Jump to content

பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..!


Recommended Posts

பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..!

தற்காலத்தில் பாலங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பலவகையான மேம்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் சிலந்தி வலை போன்ற மிகவும் குழப்பகரமானதும், செலவு அதிகமானதும், கட்டுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றதும், அழகியல் குன்றியதுமான பாலங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கீழே ஒன்று..

16-hwy99bridge.jpg

தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப இத்துறையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். :lol: பண்ணைப் பாலத்தை சரி செய்வதற்கு ஒருநாள் உபயோகப்படும்தானே..! :lol:

1) படிப்படியாகத் தள்ளும் முறை (incremental Launching)

நீர்நிலைகளையோ தெருக்களையோ கடப்பதற்கான பாலங்கள் அமைக்கும்போது அவற்றைக் கட்டுவதற்குத் தேவைப்படும் உபகரணங்களும், பொருட்களுமே எவ்வகையில் பாலம் அமைக்கப்படும் என்பதை முடிவு செய்யும். அவ்வகையில், இந்த படிப்படியாகத் தள்ளும் முறை கட்டுமான வசதிகள் குறைந்த குறிப்பாக, பாரம் தூக்கிகள், மிதவைப் பாரம் தூக்கிகள் (Barge mounted Cranes) இல்லாத இடங்களில் பயன்படுத்தப்படும்.

ஒரு கரையில் பாலங்களைப் பகுதிகளாகக் கட்டி நீர்நிலைகளின் மேலாகத் தள்ளி நிலைநிறுத்துவதே இந்தத் தொழில்நுட்பம் ஆகும். இதற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கட்டுமான நிறுவனங்களின் உதவி தேவைப்படும். இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கும் ஒரு காணொளி இதோ.. :lol:

Link to comment
Share on other sites

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் பாலங்களுள் ஒன்று..! :lol:

பாலம் முழுவதும் முன்னோக்கி நகர்த்தப்படுவதை விளக்குகிறார் ஊழியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஆழமான கடலுக்குள், எப்படி கொங்றீட் தூண்களை கட்டுகின்றார்கள்?

Link to comment
Share on other sites

இசை, ஆழமான கடலுக்குள், எப்படி கொங்றீட் தூண்களை கட்டுகின்றார்கள்?

அதிலும் பலவிதமான உத்திகள் உள்ளன. ஆழம் அதிகமற்ற நீர்ப்பரப்புக்களில் காற்றழுத்தப்பட்ட அறை (pneumatic caisson) என்கிற முறையைப் பயன்படுத்தலாம். இதன்படி காற்றை நீரினுள் உள்ளமர்த்தி நீரில்லாமல் செய்துகொள்வார்கள். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்..!

350px-Caisson_Schematic.svg.png

பின்னர் தூண்களுக்கான கொன்கிரீட்டை அடியில் செலுத்தி கட்டுமானத்தை மேற்கொள்வார்கள். அதிக அழுத்தத்தில் உள்ள காற்றுப்பகுதியில் வேலைசெய்வதால் தொழிலாளர்களுக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் எழும் வாய்ப்பு அதிகம்.

ஆழமான நீர்ப்பரப்புக்களுக்கு உருளை வடிவமான இரும்புக் கவசங்களை (Steel casing) உள்ளனுப்பி, அதனுள் நீரில்லாமல் செய்துகொண்டு, பின்னர் இரும்புக் கம்பிகளையும் கொன்கிரீட்டையும் கொட்டி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம். இவை நீரின் மேற்பரப்புவரை வரும்.

2203052345_5130e25238.jpg

ஆறுகளுக்குக் குறுக்காக பாலங்கள் அமைக்கும்போது, முடிந்தால் நீரை முழுமையாக வேறு வழியாகவோ அல்லது குறிப்பிட்ட தூண்கள் உள்ள இடங்களில் மட்டுமாவது வராதபடிக்கு திசை திருப்பி விடுவார்கள். இதன்படி கட்டுமானங்களை முடித்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்துவிடுவார்கள்.

ups_f4.gif

Link to comment
Share on other sites

பாகம் 2: பகுதிகளாகக் கட்டுமானம் செய்யும் முறை (segmental Launching)

மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில், கொன்கிரீட்டை முன்கூட்டியே கட்டுமானம் செய்துகொள்ளக்கூடிய வசதிகள் உள்ள இடங்களில் இம்முறையைப் பயன்படுத்தலாம். இதன்படி, பாலத்தின் பாகங்களை கொன்கிரீட் மூலம் வடிவமைத்துக்கொண்டு, பின்னர் பாலத்தின்மீது நிலை நிறுத்திவிட வேணும். கீழுள்ள காணொளியில் இரு தூண்களுக்கிடையே ஒரு துண்டாகப் பொருத்துகிறார்கள். இது பெரும்பாலும் பிரபலமற்றது. இரு தூண்களுக்கிடையே சிறுசிறு துண்டுகளாக லெகோ மாதிரி இணைக்கும் முறையே நானறிந்த வகையில் பிரபலமானது. எது எப்படியிருந்தாலும், எந்தமுறையில் செய்யவேண்டும் என்பதை எங்கே பாலத்தைக் கட்டப்போகிறோம் என்பதே தீர்மானிக்கும். :lol:

Link to comment
Share on other sites

சிறு துண்டுகளாக வடிவமைத்து Balanced Cantilever முறையில் கட்டப்படும் பாலம்..! :lol:

Link to comment
Share on other sites

இன்னுமொரு காணொளி..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் இசை...

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு டன்! அராலியில் புதுப் பாலம் கட்டும்போது தினமும் அவ் வழியால் 784 ல் போய் வரும்போது பார்த்திருக்கிறேன் , சதுரமாக பலகைகளை குத்தி நிறுத்தி அதற்குள் இருந்த நீரை யந்திரத்தால் வெளியேற்றிவிட்டு விசேசமான கொங்கிரீட் கலைவைகள் கொட்டி எழுப்பினார்கள்! :lol:

Link to comment
Share on other sites

இந்தப்பாலத்தின் மேலால் போகும் போது எப்படி கட்டியிருப்பார்கள் என்று நினைத்துப்பார்ப்பதுண்டு.

http://video.google.com/videoplay?docid=379019092644463620

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு பதிவுக்கு நன்றி இசை

புலம்பெயர்ந்த நம் இளையோர்கள் இப்படியான நவீன தொழில் நுட்பத் துறைகளில் முன்னிலைக்கு வர வேண்டும். ஒரு காலத்தில் எம் இனத்திற்கு உதவியாக இருக்கும்

வத்தியார்

*********

Link to comment
Share on other sites

நன்றிகள் விசுகு அண்ணை, சுவி மற்றும் நுணா.. :)

வித்தியாசமான ஒரு பதிவுக்கு நன்றி இசை

புலம்பெயர்ந்த நம் இளையோர்கள் இப்படியான நவீன தொழில் நுட்பத் துறைகளில் முன்னிலைக்கு வர வேண்டும். ஒரு காலத்தில் எம் இனத்திற்கு உதவியாக இருக்கும்

வத்தியார்

*********

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வாத்தியார்..! :)

Link to comment
Share on other sites

3) கம்பிகளால் நிலைநிறுத்திய பாலம் (Cable Stayed Bridge)

5898448-md.jpg

வளர்ச்சியடைந்த நாடுகளில் (கனடாவைத் தவிர :) ) இவ்வகையான பாலங்களைக் கண்டிருப்போம். தற்போது மிகவும் பிரபலமாக உள்ள தொழில்நுட்பமுறை இதுவாகும்.

கொன்கிறீட்டில் அதிகமான தூண்களைக் கட்டுவதை விடுத்து இரும்புக் கம்பிகளின் துணைகொண்டு பாரத்தை மையத்தூணை நோக்கிச் செலுத்துவது இந்த முறையாகும். பல கம்பிகள் குழாய் ஒன்றுக்குள் அடக்கி வைக்கப்படும். ஒரு கம்பி கிட்டத்தட்ட 20 தொன்களுக்கு மேலான எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது. ஒரு குழாய்க்குள் சில வேளைகளில் 90 வரையான கம்பிகள் இருக்கும். இவ்வாறு பல குழாய்கள் ஒரு பாலத்தில் இருக்கும். வெளியே தெரிவது குழாய்கள் மட்டுமே..

இப்போது ஒரு காணொளி.. :)

Link to comment
Share on other sites

Cable Stayed bridge

தேம்ஸ் நதியின் மேலால் கட்டப்பட்டுள்ள Dartford Bridge ஐ இந்த தொழில்நுட்பத்திலேயே 1990 இல் கட்டினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

84 ம் ஆண்டு என்பதற்குப் பதில் 784 என்று எழுதி விட்டீர்களோ

சுவி :)

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் இலக்கம் 784 யாழ்ப்பாணம் , கல்லுண்டாய் ஊடாக காரைநகர் வாத்தியார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னங்குத்தி பனங்குத்தியிலை பாலம் கட்டி வாழ்ந்த எங்களுக்கு??????

நவீனமாய் நாலு நல்லவிசயம் செய்ய வல்லவர்களும் வலுவுமிருந்தும் எமக்கு நாடொன்றில்லையே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

JaffnIslets_17_12_06_01.jpg

தோழர் இசைகலைஞ்சன் தனித்தனியா இருக்கும் தீவுகளுக்கெல்லாம் ஈழம் அமையும் போது ஒரு முடிவு கட்டவேண்டும் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புரட்சியின் ஊரிலிருந்து எனது ஊருக்கு பாலம் போடுங்கள்

அதுதான் பக்கத்திலிலுள்ளது

Link to comment
Share on other sites

இந்தப் பாலத்தில் ஒருநாள் காரில் ஓடிப்பார்க்க வேண்டும் !

பிரான்சில் இருப்பவர்கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும்.

உலகத்தின் உயரமான பாலமாம்.

scary_bridge.jpg

millau_viaduc.jpg

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள் ஈசன்..! நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனம்தான் இந்தப் பாலத்தின் தாங்கு கம்பிகளை நிறுவித் தந்தது..! :wub:

Link to comment
Share on other sites

உலகின் அதி நீளமான பாலம்(?) கனடாவில் உள்ளது, "கண்பெடறேஷன்" Confederation.

இதன் நீளம் 12.9 கிலோ மீடர்கள்.

http://www.confederationbridge.com/en/index.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புரட்சியின் ஊரிலிருந்து எனது ஊருக்கு பாலம் போடுங்கள்

அதுதான் பக்கத்திலிலுள்ளது

58228550.FortdeGingee3.jpg

gingee-fort-picture-01.jpg

அந்தா மலையில் இருந்தே போட்டுவிடலாம் தோழர் :wub:

Link to comment
Share on other sites

4) தொங்குபாலம் (Suspension Bridge)

028%20Suspension%20bridge.jpg

இந்தப்பாலத்தைப் பற்றி அதிகம் அலசத் தேவையில்லை. :rolleyes: உங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானதுதான். கடக்கும் தூரம் அதிகமாகும்போது இந்த தொங்குபாலமே கைகொடுக்கும். ஒரு கி.மீ. தூரத்தை இடையில் தூண்கள் இல்லாமல் தொங்குபாலத்தைக்கொண்டு வடிவமைக்கமுடியும்.

அமெரிக்காவில் முன்பு கட்டப்பட்ட ரக்கோமா பாலம் இவ்வகையில் கட்டப்பட்டதே..! அது பின்னர் காற்றில் ஆடி இடிந்து விழுந்ததை அறிந்திருப்பீர்கள். காணொளி கீழே..

காற்றின் அதிர்வும் பாலத்தின் இயற்கை அதிர்வெண்ணும் சமப்படும்போது கட்டுப்பாட்டை மீறிய ஊசலாட்டம் (Resonance) ஏற்படுகிறது. இந்தப் பாலத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பாடத்தை வைத்தே நவீனமயப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.