Jump to content

AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல்


Recommended Posts

AR Rahman World Tamil Semmozhi Conference Theme Song REMIX VIDEO

AR ரஹ்மான் செம்மொழி மாநாடு பாடல் !

( REMIX VIDEO - Eelam Song Azhage Azhage Tamil Azhage )

http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ

http://www.youtube.com/watch?v=SYP95GYUJhQ

-----------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

அழகே, அழகே ..... தமிழ் அழகே........ பாடலை எழுதியவர் , புதுவை இரத்தினதுரை அவர்களா?

.

Link to comment
Share on other sites

=======================================================================

Original Video : அழகே, அழகே ..... தமிழ் அழகே.. Azhage Azhage Tamil Azhage

Thanks to the above video.

==============================================================

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்பாட்டை ஒருதரத்துக்கு மேல கேட்க ஏலாது. உதென்ன கண்றாவியா இருக்கு. போதாததுக்கு எங்கெயெல்லாமோ போய் என்னவோ அபினயமெல்லாம் புடிச்சி டாண்ஸ் வேற ஆடினம்.. ஏர் ஆர் றஹ்மான் தன்னால முடிஞ்ச அளவு இந்தக் கண்றாவிப் பாட்டுக்கு இசையமைச்சிருக்கிறார் எண்டதைப் பாராட்டத்தான் வேணும். அறளை பேந்த காலத்தில கருணாநிதி ஐயா உந்தப் படான் பாடடை எழுதித் தன்ர செல்வாக்கில றஹ்மானைக் கொண்டு இசைவேற அமைக்க வச்சி அதை ஒப்பிசல் பாட்டாயும் ஆக்கிப்போட்டார் போல கிடக்குது. எத்தினையோ கவிஞர்மார் இருக்கினம் கேட்டிருந்தால் அழகாய் எழுதிக் கொடுத்திருப்பினம். உந்தாளுக்கேன் உந்தத் தேள்வையில்லாத வேலை. தமிழன்னையை உந்த அலங்கோலம் பண்ணிப் பாடாயப் படுத்துற கருணாநிதி கூட்டம் நாசமாய்ப் போக.

Link to comment
Share on other sites

பாட்டு உருப்படியாக மையவில்லை.

ஊழல் பேர்வழி கொலைஞன் கருணாநிதி உழைப்பைப் பற்றி சொல்வது வேடிக்கையானது.

தமிழுக்கு பெருமை சேர்க்கும்

பக்தி இலக்கியங்கள், .... போன்றன புறக்கணிக்கப்பட்டு ஐம்பெரும் காப்பியங்களுக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் பௌத்தர்களிடம் கொலைஞன் கருணாநிதி இலஞ்சம் வாங்கியிருப்பதை பறைசாற்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு பாட்டில் இடையிடையே ராப் என்று கொச்சைத் தமிழில் பாடல்... இதெல்லாம் செம்மொழி என்று எங்கு போய் முட்ட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்குப் பக்தி இலக்கியங்கள் மேன்மை சேர்த்ததைப் போல பலமடங்கு ஐம்பெருங் காப்பியங்களும் ஏனைய சங்க நூல்களும் பெருமை சேர்த்துள்ளன. இங்கே சமயத்தை இழுத்து இளங்கோவடிகளும், திருத்தக்க தேவரும், சீழ்த்தலைச் சாத்தனும் சிங்களவர்கள் என்ற தோரணையில் இந்தக்களத்தைச் சம்பந்தமில்லாத இடத்திற்குத் திசை திருப்புவது தேவையற்ற செயலாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்குமட்டும் செம்மொழி.

ஆனால்..

பாடல் உச்சரிப்புக்களிலும் வாத்திய இசைகளிலும் மேலைத்தேயம் காலூன்றிவிட்டது.

செம்மொழி இசைத்தவருக்கு எமது பண்டைய வாத்தியங்கள் மறந்துவிட்டது போலும்.

செம்மொழியும் செம்மறிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிட மாயை எண்டு யாரோ எழுதியிருந்திச்சு..... உது செம்மெழி மாயை. :lol:

Link to comment
Share on other sites

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

பாட்டு வரிகள் படு மோசம். எழுதியவன் தமிழர் வரலாற்றை சிதைத்துள்ளான். தமிழ் இன்று வாழ்வதற்கு காரணமான பிராதன இலக்கியங்கள் கூறப்படவில்லை. திராவிட மாயையில் உண்மை வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரகுமானின் ராப் இசை மிக நன்றாக இருந்தாலும், இந்த தலைப்புக்கு பொருத்தமில்லை, உணர்வையும் ஊட்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

-------

இந்தப் பாடலை மு.க. என்னும் கவிஞர் உருவாக்கியதாக தெரிகிறது.

என்ன செய்வது.... சிலருக்கு திருமணவீட்டில் மணமகனாகவும்,

செத்த வீட்டில் பிணமாகவும் இருந்து விழும் மாலைகளைப் பெறுவதில் தனிப் பிரியம்.

Link to comment
Share on other sites

இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் மிக அருமையாக செய்திருப்பார். வரிகளை தமிழுணர்வுள்ள கவிஞர் எழுதியிருந்தால் நல்லது.

பாட்டு வரிகள் படு மோசம். எழுதியவன் தமிழர் வரலாற்றை சிதைத்துள்ளான். தமிழ் இன்று வாழ்வதற்கு காரணமான பிராதன இலக்கியங்கள் கூறப்படவில்லை. திராவிட மாயையில் உண்மை வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரகுமானின் ராப் இசை மிக நன்றாக இருந்தாலும், இந்த தலைப்புக்கு பொருத்தமில்லை, உணர்வையும் ஊட்டவில்லை.

எழுதியவன் எல்லாவற்றையும் கெடுத்தால் இசை என்ற ஒன்று தேவை இல்லையே.வரிகள் தான் இசையை பொதுவாக பிரபல்யமாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

தமிழுக்குப் பக்தி இலக்கியங்கள் மேன்மை சேர்த்ததைப் போல பலமடங்கு ஐம்பெருங் காப்பியங்களும் ஏனைய சங்க நூல்களும் பெருமை சேர்த்துள்ளன. இங்கே சமயத்தை இழுத்து இளங்கோவடிகளும், திருத்தக்க தேவரும், சீழ்த்தலைச் சாத்தனும் சிங்களவர்கள் என்ற தோரணையில் இந்தக்களத்தைச் சம்பந்தமில்லாத இடத்திற்குத் திசை திருப்புவது தேவையற்ற செயலாகும்.

கருத்துக்கு கருத்து எழுதாமல், இலக்கிய அடிப்படை அறிவுமில்லாமல் கண்டதையும் உளறி திசை திருப்புவது உங்கள் தொழில்.

போலித் திராவிடர்களின் வாடை இந்த பதிலில் நிறையவே உண்டு நிறையவே உள்ளது.

போலித் திராவிடர்கள் குறித்த பாடலில் திட்டமிட்டு பக்தி இலக்கியங்களை புறக்கணித்துவிட்டு, பௌத்தம் தொடர்பான "ஐம்பெரும்" காப்பியங்கள் சமய சம்பந்தமே இல்லாதது என்ற மாயை ஏற்படுத்தி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஈனப் பிழைப்பு நடத்தும் அவர்களது வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மொழியுடன், தமிழ் மொழி வளர்ச்சியுடன், தமிழ் மொழி காப்புடன் பின்னிப் பிணைந்த பக்தி இலக்கியங்களை குறிப்பிடாது விட்டது பாரிய வரலாற்று மறைப்பாகும்.

இப்பிடித்தான் திராவிட மாயைகளில் மூழ்கியவர்களால் தமிழரின் உண்மையான வரலாறின் பெரும் பகுதி தொலைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் போலித் திராவிட இயக்கத்தின் எழுச்சி தான், தமிழ் மொழியின் வீழ்ச்சி, வீரத் தமிழர்களின் வீழ்ச்சி, என்பதை போலித் திராவிட மாயையில் உழல்பவர்கள் உணர இன்னும் காலம் செல்லலாம்.

என்னினும் அண்மைக் காலமாக போலித் திராவிடம் வீழ்ச்சியுறுவது, அதன் முகத்திரை கிழிவது நல்ல சகுனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

தமிழ் மொழியுடன், தமிழ் மொழி வளர்ச்சியுடன், தமிழ் மொழி காப்புடன் பின்னிப் பிணைந்த பக்தி இலக்கியங்களை குறிப்பிடாது விட்டது பாரிய வரலாற்று மறைப்பாகும்.

இப்பிடித்தான் திராவிட மாயைகளில் மூழ்கியவர்களால் தமிழரின் உண்மையான வரலாறின் பெரும் பகுதி தொலைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் போலித் திராவிட இயக்கத்தின் எழுச்சி தான், தமிழ் மொழியின் வீழ்ச்சி, வீரத் தமிழர்களின் வீழ்ச்சி, என்பதை போலித் திராவிட மாயையில் உழல்பவர்கள் உணர இன்னும் காலம் செல்லலாம்.

என்னினும் அண்மைக் காலமாக போலித் திராவிடம் வீழ்ச்சியுறுவது, அதன் முகத்திரை கிழிவது நல்ல சகுனம்.

போலித்திராவிடமும் வீழ்ந்தால் அந்த இடத்தை, யமனை பச்சடி போட்ட காங்கிரஸ் பிடித்து விடுமே..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்தான் செம்மொழி மாநாடு.............

நடக்கப்போவது கனிமொழிக்கு தமிழ்சேலை கட்டும் சாமாடு!

சோனியா பிரதமவிருந்தினர்......

இந்தபாடல்களில் ஏதும் பிழை உள்ளதாக எனக்கு தெரியவில்லை!

புரிந்தவர்களின் புரிதல்களில் பிழைகள் நிறையவே உண்டு!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.