Jump to content

'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'அவரு டைரக்டருக்கெல்லாம் டைரக்டரு!'

15-thotta-tharani1200.jpg

தோட்டா தரணி... தேசிய விருதெல்லாம் வாங்கிய பெரும் கலைஞன். சமீபத்தில் ஒரு பெரிய படத்திலிருந்து சடாரென்று விலகி வந்துவிட்டார். அதுவும் சாதாரண நடிகர் அல்ல, இளம் நடிகர்களிலேயே பிரபலமாக உள்ள ஒருவரின் படத்திலிருந்து.

காரணம்...?

"ரஜினியின் படங்களிலெல்லாம் பணியாற்றியிருக்கிறேன். அவ்ளோ பெரிய நடிகரான அவரே, என்னை அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. பாராட்டைத் தவிர வேறெதையும் அவர் சொன்னதாக நினைவில்லை.

வேறு எந்த நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும் எனது பணியில் குறுக்கிட்டதுமில்லை, குறை சொன்னதுமில்லை. அந்த அளவு தொழிலில் நேர்மையாகவே இருந்திருக்கிறேன்.

ஆனால் நேற்று வந்த ஒரு ஹீரோ எனக்கே ஆர்ட் டைரக்ஷன் சொல்லித் தருகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு எனது பகுத்தறிவும் தன்மானமும் இடம்தரவில்லை" என்று கூறி விலகிவிட்டார்.

இவர்தான் இப்படியென்றால், படத்தின் கேமராமேன் ரவி கே சந்திரன் ஏக டென்ஷனில் இருக்கிறாராம். ஷாரூக்கான், அமீர்கானையெல்லாம் பார்த்த அவருக்கே கேமராவை இப்படி வையுங்க, லைட்டிங் இப்படி இருந்தால் பெட்டர், அந்தக் கோணம் வேணாம், இது ஓ.கே. என்றெல்லாம் க்ளாஸ் எடுக்கிறாராம் அந்த ஹீரோ.

இதனால் கடுப்பான ரவி, யோவ் இன்னொருவாட்டி அந்தாளு என்கிட்ட வந்தா, நானே பேக்கப் சொல்லிட்டு போயிடுவேன்" என்று இயக்குநரிடம் கடித்து விட்டாராம்.

இவர்கள் இப்படி வெளிப்படையாக புலம்புகிறார்கள் என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினியையே பறக்க விட்டு சண்டை போட வைத்த, படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினோ வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புழுங்கித் தவிக்கிறாராம். இன்னும் ஒரு சான்ஸ் தருவோம். சரியா வரலேன்னா விலகிடலாம் என்பதுதான் அவரது நினைப்பும் என்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த ஹாலிவுட் [^] ஸ்டைல் இயக்குநர் [^] என்னதான் செய்கிறார்? அவருக்கும் கூட 'அக்காய் உக்காய்'தானாம். ஆனால், தான் முதலில் இயக்கியபோது இருந்த டம்மி பார்ட்டி இல்லை நாயகன் என்பதைப் புரிந்து, பிழைக்கத் தெரிந்த புத்திசாலியாக நடந்து கொள்கிறாராம். அதாவது வாயை மூடிக் கொண்டு வேலை [^] பார்க்கிறாராம்.

'எக்ஸ்ட்ரா அறிவு' இருப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிக் கஷ்டப்படுத்தும் ஒரு ஹீரோவால் ஒட்டுமொத்த யூனிட்டும் புலம்பிக் கொண்டிருப்பது விசித்திரம்தான்!

http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/15-hero-turns-villan-art-director-cameraman.html

---------------------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி:

எங்க பக்கத்து ஊரு கள்ளகுறிச்சி இயக்குநருக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் ... இந்த பந்தா பார்டியின் படங்களை அனைவரும் புறக்கணிக்குக.. பட்டால் தான் புத்திவரும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.