Jump to content

கிட்டண்ணா!


Recommended Posts

வரிப்புலி ஊர்வலம்!

-----------------

ஆடிவரும் கடலையே - சொல்லு

எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே

ஒளித்து வைத்தாய்?

காற்றே வா மெல்ல எம் கதவு திற-

பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்

சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-

எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!

சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -

சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்

படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்

அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-

விடை சொல்லாமல் போனானே அதுதான் -

ஏனென்று இன்னும் தெரியவில்லை!

எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-

எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-

கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

Link to comment
Share on other sites

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வர்ணன். வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுக

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது :lol:

காற்றே வா மெல்ல எம் கதவு திற-

பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்

சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-

எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

_________________

கிட்டாண்ணாக்காக நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-

குலை நடுங்க வைத்தவனே-

வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!

வாயேன் ..வந்து படை நடத்து...

வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!

_________________

கிட்டாண்ணாக்கா நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

இப்போ புரியும் என்று நினைக்கின்றேன். :lol::lol:

Link to comment
Share on other sites

எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: :lol:

கிட்டண்ணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர். தமிழீழ விடுதலைப்புலிகளில் வீரமரணமடைந்த முதற் கேணல். தலைவருக்குத் துணையாக இருந்தவர். 90 இற்கு முற்பட்ட காலத்தில் புலிகள் இயக்கத்தின் மிகக் குறைந்த ஆட்பலத்துடனும் ஆயுதப்பலத்துடனும் சிங்கள இராணுவத்தை முகாம்களில் முடக்கி யாழ்மாவட்டத்தில் புலிகளின் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர். மக்களை இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டமாவீரன். தேசியத்தலைவரின் கரங்களில் ஒன்றுபோல் இருந்தவர். வெளிநாடொன்றிலிருந்து சமாதானப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாட்டுடன் தமிழீழம் திரும்பிய போது சர்வதேசக்கடலில் வைத்து இந்தியப்படைகளால் மறிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டார். அவரின் நினைவாக அக்கவி படைக்கப்பட்டிருந்தது.

அவர் பற்றிய மேலதிக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் தெரிந்தவர்கள் உங்களிற்கு உதவுவார்கள்.

Link to comment
Share on other sites

கிட்டண்ணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர்,

அவரின் நினைவாக அக்கவி படைக்கப்பட்டிருந்தது......

இப்போது.. கொஞ்ஜம் புரிந்தது என்று நினைக்கின்றேன்.. நன்றி அருவி அவர்களே :(

ராமா [RaMa]-------- புரிந்தது :lol::(

Link to comment
Share on other sites

கிட்டு மாமவை பற்றி "காலத்தின் பதிவுகள்" என்ற புத்தகத்தை படித்தீர்களா??

கவிதை நன்றாக இருக்கிறது வர்ணன். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா.

"கேணல் கிட்டு:ஒரு காலத்தின் பதிவு";அது அருமையான வரலாற்று ஆவணப்பதிவு.

கிட்டண்ணை தொடர்பான

பன்முக ஆற்றல்களை,

பன்முகப் பார்வைகள் மூலம் தரிசிக்கலாம்....

பல்கலைக்கழக சுற்றுலாவின்போது வன்னி "அறிவமுது" பொத்தகசாலையில் வாங்கியது;பின்னர் நண்பர் ஒருவர் மூலம் "காணாமல் போனது"....

வசதியுள்ளவர்கள் இணையம் மூலம் வாங்கலாம் என எண்ணுகிறேன்;நமக்கு இப்ப அது இயாலாது...காலம் கிட்டும் என எண்ணுகிறேன்...

Link to comment
Share on other sites

என்னிடம் அந்த புத்தகம் இருக்கு. ஆனால் இணையத்தில் அதை இணைக்க (பிரசுரிக்க) அனுபதி உண்டா இல்லையா என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கிட்டு அண்ணாவே

உங்கள் வீரம்

சிட்டு அண்ணா பாடி

கேட்டதுண்டு.

தமிழன் நெஞ்சங்கள்

விட்டு உங்கள் நினைவுகள்

என்றும்

அகல்வதில்லை.

தமிழனை கொன்று

தின்ற கழுகுகளை

சுட்டு

காவியத் தலைவனின்

கரத்தினை

பலமூட்டி.

எதிரிக்கு

திகிலூட்டினாய்.

புலம் சென்ற பொழுதும்

புரட்சிப் பூபாளம்

பாடும் உன் குரலில்

உறுமலே கேட்டது.

ஈழக்காவியம்

படைத்த நீங்கள்

மாந்தரின்

அவலத்தை

ஓவியமாய்

உரமூட்டி தந்தீர்கள்.

பாவியர்கள்

பயணத்தின் போது

காத்திருந்து கழுத்தறுத்தார்

என கேட்டு

இளையோர் நாம்

இடிந்து விட்டோம்.

உங்கள்

ஈழ ஓவியம்

ஓர்நாள்

பெரும் காவியமாகும்.

அதுவரை உங்கள்

இலட்சியப்பாதையில்

இளையோர் நாம்.

Link to comment
Share on other sites

இருவிழி கிட்டண்ணாவுக்காக வடித்த கவிதை அருமையாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது தூயா.

உங்கட சந்தேகம் சரியானதுதான்....

முழுதாகப் போடாமல்,

சில பக்கங்களை/சிலரின் கருதுக்களை

நினைவுக்குறிப்பாகப் பகிர்வதில் தப்பில்லையே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.