Jump to content

-வாழ்ந்து பார்க்கலாம்-


Recommended Posts

நாற்றோடு காற்றுவந்து மோதும் - -

கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- -

பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- -

பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து

வாயிலை அலங்கரி!

இராவென்ன பகல் என்ன சொல்லு?

நீ இரவுக்குள் பகலாகி நில்லு!

மழையென்ன வெய்யில் என்ன -சீ போ!

வாழ்வென்ன பலமுறை வருமா?

உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி

அதை உனக்கு திருப்பி தருமா?

வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே

நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி?

வானம் குடைபிடிக்கிறது பார்-பார்!

அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- -

வாழ்ந்து பார்ப்போமே?- வா வா!

வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்?

உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்?

புன்னகைக்கும் நேரமதில் வந்து தோழணைப்பார்-அறி

பொங்கியழும் நேரமதில் போயே போவார்-

அவர் உறவை நீ முறி!

உயிர்-அது என்னவென்று நினைத்தாய்?

ஊசலாடும் ஒரு பயிர் நீ அறிவாய்!

அறிவு கிண்ணத்தில் நீர் எடுத்தற்க்கு ஊற்று

அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு!

திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு!

பசியென்று வருபவன் எவனோ- உனக்கில்லையென்றானாலும்

ஒருபிடி அன்னம் அவன் வாயிலூட்டு- -

அன்பென்ற ஊஞ்சல் கட்டி அதில் அவனை இருத்தி ஆட்டு!

காதல் தவறென்று சொல்வார் பாரு- -

காதலில்லாமல் பூமியென்பது இங்கேது?

காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவரே - காதல் அசிங்கமென்று சொல்வது அதிகம் நீ பாரு!

* * * *

மதம் என்ன குலம் என்ன போடா- -

மலையென்ன மடுவென்ன போடா- -

சதி பின்ன சிலரெதுவோ சொல்வார்

அடா சாகபோகும் மனிதனுக்கு சாதி சமயம் ஒரு கேடா?

நீ பெற்ற அறிவதனை பிறர்க்கு சொல்லு- -

பிறர் கொண்ட அறிவதனை கேட்டு வாங்கு!

அழகென்பதெது என்று சொல்லு?

ஐஸ்வர்யா- சந்தியா- அஜித்?

அமெரிக்கா - சுவிஸ்- அவுஸ்ரேலியா?

உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ

உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!

ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை

அவளே உலகத்தில் பேரழகு போ போ!

-வர்ணன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை.. நல்ல நடை.. அசத்திவிட்டீர்கள் பல விடையங்களை தொட்டுச்சென்றிருக்கிறீர்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வர்ணன். இன்னும் புதுப்புது ஆக்கங்களைத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி தமிழினி..தூயவன்.. களத்தில் பதிவு செய்த எனது முதல் ஆக்கத்துக்கு நீங்கள் இருவரும் சொன்ன வாழ்த்துக்களை எனக்களித்த ஊக்கமாகவே நன்றியோடு பார்க்கிறேன்! 8)

Link to comment
Share on other sites

உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ

உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!

ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை

அவளே உலகத்தில் பேரழகு போ போ!

இருக்கிறதை கண்டு கொள்வதிலும் பார்க்க இல்லாதற்கு கொட்டாவி விடுவது தானே பலரின் ஏக்கம்... வர்ணன் நல்லாய் எழுதியிருக்கறீர்கள்... வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்....

Link to comment
Share on other sites

வாழ்ந்து பார்க்கலாம் கவிதை நன்றாக உள்ளது. மேலும் எழுத எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.