Jump to content

தெரியாத பாதை தெளிவானபோது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி எழுதினால் கதையில் யதார்த்தம் இல்லை என்று சொல்லமாட்டீங்களா?!

கண்டிப்பாக கிடையாது. ஒரு ஆணால் அடிக்க முடியுது என்றதை ஏற்கிறம் ஏன் பெண்ணால் அடிக்கமுடியாது..?? குறைந்தது தன்னையாவது பாதுகாக்க திருப்பித்தாக்க முடியாதா. :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கை குடுக்கிறது கையிலை கத்தி கடற்பாரை ஒன்றுமில்லையெனக் காட்ட அது போல் கன்னத்திலை முத்தமிடுவது காலையிலே பல் விளக்கினேன் என்பதைக் காட்ட.

அப்படி உண்மையைச்சொல்லுங்களேன. :wink: :P

Link to comment
Share on other sites

சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

அம்மா தாயீ..........எதெதுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுகிறீயள் சந்Nhதஷம் ....பிள்ளைக்கு பொண்ணம்மாக்காவைத் தெரியும்போல கிடக்கு.....

Link to comment
Share on other sites

தமிழினி நீங்கள் சொன்னது போலை அவாவும் திருப்பி இரண்டு போட்டிருந்தால் எனக்கும் சந்தோசம் தான் ஆனால் என்ன செய்ய இந்த கதையின் நாயகியின் சுபாவம் அப்படியில்லை பின்னர் மாறுதா எண்டு பாப்பம்

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தாள்மறுநாள் மணி மதியம் பன்னிரண்டை தாண்டியிருந்தது ரவி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தான். எழுந்து வந்து ரவியிடம் .நேற்று இரவு நடந்ததுக்கு மன்னிச்சு கொள்ளுங்கோ நான் வேணுமெண்டு அப்பிடி செய்யேல்லை அவரிலை தான் பிழை சும்மா தள்ளிவிட அவரும் விழுந்திட்டார் வேணுமெண்டா நான் அவரிட்டையும் மன்னிப்பு கேக்கிறன்.

ரவி எதுவுமே பேசாமல் போய் கட்டிலில் விழுந்தான் சாந்தி அருகே போய் என்னப்பா கோவமா சரி என்னிலை தான் பிழை உடுப்பை மாத்திட்டு படுங்கோ ஏதாவது சாப்பிட்டனீங்களோ? நீங்கள் சிகரற் தான் பத்திறீங்கள் எண்டு இவ்வளவு நாளும் நினைச்சு கொண்டிருந்தனான் ஆனால் ..என்று சாந்தி முடிக்கமுதல்.

ஓமடி கஞ்சா கட்டை தூள் எல்லாம் தான் பத்திறனான் அதுக்கு இப்ப என்ன உன்ரை வீட்டு காசிலையா பத்திறன் போடி முதலிலை வெளியிலை எண்று கத்தினான் ரவி . சாந்தி பேசாமல் அறையை விட்டு வெளியேறி குளியலறையில் நுளைந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தாள்.

கன்னம் வீங்கி கண்களும் சிவந்திருந்தது அன்று இருவருமே பின்னர் பேசி கொள்ளவில்லை மறு நாள் ரவி வழைமைபோல வேலைக்கு போய்விட சாந்தி வகுப்பிற்கு போகலாமா வேண்டாமா என் யேசித்தவள் வீட்டிலை இருந்து யோசிச்சு என்ன பிரயோசனம் ரவியின் கோபமும் கொஞ்ச நேரத்திலை குறைந்து விடும் எண்று எண்ணியவளாய் புறப்பட்டு லிப்றறினுள் நுளைந்தாள்.

லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்க அதில் சிவா ஏறி கொண்டான்.ஆகா இண்டைக்கு தனிய மாட்டு பட்டிட்டா இண்டைக்கு இவாவை நாலு கேள்வி கேக்க வேண்டும் எண்று எண்ணி சிவா சாந்தியை பார்த்த மறு கணம் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டான். சாந்தி அவனைப்பார்த்து வணக்கம் எண்றாள் அதற்கு சிவா தலையை குனிந்த படியே வணக்கம் என்றான்.

இருவரும் பஸ் நிலையத்தை அடைந்ததும் பஸ் வர ஏறி கொண்டனர் . உள்ளே ஒரு தனி இருக்கையில் இருக்க போன சிவா சாந்தியை பாத்து நீங்கள் இருங்கோ என கூற முதலில் மறுத்த சாந்தி பின்னர் அமர்ந்து கொள்ள சிவா சாந்தியிடம்.

நீங்கள் ஊரிலை எந்த இடம்

நான் யாழ்ப்பாணம் நவாலி

ஒ நவாலியோ நான் மானிப்பாய்

தெரியும் ரவி சொன்னவர் உங்களிற்கு தம்பையா மாஸ்ரரை தெரியுமோ தமிழ் படிப்பிச்சவர்

ஓ நல்லா தெரியும் அவரிட்டை நானும் படிச்சிருக்கிறன் அவர் உங்களிற்கு ...........

அவரின்ரை மகள்தான் நான்

ஒ அவரின்ரை மகளோ நீங்கள் நான் கண்டதேயில்லை

இப்படியாக படித்த பாடசாலை தெரிந்த சிலர் என்று சில ஊர் விடயங்களை இருவரும் பேசி கொண்டிருக்கையில.; அதுசரிமுதலே உங்களையெண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் உங்களிற்கு ஏதும் சுகமில்லையா ??ஏணெண்ணடா கன்னம் வீங்கின மாதிரி கண்ணும் சிவந்திருக்கு......... என்று சிவா இழுக்க.

சற்று தடுமாறிய சாந்தி ஓம் சுவமில்லை அதோடை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டன் என்றுஅதுதான் கன்னத்திலை அடி பட்டிட்டிது .

அடடா பாத்றுமிலை வழுக்கி விழுந்தா கை கால் தலை தான் அடிபடுறது வழைமை ஆனால் நீங்கள் வித்தியாசமாய் விழுந்திருக்கிறியள் போலை அதுதான் வித்தியாசமாய் கன்னம் இரண்டிலையும் அடி பட்டிருக்கு எற்று சிவா கூற சாந்தியும் தன்னை மறந்து சிரித்தாள் .

சிவா இறங்க வேண்டிய இடம் வர விடை பெற்று கொண்டு போய்விட்டான்.

பின்னர் சாந்தியும் ரவியின் கோபம் குறையும் எண்றெண்ணி ஒவ்வொரு நாளும் முடிந்தளவு பொறுமையாய் ரவியுடன் கதைத்து பார்த்தாள் ஆனால் ரவியின் பேச்சும் திட்டும் இடைக்கiடை அடியும் கூடி கொண்டு போனதே தவிர குறைந்த பாடில்லை.

சில நாட்கள் ரவி வீட்டிற்கே வருவதில்லை .வந்தாலும் எரிந்து விழுந்துதான் பேசுவான். வீட்டில் செலவிற்கும் இப்போ சாந்தி பல தடைவை கேட்டால் தான் ஒருக்கா குடுப்பான். அதுவும் அவனிற்கு விஸ்கி வாங்கிய மிகுதியில்தான் வீட்டு சாமான்கள் வாங்க வேண்டும். அவன் உணவு விடுதியொன்றில் வேலை செய்வதால் அவன் அனேகமாக அங்கேயே சாப்பிட்டு விடுவான்.

மற்றபடி அப்பப்போ அவனது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு இயந்திரமாகவே சாந்தி மாறி போய் விட்டாள். சாந்திக்கும் ஏனிந்த வாழ்க்கை காலமெல்லாம் இப்படிதானா போக போகின்றது ரவி வழைமைக்கு திரும்புவான் எண்று எண்ணி மாதங்கள் நான்கு ஓடி ஏமாற்றமே மிஞ்சியது.

இதே நேரம் சிவாவுடன் அவள் அடிக்கடி கதைத்து அவனிடம் தனது துன்பங்களை பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்களது நட்பும் வளர்ந்தது. ஒருநாள் திடீரென அவளது ஒன்று விட்ட தம்பியொருவன் இங்கிலாந்திலிருந்து தொலை பேசி முலம் தனக்கு ஒரு வாரம் விடுமுறை இருப்பதாகவும் அவளிடம் வருவதாக கூறிவிட

அவளிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தம்பி இங்கை வந்து பாத்து அவனும் கவலை பட்டு என்ரை பிரச்சனையளை ஊருக்கு சொல்லி என்னவாக போகுதோ அதை விட அவன் வாறத்திற்கு ரவி என்ன சொலுறானோ என்று பல வித குழப்பங்களுடன் எதற்கும் ரவியிடம் தம்பி வாற விடயத்தை கூற வெண்டும் என்று முடிவெடுத்தாள்.

அன்றிரவு ரவியிடம். என்னப்பா லண்டனிலை ஒரு தம்பியிருக்கிறான் எண்டு சொல்லியிருக்கிறன் தானே அவன் அடுத்த கிழைமை வாறதா ரெலிபோன் பண்ணினவன் ஒரு கிழைமை நிப்பானாம்

சினத்துடன்:பார்த்த ரவி. நினைச்சனான் என்ன உன்கு என்னாலை பிரச்சனை உடைனை வா எண்டு அடிச்சு சொல்லிட்டியாக்கும் அவர் பஞ்சாயத்து பண்ண வாறாரோ வரட்டும் பாக்கிறன்.

அது சரி அவன் உண்மையா உன்ரை ஒண்ட விட்ட தம்பிதானோ இல்லாட்டி ஏணெண்டா அக்கா தம்பி எண்டு பாசம் பொழிவியள் பிறகென்னடா எண்டா ஒரு நாளைக்கு இரண்டு பேரையும் காணகிடைக்காது ஓடிப்போய் ஒண்டா குடும்பம் நடத்துவியள்.

சாந்திக்கு காதுகள் கூசியது சே ஏன் இப்பிடி கதைக்கிறார் இவருக்கு ஏன் இப்பிடி புத்தி போகிது எண்:று நினைத்தவாறு. என்ரை சின்னம்மான்ரை மகன் தான் ஆனால் நாங்கள ஊரிலை சொந்த சகோதரம் மாதிரித்தான் பழகினனாங்கள். ஏன் நீங்களும் கதைச்சிருக்கிறீங்கள் தானே அவனோடை

சரி சரி வரட்டும ஆனால் நாள் கணக்கா அவன் இங்கை நிக்கிறேல்லை அதோடை எனக்கு புத்தி சொல்ல தொடங்கவும் கூடாது சொல்லிவை

அவனிற்கு நான் ஒண்டும் சொல்லேல்லை ஆனால் அவன் நிக்கேக்கை நீங்கள் கொஞ்சம் உந்த பத்திறதுகளை அவனுக்கு முன்னாலை பத்தாமல் விட்டீங்களண்டா நல்லது பிறகு அவன் ஊருக்கு .. ...

என்று முடிக்கமுதல் என்னடி தொடங்கிட்டியா புத்திமதி சொல்லஎன்று கத்திய ரவியின் கையிலிருந்த சிறிய பியர் போத்தல் சாந்தியை நோக்கி பறந்து வர தற்செயலாக அவளும் விலகி கொள்ள போத்தல் சிவரில் பட்டு தெறித்தது.

வீட்டு அழைப்பு மணிஅடிக்கும் ஓசை கேட்டு ரவி கதைவை திறந்தான் பக்கத்து வீட்டு வெள்ளை காரன் கோபமாக . திருவாளர் அவர்களே தினம் தினம் உங்கள் வீட்டில் சத்தம் எங்கள் வீட்டில் குழந்தைகள் நித்திரை செய்கிறார்கள் எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு இனி சத்தம் போட்டால் காவல் துறையை அழைக்கவேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு போய்விட்டான்.

அன்று சாந்தி பக்கத்து வீட்டு காரனால் தப்பி விட்டாள்.ஆனால் ரவியால் இனி என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாத ஒரு பயந்த வாழ்க்கையே ஆனாலும் எது நடந்தாலும் தனது தாய் தந்தைக்கு தெரிய படுத்தி அவர்களையும் கவலைபட வைப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள்.

அவளது தம்பியும் அவளிற்கு ரவிக்கு என்று பல பரிசு பொருட்கள் முக்கியமாக சாந்திக்கு நிறைய சொக்லெற் வகைகள் என்பன வற்றுடன்லண்டனிலிருந்து வந்து விட்டான் .அன்றிரவு சாந்தி அவனுக்கு பிடித்த உணவுவகைகளை செய்து பரிமாறி கொண்டிருக்கையில்.

அக்கா ஞாபகம் இருக்கே நாங்கள ஊரிலை ஒரு துண்டு கண்டொஸ் சொக்லெற்றுக்கு அடிபடுறனாங்கள் அதாலைதான் உனக்கு நிறைய அள்ளி கொண்டு வந்தனான். ஆசை தீர சாப்பிடு ஆனால் கனக்க திண்டு மொத்தமா வந்திடாதை பிறகு அத்தான் என்னைதான் திட்டுவார் என்று கண்ணடித்தபடி அதுசரி அத்தான் எத்தினை மணிக்கு வேலையாலை வருவார் அவர் வந்தா பிறகு சாப்பிடுவும்.

அவர் றிங்ஸ் பாவிக்கிறவர்தானே அவருக்கும் ஒரு ஸ்பெசல் ஸ்கொச் போத்தல் ஒண்டு கொண்டு வந்தனான்.அதுசரி நீ முந்தி வழ வழ எண்டு கதைப்பாய் இப்ப என்ன நடந்தது வந்ததிலை இருந்து பாக்கிறன் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுறாய் ஏன் ஏதும் பிரச்சனையோ? என்று அவளது தம்பி இடைவிடாது கேள்விகளை கேட்டு கொண்டேயிருந்தான்.

ஒண்டுமில்லையடா நீ சாப்பிடு அவருக்கு வேலை சில நேரம் பிந்திதான் முடியும் அவரை பாக்காமல் நீ சாப்பிடு என்று சாப்பாட்டை பரிமாறி கொண்டிருக்கும் போதே ரவி உள்ளே நுளைந்தான் :arrow:

Link to comment
Share on other sites

சாத்திரி தமிழினி சொல்லிப் போட்டா என்று கதையிலை மாற்றம் கொண்டு வராமல் உள்ளதை உள்ள மாதிரியே எழுதும். இல்லையேல் பிறகு ரவியும் உம்மில் வழக்குப் போட்டாலும் போடலாம். எனவே கவனமாக எழுதும். பிறகு உம்மை ஜாமீனில் எடுக்க நானெல்லோ அலைய வேண்டும். :roll: :roll:

Link to comment
Share on other sites

சாத்திரி "தெரியாத பாதை தெளிவானபோது, புகழ்பெற்ற விமர்சகர்கள் கேட்டவை" என்று சமாந்தரமாக தொடங்கி எழுதுங்கோ. சாந்தி கராத்தே கறுப்புப்பட்டி என்ற உண்மை தெரியமாயல் களியாணம் முடிக்க ஓமெண்டது பெரிய தப்பு என்று ரவி ஆஸ்பத்திரியில இருந்து வலியில புலம்பிறதா கதை முடியுங்கோ.

கஞ்சா எண்டு சாந்தி குளம்பிறா எண்டு சொல்லி கட்டையோடை நிப்பாட்டிப்போட்டியள், பளிங்கில புகையிரதம் ஓடுறதும் இப்ப சகஜமுங்கோ.

காய்ந்த ஓப்பி பூவை கசக்கி சில சிற்றுண்டிகளில் final touch ஆக தூவுகிறார்கள், அதை சிறுவர்களுக்கும் குடுக்கிறார்கள். அதிக செறிவில நுகருறது அடிமைப்படுறதுகள் தானே பிரச்சனை.

Link to comment
Share on other sites

சாத்திரி உங்கள் தெரியாத பாதை தெளிவானபோது தொடர்கதை விறுவிறுப்பாக செல்கிறது. வாழ்த்துக்கள். அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

Link to comment
Share on other sites

ரவி உள்ளே நுழையவும் பிறகென்ன அத்தானும் வந்திட்டார் வாங்கோ அத்தான் . அக்கா நான் அத்தானுக்கு கொண்டந்த சாமான்களை எடு. அத்தான் உங்களிறக்கு ஸ்பெசல் ஸ்கொச் 25 இயர் ஓல்ட் ஒண்டு கொண்டந்தனான் அடிச்சு பாத்து சொல்லுங்கோ எப்பிடியெண்டு. எனறவாறே ஈசன் கையில் மது போத்தலை எடுத்தவாறு.

உங்களை பாத்து கொண்டிருந்தனான் அப்பதானே உங்கடை சாட்டிலை நானும் கொஞ்சம் அடிக்கலாம் இல்லாட்டி அக்காள் விடமாட்டாள்.என்று சொல்லி கொண்டே அவன் இரண்டு கிளாசில் மதுவை ஊற்ற சாந்தி பேசாமல் பாத்த வண்ணம் நின்றாள்.

ரவியும் பெரிதாக எதுவும் பேசவில்லை தொலை காட்சியை பாத்தபடி சாந்தியின் தம்பியின் கதைகளிற்கு ஓம் இல்லை ம்..என்ன சொற்கள் மட்டுமே அவன் வாயிலிருந்து வந்தது. நிண்ட நேரத்தின் பின்னர் ஈசனும் ஏதோ புரிந்தவனாக பேசுவதை குறைத்து கொண்டு சரி எனக்கும் கொஞ்சம் அலுப்பா இருக்கு படுப்பம் என்றவாறு படுக்கைக்கு போன ஈசனுக்குள் ஆயிரம் கேள்விகள் எதற்குமே விடை தெரியாது உறங்கி போனான்.

மறு நாள் ரவி வேலைக்கு போன பின்னர் ஈசன் சாந்தியிடம் அக்கா உண்மையை சொல்லு நீயும் பெரிசா கதைக்கிறாய் இல்லை அத்தனும் உம்மெண்டு கொண்டிருக்கிறார் உங்களிற்கை ஏதும் பிரச்சனையா?? இல்லாட்டி நான் வந்தது பிடிக்கேல்லையா பிடிக்காட்டி சொல்லு நான் இப்பவே போறன் நான் கன காலத்திற்கு பிறகு உன்னை பாக்கிறணெண்டு எவ்வளவு ஆசையா வந்தனான் இஞ்சை யென்னண்டா ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கு என்றவும்.

சாந்தி அதற்கு மேலும் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் தம்பி என்னத்தை சொல் எல்லாம் என்ரை விதி யென்றவாறு ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டாள்.ஈசனுக்கு அவளது அழுகையை நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது .என்ணெண்டு சொல்லிட்டு அழன் எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன பிரச்சனையெண்டாலும் சொல்லு முடிஞ்சளவு உதவி செய்யிறன் .

சாந்தி ஓரளவு தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு நடந்ததையெல்லாம் மூக்கை சீறியபடியே மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ரவி

. ம் இஞ்சை தண்ணியடிக்கிறது கட்டையடிக்கிறது எல்லாம் அனேகமான எல்லா இளைஞரிட்டையும் சில நேரம் இருக்கும் ஆனால் குடும்பம் எண்டு வரேக்கை கொஞ்சம் மாறத்தான் வேணும் சில நேரம் அத்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவார் நீ அதுகளை உடைனை விடச்சொல்லி அடம் பிடிச்சு சண்டை பிடிக்காதை நான்வேணுமெண்டா கதைச்சு பாக்கிறன்.

இல்லையடா நான் ஒண்டுமே சொல்லுறேல்லை அவரும் மாறுவார் எண்டுதான் நானும் பொறுமையா இருக்கிறன் ஆனால் அவரின்ரை பழக்கம் கூடிக்கொண்டுதான் போகுதே ஒழிய குறையேல்லை அதை விட இப்ப வீட்டுக்கே சில நேரங்களிலை வாறது இல்லை ஏன் எங்கை போறார் எண்டு கேக்க ஏலாது கேட்டா அது பெரிய பிரச்:சனையாயிடும் நீயும் ஒண்டும் அவரிட்டை கேக்காதை பிறகு நான் சொல்லித்தான் நீ கே;கிறாயெண்டு அது வேறை பிரச்சனையா போகும் .எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாமல் தினம் தினம் செத்து பிழைக்கிற வாழ்க்கையா போச்சு எனக்கு.

ஆனால் இதையொண்டையும் நீ ஊருக்கு சொல்லி போடாதை பிறகு அங்கை அப்பர் அம்மா வேறை என்னாலை யோசிச்சு அவைக்கு மேன் பிரச்சனை ஏதோ என்ரை தலைவிதி இப்பிடி அது என்னோடை போகட்டும். நான் கும்பிட்ட தெய்வங்கள்: தான் எனக்கு வழி காட்ட வேணும் எண்று ஒரு பெரு மூச்சுடன் நிறுத்தினாள்.

அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை ஏதோ பக்குவமா அத்தானோடை கதைச்சு பார் எனக்கு இவ்வளவும் கேட்டா பிறகு இஞ்சை நிக்கவும் ஒரு மாதிரியிருக்கு அதாலை நான் என்ரை சினேதன் வீட்டிலை போய் நிக்கிறன் குறை நினைக்காதை. நான் போகேக்கை போன் பண்ணுறன்;.என்ற வாறு ஈசன் தனது பொதியை தயார் செய்தான்.

நானும் உன்னட்டை சொல்ல நினைச்சனான் நீ இஞ்சை நிக்கிறதும் அவருக்கு பெரிசா பிடிக்கேல்லை அதை உன்னட்டை என்ணெண்டு சொல்லுறது அதை விடை அவர் சில நேரம் உன்னோடை பிரச்சனைக்கு வந்திடுவாரோ எண்டு வேறை எனக்கு பயம் அதாலை நீ வேறையிடத்திலை நிக்கிறது உனக்கும் நல்லது கோவிக்காதையடா என்றவாறு ஈசனின் கைகளை பிடித்து கொண்டாள்.

ஈசன் தனது நண்பன் வீட்டிற்கு போய்விட இரவு வேலையால் வந்த ரவி . சாந்தி ஈசன் கொண்டு வந்த சொக்லெற்ரை சாப்பிட்டபடி தொலை காட்சி பாத்து கொண்டுருந்ததை கண்டதும்

எங்கை உன்ரை தம்பி ஆழை காணேல்லை

சாந்தி எழுந்தவாறு அலன் யாரோ தன்ரை சினேதன் வீட்டை நிக்கிறணெண்டு போட்டான் போகேக்கை வருவானாம் உங்களிட்டையும் சொல்ல சொன்னவன்.

ரவி அலமாரியிலிருந்த முதல்நாள் ஈசன் குடுத்த விஸ்கியில் இருந்த மீதத்தையும் இரண்டு கிளாசையும் எடுத்தவாறு என்ன என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் சொல்லி ஆளை அனுப்பிட்டியா??வா வந்து இதிலை இரு என்று சாந்தியை கூப்பிட சாந்தி தயங்கியவாறு நிக்க வாடி வந்து இரடி எண்று கத்த சாந்தி பயத்துடன் அருகில் போய் இருந்தாள்.

இரண்டு கிளாசில் விஸ்கியை ஊத்தியபடி நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் இப்பிடியே ஒவ்வொரு நாளும் நானும் நீயும் சண்டை பிடிச்சு மூஞ்சையை நீட்டி கொண்டிருக்கிறதிலை பிரயோசனம் இல்லை.என்று கூறிவிட்டு சாந்தியை உற்று பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு தனது சட்டை பையிலிருந்து ஒரு கட்டு துண்டை எடுத்து லைற்றரில் சுூடாக்கி அதனை புகையிலை தூளுடன் கலந்து பேப்பரில் சுத்தியவாறு தொடர்ந்தான்.

அதாலை நீ யோசிக்காதை உன்னை வீட்டை விட்டு கலைக்கப்பேறனெண்டு ஏணெண்டா பிரெஞ்சு காரியளிட்டை இல்லாத ஏதோ ஒரு ஒரு கிக் உன்னட்டை இருக்கு ஆனால் நீ விரும்பின மாதிரி என்னாலை மாற ஏலாது அதாலை நீ நான் விரும்பின படி மாறிடு பிறகு இரண்டு பேருக்கும் பிரச்சனையே இல்லை .

என்ற படி ஒரு விஸ்கி கிளாசை சாந்தியின் கையில் கொடுத்து விட்டு தானும் மற்ற கிளாசை தனது கையில் எடுத்து சாந்தியின் கிளாசில் சிங் என்று சொல்லி தட்டி விட்டு குடி என்றான்.சாந்தி என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப்போய் நிற்க

அவன் தனது விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு .

குடியடி குடி குடி குடி தம்பி கொண்டந்த சொக்கிலேற்ரை ஆசையா திண்டனியல்லே இதுவும் உன்ரை தம்பிதான் கொண்டந்தவன் குடி என்றவாறு அவளது கிளாசை அவளது வாயில் வைத்து திணித்து ஊற்றி விட கொஞ்ச விஸ்கி அவளின் தொண்டைக்குள் இறங்க அவள் திமிறி அவனை தள்ளிவிட மீதி கிளாசுடன் கீழே விழுந்துடைந்தது அவள் வேண்டாமப்பா அய்யோ தயவு செய்து என்னை விட்டு விடுங்கோ வேண்டாம் என்று கத்தியவாறு குளியலறைக்கு ஓட வெளிக்கிட அவளை கதிரையில் இழுத்து இருத்தி விட்டு அவன் சுத்திய கட்டுசிகரற்ரை புகைத்து சாந்தியின் முகத்தில் மாறி மாறி ஊதி விட்டு ஒரு மன நோயாளியை போல் சிரித்தான்.

சாந்திக்கு வயிற்ரை புரட்டிகொண்டு வாந்தி வருவது போல இருந்தது வார்த்தைகள் வரவில்லை கண்கள் பிதுங்கி தலை சுற்றுவது போல இருந்தது ஓங்காழித்த படி குளியலறைக்குள் பேனவள் கீழே விழுந்து தட்டு தடுமாளி எழுந்து குடல் வெளியே வருவது போல வாந்தியெடுத்து கொண்டிருக்க .

அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர் :arrow:

Link to comment
Share on other sites

ஐயா சாத்திரியாரே உண்மையி உங்கள் கதை நன்றாக இருக்கின்றது பாராட்டுக்கள்

அடுத்து என்ன நடக்குமென்று கொஞ்சம் ஊகிக்கக் கூடியதாகவே உள்ளது. :cry: :cry: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்

தம்பி வெளியில் போய் ஆப்பு வைத்திட்டாரா இல்லை பக்கத்திவீட்டுக்காரனா.?

அடுத்த பாதையைப்பாத்தபடி :lol:

Link to comment
Share on other sites

கதையினை ஆறுதலாக வாசித்துவிட்டு வாறன்.

முன்பும் உங்கள் கதைகள் வாசித்திருக்கிறன். எப்படியும் நன்றாகத்தான் இருக்கும்.

வாழ்த்துக்கள்...

மேலும் தொடருங்கள்...

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருக்கு . .. நல்லா போகுது ...சாந்தி தான் பாவம் ரொம்ப கஸ்டப் பட்டுருக்குறா ... சரி அடுத்த பாகத்தை போடுங்க வாசிக்க ஆவாலாக இருக்கு...

Link to comment
Share on other sites

சாத்திரி கதை மிகவும் நிஐமாக இருக்கின்றது. புலத்தில் கன வீட்டில் நடக்கும் கதையை அழகாக சொல்கிறீர்கள். சாந்தி மனமுடைந்து எடுக்கும் கடைசி முடிவு மிகவும் வித்தியாசமாய் இருக்கும் என நினைக்கின்றேன். காத்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் சிவா ஒவ்வொருநாள் காலையும் சாந்தியின் வரவுக்காய் காத்து நிற்பது வழைமையாகி விட்டதுஇருவரும் ஒன்றாகவே வகுப்புகளிற்கு புறப்படுவார்கள் அன்றும் வழைமை போல காத்து நின்றான் ஆனால் சாந்தியை காணவில்லை அவனுக்கு கற்பனை பல பக்கத்தால் ஓடியது நேற்று இரவு பொலிசும் வந்திட்டு போனவன் என்ன நடந்ததோ எண்று நினைத்தவன்.

எதற்கும் போய் ஒருக்கா கதவிலை தட்டி பாப்பமா?? சே சில நேரம் ரவி நிண்டால் அதுவேறை வம்பா போயிடும் என்ன செய்யலாம் என்று தத்தளித்து கொண்டிருந்த வேளை லிப்ற் இறங்கும் சத்தம் கேட்டது அவனையறியாமலே கடவுளே சாந்தியா இருக்க வேணும் என நினைக்க லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்று கதவு திறந்தது .

சாந்திதான் அவளை பார்த்ததும். ஒரு நிம்மதி பொரு மூச்சுடன். என்ன வழக்கம் போலை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டீங்களா ?? முகம் ஒரு மாதிரியிருக்கு அது சரி நேற்று பொலிஸ் வந்த மாதிரி கிடக்கு நான் நினைச்சன் மனிசனை பிடிச்சு கொண்டு போட்டாங்களாக்கும் எண்டு என்ன நடந்தது .

ம் நான் இண்டைக்கு வகுப்புக்கு வரேல்லைஎனக்கு சரியா வயிறு நோகுது தலையிடியும். நீங்கள் பாத்து கொண்டு நிண்டாலும் எண்டு சொல்லதான் வந்தனான். ரெலிபோன் அடிச்சு சொல்ல உங்களின்ரை நம்பர் என்னட்டை இல்லை நானும் இவ்வளவு நாளும் கேக்கேல்லை என்று கலங்கிய கண்களை துடைத்தவாறு கூறினாள்.

சிவா தலையை ஆட்டியபடி என்ன நடந்தது நேற்றும் சண்டையோ பொலிஸ் வரேக்கை கண்டனான் வந்து பாக்க வெண்டு யோசிச்சிட்டு பிறகு அதாலை உங்களிற்குதான் இன்னும் பிரச்சனை அதுதான் வரேல்லை என்ன நடந்தது சொல்லுங்கோ ??வாங்கோ இதிலை நிண்டு கதைக்காமல் வீட்டுக்கை உள்ளை வாங்கோ என்று அழைத்தான் .

சிவா வீட்டில் உள்ளே போன சாந்தி உள்ளே போய் கதிரையில்: அமர மறுத்து நான் கன நேரம் நிக்கேல்லை அவர் வெளியிலை போட்டார் வேலைக்கா தான் இருக்க வேணும் . சில நேரம் திடீரெண்டு வந்தாலும். நான் கெதியா போறன் என்றவாறு சிவரில் சாய்ந்தபடி நடந்தவற்ரை சிவாவிடம் விளக்கினாள் . பக்கத்து வீட்டு காரன் தான் போன் பண்ணியிருக்கவேணும் பொலிஸ் வந்திட்டான் நான் தான் எனக்கு சுகமில்லை விழுந்திட்டன் எண்டு சொல்லிசமாளிச்சு அனுப்பிட்டன்.

நான் சத்தியெடுத்து கொணந்டிருந்ததாலை பொலிசும் அம்புலன்சை கூப்பிடவா எண்டு கேட்டான் நானும் தேவையில்லை எண்டு சொல்ல அவையள் நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியேல்லை இரண்டு பேரின்ரை பெயர் விபரத்தை வாங்கி எழுதி கொண்டு போட்டாங்கள்.அதோடை அவரும் பேசாமல் இருந்திட்டார்.

சிவாவந்த கோபத்தை அடக்கியவாறு அவர் என்ன அவர் அவருக்கு மரியாதை வேறை வேண்டி கிடக்கோ நீங்கள் பேசாமல் பொலிசிட்டை உண்மையை சொல்லியிருக்கலாம் கொஞ்ச நாள் உள்ளை போட்டு வந்தால்தான் உப்பிடியான ஆக்கள் திருந்துவினம்.

சாந்தி நான் உங்கடை பிரச்சனையிக்கை தலையிடுறன் எண்டு நினைக்காதையுங்கோ ஏதோ உங்கடை அப்பாட்டை படிச்சிருக்கிறன் அந்த நன்றி கடனிலை உள்ள அக்கறை எண்டு எடுத்தாலும் சரி அல்லது யாரோ ஒரு தமிழ் பிள்ளை கஸ்ர படுறதை பாக்க முடியாமல் சொல்லுறன் எண்டு எடுத்தாலும் சரி இன்னும் எத்தினை நாள் இப்பிடி சித்திர வதையிக்கை வாழ போறியள் உங்கடை வாழ்க்கையை உப்பிடியே நீங்களே அழிக்க போறீங்களா உங்கடை தம்பி நிக்கேக்கையே ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஏதோ யோசிச்சு நடவுங்கோ ஆனால் ஒண்டு மட்டும் தெரியிது ஒருநாளைக்கு அவன் உங்களை அடிச்சே கொல்ல போறான்.

சாந்திக்கு அவளால் கட்டுபடுத்த முடியாமல் கண்களால் வழிந்த நீரை துடைத்த படி.

என்னை அடிச்சு கெண்டால்தான் பிரச்சனை முடீஞ்சுதே என்ன செய்ய பேசாமல் தற்கொலை செய்யலாம் எண்டும் யோசிச்சனான் ஆனால் அதுக்கும் ஊரிலை அம்மா அப்பா தங்கச்சியை நினைச்சா மனம் வருகுது இல்லை. அடுத்தா தங்கச்சி வேறை பிறகு அவளுக்கு நாளைக்கு ஒரு சம்பந்தம் எண்டு வரேக்கை ஊரிலை பலமாதிரியும் கதைப்பினம்.

அம்மா பாவம் ஏற்கனவே வருத்த காரி இப்பிடி எல்லாத்தையும் யோசிச்சு ஏதோ நான் இஞ்சை சந்தோசமா இருக்கிறன் எண்டு நினைச்சு கொண்டாவது அவையள் நிம்மதியா இருக்கட்டுமெண்டுதான் பல்லை கடிச்சு கொண்டு இருக்கிறன்.பாப்பம் ஏதாவது முடிவு ஒண்டு கடவுள் வழி காட்டுவார்தானே சரி உங்களிற்கு நேரம் போட்டுது போங்கோ முடிஞ்சா நாளைக்கு வகுப்புக்கு வாறன்.

ம் உங்களை திருத்த ஏலாது நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேக்கிற மாதிரியில்லை உப்பிடியே சமுதாயத்துக்கு பயந்து கொண்டும் அம்மா அப்பாவை நினைச்சு கொண்டு ஒவ்வொரு நாளும் அடி வாங்கி கொண்டு அழுது கொண்டு இருங்கோ. சரி டொக்ரரிட்டை போறீங்களோ இல்லாட்டி நான் வலிக்கு ஏதும் மருந்து வாங்கி தந்திட்டு போகட்டோ?

வேண்டாம் நீங்கள் போங்கோ என்னட்டை மருந்துகள் இருக்கு அப்பிடியும் முடியாட்டி நானே டொக்ரரிட்டை போறன் . என்றவாறு சிவாவும் சாந்தியும் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள். ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான் :arrow:

Link to comment
Share on other sites

ஆகா ரவிட்டை மாட்டுப்பட்டு போட்டினமா? பாவம் சாந்தி. இனி என்ன நடக்கும் என்று அறிய ஆவலாக உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாவின் பாத்திரம் பொறுப்புடன் அமைந்துள்ளது. ம் பாப்பம் ரவி என்ன சொல்றார் என்று தொடருங்கள் சாத்திரி. :P

Link to comment
Share on other sites

நானும் அடுத்தவாரம் அய்ரோப்பிய சுற்று பயணம் மேற்கொள்ள(பெல்யியம்.கொலண்ட்.

Link to comment
Share on other sites

சாத்திரி தொடர் மிகவும் அருமை

ஐய்யோ சாத்திரி வாசகர்களை இப்படி ஏங்க வைக்காதீர்கள். தொடரை முடித்து விட்டு உங்கள் சுற்றுலா பயணத்து போங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஆறிய ஆவல்

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணா...கதை விறுவிறுப்பாக இருக்கிறது...ஆனால்..கதைல் வரும் சாந்தியின் வாழ்க்கையை நினைக்கயில் தான் மனசுக்கு ஏதோ கஷ்டமா இருக்கிறது.... :lol: என்னவோ..கதை மனதோடு உறைந்து போவது போல் ஒரு உணர்வு.. :D

ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான்

இதில விட்டுட்டு போவதாக சொல்லுறீங்களே. :shock: போய் வரும் வரை பொறுப்பது கஷ்டம்..சொல்லிட்டு ப்போங்கோ... :roll:

Link to comment
Share on other sites

கொஞ்சம் வாசித்தன் சாத்திரி

நல்லாயிருக்கு

முழுவதும் வாசித்து விட்டு சொல்றன்.

வாழ்த்துகள்.............

Link to comment
Share on other sites

நானும் அடுத்தவாரம் அய்ரோப்பிய சுற்று பயணம் மேற்கொள்ள(பெல்யியம்.கொலண்ட்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.