Jump to content

தெரியாத பாதை தெளிவானபோது


Recommended Posts

இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.

அருமையான புருஷன் இப்பிடிக் கிடைக்க எல்லாரும் குடுத்து வைச்சிருக்கவேணும் சாத்திரி எப்படா கதையை முடிக்கப் போறாய் ..........................???

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply

சீ சீ கதையை முடிக்க வேண்டாம் ஆறுதாக சம்பவங்களை விபரித்து எழுதுங்கள் :lol: அந்த இரவு விருந்தில் என்ன திருப்பம் நிகழப்போகிறது என்ற இப்பவே அறிய வேணும் போல இருக்கிறது.

Link to comment
Share on other sites

Mugathar wrote:

அருமையான புருஷன் இப்பிடிக் கிடைக்க எல்லாரும் குடுத்து வைச்சிருக்கவேணும் சாத்திரி எப்படா கதையை முடிக்கப் போறாய் ..........................???

அப்படியில்லை முகத்தார் வாற வெள்ளைக்காரிகளுக்கு தான் கொஞ்சும் போது தனது மனைவி தன்னை தப்பாக நினைத்து விடக்கூடாதென்ற நப்பாசையாலைதான் .

சாத்திரி !

மற்றையவை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் நினைத்தது போல்த்தான் கதை போகின்றது. ஆனாலும் கதை இணைப்பதற்கு உவ்வளவு இழுத்தடிப்பு கூடாது. உங்கே மெசஞ்சரில் தாவணிகளோடு சட் பண்ண எடுக்கின்ற நேரத்திலை ஒழுங்காய் கதையை எழுதப் பாரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி வசம்பண்ணை சாத்திரியர் மெசெஞ்ஞரில சட் பண்ணிறது உங்களுக்கு எப்படித் தெரியும்,சேந்து செய்தாத் தானே தெரியும்.எண்டாலும் இப்படி கூட இருந்தே கால வாரக் கூடாது....

Link to comment
Share on other sites

சா சா சிலுக்கு நான் அப்படிச் செய்வேனா?? சாத்திரியின்ரை லீலைகளையெல்லாம் முகத்தார் தான் போட்டுத் தந்தவர்.

Link to comment
Share on other sites

தம்பி ராசா கடைசிலை சாத்திரி எனக்கு ஆப்பு வைக்கிறதுக்கு வழி வைக்கிறாய்; என்ன.............. அதுவும் பர்றா யாரிட்டை சொல்லுறதெண்டு..........

Link to comment
Share on other sites

முகத்தார் கோபிக்காதைங்கோ. எனக்கு உண்மையே பேசிப் பழகியதாலே சிலுக்கு கேட்டதும் பட்டென்று கொட்டிற்றன். :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் கோபிக்காதைங்கோ. எனக்கு உண்மையே பேசிப் பழகியதாலே சிலுக்கு கேட்டதும் பட்டென்று கொட்டிற்றன்.

:lol::o:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

சாத்திரி !

மற்றையவை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் நினைத்தது போல்த்தான் கதை போகின்றது. ஆனாலும் கதை இணைப்பதற்கு உவ்வளவு இழுத்தடிப்பு கூடாது. உங்கே மெசஞ்சரில் தாவணிகளோடு சட் பண்ண

ஒய் வசம்பு நான் நேற்று உம்மோடை சாட்பண்ணேக்கை நீர் தாவணியா உடுத்திருந்தனீர் எவ்வளவு காலமா உந்த பழக்கம் சரி சரி கோவியாதையும் விரைவிலை கதையை முடிக்கிறன் அட நான் எழுதிற கதையை சொன்னன்

Link to comment
Share on other sites

ஆகா அது வேற நடக்குதா :lol: அதுதான் கூப்பிட்டாலும் சாஸ்திரியாரிடமிருந்து பதில் இல்ல போல

அது சரி இப்ப யார் தாவணியில் ? பழைய நினைவுகளில் ஆசைக்காக தாவணி என்று சொல்கிறாரோ வசம்பு?

Link to comment
Share on other sites

சாத்திரி கதை நன்றாக போகின்றது. இது தான் இந்த ஊர் பழக்கம் என்று சொல்லி சொல்லியே தமிழ் பழக்கங்களை மறக்க வைக்கிறார்கள். ம்ம் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

பழைய நினைவுகளில் ஆசைக்காக தாவணி என்று சொல்கிறாரோ வசம்பு

ஆகா.........வசம்பு அங்கை பாத்தா நினைவில் நின்றதிலை பழைய பாடலைகளை போட்டுத் தாக்கிறீயள் இஞ்சை என்னடா எண்டால் தாவணி எண்டு பழைய நினைவுகள் அப்பு மாட்டுப்பட்டுட்டீர் நீர் எங்கடை பச்தானே என்ன ...............சந்தோஷம்....

Link to comment
Share on other sites

முகத்தாருக்கும் ஆசைதான் சாத்திரிக்கு சேலை என்று சொல்வதை விட தாவணி என்று சொன்னால் தான் கிக்கென்று எனக்குப் போட்டுக் கொடுத்திட்டு இப்ப சாத்திரியைச் சமாளிக்க என்னை மாட்டி விட ஆசை. உதெல்லாம் முகத்தாரின் சின்னச் சின்ன ஆசைகளோ??முகத்தார் பழைய பாடல்கள் என்றால் எல்லோருக்கும் தான் பிடிக்கும். பாடலை இரசிப்பதற்கும் வயசிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படிப் பார்த்தால் நீங்களெல்லாம் தியாகராஜபாகவதரின் பாட்டுக்களையா கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

என்ன மதன் இப்போ சத்தம் கேட்கின்றதா??

Link to comment
Share on other sites

தம்பி சாத்திரிக்கு இந்த உடுப்புகளைப் பற்றி கவலையில்லையப்பா அட நான் சொன்னது கீழதேச உடுப்புகளைப்பற்றி ஜீன்ஸ் ரி .சேட்டிலை தான் ஆள் இப்ப சிந்து பாடிக் கொண்டு திரியிறார்.........மதன் சும்மா உம்மை சத்தம் போட வைச்சிட்டு பிறகு புூட்டோடை வருவர் இதுகளின் உசாரா இரு அப்பு............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.மற்றது இன்னொரு விசயம் இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.

இதென்ன இது புதுவழக்கம். இப்படிவேறை நடக்கிதா.. எப்ப இருந்து. சின்னப்பிள்ளைகளை து}க்கி கொஞ்சிறதைக்கண்டிருக்கன். பெரியாக்கள். :roll: :roll: :wink: :P

Link to comment
Share on other sites

தமிழினி

அங்கு குறிப்பிடப்பட்டது பார்ட்டிக்கு வரும் ஐரோப்பியர்கள் செய்வது பற்றியே. நீங்களும் ஐரோப்பாவில் தானே வாழ்கின்றீர்கள். இதுவரை ஐரோப்பியர்களின் விழாக்கள் ஒன்றிலும் கலந்து கொள்ளவில்லையா??

Link to comment
Share on other sites

இந்த முறை கீழ் வீட்டில் வசிக்கும் அந்த இரண்டு இளைஞர்களைபற்றியும் பார்ப்போம்

கதவை திறந்து உள்ளே நுளைந்த சிறி சிவாடேய் எனக்கு ஒரு கடிமொண்டு வந்திருக்கு இதென்ணெண்டு ஒருக்கா வாசியடா என்று ஒரு கடிதத்தை சிவாவிடம் நீட்டினான்

படம்பார்த்து கொண்டிருந்த சிவா. இவனொருத்தன் பெட்டிக்கை போடுற விளம்பரத்தையெல்லாம் தூக்கியந்து படி படியெண்டு தொல்லைஅதுகளை வேறை சேத்து வைச்சு வீட்டுக்கை கடதாசி சேந்து போச்சு அடசீ இதுவும் விளம்பரம்:தானடா கொண்டு போய் குப்பையிலை போடு. என்று அந்த கடதாசியை எறிந்தான்

அட ஏதோ படிக்கிறனெண்டு ஒரு கொப்பியை தூக்கி கொண்டு திரியிறாய் பிரெஞ்சு தெரிஞ்சிருக்குமெண்டு கேட்டன்.உன்னை மாதிரி நானும் அண்ணன் கூப்பிட்டு விட்டிருந்தா பாசை படிக்க போயிருப்பன் நான் கடன் பட்டு வந்திட்டதாலை..........................என்று சிறி தொடங்க

அடடா தொடங்கிட்டான் சோக கதை சொல்ல நிப்பாட்டு அது சரி மேலை ரவியருக்கு மனிசி வந்திட்டுது தெரியுமோ? உனக்கு சொன்னவனோ ? நான் இரண்டு மூண்டுதரம் கண்டனான் தனக்கு ஏற்ற மாதிரித்தான் தேடிப்பிடிச்சிருக்கிறான்.சர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி

அங்கு குறிப்பிடப்பட்டது பார்ட்டிக்கு வரும் ஐரோப்பியர்கள் செய்வது பற்றியே. நீங்களும் ஐரோப்பாவில் தானே வாழ்கின்றீர்கள். இதுவரை ஐரோப்பியர்களின் விழாக்கள் ஒன்றிலும் கலந்து கொள்ளவில்லையா??

கலந்து கொண்டதுண்டு. ஆனால் கைகுலுக்கலோடு வணக்கத்தை முடிப்பது தான் எங்கள் வழக்கம். இப்படியான முறைகள் புதிசாக்கிடக்கு.

:wink: :lol::o :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.

ஆகா கதையின் நாயகனிட்ட இந்தப்பழக்கமா?? சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி அடிக்க வாங்கீட்டிருக்கிற மாதிரி கதை எழுதப்போறியளோ.. ம் ம் போகட்டும் வாசிப்பம் வாசிப்பம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா சாத்திரி ஐயா கதை சூப்பர் அருமை மிகவும் நல்லாயிருக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் :P

Link to comment
Share on other sites

ஆகா கதாநாயகன் விளையாட்டு காட்ட வெளிக்கிட்டரா? அவரின் விளையாட்டில் என்ன என்ன பலி ஆகப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கின்றோம் சாத்திரியார்

Link to comment
Share on other sites

ஆகா கதையின் நாயகனிட்ட இந்தப்பழக்கமா?? சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி அடிக்க வாங்கீட்டிருக்கிற மாதிரி கதை எழுதப்போறியளோ.. ம் ம் போகட்டும் வாசிப்பம் வாசிப்பம். :lol:

அப்படி எழுதினால் கதையில் யதார்த்தம் இல்லை என்று சொல்லமாட்டீங்களா?! :P :o

Link to comment
Share on other sites

தமிழினி எழுதியது:

கலந்து கொண்டதுண்டு. ஆனால் கைகுலுக்கலோடு வணக்கத்தை முடிப்பது தான் எங்கள் வழக்கம். இப்படியான முறைகள் புதிசாக்கிடக்கு. :wink: :lol::o :P

அட கை குடுக்கிறது கையிலை கத்தி கடற்பாரை ஒன்றுமில்லையெனக் காட்ட அது போல் கன்னத்திலை முத்தமிடுவது காலையிலே பல் விளக்கினேன் என்பதைக் காட்ட. :roll: :lol: :roll: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.