Jump to content

சிவாஜி - ரஜனி & ஷங்கர்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாதா எழுதுகிறார். முதல் முறையாக ரஜினி படத்திற்கு ஸ்டண்ட் அமைக்கிறார் பீட்டர் ஹெய்ன். (அந்நியனில் சும்மா வித்தை காட்டினாரே.. அவர் தான்)

சமீபத்தில் பூஜை போடப்பட்ட இப்படத்தின் ஷýட்டிங் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் தொடங்கியது.¬முதல் காட்சியாக ரஜினி, ஷ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை சுட்டனர்.

தொடர்ந்து ஹைதராபாத்தில் 3 மாதங்கள் வரை ஷýட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்காக முக்கிய நடிகர்களிடம் 3 மாதத்திற்கான கால்ஷீட்டை ஒட்டு மொத்தமாக வாங்கி வைத்துள்ளார் ஷங்கர்.

சிவாஜி படத்தில் இடம் பெறும் முக்கிய கேரக்டர் ஒன்றில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க ரஜினியும், ஷங்கரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அமிதாப் உடல் நலமின்றி இருப்பதால் அந்த கேரக்டரில் ஆந்திராவைச் முக்கிய நடிகர் ஒருவர் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

அது சிரஞ்சீவியாகக் கூட இருக்கலாம்.

அப்புறம் இன்னொரு விஷேசம். இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்க இந்தியில் ஆள் தேடி வருகிறார்கள். அது பெரும்பாலும் ராணி முகர்ஜியாக இருக்கக் கூடும் என சிவாஜி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சந்திரமுகியில் ராஜாதிராஜா படத்தில் வருவதைப் போல இளமையான தோற்றத்துடன் வந்த ரஜினிகாந்த், சிவாஜி படத்தில், இன்னும் இளமையாக, பழைய ஹேர்ஸ்டைலுடன் கலக்கலாக வருகிறார்.

shivaji-banner-500.jpg

சிவாஜி படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. மு¬தல் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்திய இயக்குனர் ஷங்கர் தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

rajini-250.jpg

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி, விவேக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மிகவம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தப் படப்பிடிப்பு மெல்ல மெல்ல ரசிகர்களுக்குப் பரவவே ஏராளமானோர் படப்பிடிப்பு நடந்த பகுதியில் குழுமி விட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முடி கொட்டுவதற்கு முன்பு ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைலில் புத்தம் புது தோற்றத்துடன், கோட், சூட்டுடன் படு இளமையாக காணப்பட்டார் ரஜினி. ரயில்வே அதிகாரி உடையில் அவர் நடித்தார்.

ரஜினி, விவேக், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை வேக வேகமாக சுட்டுக் கொண்டிருந்தார் ஷங்கர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்னர் ரஜினி பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ரஜினியைப் பார்க்க கூடியிருந்த ரசிகர்கள், 'தலைவர்' ஒருமுறையாவது தங்களைப் பார்க்க மாட்டாரா என்ற ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவரோ ஜெட் வேகத்தில் புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால் ரசிகர்கள் நீண்ட ÷நிரம் காத்திருந்தும் 'தலைவரைப்' பார்க்க ¬டியாத ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரஜினி படப்பிடிப்புக்கு ஸ்பெஷல் அனுமதி வழங்கியது யார் தெரியுமா? மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவாம். அவரிடம் ரஜினி படத்திற்கான ஷýட்டிங்கை நடத்த அனுமதி கோரி ரெக்கமண்டேஷன் செய்தது யார் தெரியுமா? மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு.

பாமகவைச் சேர்ந்த வேலுவிடம், ஷங்கர் தரப்பு அனுமதிக்காக அணுக, சென்னை வந்திருந்த லாலுவிடம் நேரடியாகப் பேசி உடனடியாக அனுமதி வாங்கிக் கொடுத்தாராம் வேலு. அப்ப ரஜினியும், பாமகவும் ராசி ஆயிட்டாங்க...

இரட்டை வேடத்தில் ரஜினி: சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அதாவது அப்பா ரஜினி பெரிய ஜமீன்தார். அவரை சிலர் ஏமாற்றி மோசம் செய்து விடுகின்றனர். அவர் மீது வீண் பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி விடுகின்றனர்.

இதை அறியும் மகன் ரஜினி, வளர்ந்து ஆளாகி தந்தையை மோசம் செய்து அவரது வாழ்வை நாசம் செய்தவர்களை பழிவாங்குகிறார். வித்தியாசமான பல வேடங்களில் வந்து வில்லன்களை அவர் பழி தீர்க்கிறாராம்.

இந்தப் படத்தின் கதையை விட ரஜினி போடப் போகும் வித்தியாசமான கெட்டப்கள் ரசிகர்களை ரொம்பவே கவருமாம். பழைய ரஜினி படங்களில வருவதைப் போல ஹேர் ஸ்டைலுடன் ரஜினி கலக்கப் போகிறாராம்.

2வது கட்டப் படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்ட அடுத்த கட்டப் படப்பிடிப்பை மீண்டும் ஹைதராபாத்தில் தொடரவுள்ளார்களாம்.

source : thatstamil.com

URL :http://thatstamil.indiainfo.com/specials/cinema/shooting-spot/rajini4.html

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி திரு ராஜாதிராஜா அவர்களே....

இன்னமும் ரஜினி தான் வசூல்ராஜா என்பதை நிரூபித்து வருகிறார்.... ஆனால் அவர் திரைப்படங்கள் தொழில் நுட்ப ரீதியில் சுமார்தான்.... ஷங்கர் இயக்குவதால் அந்த குறை இந்த திரைப்படத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறேன்....

Link to comment
Share on other sites

rajini-250.jpg

ம் இந்த படத்தில் இளமையா இருக்கார். கடைசியாக வந்த இரண்டு படங்களிலும் மேக்கப் அவ்வளவு நல்லாயில்ல. இந்த படத்தில் புதுசாக ஒரு மேக்கப் போடுபவரை உபயோகப்படுத்துவதாக படிச்சேன். பார்க்கலாம் எப்படி இருக்கும் என்று.

Link to comment
Share on other sites

அவர் திரைப்படங்கள் தொழில் நுட்ப ரீதியில் சுமார்தான்.... ஷங்கர் இயக்குவதால் அந்த குறை இந்த திரைப்படத்தில் சரி செய்யப்படும் என நினைக்கிறேன்....

ரஜனி படம் எப்படி எடுத்தாலும் ஓடும் என்று நினைப்பதாலோ என்னவோ முன்பு தொழில் நுட்பத்தை அவ்வளவாக கவனிப்பதில்லை. சங்கர் புதிய தொழில் நுட்பங்களை உபயோகிப்பவர். இந்த படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

சிவாஜி படத்தில் ரஜனியுடன் ஜோடியாக நடிக்க 30 நாட்களை ஐஸ்வர்யாராயும் கொடுத்திருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இது எவ்வளவு உண்மையென்பது போகப் போகத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

வாவ்வ்வ்... ஆவ்வ்வ்வ்...

ரொம்ப சுவீட்டான நியூஸ்ஸுங்க! ரஜனி சாறின் "யுவாஜி" பிலிம் எண்டால் கேட்கணுங்களா?? இந்த சுவீட் நியூஸ் நம்ம டமிழ்நாட்டு பசங்க, யூரோப் பஸங்களுக்கு ரொம்ப ஜாலியாயிருக்கும்! சாறின் பிலிமில் நாலு சூப்பர் பைட்டு, நாலு சூப்பர் கிட் சாங்குகள், சாறின் லெக்ஸ்/கான்ட்ஸ் வலிப்பு விசுரல்களும் இருக்கனுங்க!!! அப்பதான் நம்ம யங்ஸ்டேஸ் பஸங்க கற்பூரம் கொழுத்தி பாலாபிஸேகங்கள் செய்வானுங்க...

சாறா, அவரு! "ஒண்ணைக் காட்டினா நூறைக் காட்டின மாதிறி"

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Link to comment
Share on other sites

ஒரு காலம் அரசியல்க்கு வாரன் வாரன் எண்டு சுத்திகொண்டு திரிச்சவர் இப்ப அடங்கிட்டார்

வாந்த மட்டும் மூதல் அமைச்சர் ஆயிருபார என்ன

நாம்ம தமிழ் நாட்டு மக்கள் சும்மாவ என்ன?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஷங்கருக்கும் சானியா 'பெப்பே'

saniass-400.jpg

சானியாவிடம் நடிக்க ரெடியா என்று கேட்கப் போய் சிம்பு பட்ட பாடு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இயக்குநர் ஷங்கருக்கும் அதே ஏமாற்றம் கிடைத்துள்ளதாம்.

டென்னிஸ் இளம் புயல், சானியா மிஸ்ராவை சினிமாவில் நடிக்க வைக்க எத்தனையோ பேர் கடுமையாக ¬முயற்சித்து வருகிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். தனது வல்லவன் படத்தில் சானியாவை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று படாதபாடு பட்டார் சிம்பு.

சானியாவை நடிக்க வைக்கிறேன் பாருங்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவாலே விட்டிருந்தார் சிம்பு. ஆனால் சிம்புன்னா யாரு என்று கேட்டு சிம்புவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாராம் சானியா.

sania-450.jpg

அத்தோடு சானியாவை புக் செய்யும் ஆசையை விட்டு விட்டார் சிம்பு. இருந்தாலும் சானியாவை நடிக்க வைக்க பலரும் ¬முயற்சித்துக் கொண்டு தான் உள்ளார்கள். சமீபத்தில் ஒரு பிரபலம் சானியாவை அணுகியுள்ளார்.

அவர் சிவாஜி பட இயக்குநர் ஷங்கர். சிவாஜி படத்தில் ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக நடிக்க சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் இப்போதைக்கு எனது ¬முழுக் கவன¬ம் டென்னிஸ் மட்டும்தான்.

ஸாரி ஸார் என்று சொல்லி ஷங்கருக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளாராம் சானியா. சிவாஜி படத்தில் ரஜினிக்கு மொத்தம் 3 ஜோடிகள் என்கிறார்கள். அதில் ஷ்ரேயா ஒருவர். மேலும் இரண்டு ஹீரோயின்களில் ஐஸ்வர்யாராய் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டதாகவே கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மூன்றாவது நாயகியாகத் தான் சானியாவை அணுகியுள்ளார் ஷங்கர். ஆனால் அவரோ தனது ¬முடிவில் படு தெளிவாக இருப்பதை நிரூபித்து விட்டார். இதே போல, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த இன்னொரு தயாரிப்பாளரும் சானியாவை அணுகியுள்ளார்.

பெரிய தொகை தருவதாக செக் புக்கை எடுத்து நீட்டியவாறு பேசியுள்ளார் அந்தத் தயாரிப்பாளர். அவருக்கும் பெரிய ஸாரியைக் கொடுத்து அனுப்பி விட்டாராம் சானியா. தயாரிப்பாளர்களே, இயக்குநர்களே, நடிகர்களே, பொறுமையாக இருங்கள். என்றைக்காவது ஒரு நாள் சானியா வந்தாலும் வருவார், அப்ப புடிச்சுக்கோங்க!

தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.