Jump to content

விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி


Recommended Posts

விஜயகாந்த்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

ஜனவரி 06, 2006

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பல சோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

கல்யாண மண்டப பிரச்சனை:

கோயம்பேட்டில் உள்ள தனது கல்யாண மண்டபத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க முடிவு செய்ததால் விஜய்காந்த் மனச்சோர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்தின் வரைபட நகலை தனக்கு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் 3 அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை (அமைச்சர்: டி.ஆர்.பாலு) முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதலில் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக 41 இடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதில் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப¬ம் ஒன்று.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நில உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை ÷நிõட்டீஸ் அனுப்பியுள்ளது. இந் நிலையில், நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்களது அசல் பத்திரங்களுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி நில உரிமையாளர்கள் 40 பேரும் தங்களது பத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வுக்கென நியமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகந்நாதனிடம் பத்திரங்களைக் கொடுத்தனர்.

ஆனால் விஜயகாந்த் மட்டும் நேரில் வரவில்லை. மாறாக அவரது சார்பில் 2 வழக்கறிஞர்கள் வந்திருந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப சொத்து எனது (விஜயகாந்த்) பெயரிலும், எனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ளது. மேம்பாலம் கட்டுவதற்காக எனது திருமண மண்டபத்தின் எந்த இடத்தை கையகப்படுத்தப் போகிறீர்கள் என்பது இதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை.

பத்திரிகை விளம்பரம் மூலம் மட்டுமே இது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை. நிலத்தின் உரிமையாளர் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதால் எனது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பியுள்ளேன்.

மேம்பாலம் கட்ட எனது நிலத்தின் எந்தப் பகுதியை கையகப்படுத்தப் போகிறீர்கள், கல்யாண மண்டபத்தின் எந்தப் பகுதியை இடிக்கப் போகிறீர்கள் என்ற விவரம் அடங்கிய வரைபடத்தை என்னிடம் கொடுத்தால், அதைப் பரிசீலித்து, எந்தப் பகுதி மேம்பாலம் கட்டும் பகுதியில் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம்.

அதேபோல, மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை என்னிடம் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மனுவுடன் எனது நிலம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட 17 ஆவணங்களின் நகல்களை உங்களின் பரிசீலனைக்காக தாக்கல் செய்துள்ளோம். விரைவில் எங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடிய பகுதியின் வரைபடம் மற்றும் பீல்டு மேப் ஆகியவற்றை தந்தால் நலமாயிருக்கும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

நன்றி : Thatstamil.com

http://thatstamil.indiainfo.com/news/2006/...vijaykanth.html

Link to comment
Share on other sites

பாவம் நல்லதொரு தமிழ்பற்றுள்ள மனுசன் .............அந்த மனுசனும் தீவரவாதிகளை பிடிச்சு நல்லாக் களைச்சுப் போச்சு.........

Link to comment
Share on other sites

பாவம் நல்லதொரு தமிழ்பற்றுள்ள மனுசன்

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

Link to comment
Share on other sites

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அது மட்டும இவர் சொன்னாரம் தான் தமிழ்ழை விட வேற் படங்களில் நடிக்க மாட்டன் எண்டு எல்லாரும் நினைச்சவை சா என்ன ஒரு தமிழ் பற்று எண்டு

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஐயா அவர் அரசியலுக்கு வந்த பிறகு. தமிழ் பற்று போய் ஹிந்திப் பற்று வந்திட்டுது. கட்டாயம் எல்லோரும் ஹிந்தி கற்க வேண்டும் என்ற தோறணையில் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அதில் என்ன தவறு , ஹிந்தி கற்று கொள்ள கூடாதுன்னு சொன்ன தலவர்களே ஹிந்திலே நல்லா பேசறாங்க.கடைசியில் மக்கள் முட்டாள் ஆனது தான் மிச்சம்.

Link to comment
Share on other sites

அதில் என்ன தவறு , ஹிந்தி கற்று கொள்ள கூடாதுன்னு சொன்ன தலவர்களே ஹிந்திலே நல்லா பேசறாங்க.கடைசியில் மக்கள் முட்டாள் ஆனது தான் மிச்சம்.

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறார்.

விரைவில் குணமடைய வேண்டுகின்றோம் :cry:

Link to comment
Share on other sites

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்

சரியாக சொன்னீர் !! வேறு மொழி ஏது தெரியாமல் தமிழ் நாட்டை தாண்ட பயந்து தமிழ் நாட்டிலே தன் திறமையே முடக்கி கொள்ளும் தமிழ்ர்கள் பல லட்சம்.

தமிழ் போல் இனிதானது வேறில்லை, தமிழ் தவிற பிற மொழி கற்பதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

எங்களுக்காக பிறந்த நாளே கொண்டாடாமல் இருக்கிறார்.

விரைவில் குணமடைய வேண்டுகின்றோம் :cry:

உங்களுக்கு நல்ல மனசு :P

அவருக்கு ஏன் நெஞ்சு வலி ஏற்பட்டது என்று தெரியும?

இதை பார்க்கவும்

http://thatstamil.indiainfo.com/news/2006/...vijaykanth.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இவரும் அவசியல்வாதியாயிட்டாரே அது தான்.....

Link to comment
Share on other sites

எனக்கா.. நெஞ்சு வலியா?: விஜயகாந்த்

ஜனவரி 07, 2006

சென்னை:

எனக்கு நெஞ்சு வலி என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று நடிகர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம் இடிபடப் போவதாக வெளியாகி வரும் செய்திகளால் விஜயகாந்த் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டன.

இந் நிலையில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் விஜயகாந்த் திடீரென மெட்ராஸ் மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை டாக்டர்களும் உறுதிப்படுத்தினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று பிற்பகலுக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய விஜயகாந்த்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது, எனக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை.

கட்சி ஆரம்பித்த பின்னர் சுற்றுப்பயணத்தில் உள்ள நான் பொதுவான ஒரு செக்கப்பை செய்து கொண்டால் நல்லது என்று வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள் அறிவுரை கூறினர். இதனால்தான் அனைவரிடமும் சொல்லி விட்டுத்தான் மருத்துவனைக்கு சென்றேன்.

அங்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்து பார்த்தனர். எனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு திரும்பி விட்டேன். நெஞ்சு வலி வந்திருந்தால் இப்படி சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா.? எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும், நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.

இதற்கிடையே விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்த்துக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை. அப்படி வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றார். தற்போது வீடு திரும்பி விட்டார். ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 20ம் தேதி முதல் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.

Thatstamil

Link to comment
Share on other sites

வினித்

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

:roll: இதில் இப்படி சிரிப்பதற்கு என்ன இருக்கிறது வினித்? அவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார். இங்கிலாந்தில் இல்லையே. ஒரு கதைக்கு நீங்கள் இங்கே (ஜேர்மனி) வந்தால் ஆங்கிலத்தை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு தமிழ் தெரியாவிட்டால் வெட்கப்படலாமேதவிர ஆங்கிலமோ அல்லது வேறுமொழி தெரியாவிட்டால் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நாங்கள் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்தனாங்களெல்லோ அதனால எங்களுக்கு ஆங்கிலம் தெரியும்..........

யார் என்ன சொன்னாலும் எங்கட அடிமைப்புத்தி விட்டுப்போகாது பாருங்கோ....

Link to comment
Share on other sites

ம்..... அடிமை அதுதானே எங்கள் வாழ்கையில் அன்றுதொட்டு இன்றுவரை ஒட்டிக்கொண்டு வருகிறது. ஆங்கிலேயனுக்கோ அல்லது சிங்களவனுக்கோ அடிமையாய் இருப்பதில் தவறில்லை. ஆனால் அதை எதிப்பவனை ஒரு அடிமையே அவமானப்படுத்துவதும் அழகு அல்ல. ஆங்கிலம் தெரியாதது ஒரு அறியாமையே தவிர அது அவமானமல்லவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தமிழை விட்டா வேற பாசை தெரியாதம் ஆங்கிலம் கூட அப்படி இப்படியாம்?

:P :P :P :P :P

:roll: இதில் இப்படி சிரிப்பதற்கு என்ன இருக்கிறது வினித்? அவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார். இங்கிலாந்தில் இல்லையே. ஒரு கதைக்கு நீங்கள் இங்கே (ஜேர்மனி) வந்தால் ஆங்கிலத்தை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. தமிழ்நாட்டில் வசிப்பவருக்கு தமிழ் தெரியாவிட்டால் வெட்கப்படலாமேதவிர ஆங்கிலமோ அல்லது வேறுமொழி தெரியாவிட்டால் அல்ல.

ஆமாம். ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன? தாய்மொழி தெரியாதவனைக் கண்டு தான் சிரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விஜய காந்த் குமணாக ஆண்டவனைப்பிரார்த்திக்கிறேன

Link to comment
Share on other sites

நிச்சியமா ராஜா..........இங்சை நிறைய தமிழ்நாட்டு ஆட்களை சந்திச்சிருக்கிறன் தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர வேறை ஒரு மொழியும் அவர்களுக்கு தெரியுதில்லை அதே நேரம் ஒரு மலையாளி 4 5 மொழியிலை பிச்சு உதறுறான் தமிழனுக்கு மலையாளம் கூட தெரியாமல் இருப்பது வேடிக்கை அதே நேரம் இலங்கைதமிழர் மலையாளம் சரளமாக கதைக்கிறார்கள் ஆனபடியால் ஒருவருக்கு மொழிபடிக்க வேணும் எண்ட ஆர்வம் வேண்டும்

சரியாக சொன்னீர் !! வேறு மொழி ஏது தெரியாமல் தமிழ் நாட்டை தாண்ட பயந்து தமிழ் நாட்டிலே தன் திறமையே முடக்கி கொள்ளும் தமிழ்ர்கள் பல லட்சம்.

தமிழ் போல் இனிதானது வேறில்லை, தமிழ் தவிற பிற மொழி கற்பதில் தவறில்லை.

டம்பீ ஐ ஆம் யுவர் சைட்டுமா !!!!

:P யு நோ வை

உப்பிடித்தான் நம்மட அமிர்தலிங்கம் ஐயாவும் சொன்னவராம் தமிழ் படியங்கோ தமிழை மட்டும் படியங்கோ எண்டு பிறகு பாத்தா ஐயாவின்ர குடும்பம் புல்லா லண்டனில நல்லா ஆங்கிலம் படிச்சு நல்ல அகதியாகீட்டினம்

அவையை நம்பின நாங்கள் படிச்ச ஆங்கிலம் என்ன தெரியுமோ

நம்ம லூசு வாத்தி போல

பெஸ்ட் யங்சன் நோ யங்சன்

செக்கன்ட் யங்சன் நோ யங்சன்

தேட் யங்சன் யங்சன் யங்சன்

ஓய் ராஐா உது ஒரு வைட் மான் சந்தி எங்கையிருக்கு எண்டு கேட்டதுக்கு பதில்மாாாா !!

அதணால் தான் சொல்லுறன் மொழிகள் படிப்பதில் தப்பில்லை ஆணால் தன்மொழியையும் தன் இனத்தையும் மறக்காமல் இருக்குமட்டும்

நன்றியங்கோ

:wink: :wink: 8) 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டம்பீ ஐ ஆம் யுவர் சைட்டுமா !!!!

யு நோ வை

இது அதிகம் சின்னப்பு.. இதை தமிழில சொன்னா என்ன?? :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.