Jump to content

சைக்கிள்


Recommended Posts

500287514fw.jpg

ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில

சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள்

சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது

அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம

Link to comment
Share on other sites

அட சூப்பரா சொல்லி இருக்கிறீங்கள் சைக்கிள் கதை.

எனக்கும் எண்ட சைக்கிள் ஞாபகம் வந்துட்டு.

நான் பிள்ளை மாதிரி பார்த்துட்டு இருந்தனான்

வரேக்கை எண்ட நண்பிக்கு கொடுத்துட்டு வந்தனான்

அவள் எப்படி வைச்சு இருக்காளோ?

எதுக்கும் இன்று போன் போட்டு கேக்கணும். :oops:

Link to comment
Share on other sites

அட பழைய ஞாபங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீங்கப்பா.. ஒரு வயசில பட்டம் விடுறது (களத்தில நிக்கிறர் ஒரு அண்ணாத்தை, அவரும் நானும் சின்னனில, (அட 1966.1967இல) பெரியாக்கள் லைற் பூட்டி பட்டம் விடக்கை நாங்கள் இரண்டு பேரும் அந்த பெரிய பட்டங்களைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பம்,, பொறுத்தது போதும் பொங்கி எழு நண்பா சொல்ல. உடன ஆவேசமா வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய கொப்பியில ஒற்றையை கிழிச்சு கையால மடிச்சுப்போட்டு சின்ன நூலில பட்டம் விட்டு மகிழ்ந்த கதை அது ஒரு காலம்,,

அப்புறம் சைக்கிளுக்கு சோடிக்கிறது,, எல்.ஈ.டி பல்ப், மிளாகாய் லைற், சைக்கிள்ல இருக்கிற முன் லைற் (ஹெட் லைற்) அதற்கு மஞ்சல் சீலை வாங்கி அழகா கட்டி மகிழ்வது, முன்னுக்கு இரண்டு (மிளகாய் எண்டு சொல்லுறது) லைற் பின்னுக்கு எல்.ஈ.டி பல்ப் பூட்டி மகிழ்ந்தது என்னொரு காலம்,,,,,

இப்ப என்னெண்டால் எல்லாத்தையும் மறந்து ஒட்டகம், சா காரில பூவர் பூட்டி எம்.பி3 செட், சோடிச்சு பார்த்து அழகு பார்க்கிறம்,, :lol: :P (அட மற்றவங்கள் பூட்ட நான் பார்த்து மகிழுறன் எண்டு சொல்லவந்தனப்பா) :lol:

அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பழைய ஞாபங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீங்கப்பா.. ஒரு வயசில பட்டம் விடுறது (களத்தில நிக்கிறர் ஒரு அண்ணாத்தை, அவரும் நானும் சின்னனில, (அட 1966.1967இல) பெரியாக்கள் லைற் பூட்டி பட்டம் விடக்கை நாங்கள் இரண்டு பேரும் அந்த பெரிய பட்டங்களைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பம்,, பொறுத்தது போதும் பொங்கி எழு நண்பா சொல்ல. உடன ஆவேசமா வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய கொப்பியில ஒற்றையை கிழிச்சு கையால மடிச்சுப்போட்டு சின்ன நூலில பட்டம் விட்டு மகிழ்ந்த கதை அது ஒரு காலம்,,

அப்புறம் சைக்கிளுக்கு சோடிக்கிறது,, எல்.ஈ.டி பல்ப், மிளாகாய் லைற், சைக்கிள்ல இருக்கிற முன் லைற் (ஹெட் லைற்) அதற்கு மஞ்சல் சீலை வாங்கி அழகா கட்டி மகிழ்வது, முன்னுக்கு இரண்டு (மிளகாய் எண்டு சொல்லுறது) லைற் பின்னுக்கு எல்.ஈ.டி பல்ப் பூட்டி மகிழ்ந்தது என்னொரு காலம்,,,,,

இப்ப என்னெண்டால் எல்லாத்தையும் மறந்து ஒட்டகம், சா காரில பூவர் பூட்டி எம்.பி3 செட், சோடிச்சு பார்த்து அழகு பார்க்கிறம்,,  :lol:  :P (அட மற்றவங்கள் பூட்ட நான் பார்த்து மகிழுறன் எண்டு சொல்லவந்தனப்பா) :lol:  

அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll:  :evil:  :evil:

:P :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தியா!!

அதீவம் இங்கையும் திகில் மூட்டுகின்ற படத்தைத் தான் மாட்டியிருக்குது

Link to comment
Share on other sites

அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil:

ஒம் உன்னுடைய வண்டியை பக்கத்துவீட்டு பெடியன் கேட்டிச்சு ஆசையா சரி கவனமா வைச்சிரு என்று கொடுத்துட்டு வந்தனான். போய்ப்பார்த்தால் தான் தெரியும் எப்படி இருக்கு என்று பேரீச்சம்பழக்கடைக்கு போட்டுது இல்லை அந்த பெடியன் இப்பவும் ஓடுதோ என்று :P :P

Link to comment
Share on other sites

எங்கட வீட்டில வேலை செய்த ஒரு மேசன் வைத்திருந்த சைக்கிள கண்ணைக்குத்திற கலர்ல பிளாஸ்டிக் புூக்களால அலங்காரம் செய்து இருக்கும். முன் சில்லுல ஒரு பக்கம் வேலும் ஒரு பக்கம் சேவலும் இருக்கும். டைனமோ எல்லாம் போட்டு பின்னுக்கும் முன்னுக்கும் லைட் போட்டு வைத்திருப்பார். ஒரு நாளும் ஓடத்தரமாட்டார்.

Link to comment
Share on other sites

ஆதி உங்கள் சைக்கிள் அனுபவத்தை எங்களுடன்

பகிர்ந்ததுக்கு நன்றி.......

டன் அண்ணா கடைசியில லைற் புூட்டி பட்டம்

விட்டீங்களா? இல்லையா? :D ( உண்மையிலேயே லைற்

புூட்டி பட்டம் விடுறதா? :?: எரியுமா? :roll: )

Link to comment
Share on other sites

ஆதி உங்கள் கதைமூலம் சிறுவயது நினைவுகளை தூண்டி விட்டீர்கள். வேலைப்பளுவின் மத்தியிலும் இவ்வாறான சிறுவயது நினைவுகள் உற்சாகம் தருபவையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் வசி பட்டத்தில் லைற்பூட்டி ஏற்றுவதை வடமராட்சி பகுதிகளில் பார்க்கலாம்.....

Link to comment
Share on other sites

அதிபன். சைக்கிள் பற்றி கதைத்து பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்..... பக்கத்து வீட்டிற்கு போவதேன்றாலும் சைக்கிள் எடுத்து சென்றதை மறக்க இயலாதே......

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் சைக்கிள் ஞாபகத்தை கொண்டு வந்தீட்டீங்கள் அதிபன்.என்ர சைக்கிள் சித்தி வீட்ட குடுத்தனான் ம் ம் வைச்சிருக்கினமோ தெரியாது.சைக்கிள் டைனமோ எடுத்து சைக்கிளைச் சுத்திச் சுத்தி பக்கத்து வீட்டு அண்ணாவை படம் போடுறவை.

Link to comment
Share on other sites

சைக்கிள நினைச்சுப்பாத்த உறவுகளுக்கும் நன்றி...

எட்டு முடிச்சுப்பட்டத்துக்கு லைட் புூட்டி விடுறவை. இரவில சின்னதாத்தெரியும் வெளிச்சம். அத்தோட விண் புூட்டுவினம். அது இரவு முழுக்க சத்தம் போடும். அந்த மாதிரிப்பட்டங்களை ஐந்தாறு பேர்தான் சேர்ந்து ஏத்துவினம்.

Link to comment
Share on other sites

விட்டீங்களா? இல்லையா? :D ( உண்மையிலேயே லைற்

புூட்டி பட்டம் விடுறதா? :?: எரியுமா? :roll: )

தம்பி பகிடிக்கில்லை லைட்டுப் புட்டி ஸ்பீக்கர் கட்டி விட்டு அதிலை பாட்டும் போட்டிருக்கிறாங்கள் எண்டா பாருங்கோவன் திருகோணமலையிலை பாத்திருக்கிறன்...........

Link to comment
Share on other sites

டன் அண்ணா கடைசியில லைற் புூட்டி பட்டம்

விட்டீங்களா? இல்லையா? :lol: ( உண்மையிலேயே லைற்

புூட்டி பட்டம் விடுறதா? :?: எரியுமா? :roll: )

வசி பெரிய பட்டங்களை பினையல் விடுறவை அறிந்திருக்கிறீரோ? சாதரண "பாம்பன்" பட்டத்தை முதலில ஏத்திப்போட்டு அப்புறம் "படலை" பட்டம், அதுக்கப்புறம் முழங்கால் அளவு படலைப்பட்டம், அப்புறம் இடுப்பளவு,, அதுக்கப்புறம் ஒரு ஆள் அளவு பட்டத்தை கடைசியா விடுவாங்கள்,, அந்த ஆள் அளவு பட்டத்தில உம்மைக்கட்டிவிட்டாலே நொய் எண்டு கத்திக்கொண்டு பறந்து கொண்டு இருப்பீர்,,அந்த அளவுக்கு பினையல்ல இருக்கிற பட்டங்களின் சப்போட் இந்த ஆள் அளவு பட்டத்துக்கு இருக்கு,,, பட் நாங்கள் எல்லாம் கொக்கு பட்டம், பெட்டிபட்டம் எண்டு பெரிய பட்டங்களைத்தான் ஏத்துவம்,,, (ஓய், அப்புறம் சும்மா வெடிக்கிறான் எண்டு இங்க சொல்லி எண்ட மானத்தை வாங்கிறதில்லை,,,, பெரிய அண்ணமாரிட்ட போய் அந்த நூலை மட்டும் தொட்டுப்பார்க்கச்சொல்லி கேக்கிறது, பிறகு பட்டத்தை ஒரு இழுவை இழுத்துப்போட்டு சுண்ணாம்பு தடவீட்டு வந்து அடிவாங்கின கதைகளை).... :lol: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.