Jump to content

தெரியாத பாதை தெளிவானபோது


Recommended Posts

சாத்திரி, உங்கட ஐரோப்பிய அவலம் தொடருக்காக உங்களை சுற்றுலா போகும் நேரம் யாரும் போட்டு தள்ள வாய்ப்பிருக்கு கவனமா போய் வாருங்க. எதுக்கும் இந்த தொடர்கதையை முக்கியமான இடத்தில விட்டுட்டு போகாம் எழுதிட்டு போனால் நல்லாருக்கும் :wink: :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 189
  • Created
  • Last Reply

சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?

Link to comment
Share on other sites

சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?

அடிச்சது இன்னும் இறங்கேலைப்போல கொஞ்சம் பொறுங்கோ....

Link to comment
Share on other sites

சாத்திரி வந்து ஒரு கிழமையாச்சு எங்க இன்னும் தொடரை தொடரக் காணவில்லை :evil:

Link to comment
Share on other sites

வணக்கம் உறவுகளே சுற்றுலா முடிந்து வந்ததும் உடல் நிலையும் சரியாக இல்லை அதோடை வீடும் மாறி கொண்டிருப்பதால் நேரமின்மை ஆனாலும் கதையின் தொடருக்கு ஆவலாய் காத்திருந்த உங்களிற்காய் இதோ.....

சிகரற் புகையை மேலே நேக்கி ஊதிவிட்டு மீதியை தரையயில் எறிந்துவிட்டு ரவி வாடி வா நான் நினைச்சனான் என்னடா இப்ப கொஞ்ச நாளா என்னை எதிர்த்து கதைக்கிறயெண்டு அந்த தைரியம் எங்கை இருந்து வந்ததெண்டு இப்ப தெரியிது நான் சந்தேக பட்டதும் சரியா தான் போச்சுது.

அதாலை தான் இண்டைக்கு வேலைக்கு பேகாகாமல் ஒளிச்சிருந்து பாத்தனான் என்ன நடக்குதெண்டு

அப்பிடி யென்னத்தையடி என்னட்டை இல்லாததை அவனிட்டை கண்டனி யென்றபடி சாந்தியை நெருங்கி அவளது தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்து வந்து லிப்ற்றினுள் தள்ளினான்.

சிவா எதுவும் செய்ய முடியாதவனாக ரவி அவசரப்படாதை நீ நினைக்கிற மாதிரியில்லை..என்றவும் ரவி ஆவேசமாக சிவா பக்கம் திரும்பி டேய் சிவா பொத்து வாயை இது எனக்கும் மனிசிக்கும் உள்ள பிரச்சனை நீ தலையிடாதை எண்று கையை நீட்டி விரலை சுண்டியவாறு கூறிவிட்டு லிப்றினுள் நுளைந்தவன் அவனது சப்பாத்து கால் சாந்தியின் அடி வயிற்றில் இறங்கியது.

அய்யோ அம்மா என்ற சாந்தியின் அலறலுடன் லிப்ற் மூடிக் கொள்ள அதுதான் சமயமமென்று காத்திருந்த ரவியின் கால் கை எல்லாமே சாந்தியை பதம் பாத்தது. அடி வயிற்றை பொத்தி பிடித்தபடி அவன் அடிப்பதைகூட தடுக்க முடியாமல் சாந்தி லிப்றின் முலையில் சுருண்டு போய் இருந்துவிட்டாள்.

லிப்ற் அவர்கள் மாடியில் நின்றதும் ரவி சாந்தியை ஒரு கையால் தலை முடியை பிடித்து இழுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே தள்ளசாந்தி தட்டு தடுமாறி உள்ளே ஒடிப்போய் படுக்கையறையினுள் நுளைந்து கதைவை புூட்டி கொண்டு படுக்கையில் விழுந்தவளிள்கு தலை சுற்றி கொண்டு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது அப்படியே மயங்கி போய் விட்டாள்.

கீழே ரவி சாந்தியை உதைந்ததையும் அவளது அலறலையும் பார்த்து திகைத்து போய் நின்ற சிவா சில கணங்களில் தன்னை சுதாகரித்தவன் தனது கை தொலை பேசியை எடுத்து காவல் துறையின் இலக்கங்களை அழுத்தி விபரத்தை கூறி விட்டு அந்த குடியிருப்பின் கீழேபேய் நின்று கொண்டான்.

; ரவியோ சாந்தியிடம் படுக்கையறையை திறக்கும்படி கத்தி கதைவை தட்டி உதைந்து பார்த்து விட்டு இரடி உனக்கு பிறகு வந்து மிச்சம் கவனிக்கிறன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளி யேறவும்.சில நிமிடங்களில் வந்த காவல் துறையினர் அங்கு வந்ததும் சிவா தன்னை அறிமுகபடுத்தி தான் தான் அழைத்ததாககூறி அவர்களுடன் ரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.

வந்த காவல் துறையினர் ரவியை கைது செய்துவிட்டு சாந்தியின் படுக்கையறையை தட்டி தாங்கள் காவல்துறை வந்திருப்பதாகவும் பயப்படாமல் கதைவை திறக்கும்படி கூறியும் எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக முதலுதவிபிரிவை அழைத்துவிட்டு கதைவை உடைத்து உள்ளே போன காவல்துறை மயங்கி கிடந்த சாந்தியை அவசரமாக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு சிவாவின் விபரங்களை பெற்று கொண்டுதேவையேற்பட்டால் அழைப்பதாக கூறி விட்டு ரவியின் வீட்டை சோதனை செய்து விட்டு ரவியை அழைத்து சென்று விட்டனர்.

வைத்திய சாலையில் சாந்தி மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்தாள் உடலை அசைக்க முடியவில்லை கையில் மூக்கில் என்று வயர்கள் பொருத்தபட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தாள்.மெல்ல அசயமுயன்றபோது அங்கு அவசரமாக நுளைந்த தாதியர் இருவர் அவரை அசைய வேண்டாம் என கூறிய போதுதான் தான் வைத்திய சாலையில் இருப்பதை சாந்தி உணர்ந்தாள்.

வந்த தாதியரில் ஒருவர் சாந்திக்கு கையில் ஒரு ஊசியை போட்டுவிட்டு. உங்களிடம் காவல்துறை விசாரணைக்கு வருவார்கள்.அத்துடன் உங்களுடன் வந்த உங்கள் நண்பர் ஒருவரும் வெளியில் காத்து நிக்கிறார்.அவரை அனுப்புகிறோம் என்று விட்டு போய் விட்டனர்.

சில நிமிடங்களில் சாந்தியின் அறையில் நுளைந்த சிவா சாந்தியை பார்த்படி நான் சரியா பயந்திட்டன் டொக்ரர் சொன்னார் நீங்கள் உடல் மன நிலையாலை சரியா பலவீன பட்டு இருக்கிறியள் அதுதான் மற்றபடி பெரிய பிரச்சனை இல்லையெண்டார் இப்பதான் நிம்மதியாயிருக்கு எண்றவாறு சாந்திக்கு நடந்தவற்றை விபரித்தான்.

அசையாமல் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாந்தி .சிவா நீங்கள் ஏன் பொலிசை கூப்பிட்டனீங்கள்.இனி இது எங்கை போய் முடிய போகுதோ தெரியேல்லை.கடவுளே இனி நான் வீட்டு காரருக்கு என்ன சொல்ல மனிசனை பொலிசிலை பிடிச்சு குடுத்திட்டாள் எண்டு எல்லாசனமும் இனி கதைக்கபோகுது.இனி ரவி வேறை வெளியிலை வந்து பிரச்சனை வளர போகுதே ஒளிய குறையாது பேசாமல் விட்டிருந்தா நான் அப்பிடியே செத்து போயிருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லை .

கதிரை ஒண்ரை எடுத்து சாந்தியின் அருகில் போட்டு அமர்ந்த சிவா.

சாந்தி வடிவா கேளும் அப்போதை நான் பொலிசை கூப்பிடாட்டிலும் வேறை யாராவது கட்டாயம் கூப்பிட்டிருப்பான்.அதை விட இப்ப பொலிஸ் உங்களிட்டை வாக்கு மூலம் எடுக்க வருவினம் உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா என்ரை பெயரை சொல்லுங்கோ நான் உதவி செய்யிறன் வாக்கு மூலம் குடுக்க.

ஆனால் நீங்கள் குடுக்கிற வாக்கு மூலத்தை பொறுத்துதான். ரவியை பற்றின முடிவுகளை பொலிஸ் எடுக்கும் இப்ப ரவிக்கு எதிரா சரியான சாட்சியள் பக்கத்து வீட்டு காரனின்ரை சாட்சி எண்டு கனக்க இருக்கு. நீங்கள் இன்னமும் இவ்வளவும் நடந்தா பிறகும் பத்தாம் பசலித்தனமா புருசனை காப்பாத்திறணெண்டு வெளிக்கிட்டா.அது நீங்களே உங்கடை தலையிலை மண்ணள்ளி போடுற மாதிரி முடியும்.

ரவி நாளைக்கு வெளியிலை வந்து இதை தான் தொடர போறான். அதாலை இது சரியான சந்தர்ப்பம் உங்கடை நன்மைக்கு சொல்லுறன் யோசிச்சு முடிவெடுங்கோ.

அதோடை இப்ப ரவிக்கு எல்லா ஆத்திரமும் என்னிலை வெளியிலை வந்தாலும் முதல் என்னோடைதான் கொழுவுவான். எனக்கு பிரச்:சனையில்லை நான் வேறை இடம் மாறி போடுவன்.பிறகு நீங்களாச்சு ரவியாச்சு கொங்ச நேரத்திலை பொலிஸ் வரும் ரவிக்கு எதிரா வாக்கு மூலம் குடுக்கிறதா இல்லையா எண்டதை யோசிச்சு முடிவெடுங்கோ நான் வெளியிலை நிக்கிறன்.

எண்றவாறு சிவா போய்விட சாந்திக்கு இந்த உலகத்திலிருந்து தன்னை மட்டும் தனியே வெளியே தூக்கி போட்டு விட்டதை போன்றதொரு உணர்வு.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சிவா சொல்லுறதும் நியாயமாக பட்டாலும் பின்னர் புருசனை யெயிலுக்கு அனுப்பினவள் எண்று தனது தாய் தந்தையரே தன்னுடன் கதைப்பார்களா??சரி அப்pடித்தான் செய்தாலும் அடுத்து தான் என்ன செய்வது ?? அல்லது பேசாமல் ரவியுடன் மீண்டும் சேர்ந்தாலும் வாழ ஏலாது அது நிச்சயம் ???பேசாமல் தற்கொலை செய்து விட்டால் எல்லாத்திற்கும்ஒரு முடிவு வருமா???

என்று யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். :arrow:

உறவுகளே சாந்தி எடுத்த முடிவு எப்படிப்பட்டது ரவிக்கு எதிரான முடிவா?? அல்லது ரவியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா?? உங்கள் ஊகம் என்ன ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே தெரியாத பாதை தெளிவானபோது மறுபடி கண்டதில் மகிழ்ச்சி.. ம் என்ர ஊகம் சாந்தி நடந்ததெல்லாத்தையும் பொலீஸ்க்கு சொல்வா. :wink: :P

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594

இந்தக்கதையைப்பாருங்க.. இதில உள்ள மாதிரி பேசாமல் இரண்டு போட்டிட்டு பொலிஸ்க்கு அடிச்சுவிட கதை முடிஞ்சுது. :wink: :P

Link to comment
Share on other sites

ஆகா சாத்திரி கதையை தொடர்ந்தமைக்கு நன்றி.

அதுசரி எங்கட ஊகம் இருக்கட்டும் உங்கட ஊகத்துல கதையை முடியுங்கோ.

அப்புறம் நாங்கள் ஒன்டு சொல்லப் போய் நீங்கள்:

ஒன்டு சொல்லப்போய் கதையை குழப்பாமல் நீங்களே எழுதுங்கோ.

முடிவுக்கு காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

தொடர் கதையின் அடுத்த பாகத்தை தொடர்ந்தமைக்கு நன்றி சாத்திரி. நேரம் கிடைக்கவில்லை என்றால் அவசரப்பட்டு சுருக்கிவிடாமல் அத்துடன் கதையை எங்களுக்காக மாற்றால் அதன் போக்கிலேயே எழுதி முழுமையாக தாருங்கள்.

Link to comment
Share on other sites

ம்ம்..நானும் ஊகிக்க விரும்பவில்லை சாத்திரி அண்ணா...

சாந்தியின் எதிர் காலத்தை நீங்களே சொல்லுங்கள்..

Link to comment
Share on other sites

நீங்கள் எப்படி ஊகித்தாலும் கதை அதன் உண்மை போக்கிலேயே போகும் ஆனாலும் உங்கள் ஊகங்களையும் தெரிந்து கொண்டால் ஒரு வித்தியாசமான தொடராக இருக்குமல்லவா அதனால் தான் கேட்டேன் மற்றபடி கதை முடிய இன்னும் பல தொடர் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

Link to comment
Share on other sites

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...

அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

இப்பத்தான் முழுக்கதையையும் வாசிச்சு முடிச்சனான் சாத்திரி.நல்லா எழுதிறீங்கள்.ரவி என்ன சைக்கோவா...காலால எல்லாம் அடிப்பினமா?கடவுளே...

அடுத்த பகுதியைக் கெரியா எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

சாத்திரி கதையை மீண்டும் தொடர்ந்தமைக்கு நன்றிகள்....

எனது ஊகம் சாந்தி ரவியைப் பற்றி உண்மைகள் எல்லாம் பொலிசிடம் சொல்லுவார்...

Link to comment
Share on other sites

யோவ் சாத்திரி

ஒழுங்காய் கதையில் எந்தவித கற்பனைகளுக்கும் இடம் கொடுக்காமல் உள்ளதை உள்ளபடியே எழுதப் பாரும். இல்லையேல் வதந்தி பரப்புகின்றீரென்று உம்மையே உள்ளே தள்ள வேண்டிவரும். :roll: :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரி சாந்தின்ரை முடிவை எங்களுட்டைக் கேட்டு கதையை மாற்றாமல் இருந்தா காணும் ........ எங்கடை களத்திலை இருக்கிற ஆட்கள் கட்டாயம் சொல்லுவினம் பொலிசிட்டை போட்டுக் குடுக்கத்தான் வேணுமெண்டு ஆனா. .சாந்தின்ரை குணத்தைப் பாத்தா பெற்றேர் ஊர் உறவுக்கு பயந்த பிள்ளை மாதிரிக் கிடக்கு ஆனா படியால் புருஷனைக் காப்பாத்திவிட்டு வேறு முடிவுவை எடுக்கலாம் (ஆனா அது தற்கொலை முயற்சியாக இருக்காது)

Link to comment
Share on other sites

வணக்கம் தாத்தா

நானும் உங்கள் கதையின் ரசிகை

உங்கள் கதை நன்றாக உள்ளது மிகுதிப்பாகத்தையும் எதிர் பார்க்கின்றோம்

Link to comment
Share on other sites

சாத்திரியண்ணா என்னாச்சு உங்கட கதைக்கு சாந்தி இன்னுமாஒரு முடிவுக்கு வரேல்ல.

Link to comment
Share on other sites

சாத்திரி ஒரு தரம்

சாத்திரி இரண்டு தரம்

சாத்திரி மூன்று தரம்

சீக்கிரம் வந்து கதையின் அடுத்த பகுதியை தாருங்கள்.

Link to comment
Share on other sites

எங்கை போட்டார் இந்த சாத்திரி?? :evil: என்ன கதை தொடருமா இல்லையா?? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் இப்ப மரத்தடியில கிளியோட இல்லை... அதால தான் அவர் கதை நிறுத்தீட்டார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஐயா சாத்திரி ஐயா

வாங்கோ வாங்கோ கெதியா வாங்கோ :lol:

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம் நான் வீடு மாறியதில் கணணி இணைப்பை மீண்டும் பெற தாமதமாகி விட்டது எனவேதான் கள பக்கம் வரமுடியவில்லை இனி தொடருவேன்

செல்லலம்ம்ம்ம்ம்ம்,,,, ஐ***********$$$$$$..... :wink: :):lol:

நானும் ஏதோ, சாட்றீ ஐரோப்பிய அவலமெண்டுபோட்டு டென்மார்க் ஹீரோயினோட தனகினவர்(அதானப்பா உண்மையை எழுதினவர்), அந்த ஹீரோயினியின் அடாவடி பக்தர்கள் சாட்றியை கிட்னாப் பன்னீட்டாங்களோ எண்டு நினைச்சுவிட்டேன்,, :oops: :) :cry: அப்படி ஒண்டு நடக்கல்லையா? :roll: :? :shock: சா, யஸ்ற் மிஸ்,,, :evil: :evil:

Link to comment
Share on other sites

ஆஆஆகதையை எழுதிட்டு அனுப்புவமெண்டா :twisted: வருகுது இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ என்றால் எப்படி சாத்திரியாரே

அ ஆ இ என்று போடுங்கள் வரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.