு பிள்ளையை இயக்கத்துக்கு அனுப்பிப் போட்டு போனவர்களையும் பின்னர் மாமன் மச்சானை வைச்சு அழுது குளறி அந்தப் பிள்ளையையும் வெளில எடுத்த ஆக்களையும் காண முடிந்தது.

போராட்டத்தை மக்கள் மயப்படுத்தல் என்பது வார்த்தையில் எழுத இலகு. செயல் வடிவத்தில் செய்வது அது ஒன்றும் அவ்வளவு இலகு அல்ல. இன்று ஒபாமா.. ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் இராணுவத்தில் இணையக் கேட்டால்.. அல்லது அப்படி சட்டம் இயற்றினால் அவரை மக்கள் தூக்கி எறிய அதிக நேரம் எடுக்காது. 100% மக்களை போராட்டத்தின் பால் ஒருங்கிணைக்க முடியாது. பெரும்பாலான மக்களை இணைத்துக் கொண்டு அது அரசியல் ரீதியாக இருக்கட்டும்... இராணுவ ரீதியாக இருக்கட்டும்.. சர்வதேச ரீதியாக இருக்கட்டும்.. போராட்டத்தை நடத்த விடுதலைப்புலிகள் வலுவாக முயன்றே உள்ளனர். விடுதலைப்புலிகள் அந்த விடயத்தில் பெரிய தவறிழைத்ததாக சொல்ல முடியாது.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த புலம்பெயர் மக்களிடம் போராட்டத்தை கையளித்தனர். அரசியல் ரீதியில் போராட கூட்டமைப்பிடம்.. மாற்றுக் குழுவினரை உள்ளடக்கிய ஒரு அமைப்பிடம் வழிமுறைகளைக் கையளித்தனர். இராணுவ ரீதியில் வடக்குக் கிழக்கு வாழ் மக்களைக் கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

விடுதலைப்புலிகள் சர்வதேச அணுகுமுறைகளை சரியாக மதிப்பிடவில்லை என்பது சுத்தப் பொய். 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையை மீளக் கேளுங்கள். நாங்கள் சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில்.. புலம்பெயர் மக்களிடமே இந்தப் போராட்டத்தை கையளிக்க விரும்புகிறோம் என்று தேசிய தலைவர் சொல்லி விட்டார். ஆக சர்வதேசத்தின் தமிழர்களுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க வேண்டிய பணியை புலம்பெயர் மக்கள் சரியாகச் செய்திருந்தால்.. தலைவரின் எண்ணம் இன்று ஈடேறி இருக்கும்.

இன்னொன்றையும் சொன்னார்.. பூகோள பொருண்மிய மாற்றங்கள்.. தெற்காசியாவில்.. ஆசியாவில் புதிய பொருண்மிய சூழலை ஏற்படுத்தி வரும் நிலையில்.. அதற்கேற்ப நாம் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். சீனாவின் அபரிமித பொருண்மிய வளர்ச்சி.. இந்திய - சீன பொருண்மிய போட்டி.. ஆதிக்கப் போட்டி இவற்றை எல்லாம் தேசிய தலைவர் மதிப்பிட்டதன் பின்விளைவே அவரின் அந்தகைய கூற்றுக்கள்.

இவை குறித்து.. நாம் அன்று ஆராய்ந்து செயற்படத் தவறிவிட்டு.. இன்று போர்க்களத்தில் அத்துணை சவால்களுக்கும் மத்தியில் நின்று போராடி வீழ்ந்த வீரர்களை பழிப்பதிலும்.. அவர்களில் குறை பிடிப்பதிலும் நேரம் செலவு கொண்டு திரிகிறோம்.

இதனால்.. எதை சாதிக்கப் போகிறீர்கள்... உங்களால்.. கட்டாய ஆட்சேர்ப்பின்றி ஒரு போராட்டத்தை நடத்தி தமிழீழத்தை அடைய முடியும் என்றால் அதை செய்து காட்டுங்கோ. இப்பதானே புலிகள் இல்லையே உங்களுக்கு சவால் விட. அழிந்து போய் விட்ட புலிகளுக்கு வகுப்பெடுத்து எனி எந்தப் பயனும் இல்லை. அவர்கள் செய்தது எல்லாம் தவறு என்றே வைத்துக் கொள்வோம். எனவே இன்றுள்ள புத்திமான் பலவான்கள்.. புலிகளுக்கு புத்திமதி சொல்லுறதை விட்டு.. அதே புத்திமதிகளை தாங்கள் கையில் எடுத்து.. தமிழீழம் அமைக்கலாமே..??! ஏன் செய்ய முன் வருகிறார்கள் இல்லை.

வன்னியில் உள்ள ஒரு தொகுதி மக்களுக்கு செருப்பு கொடுக்கக் கூட நம்மால் ஒற்றுமையாக செயற்பட முடியவில்லை.. இதில்.. போராட்டத்தை கட்டாய ஆர்சேர்ப்புக்கு இடமின்றி நடத்தி நாடு பிடிக்க முடியுமாமில்ல.

அது முடியும்.. எப்போது என்றால்.. நாம் தொழில்நுட்ப ரீதியில் சர்வதேசத்தை விஞ்சி நிற்கின்ற போது.. அது சாத்தியம். அதற்கு நமக்கு நாடு தேவை. பல்கலைக்கழகங்கள் தேவை. விஞ்ஞானிகள் தேவை. இராணுவ தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தேவை.

உங்களால் போராட முடியாது,போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதும் சாத்தியம் இல்லை என்டால் தீர்வு தான் என்ன அதை சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் நோர்வேயையோ சர்வதேசத்தையோ முழுமையாக நம்பவில்லை. குறிப்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகள்.. விடுதலைப் புலிகளின் போர் கப்பல்கள் சமாதான காலத்தில் அழிக்கப்பட்டமை.. கருணாவின் பிளவு.. இவை எதனையும் தேசிய தலைவர் சாதாரணமாக எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி.. சர்வதேசம்.. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் சிறீலங்காவிற்கு ஒத்துழைப்பு நல்கி வருவதை புலிகள் சுட்டிக்காட்டி அது தவறு.. நாம்.. எமது மக்களை பாதுகாக்கவே ஆயுதம் தூக்கினோம்.. அதற்கான தேவையை சர்வதேசம் நீக்க முன் வரும் போது நாம் ஆயுதங்களைக் கைவிடத் தயார். நாம் யுத்தப் பிரியர்கள் அல்ல என்றும் சர்வதேசத்தை நோக்கிச் சொன்னார்கள். சர்வதேசத்தை நம்பி இருப்பின் புலிகள் இவற்றை அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

புலிகள் நம்பி சீரழிந்தது.. தமிழகத்தில் இருந்த தலைமைகள் சிலவற்றால் தான். மன்மோகன் சிங்கின் சார்க் மாநாட்டு வரவேடு புலிகள் யுத்தம் நிறுத்தம் செய்து இந்தியாவின் நல்லெண்ணத்தை தக்க வைக்க முயன்றனர். அதேபோல்.. கருணாநிதியை அளவு கடந்து எங்கள் தந்தை என்று அறிவித்தனர். உண்மையில் கருணாநிதி புலிகளுக்கு செய்த கடந்த கால துரோகங்களையும் மறந்து புலிகள் அப்படிச் சொல்ல என்ன தேவை இருந்தது..???!

புலிகளின் உள்ளகக் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவல் உள்ளது என்பது தலைவர் நன்கறிந்த விடயம். மாத்தையாவின் நிகழ்வோடு அவர் அடிக்கடி சொல்லும் விடயம் என் பல்லில இருந்த சூத்தையை நான் கவனிக்காமல் விட்டது தான் எனக்கு வலி என்று. அந்த வகையில் அவர் உள்ளக கண்காணிப்புக்கு என்று சிறப்பான ஒரு உளவு அமைப்பையே உருவாக்கி வைத்திருந்தார்.

ஆனால் அடிப்படையில் புலிகள் இராணுவ ரீதியில் தோற்க வேண்டி வந்ததற்கு காரணம்... ஒன்று கிரமமான வள வழங்கல்களை சிறீலங்கா கடற்படையும் விமானப்படையும் இந்திய சர்வதேச கண்காணிப்போடு தடுத்து நிறுத்தியமை.

இரண்டு. ஆளணிப் பிரச்சனை. போர்க்களம்.. பல்வேறு முனை நோக்கி விரிந்ததும்.. அனுபவம் வாய்ந்த போராளிகளை கள முனைகளில் போதியளவு நிறுத்த முடியவில்லை. களம் பரந்து விரிந்த நிலையில்.. எதிரியின் ஊடுருவல்களும் அதிகரிக்க.. நிலத்தை சுருக்கி.. உள்ள வளங்களைக் கொண்டு இருப்பதை தக்க வைக்க முனைந்தனர். ஆனால் எதிரி இதனை நன்கு எதிர்பார்த்து.. தாக்குதல் உக்கிரத்தை அதிகரிக்க.. விடுதலைப்புலிகள் அதற்கு முகம் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் தோல்வி ஏற்பட்டது. இதனை களத்தின் போக்கை ஆரம்பத்தில் இருந்து அவதானித்திருந்தால் புரியலாம்.

கே பி.. என்பவர் போர் நடந்த காலத்திலேயே தாய்லாந்தில் வைத்து பிடிபட்ட நபர் அல்லது சர்வதேச உளவு அமைப்புக்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நபர். அவரை முழுமையாக நம்பி புலிகள் செயற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகளும்.. தமிழகத்தின் சில தலைமைகளும்.. சேர்ந்து செய்த குளறுபடிகளால் தான்.. குறிப்பாக கருணாநிதி போன்றவர்கள் தகுந்த நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயற்பட தவறியதே புலிகள் எதிர்பார்த்து ஏமாந்த விடயம்.

இதனை தெளிவாக அறிய.. விடுதலைப்புலிகளின் உயர்மட்டம் புலம்பெயர் மக்களோடு கொண்டிருந்த அளவிற்கு தமிழகத்தோடு தொடர்புகளை செய்திப் பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருந்ததை இனங்காட்டலாம்.

புலிகள் சர்வதேசத்தையோ.. இந்திய மத்திய அரசையோ நம்பி இருக்கவில்லை. ஆனால் கருணாநிதியை அளவுக்கு மிஞ்சி நம்பினார்கள். அவர் கழுத்தறுத்தும் விட்டார். வை கோ விடயத்திலும் அதையே அவர் செய்தார். அது தெரிந்திருந்தும் புலிகள் ஏன் கருணாநிதியை அதிகம் நம்பினார்கள் என்பது தான் வினாக்குறி. இதன் பின்னால் ஜெகத் கஸ்பார் போன்றவர்களும் இருந்திருக்கலாம்..!

உங்களால் போராட முடியாது,போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதும் சாத்தியம் இல்லை என்டால் தீர்வு தான் என்ன அதை சொல்லுங்கள்.

மேடம். நீங்களும் இன்னும் சிலரும் தான் குறைபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்று. நானல்ல. நான் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.. புலிகள் அந்த விடயத்தில் தவறிழைத்ததாக கருத முடியாது என்று. தயவுசெய்து எழுதி உள்ளதை முற்றாக வாசித்து விட்டு கேள்விகள் தொடுங்கள். பிரயோசனமா இருக்கும். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய பாதைகளில் நாம் வேறுபட்டாலும் ஈழம் என்ற வார்த்தையில் ........நாங்கள் எல்லோரும் ஒருங்கிணைவோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை மக்கள் மயப்படுத்தல் என்பது வார்த்தையில் எழுத இலகு. செயல் வடிவத்தில் செய்வது அது ஒன்றும் அவ்வளவு இலகு அல்ல. இன்று ஒபாமா.. ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் இராணுவத்தில் இணையக் கேட்டால்.. அல்லது அப்படி சட்டம் இயற்றினால் அவரை மக்கள் தூக்கி எறிய அதிக நேரம் எடுக்காது. 100% மக்களை போராட்டத்தின் பால் ஒருங்கிணைக்க முடியாது. பெரும்பாலான மக்களை இணைத்துக் கொண்டு அது அரசியல் ரீதியாக இருக்கட்டும்... இராணுவ ரீதியாக இருக்கட்டும்.. சர்வதேச ரீதியாக இருக்கட்டும்.. போராட்டத்தை நடத்த விடுதலைப்புலிகள் வலுவாக முயன்றே உள்ளனர். விடுதலைப்புலிகள் அந்த விடயத்தில் பெரிய தவறிழைத்ததாக சொல்ல முடியாது.

இதற்கு என்ன அர்த்தம் புலிகளை இதற்குள் இழுக்காமல் எதிர் காலத்தை மட்டும் வைத்து பதில் சொல்லவும்.அடுத்து மருதங்கேணிக்கு ஆன எனது பதிவுக்கு தங்களது பதில் என்ன?...முடிந்ததை கதைக்காமல் எதிர் காலத்தை மட்டும் கதைக்கவும்...இங்கு நான் புலிகளை குற்றம் சாட்டவில்லை மக்களில் தான் பிழை என்கிறேன்.

Link to comment
Share on other sites

கீரோ தம்பி நெடுக்ஸ்,

நாட்டுக்காக போரடபோனவர்கள் அது எந்த இயக்கமாகட்டும் இப்ப கொமடியனாகத்தான் போனார்கள்.முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பிவந்தவர்கள் வில்லன்கள்,பலவந்தமாகபிடிக்கப்பட்டு இப்ப நடுவீதியில் அலையும்சிறுமிகள் விபச்சாரிகள்,பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்த அகதிகளையும் பார்த்து எள்ளிநகையாடும் ஸ்கொலசிப்பில் வந்த நீர் உண்மையில் கீரோதான்.இறந்த பிள்ளைகளை இப்பவும் நினைது ஏங்கும் தாயார்களை விட மாவீரரை வைத்து இணையத்தில் வீரம் காட்டும் உமக்கு "எக்ஸ்டீம் அல்ரா சுப்பெர் ஸ்ரார்" எனும் பட்டம் தந்தாலும் தகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரோ தம்பி நெடுக்ஸ்,

நாட்டுக்காக போரடபோனவர்கள் அது எந்த இயக்கமாகட்டும் இப்ப கொமடியனாகத்தான் போனார்கள்.முள்ளிவாய்க்காலில் சாகாமல் தப்பிவந்தவர்கள் வில்லன்கள்,பலவந்தமாகபிடிக்கப்பட்டு இப்ப நடுவீதியில் அலையும்சிறுமிகள் விபச்சாரிகள்,பிரச்சனை என்றவுடன் நாட்டைவிட்டு ஓடி வந்த அகதிகளையும் பார்த்து எள்ளிநகையாடும் ஸ்கொலசிப்பில் வந்த நீர் உண்மையில் கீரோதான்.இறந்த பிள்ளைகளை இப்பவும் நினைது ஏங்கும் தாயார்களை விட மாவீரரை வைத்து இணையத்தில் வீரம் காட்டும் உமக்கு "எக்ஸ்டீம் அல்ரா சுப்பெர் ஸ்ரார்" எனும் பட்டம் தந்தாலும் தகும்.

இப்படித் தான் கனபேர் சொல்லிக் கொண்டு திரியினம்.. நாட்டுக்காகப் போராடப் போனவை என்று. உவையள்ள கனக்கப் பேர் போராடப் போனது நாட்டுக்காக அல்ல பெட்டைக்காக.. அது வேற கதை. நாட்டுக்காகப் போராடப் போனவன்.. இறுதி வரை நாட்டுக்காகவே போராடினான். இன்றும் போராடிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் தனது இலட்சியம் வெல்லும் வரை போராடிக் கொண்டு தான் இருப்பான். அவன் தான் நாட்டுக்காக போராடப் போனவன் எனப்படுவான்.

நாட்டுக்காக போராடுறன் என்று சோத்துப் பார்சல் பறிச்சு திண்டவனும்.. ஆமிக்காரன் வர துவக்கப் போட்டிட்டு ஓடி.. பெட்டையளோட பதுங்கிக் கிடந்தவனும்.. அப்படியே இந்தியா.. கனடா.. ஐரோப்பா.. அவுஸி என்று போய் செற்றிலானதும்.. நாட்டுக்காகப் போராடினது என்றால்.. நடிகர் வடிவேலுவும் பல படங்களில் நாட்டுக்காக போராடி இருக்கிறார் என்றாகி விடும். காமடி சார். உங்களைப் போல ஒரு ஜோக்கரை நான் எங்கும் காணவே இல்லை. :lol::D

சோத்துப் பார்சலோட மட்டும் போகாம... பலவந்தமாக பெண் விடுதலை அளிக்கிறம் என்று மதில்களால் வேலிகளால் எட்டி எட்டி பார்த்து..எந்த வீடுகளில.. வடிவான பெட்டையள் இருக்கென்று கண்டு அவையை மிரட்டி.. இழுத்துக் கொண்டு ஓடினதுகள்.. அதில எத்தனையோ பின்னர் வீதியல விசர் பிடிச்சு அலையேக்க வராத பெரும் கரிசணை.. பலவந்தமாக என்ற பதத்தோடு தங்கைகள் மீது இன்று.. வருவது வேடிக்கையாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் சேர்ந்த பெண்களில் அநேகர் புளொட்.. ஈபி மற்றும் கும்பல்களின் தொல்லை தாங்க முடியாது.. அவர்களின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க சேர்ந்தவர்களே அதிகம். எனக்கு தெரிந்த ஒரு அக்கா.. சுதந்திரப் பறவைகளில இருந்தவா. இப்ப கனடாவில இருக்கிறா. அவாவ புளொட் காரங்கள்.. கடத்திக் கொண்டு போய் அடைச்சு வைச்சு கொடுமைப் படுத்தி... கலியாணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினவங்கள். அப்புறம்.. ஒரு நாள் அந்த வீட்டு ஓனர் அங்க வர விட்டிட்டு ஓடிட்டாங்கள். அந்தப் பெரியவர் அந்த அக்காவை மீட்டு வீட்டில் சேர்த்தார். அதன் பின்னர் இவர்களைப் பலிவாங்க அந்த அக்கா புறப்பட்டு சுதந்திரப் பறவைகளில இணைந்தவா. இந்த பெட்டைப் பொறுக்கிகளுக்கு பயந்து சுதந்திரப் பறவைகளில் சேர்ந்த பலர் வடிவான அக்காமார். காரணம்.. இந்த கழுகுகளின் தொல்லை..! இன்று அவை அவர்களுக்காக கண்ணீரும் வடிக்கின்றவாம் எல்லோ...! எதிரிகளுக்கு கூட சொந்த தங்கைகளை விபச்சாரத்துக்கு கட்டாயப்படுத்தி விட்டு பிழைத்த பேடிகள் இவர்கள்.. என்பது இன்னொரு பக்க மகா வேதனை. :unsure::o

இதுதான் நீங்கள் போராடப் போன இலச்சனங்கள்...! இன்று நீங்கள் தங்கைகளுக்காக வருந்துவதாக நீலிக்கண்ணீரும் வடிக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் ஓய்வுக்கு வந்துள்ள நிலையில்.. அதில் ஈடுபட்ட போராளிகளுக்கு பாதுகாப்பளித்து.. சமூக மீளிணைவு வாழ்வளிக்க வேண்டியது எல்லோரினதும் கடமை. அதைச் செய்வதை விடுத்து.. அவள் பலவந்தமாக இழுக்கப்பட்டு.. இன்று வீதியில் விபச்சாரியா கிடக்கிறாள்.. என்று கொண்டு புலம்பித் திரிவதல்ல தீர்வு. அவளை யார் விபச்சாரியாக்கி.. வீதியில் அலைய விட்டுள்ளார்கள்.. சிங்களத்துக்கு காவடி தூக்கும் முன்னாள் நாட்டுக்காகப் போராடிய கர்ம வீரர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. வரதராசுப் பெருமாள்.. ஆனந்த சுந்தரி.. சாறி சங்கரி.. இவை எல்லாம் என்ன மாங்காயா பறிச்சுக் கொண்டிருக்கினம். இன்னும் புலியும் பிரபாகரனுமா வன்னில இருக்குது. பயந்து பதுங்க. போராட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டவள் என்ற ஒரு நாமத்தை திணித்து.. சொந்தத் தங்கைகளை சிங்களத்துக்கு விபச்சாரத்துக்கு விட்டு பிழைக்கும் பேடிகள் யார்...??!

நேற்று அவள் விடுதலை வேங்கை.. இன்று அவள் விடுதியில் விபச்சாரி. நேற்று அவள் புலிகளின் ஆட்சியில். இன்று அவள்.. துரோகிகளின் கைகளில். அவளை விபச்சாரியாக்கியது.. புலிகளா.. துரோகிகளா..???! அவளை எதிரிக்கு அடிமையாக்க முன்னின்றவன் யார்.. துரோகிகள்..! எவன் எதிரியோடு கூட நின்று சொந்தத் தங்கைகளைக் காட்டிக் கொடுத்தவன்.. சித்திரவதை செய்தவன்..??! துரோகிகள். இதைத் தானே நீங்கள் நாட்டுக்காக சாறி.. சிங்கள நாட்டுக்காக கடமை தவறாது செய்திருக்கிறீர்கள்.

அவளை உண்மையில் சொந்த தமிழ் தங்கையாக நீங்கள் பார்த்திருந்தால்.. அவள் போர்க்களத்தில் இருந்து விடுபட்டதும்.. அரவணைத்து காத்திருப்பீர்கள். அவள் புலியாகி நாட்டுக்காக போராடினதை இன்றும் மாற்றான் மனப்பான்மையோடு பார்ப்பதால் தான்.. அவளை விபச்சாரியாக்கி அது புலியோடு போராடியதால் தான் என்றும் காட்ட முனையும் கொடூரத்தை செய்கிறீர்கள். தொடர்ந்தும் தவறுகளைச் செய்து கொண்டு பழிகளை புலிகள் மீதும் போராட்டத்தின் மீது சுமத்திவிட்டு நீங்கள் நாட்டுக்காகப் போராடியவர்கள் என்ற முத்திரியையையும் தரித்துக் கொண்டு எதிரியின் கூலிகளாக வலம் வந்து வளமான வாழ்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் துரோகிகளின் இலட்சனம் என்றும். இந்தியப் படைகளோடும் சேர்ந்தும் இதைத் தான் செய்தீர்கள். சிங்களப் படைகளோடு சேர்ந்தும் அதைத் தான் செய்கிறீர்கள். பேடிகளே.. நீங்கள் மனிதர்களா... அல்லது பேய்களா..??! நீங்களா எங்கள் தங்கைகளுக்காக கண்ணீர் வடிக்கிறீர்கள்..??! அவர்களின் சோகக் கதைகளை எழுதும் கதாநாயகர்களாகிய நீங்களே.. அவற்றின் கதாசிரியர்களும்.. ஆனது கொடுமை. அது மக்களுக்கு நன்றாகவே தெரியும்..! மக்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது.

Link to comment
Share on other sites

ஜேர்மனியிலும் ஒருசில மாதங்களிற்கு முன்பு கட்டாய இராறுவ சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

83 ஆம் ஆண்டு கலவரத்தின் பின், போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சொந்தப்பிள்ளை என்ற கவலையிருந்தாலும் தமிழனுக்காக போராடப் போகிறான் என்று பெருமைப்பட்டவர்கள் பலர். பல்கலைக்கழக படிப்பையும் கைவிட்டு போராடச் சென்றவர்கள் பலர். அந்த நேரத்திலும் சிறிய குழுவினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்பு இயக்கங்களுக்கிடையே அடிபாடுகள் தொடங்க போராட்டத்தில் சேருபவர்களின் தொகை குறையத் தொடங்கிவிட்டது.

சிறிலங்காவின் மிகச் சிறந்த இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜானக பெரேரா ஒருமுறை கூறினார். புலிகள் 2000 ஆண்டு யாழ்ப்பாணத்தை சுற்றி வளைத்த பொழுது, இராணுவம் பலகீனமான் மனநிலையில் இருந்ததாம். மக்களும் புலிகளுடன் சேர்ந்து தங்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள் என்று பயந்தார்கலாம். அன்று மக்களும் வீதிக்கு வந்திருந்தால், இராணுவம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும் என்று.

போராட்டத்தில் மக்கள் பார்வையாளராகவே அதிகம் இருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞனும்,சித்தனும் அது பற்றி மேலே எழுதியுள்ளார்கள்...வன்னியில் உள்ள மக்களுக்கும் சரி,ஈழத்தில் உள்ள மக்களுக்கும் சரி ஏன் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு கூட நாடு வேண்டும் ஆனால் நாங்கள் நேரடியாய் களத்தில் இறங்க மாட்டோம் வேண்டுமானால் புலம் பெயர் மக்கள் காசை மட்டும் இங்கிருந்து அனுப்பி விட்டு[காசும் இங்கேயிருந்து கஸ்டப்பட்டு உழைத்து தான் அனுப்புகிறோம் இல்லை என சொல்லவில்லை.] ஆனால் இங்கேயிருந்து காசு அனுப்புவதும் அங்கே களத்தில் நேரடியாக சண்டை பிடித்து உயிரைக் கொடுப்பதும் ஒன்டா? இல்லைத் தானே!

புலிகள் போராட வெளிக்கிட்டதால் தானே அதைக் காரணம் காட்டி நான்,நீங்கள் உட்பட அநேகமானோர் புலம் பெயர்ந்தோம் 1)அப்படி புலம் பெயர விட்டு இருக்க கூடாது 2)அப்படி புலம் பெயருவோரது குடும்பத்தில் இருந்து கடைசி ஒருவராவது இயக்கத்திற்குப் போய் இருக்க வேண்டும்.

போராட்டமானாது நாங்களாகவே உணர்ந்து ஒரு உணர்வு ரீதியாக போராடி இருக்க வேண்டும்...எங்கள் மக்கள் நாளும் கொல்லப்படுகிறார்கள்,எங்கள் சொந்த நிலங்கள் பறி போகின்றது அதைத் தடுக்க ஈழத்தில் ஆர்ப்பாட்டங்கள்,எழுச்சிகள்,கண்டனப் பேரணிகள் என செய்திருக்கலாம் குறைந்த பட்சம் முள்ளி வாய்க்காலில் புலிகள் ஒரு பக்கத்தில் சண்டை பிடிக்க மற்ற பக்கத்தில் உள்ள மக்கள் இப்படி செய்திருந்தால் சர்வதேசத்தை ஈர்த்திருக்கும்[அதை முன் நின்று செய்கிற கொஞ்ச மக்கள் கொல்லப்படுவார்கள் தான் இல்லை என்று இல்லை ஆனால் முன் நின்று நடத்தி தங்கள் உயிரைக் கொடுக்க ஒருவருமே தயார் இல்லை என்பது தான் உண்மை]..போராட்டத்தில் புலிகள் மட்டும் தான் தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும் என்ட நிலை மாற வேண்டும்.

துனிசியாவில்ஒரு தனி மனிதன் தற்கொலை செய்ததால் அந்த எப்படி ஒரு சடுதியான மாற்றத்திற்கு உள்ளானது?...அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சாகவில்லையா? செத்தவர்கள் தானே ஏன் அவர்களுக்கு உள்ள உணர்வு,ஒற்றுமை எங்களுக்கு இல்லாமல் போனது?...எகிப்து,சூடான்,லிபியா போன்ற நாடுகளிலும் மக்கள் போராட்டம் நடந்தது தானே இல்லையா?...புலி அழிந்து விட்டது என்றும்,தலைவர் இறந்து விட்டார் என்றும் சொல்கிறார்கள் இவ்வளவு நாளும் எங்களுக்காக போராடியவர்கள் தற்போது இல்லை என்பது ஏன் எங்களை தாக்கவில்லை?...இதற்கு பிறகு தான் என்னும் ஆக்ரோசமாய் வீதியில் இறங்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

என்ட கருத்து சரி என நான் வாதிடவில்லை அது தப்பாகவும் இருக்கலாம் ஆனால் என் மனதில் பட்டதை சொன்னேன்...என் கருத்து யார் மனதையாவது நோகடித்து இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி உங்களுடைய நேரத்திற்கு!

இங்கு சிலர் புலிகளுக்கு சர்வதேச அரசியல் வகுப்பெடுக்க கிளம்பியிருக்கிறார்கள் அதனாலேயே அந்த கேள்வி வந்தது.

மக்கள் மாக்களாகவே இருந்தார்கள் அதன் விளைவுகள்தான் இப்போது அறுவடையாகின்றன. உங்களுடைய கருத்தும் கிட்டதட்ட அப்படியே உள்ளது. அதுதான் உண்மையும் கூட.

போராட்ட சுமையை தானக சென்று தோள்களில் தாங்கி தற்கொலை எனும் அற்பணிப்பிற்கு ஆளாகி அடுத்த வீட்டு பிள்ளை சாகுமு;போது யாருக்கும் அதன் வலி தெரியவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பு என்று வந்து நாட்டிற்காக யாவரும் உழைக்க வேண்டும் என்ற நிலை வந்ததால் போராட்டம் கசப்பாகி போய்விட்டது. இந்த இனத்தை வைத்து ஒரு விடுதலை போரை எப்படி 30 வருடம் நடத்தினார்கள் என்பதுதான் விந்தையானது.

இப்படித் தான் கனபேர் சொல்லிக் கொண்டு திரியினம்.. நாட்டுக்காகப் போராடப் போனவை என்று. உவையள்ள கனக்கப் பேர் போராடப் போனது நாட்டுக்காக அல்ல பெட்டைக்காக.. அது வேற கதை. நாட்டுக்காகப் போராடப் போனவன்.. இறுதி வரை நாட்டுக்காகவே போராடினான். இன்றும் போராடிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் தனது இலட்சியம் வெல்லும் வரை போராடிக் கொண்டு தான் இருப்பான். அவன் தான் நாட்டுக்காக போராடப் போனவன் எனப்படுவான்.

நாட்டுக்காக போராடுறன் என்று சோத்துப் பார்சல் பறிச்சு திண்டவனும்.. ஆமிக்காரன் வர துவக்கப் போட்டிட்டு ஓடி.. பெட்டையளோட பதுங்கிக் கிடந்தவனும்.. அப்படியே இந்தியா.. கனடா.. ஐரோப்பா.. அவுஸி என்று போய் செற்றிலானதும்.. நாட்டுக்காகப் போராடினது என்றால்.. நடிகர் வடிவேலுவும் பல படங்களில் நாட்டுக்காக போராடி இருக்கிறார் என்றாகி விடும். காமடி சார். உங்களைப் போல ஒரு ஜோக்கரை நான் எங்கும் காணவே இல்லை. :lol::D

சோத்துப் பார்சலோட மட்டும் போகாம... பலவந்தமாக பெண் விடுதலை அளிக்கிறம் என்று மதில்களால் வேலிகளால் எட்டி எட்டி பார்த்து..எந்த வீடுகளில.. வடிவான பெட்டையள் இருக்கென்று கண்டு அவையை மிரட்டி.. இழுத்துக் கொண்டு ஓடினதுகள்.. அதில எத்தனையோ பின்னர் வீதியல விசர் பிடிச்சு அலையேக்க வராத பெரும் கரிசணை.. பலவந்தமாக என்ற பதத்தோடு தங்கைகள் மீது இன்று.. வருவது வேடிக்கையாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் சேர்ந்த பெண்களில் அநேகர் புளொட்.. ஈபி மற்றும் கும்பல்களின் தொல்லை தாங்க முடியாது.. அவர்களின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க சேர்ந்தவர்களே அதிகம். எனக்கு தெரிந்த ஒரு அக்கா.. சுதந்திரப் பறவைகளில இருந்தவா. இப்ப கனடாவில இருக்கிறா. அவாவ புளொட் காரங்கள்.. கடத்திக் கொண்டு போய் அடைச்சு வைச்சு கொடுமைப் படுத்தி... கலியாணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினவங்கள். அப்புறம்.. ஒரு நாள் அந்த வீட்டு ஓனர் அங்க வர விட்டிட்டு ஓடிட்டாங்கள். அந்தப் பெரியவர் அந்த அக்காவை மீட்டு வீட்டில் சேர்த்தார். அதன் பின்னர் இவர்களைப் பலிவாங்க அந்த அக்கா புறப்பட்டு சுதந்திரப் பறவைகளில இணைந்தவா. இந்த பெட்டைப் பொறுக்கிகளுக்கு பயந்து சுதந்திரப் பறவைகளில் சேர்ந்த பலர் வடிவான அக்காமார். காரணம்.. இந்த கழுகுகளின் தொல்லை..! இன்று அவை அவர்களுக்காக கண்ணீரும் வடிக்கின்றவாம் எல்லோ...! எதிரிகளுக்கு கூட சொந்த தங்கைகளை விபச்சாரத்துக்கு கட்டாயப்படுத்தி விட்டு பிழைத்த பேடிகள் இவர்கள்.. என்பது இன்னொரு பக்க மகா வேதனை. :unsure::o

இதுதான் நீங்கள் போராடப் போன இலச்சனங்கள்...! இன்று நீங்கள் தங்கைகளுக்காக வருந்துவதாக நீலிக்கண்ணீரும் வடிக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் ஓய்வுக்கு வந்துள்ள நிலையில்.. அதில் ஈடுபட்ட போராளிகளுக்கு பாதுகாப்பளித்து.. சமூக மீளிணைவு வாழ்வளிக்க வேண்டியது எல்லோரினதும் கடமை. அதைச் செய்வதை விடுத்து.. அவள் பலவந்தமாக இழுக்கப்பட்டு.. இன்று வீதியில் விபச்சாரியா கிடக்கிறாள்.. என்று கொண்டு புலம்பித் திரிவதல்ல தீர்வு. அவளை யார் விபச்சாரியாக்கி.. வீதியில் அலைய விட்டுள்ளார்கள்.. சிங்களத்துக்கு காவடி தூக்கும் முன்னாள் நாட்டுக்காகப் போராடிய கர்ம வீரர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. வரதராசுப் பெருமாள்.. ஆனந்த சுந்தரி.. சாறி சங்கரி.. இவை எல்லாம் என்ன மாங்காயா பறிச்சுக் கொண்டிருக்கினம். இன்னும் புலியும் பிரபாகரனுமா வன்னில இருக்குது. பயந்து பதுங்க. போராட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டவள் என்ற ஒரு நாமத்தை திணித்து.. சொந்தத் தங்கைகளை சிங்களத்துக்கு விபச்சாரத்துக்கு விட்டு பிழைக்கும் பேடிகள் யார்...??!

நேற்று அவள் விடுதலை வேங்கை.. இன்று அவள் விடுதியில் விபச்சாரி. நேற்று அவள் புலிகளின் ஆட்சியில். இன்று அவள்.. துரோகிகளின் கைகளில். அவளை விபச்சாரியாக்கியது.. புலிகளா.. துரோகிகளா..???! அவளை எதிரிக்கு அடிமையாக்க முன்னின்றவன் யார்.. துரோகிகள்..! எவன் எதிரியோடு கூட நின்று சொந்தத் தங்கைகளைக் காட்டிக் கொடுத்தவன்.. சித்திரவதை செய்தவன்..??! துரோகிகள். இதைத் தானே நீங்கள் நாட்டுக்காக சாறி.. சிங்கள நாட்டுக்காக கடமை தவறாது செய்திருக்கிறீர்கள்.

அவளை உண்மையில் சொந்த தமிழ் தங்கையாக நீங்கள் பார்த்திருந்தால்.. அவள் போர்க்களத்தில் இருந்து விடுபட்டதும்.. அரவணைத்து காத்திருப்பீர்கள். அவள் புலியாகி நாட்டுக்காக போராடினதை இன்றும் மாற்றான் மனப்பான்மையோடு பார்ப்பதால் தான்.. அவளை விபச்சாரியாக்கி அது புலியோடு போராடியதால் தான் என்றும் காட்ட முனையும் கொடூரத்தை செய்கிறீர்கள். தொடர்ந்தும் தவறுகளைச் செய்து கொண்டு பழிகளை புலிகள் மீதும் போராட்டத்தின் மீது சுமத்திவிட்டு நீங்கள் நாட்டுக்காகப் போராடியவர்கள் என்ற முத்திரியையையும் தரித்துக் கொண்டு எதிரியின் கூலிகளாக வலம் வந்து வளமான வாழ்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் துரோகிகளின் இலட்சனம் என்றும். இந்தியப் படைகளோடும் சேர்ந்தும் இதைத் தான் செய்தீர்கள். சிங்களப் படைகளோடு சேர்ந்தும் அதைத் தான் செய்கிறீர்கள். பேடிகளே.. நீங்கள் மனிதர்களா... அல்லது பேய்களா..??! நீங்களா எங்கள் தங்கைகளுக்காக கண்ணீர் வடிக்கிறீர்கள்..??! அவர்களின் சோகக் கதைகளை எழுதும் கதாநாயகர்களாகிய நீங்களே.. அவற்றின் கதாசிரியர்களும்.. ஆனது கொடுமை. அது மக்களுக்கு நன்றாகவே தெரியும்..! மக்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது.

இவகைள் குறைந்தபட்டசம் ஐந்தறிவாவது உள்ள மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ள கூடிய கருத்துக்கள். ஏன் ஜந்துக்களுடன் கருத்தாடி நேரத்தை வீணாக்குகறீர்கள்? பூச்சிகள் ஞைங் என்று எப்போதும் கரைந்துகொண்டுதான் இருக்கும். அவர்களுக்கு தெரிந்ததைதானே அதுகளாலும் செய்ய இயலும்

Link to comment
Share on other sites

பிழை எங்கள் எல்லாரிலும் தான் இருக்கிறது.இனியாவது எல்லோரும் எம்மால் இயன்றவரை செயற்படுவோம்.இங்கே புலிகள் என்பது நாங்கள் தான். நாங்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் பிழைகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் போராட்டத்தின் தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்காக காரணங்களை ஆராய வேண்டும். நாங்கள் எல்லோரும் பரிசுத்தவான்கள் புலிகளே எல்லாவற்றிற்க்கும் காரணம் என்னும் தோரணையில் எழுதி வந்த வரும் 'மாற்றுக்' கருத்து கருத்துக் கந்தசாமிகள் போல் நாம் செயற்பட முடியாது.அதே நேரம் தவறுகளை மீழ ஆராய்ந்து முன் செல்ல வேண்டும்.தவறே நடக்கவில்லை என்று சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

புலிகள் கருணானிதி பற்றி முன்னரே அறிந்து இருந்தனர்.ஆனால் புலிகள் மீண்டும் மீண்டும் இழைத்த தவறு சந்தர்ப்ப வாதத் தலவர்களை நம்பி ஏமாந்தது.இன்று சீமான் தலமையில் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் இயக்கம் எப்பவோ கட்டப்படிருக்க வேண்டும்.தமிழ் மக்களை முன் நிறுத்தி அவர்களின் மனித உரிமைகள் பேசப் பட்டிருக்க வேண்டும்.ஆனால் ஒருவகை கிரோயிசப் பாணியில் புலிகள் வல்லவர்கள் அவர்களை சிங்கள அரச படைகளால் தோர்ற்கடிக்கவே முடியாது என்னும் பாணியில் நம்பிக்கைகள் வளர்க்கப்பட்டதால், பல தமிழர்கள் வெறும் பார்வையாளராக ஒரு தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தலைவர் தமது உரைகளில் சர்வதேசம் பற்றிக் கூறிய போதும் எப்போதும் தம்மை அவர்கள் அங்கீகரிப்பார்கள் என்னும் நம்பிகையையே வெளியிட்டார்.அந்த நம்பிகையை சர்வதேசமும் இந்தியாவும் வளர்த்தது.இன்றும் டிஎன் ஏ இந்திய ஆளும் வர்க்கத்தை நம்ப்பிக் கொண்டிருப்பதைப் போல.மாற்றாக இந்தியாவுக்குள் நாம் நமது நேச சக்திகளை அடையாளம் கண்டு பரந்து பட்ட வெவ்வேறு இனக்குழுமங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.அதனை நிச்சயமாக நாம் முன்னர் செய்யவில்லை.

நாம் பலமாக இருந்தால் தான் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும்.எமது பலத்தை இழந்து எதிரி தனது பலத்தை அதிகரித்துக் கொண்டிருந்த போது நாம் சர்வதேசத்தை நோக்கி எம்மை அங்கீகரியுங்கள் என்று கோரிக் கொண்டு இருந்திருக்கக் கூடாது.ஆளனிப் பற்றாக் குறை ஆயுதப் பற்றாக் குறை எல்லாம் முன் கூட்டியே எதிர் பார்க்கப் பட்டதே.ஒரு யுத்ததின் முடிவு அதன் திட்டமிடலிலையே முடிவாகிறது. புலிகளின் பல வெற்றிகளுக்குப் பின்னால் இருந்தது இந்தத் திட்டமிடல், எதிரி எதிர் பார்க்காத இடங்களில், நேரத்தில் தாக்கியமை, படைகளை நகர்த்தியமை.அந்தப் பலத்தை புலிகள் சர்வதேசத்தின் அங்கீகரத்துகாகக் கைவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

யுத்தகாலத்தில் மிகைமதிப்பீடுகள் செய்யப்பட்டு புலம்பெயர் தமிழர்கள் அரசு எம்மீது திணித்த யுத்தத்துக்கு முகம் கொடுக்க அனைத்து வளங்களையும் ஓரிடத்தில் குவித்தார்கள். 2006/2007 காலப்பகுதியில் இந்த யுத்தம் அடையக்கூடிய முடிவுகள் குறித்து ஒரு விரிந்த பார்வையை அநேக புலம்பெயர்ந்த தமிழர்கள் கொண்டிருக்கவில்லை. உலகு தழுவிய ஒரு கூட்டுப்படைகளில் சுற்றிவளைப்புக்குள் நாம் அவற்றை புரிந்தோ புரியாமலோ எம்மை ஒடுக்கிக்கொண்டோம். அதற்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தெளிவற்ற உலக அரசியல் பார்வையும் ஒரு முக்கிய காரணம்.

ஐநாவின் அறுபது வருட வரலாற்றில் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளும் எமக்கு எதிராக அணிதிரண்ட போல் மிகக்குறைவான சந்தர்ப்பங்களில்தான் ஒன்றுபட்டத்தை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கவனிக்கத்தவறி விட்டார்கள். இன்றும் சில புண்ணாக்கு ஆய்வாளர்கள் சிங்களத்தின் இராசதந்திரம் தமிழர்களை விட மிகமிக சிறப்பானதென சும்மா ஒப்புக்கு சப்பித்துப்புகிறார்கள். நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் சிங்களம் ஒன்றையும் சிந்தித்துக் கிழிக்க வில்லை. ஒரே ஒரு விடயம் மட்டும் செய்தது சிங்களம். அந்த காலத்தை பயன்படுத்திக்கொண்டார்கள் அவ்வளவுந்தான். அதைத்தவிர அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. காகம் இருக்க பனங்காய் விழுந்த கதைபோலானது யுத்தத்தின் முடிவு.

சரி அதைவிடுவோம். இப்போ யுத்தம் முடிந்த கதை.

யுத்தத்தின் பின் தொடங்கியிருக்கும் புதிய சூழலை நாம் எப்படி கையாளப்போகிறோம்? அதற்கு முதலில் புதிய சூழல் குறித்த எமது புரிதல் என்ன?

விரிவான விவாதங்களையும் ஆரோக்கியமான உரையாடல்களயும் செய்வதன் மூலமே தமிழ் இனம் ஒரு வெற்றிபெற்ற இனமாக மிளிர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி. நான் நினைத்திருந்தேன் எனக்கு மட்டும் தான் இப்படி இருந்ததோ என்று. வேறு ஆட்களும் அப்படி யோசித்திருக்கிறார்கள்.

வழமைபோல பலரும் தங்களது எண்ணங்களை பார்கிறார்கள். எனக்கே பயமாயிருக்கு நானும் நாளைக்கு அந்தர் பல்டி அடித்து, 12 - 13 வயது பொடியன், பெட்டையை- மொடையடித்து சென்றியில விட்டது சரியோ என்கிறமாதி. - இங்கே சில போர் சொல்லுகினம், புலிகளுக்கு வேற தெரிவுகள் இருக்காத படியா செய்தவை என்று. வாழ்க வளமுடன். என்னுடைய தம்பி, தஞ்சச்சியாய், பிள்ளையாய், பேரன் பேத்தியாய், அயலாவனாய்,ஊர்காரனாய், பள்ளிகிகுடத்தவனாய், - , இத்தியாதி, இத்தியாதியாய் இல்லாவிட்டால். கட்டாய ஆட்சேர்ப்பு தவிர்க்க முடியாதது, அது காலத்தின் கட்டாயம், காலத்தின் கோலம், - அது தாய் தகப்பனை அடித்து உதைத்து சுட்டுடும், -செய்யத்தான் வேண்டும். அது எங்களை சுற்றி தொடுகிற தூரத்தில் எதிரி நின்றாலும், அல்லது நாங்கள் யுத்தத்தில் தோற்பது என்று "மையில தோச்சு காகிதத்தில் பதித்து தந்தாலும்" செய்யத்தான் வேண்டும். ஏனெனில் அதைப்போலத்தான் செவ்வாயிலும், புதனினும் செய்தவர்கள். இப்ப வியாழனில செய்கிறார்கள்.நாளைக்கு நேப்டுனிலும், புளூட்டோவிலும் செய்ய திட்டம் தீட்டி வைத்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

புலிகள் ஓடிறவனை வைச்சு போராட்டம் நடத்த முடியாது என்றிருந்த காலம்.. ஒரு கரந்தடிப்படையாக இருந்த காலம். ஆளணி இன்றி நிலங்களை தக்க வைக்க முடியாது என்றிருந்த காலத்தில் தான் புலிகள் என்ன சிங்கள இராணுவமும் ஓட ஓட கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது.

கட்டாய ஆட்சேர்ப்பு என்பது போர்க் காலத்தில் கள நிலைமைக்கு ஏற்ப நிகழ்கின்ற ஒன்று தான். பெரிய பெரிய நாடுகளே அதை செய்திருக்கின்றன.

இன்று புலிகள் வென்றிருந்தால்.. அந்த கட்டாய ஆட்சேர்ப்புக் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும்.. இன்னொருவருக்கு வெளிநாட்டு வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தால்.. இவர்கள் இன்று வந்து இப்படி கதை எழுதி இருக்கமாட்டார்கள்.

நாங்கள் அறிய தங்கள் குடும்பத்திற்கு பாஸ் எடுக்க வெளிநாட்டுக்குப் போக.. ஒரு பிள்ளையை இயக்கத்துக்கு அனுப்பிப் போட்டு போனவர்களையும் பின்னர் மாமன் மச்சானை வைச்சு அழுது குளறி அந்தப் பிள்ளையையும் வெளில எடுத்த ஆக்களையும் காண முடிந்தது.

எனது பதிவுக்கு முதலிலேயே மன்னிப்பு கேட்கிறேன், ஏனென்றால், நானும் பிரச்சனை என்றதும் ஓடிவந்தவன் என்றபடியால்.

வெளிநாடுகள் ஆட்சேர்ப்பு செய்தது - ஒரு வயதுக்கு பின்னர் தான். சிறார்களை சேர்ப்பதில்லை.

எமது குடும்பங்களிலும் ஆட்சேர்ப்பு நடந்திருந்தால் எமது நிலைப்பாடு வேறாக இருந்திருக்கும். எனவே, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, புலிகள் செய்தது சரி/தவறு என்று நாம் சொல்வது சரியில்லை.

புலிகள் தமக்கு சரியென பட்டவற்றை அந்தந்த காலகட்டங்களில் செய்தார்கள். அவர்கள் தமக்காக போராடவில்லை. எல்லருக்குமாகத்தான் போராடினார்கள்.

அவர்களுக்கே சிலர் இங்கே (நெடுக்கு அண்ணர் - நீங்கள் இல்லை) அரசியல் பாடங்கள் எடுப்பது

காமெடி தான்.

மற்றபடி சாத்திரி அண்ணருக்கு நன்றி - இந்த கதையை இணைத்ததற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பிரான்சில் 18 வயதை அடைந்ததும் ஒரு பிரெஞ்சுப்பிள்ளைக்கு நடக்கும் பயிற்சிக்கான அழைப்பையும் அதை அவர் கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என்பதையும் பலரும் விமர்சித்து உள்ளனர்.

எனது அடுத்து மகனுக்கு அடுத்த வருடம் 18 வயது ஆகிறது. அவர் தற்போதே இங்குள்ள நகரசபையில் அதற்கான பதிவை மேற்கொண்டுள்ளார். ஏன் செய்கின்றார் என்றால் அது இல்லாமல் பல்கலைக்கழகம் செல்லமுடியாது.

உங்களுக்கு வளர்ந்த பிள்ளைகள் இல்லைப்போலும்.

இன்னொன்று

புலிகள் பிள்ளைகளைச்சேர்த்ததும்

பிரான்சில் பிள்ளைகளை சேர்ப்பதையும் ஒன்றாக நான் பார்க்கின்றேனா என்றால்?

நான் இரண்டையும் அரசுகளாக பார்க்கின்றேன்.

அந்த அரசுகள் தங்களுக்கு தேவை என்று கூப்பிட்டால் பிரான்சிலுள்ள எனது மகனும் பிரான்சுக்காக போராட போயாகவேண்டும். நான் மறுத்தாலும்..............................

(இராணுவத்தில் தாமாக சேருவது என்பது வேறு. அது தொழில். எல்லாமக்களும் நாட்டுக்கு ஆபத்துவந்தால் போராடவரணும் என்று எல்லோரையும் தயாராக வைத்திருத்தல் என்பது வேறு.)

பிரான்சில் ஆயுதப்பயிற்சிதான் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பதிவுகள் சான்றிதழ்கள் தயாராக வைத்திருத்தல் எல்லாமே வழமைபோல் நடைமுறையில் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி. நான் நினைத்திருந்தேன் எனக்கு மட்டும் தான் இப்படி இருந்ததோ என்று. வேறு ஆட்களும் அப்படி யோசித்திருக்கிறார்கள்.

வழமைபோல பலரும் தங்களது எண்ணங்களை பார்கிறார்கள். எனக்கே பயமாயிருக்கு நானும் நாளைக்கு அந்தர் பல்டி அடித்து, 12 - 13 வயது பொடியன், பெட்டையை- மொடையடித்து சென்றியில விட்டது சரியோ என்கிறமாதி. - இங்கே சில போர் சொல்லுகினம், புலிகளுக்கு வேற தெரிவுகள் இருக்காத படியா செய்தவை என்று. வாழ்க வளமுடன். என்னுடைய தம்பி, தஞ்சச்சியாய், பிள்ளையாய், பேரன் பேத்தியாய், அயலாவனாய்,ஊர்காரனாய், பள்ளிகிகுடத்தவனாய், - , இத்தியாதி, இத்தியாதியாய் இல்லாவிட்டால். கட்டாய ஆட்சேர்ப்பு தவிர்க்க முடியாதது, அது காலத்தின் கட்டாயம், காலத்தின் கோலம், - அது தாய் தகப்பனை அடித்து உதைத்து சுட்டுடும், -செய்யத்தான் வேண்டும். அது எங்களை சுற்றி தொடுகிற தூரத்தில் எதிரி நின்றாலும், அல்லது நாங்கள் யுத்தத்தில் தோற்பது என்று "மையில தோச்சு காகிதத்தில் பதித்து தந்தாலும்" செய்யத்தான் வேண்டும். ஏனெனில் அதைப்போலத்தான் செவ்வாயிலும், புதனினும் செய்தவர்கள். இப்ப வியாழனில செய்கிறார்கள்.நாளைக்கு நேப்டுனிலும், புளூட்டோவிலும் செய்ய திட்டம் தீட்டி வைத்துள்ளார்கள்

சிறார்களை படையில் சேர்ப்பதை விடுதலைப்புலிகள் தானா செய்தார்கள். ஏன் ஈபி காரர்.. புளொட் காரர்.. ஈபிடிபி காரர் செய்யவில்லையா. கொழும்பில் நடந்த தாக்குதல் ஒன்றில் பலியான ஈபிடிபி ஆள் 17 வயதானவர். இந்தியப் படையினர் ரி என் ஏக்கு ஆட்பிடிக்க.. பள்ளி மாணவர்களை துரத்தித் துரத்தி பிடித்ததை தாங்கள் அறியவில்லைப் போலும். அல்லது மறந்து விட்டீர்கள் போலும்.

கடேற்.. என்று பல நாடுகள் சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிறீலங்காவும் அண்மையில் கொக்குவில் இந்துக் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இராணுவப் பயிற்சி அளித்தது. அப்போது ஏன் சிறார்களை இராணுவத்துக்குள்ள கொண்டு போறீங்க என்று நீங்கள் குரல் கொடுக்கவில்லை. சிங்கள பல்கலைக்கழக மாணவர்களே பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி என்பதை ஏற்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையிலும்.. நீங்கள் இந்தப் பயிற்சி அளிப்புக் குறித்து ஏன் சர்வதேச நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க முற்படவில்லை. அதுவும் போர் ஓய்ந்து சமாதான நிலவும் வேளையில் பள்ளிச் சிறுவர்களுக்கு ஏன் இராணுவப் பயிற்சி..???!

விடுதலைப்புலிகளின் சிறார் படையணி பின் தள வேலைகளுக்காக ஒரு காலத்தில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும்.. பின்னர் அதனை அவர்கள் நிறுத்திக் கொண்டு விட்டார்கள். மக்களின் பகிரங்க பங்களிப்பை கோரி அதற்காகவே தேசிய துணைப்படையை உருவாக்கினார்கள். ஆகா சிறார் படையணி தொடர்பில் புலிகள் ஒன்றும் விரும்பிச் செயற்படவில்லை. மாறாக ஆளணி தேவைகளை நிறைவு செய்ய அன்றைய நிலையில் பின் களப்பணிக்கு 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அந்த முறை முற்றாக அகற்றப்பட்டு விட்டது. 1990 களில் 17 வயதுக்கு முதல் இயக்கத்தில் சேர முற்பட்ட பலரை வீட்டுக்கு திருப்பி அனுப்பியதை நான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறேன்.

இஸ்ரேல்.. சிங்கப்பூர்.. சுவிஸ்லாந்து.. நோர்வே போன்ற நாடுகள் சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்து வருகின்றன. அவர்களை ரிசேவில் வைத்தும் கொள்கின்றனர். தீவிர போர் நடவடிக்கை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தால்.. அவர்களை அவர்கள் பயன்படுத்தவே செய்வர். தேசத்தின் பாதுகாப்பு என்பது முன்னுரிமை பெறுகின்ற போது போரில் ஆளணி வளம் என்பது முக்கியமானது. அந்த வகையில் தான் இந்த ஏற்பாடுகள். சிங்கள இராணுவம் கூட வன்னி இறுதிப் போரில்.. 16.. 17 வயது இளம் சிப்பாய்களையே போர்க் களத்துக்கு அனுப்பிக் கொன்றது. பல ஆயிரம் அனுபவம் மிக்க சிங்கள வீரர்கள் போர்க்களத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்க.. அனுபவமற்ற சிறுவர் சிங்களப் படைகளை பெரும் ஆயுத பலப் பிரயோகத்தை நம்பி சிங்களம் அனுப்பி வைத்தது. ஏன் இவற்றை இட்டு யாரும் கருத்துச் சொல்வதில்லை..???!

ஆக.. புலிகள் எது செய்தாலும்... அது எந்த இக்கட்டான நிலையில் செய்யப்பட்டாலும்.. அது தர்மமாகவே இருக்கனும். கொஞ்சமும் அதில் இருந்து பிசகக் கூடாது. ஆனால் மற்றவர்கள் செய்வது எல்லாமே அநியாயமாக இருந்தாலும்.. அது கண்டுகொள்ளப்படக் கூடாதது. இதில் எங்கே ஐயா நீங்கள்.. மனிதத்தை.. நியாயத்தை தேடுறீங்க.. என்பது தான் எனக்குப் புரியவில்லை.

உங்கள் சிலரின் நீலிக்கண்ணீர்.. அப்பட்டமாக அபந்தமாக தெரிகின்ற போதும்.. மீண்டும் மீண்டும் வந்து பசப்பிக்கிட்டு இருப்பது தான் கேவலம்..!

எனது பதிவுக்கு முதலிலேயே மன்னிப்பு கேட்கிறேன், ஏனென்றால், நானும் பிரச்சனை என்றதும் ஓடிவந்தவன் என்றபடியால்.

வெளிநாடுகள் ஆட்சேர்ப்பு செய்தது - ஒரு வயதுக்கு பின்னர் தான். சிறார்களை சேர்ப்பதில்லை.

எமது குடும்பங்களிலும் ஆட்சேர்ப்பு நடந்திருந்தால் எமது நிலைப்பாடு வேறாக இருந்திருக்கும். எனவே, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, புலிகள் செய்தது சரி/தவறு என்று நாம் சொல்வது சரியில்லை.

புலிகள் தமக்கு சரியென பட்டவற்றை அந்தந்த காலகட்டங்களில் செய்தார்கள். அவர்கள் தமக்காக போராடவில்லை. எல்லருக்குமாகத்தான் போராடினார்கள்.

அவர்களுக்கே சிலர் இங்கே (நெடுக்கு அண்ணர் - நீங்கள் இல்லை) அரசியல் பாடங்கள் எடுப்பது

காமெடி தான்.

மற்றபடி சாத்திரி அண்ணருக்கு நன்றி - இந்த கதையை இணைத்ததற்காக.

நன்றி ஈஸ் அண்ணா. :)

Link to comment
Share on other sites

ஜெயசிகுறு சமயத்தில் இருந்ததும் இதே புலி.. அதே தனித்துவம் மிக்க தளபதிகள்.. அதே இணைக்கப்பட்ட சிறார் படை.. வெறுப்புடன் சில தமிழர்கள் / குடும்பங்கள்..! அதே ஒட்டுக்குழுக்கள்.. :unsure:

சிங்கள ராணுவமும் யாழை வென்று ஊக்கத்துடன்.. ஆயுதங்களுக்கும் குறைவில்லை.. அமெரிக்க இந்திய ஆதரவுக்கும் குறைச்சலில்லை. அப்போதிருந்த புலிகளின் ஆளணி, ஆயுத வளத்தையும்விட பல்மடங்கு பலமான வளங்கள்.. :unsure:

இறுதியில் நடந்ததென்ன.. எல்லோரும் ஒருமுறை சிந்தித்தால் நலம்..! :rolleyes:

நான்காம்கட்ட இறுதிப்போரில், எதிரியின் முன்னேற்ற வேகம் எப்படியாக இருந்தது? நெடுங்கேணிப்பகுதியை எல்லாம் சண்டையில்லாமலே கைப்பற்றினார்கள்.. மணலாற்றுப் பகுதியும் அவ்வாறே.. :rolleyes:

இதிலிருந்து ஏதோ ஒன்று விளங்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.. :rolleyes:

Link to comment
Share on other sites

புலிகள் அந்தந்த காலகட்டங்களில் தேவையானவற்றை செய்தார்கள். குற்றம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.