Jump to content

குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்


Recommended Posts

குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்

- யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm

- தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284

baby01.jpg

இது ஒரு குழந்தை.

இது எப்படி வந்தது?

baby02.jpg

ஒரு அப்பா.

ஒரு அம்மா.

இவர்கள் சேர்ந்து,

பிறந்தது இந்தக் குழந்தை.

baby03.jpg

இங்கு -

அப்பாவிலும் ஆடை இல்லை.

அம்மாவிலும் ஆடை இல்லை.

அம்மாவில் -

மேலே தெரிவது மார்பு.

கீழே தெரிவது ஒரு வெடிப்பு.

அதை பெண்குறி என்போம்.

அப்பாவில் -

கீழே தெரிவது தண்டு.

அதை ஆண்குறி என்போம்.

அதனோடு சேர்ந்து -

கால்களுக்கு இடையே

தொங்குவது விதைகள்.

baby04.jpg

அப்பாவுக்கு அம்மா மீது நேசம்.

அம்மாவுக்கு அப்பா மீது நேசம்.

அணைக்கிறார்கள்.

முத்தமிடுகிறார்கள்.

அப்பாவின் தண்டு நீள்கிறது.

அதில் விறைப்பு ஏறுகிறது.

அம்மாவின் வெடிப்புக்குள்

அப்பாவின் தண்டு நுழைவதை

இருவரும் விரும்புகிறார்கள்.

அந்த நுழைவு இனிமை தரும்.

baby05.jpg

அம்மாவும் அப்பாவும்

படுக்கையில் கூடுகிறார்கள்.

வெடிப்புக்குள் தண்டு செலுத்தப்படுகிறது.

அந்த நிலையில் -

அவர்கள் மேலும் கீழுமாக ஆடுகிறார்கள்.

இதுவே கலவி எனப்படும்.

இது சுகமானதாக இருக்கும்.

இப்படியாக -

அம்மாவும் அப்பாவும் விரும்பும் போது,

அவர்கள் குழந்தையை உருவாக்கலாம்.

baby06.jpg

அம்மாவுக்கு அப்பாவில் விருப்பம்.

அப்பாவுக்கு அம்மாவில் விருப்பம்.

இருவரும் கூடி

குழந்தை பெற விரும்புகிறார்கள்.

அப்பாவின் விதையினுள்

விந்து அணுக்கள் உள்ளன.

கலவியின் போது

தண்டு வழியாக

விந்து அணுக்கள் வெளியேறும்.

விந்து அணுக்கள்

அம்மாவின் பெண் உறுப்பினுள்

நீந்திச் செல்கின்றன.

அவை வயிற்றினுள் இருக்கும்

ஒரு பையைச் சென்றடைகின்றன.

அதுவே கருப்பை ஆகும்.

இந்தப் பையில் காலத்துக்கு காலம்

ஒருவகை முட்டை உருவாகும்.

இந்த முட்டையுடன் விந்து இணைய

அவை குழந்தையாக உருவாகிறது.

baby07.jpg

நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமும்

கருப்பையில் குழந்தை வளர்கிறது.

ஒன்பது மாத நிறைவில்

குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டது.

Link to comment
Share on other sites

baby08.jpg

அம்மாவின் வயிறு

பெரிதாகி விட்டது.

ஆடைகள்

இறுக்கமாகி விட்டன.

குழந்தை நகர்வதை

அம்மா உணர்கிறாள்.

அப்பாவிடம் கூறுகிறாள்.

குழந்தை பிறக்கும் நாள்

நெருங்கி விட்டது.

baby09.jpg

அப்பா அம்மாவை

மகப்பேறு மனைக்கு

அழைத்துச் செல்கிறார்.

baby10.jpg

அங்கே அம்மாவை

படுக்கையில் கிடத்துகிறார்கள்.

மருத்துவர் வருகிறார்.

அம்மா அப்பாவுடன் பேசுகிறார்.

குழந்தை பிறக்கும் போது

மருத்துவர் உதவி புரிவார்.

baby11.jpg

பிரசவம் தொடங்குகிறது.

அம்மாவின் பெண் உறுப்பின் ஊடாக

முதலில் குழந்தையின் தலை

வெளியே வருகிறது.

baby12.jpg

அதன்பின் கைகள்.

baby13.jpg

குழந்தை முழுமையாக

வெளியே வந்துவிட்டது.

மருத்துவர் தொப்புள்கொடியை

வெட்டிவிட்டார்.

அதனோடு சேர்ந்து

நஞ்சுக்கொடியும் (கருக்குடை) வெளியேறிவிட்டது.

baby14.jpg

அம்மாவும் பிள்ளையும்

சில நாட்களுக்கு

ஓய்வெடுக்கிறார்கள்.

பின்னர் வீட்டுக்கு வருகிறார்கள்.

குழந்தைக்கு பசித்தால்

அம்மா பாலூட்டுவாள்.

பிள்ளை -

அம்மாவின் முலையிலிருந்து

பாலை உறிஞ்சிக் குடிக்கும்.

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் யாரவது சின்னப் பிள்ளையள் இருக்குறார்களா?

Link to comment
Share on other sites

செயன்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி இளைஞன். ஒரு காலத்தில திருமணம் செய்தால் நீங்கள் தந்த தகவலின் அடிப்படையில் நாங்களும் முயற்சி செய்துபார்க்கின்றோம். ஆண் குழந்தை பிறந்தால் அதுக்கு இளைஞன் என்றே பெயரும் வைக்கின்றோம். :lol:

baby12.jpg

நான் பிறக்கும்போது கால்கள் முதலிலும் தலை கைகள் பின்னரும் வந்ததாய் அம்மா சொன்னா.

Link to comment
Share on other sites

அப்ப ரதி, குட்டி நீங்கள் சின்னப்புள்ளைகள் இல்லையா? :lol: யாழில profileஇல பலரிண்ட வயசுகள் 1,2,3,4 எண்டுதானே போடப்பட்டு இருக்கிது?

சரி பரவாயில்லை.. பெரிய ஆக்களுக்கு பெரிய ஆக்களிண்ட விசயம் ஏன் பிடிக்காமல் இருக்கிது? கன்னியாஸ்திரி, மதகுரு, சாமியாராய் போகிறா ஏதேனும் திட்டமோ? :)

இல்லாட்டிக்கு இந்தவிசயங்கள் உங்களுக்கு அத்துப்படியாய் தெரியும் எண்டபடியால இஞ்ச அதுபற்றி கதைக்கிறது தேவையில்லை எண்டு நினைக்கிறீங்களோ? :unsure:

சிலது நெடுக்காலபோவான் ஆரம்பிச்சமாதிரி... எங்கள் மாங்கனிகளிற்கு பின்னால் உறங்கும் உண்மைகள் என்று இளைஞன் ஏதாவது தலைப்பை போட்டு இருந்தால் அதிக வரவேற்பு கிடைச்சு இருக்குமோ? :huh:

நெடுக்காலபோவான் இஞ்சாலயும்வந்து ஒருக்கால் பிரசன்னமாகிப்புட்டு போறது. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நான் இதை ஆபாசம் என சொல்லவில்லை ஆனால் சின்னப் பிள்ளையளுக்கு சொல்லுற மாதிரி இவ்வளவு விளக்கம் தேவையா எனத் தான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

அருமையான எளிமையான விளக்கம். பிள்ளைகளுக்கு சில விடயங்களை எப்படி விளக்குவது என்று புரியாமல் தடுமாறும் போது இத்தகைய எளிமையான வடிவில் விளக்குவது அவர்களுக்கு இலகுவில் புரிந்து விடும். குருவி வந்து போட்டுட்டு போனது என்றோ அல்லது அப்புச்சாமி வந்து தந்தவர் என்றோ தவறான தகவலை வழங்காமல் இவ்வாறு விளக்கம் கொடுப்பது ஆண் பெண் உறவின் அடிப்படையை குழந்தைகளுக்கு புகட்டும்

இதை இணைத்தமைக்கு நன்றி இளைஞன்

Link to comment
Share on other sites

ஏற்கனவே நான் சொன்னது மாதிரி கல்யாணத்திற்கு தயாராகிட்டிருக்கேன்(பொண்ணு பார்க்கிறாங்களங்கோ..).....இந்த நேரத்தில்.....இதெல்லாம்..... I feel shy you know...... :lol:

Link to comment
Share on other sites

நன்றி இளைஞன் உங்களால் குழந்தையை எப்படி பெறுவது என்று தெரிந்துகொண்டேன். படங்களுடனான உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள்.

ஒரு சந்தேகம் இதை யாராவது வீடியோவாக இணைத்தால் நன்றாக இருக்கும். சிலவேளை அதை ஆபாசம் என்று சொல்வார்கள். அது ஆபாசம் என்றால் இதுவும்......................................................... :huh::wub::o:lol::):unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை எப்படி உருவாகிறது.. பிறக்கிறது.. என்பதற்கான அடிப்படை விளக்கம் நன்று. இதை இப்போ பிரித்தானிய கல்வித்திட்டத்தின் கீழ் 10 வயதுப் பிள்ளைக்கே கற்றுக் கொடுக்க செய்கிறார்கள். எனவே இங்கு சிறுவர்கள் இருக்கிறார்களோ என்று பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை..!

இதனோடு இணைந்து இன்னொன்றைச் சொல்ல வேண்டும். குழந்தைக்கு அம்மாவிடம் இருந்து அரைவாசி பரம்பரை அலகுகளும் அப்பாவிடமிருந்து அரைவாசி பரம்பரை அலகுகளும் கொண்டு செல்லப்படுகின்றன. அதனாலேயே குழந்தை அப்பா போலவோ அம்மா போலவோ முழுமையாக அன்றி பகுதியாக தோற்றமளிக்கிறது. அதுமட்டுமன்றி அம்மாவும் அப்பாவும் சேர்க்கும் பரம்பரை அலகுகளே குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் தீர்மானிக்கின்றன.

அதுமட்டுமன்றி அம்மாவிற்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுவதும்.. மாதவிடாயின் பின் 14 ம் நாள் அம்மா முட்டையிடுவாள் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன்போது அப்பா அம்மாவோடு மேற்படி நடந்து கொண்டால் பிள்ளை உருவாக அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதையும் சொல்லுங்கள்..!

ஏனெனில் பல குழந்தைகளின் கேள்வி.. ஏன் நான் அப்பா போல இல்ல. அம்மா போல இல்ல. அல்லது இருக்கிறன் என்பதாக இருக்கிறது. ஏன் நான் பொம்பிளைப் பிள்ளையா பிறந்தன்.. தம்பி எப்படி ஆம்பிளப்பிள்ளையாப் பிறந்தான் இவற்றுக்கும் பிள்ளைகள் விளக்கம் தேட முனைகின்றன. அதுமட்டுமன்றி.. பிள்ளைகளுக்கு கரு உருவாவதற்கான சந்தர்ப்பம் விளக்கப்பட வேண்டும்..!

பெற்றோர் பிள்ளைகளுக்கு இவற்றை மறைப்பதிலும்.. பக்குவமாக எடுத்து விளக்குவது நன்று பின்னாளில் இதே பிள்ளைகளின் மனதில் பதிய.. அவர்கள் தவறு செய்ய முதல் சிந்திக்கத் தலைப்பட இது அவர்களுக்கு உதவும். தவறு செய்ய அனுமதித்துவிட்டு விளங்குவதிலும்.. செய்ய முதலே விளங்குதல் நன்று. தெரிந்து கொண்டு தவறு செய்வது அவர்களின் சொந்தப் பிரச்சனை. அதற்கு சமூகம் அல்லது பெற்றோர் பொறுப்பாக முடியாது..! :lol:

--------------------

சோழன் இது ஆபாசம் அல்ல. இது மனித உயிரியலில் ஒரு பகுதி.

அதைவிட்டிட்டு.. மாங்கனி.. பலாச்சுளை என்று கொண்டு திரிவதுதான்.. தவறான அர்த்தப்படுத்தல்களை குழந்தைகளுக்கு வழங்க அதுகள் மாங்கனியையும்.. பலாச்சுளைகளையும் தேடி ருசிக்க வெளிக்கிடுதுகள். இவைதான் தவறான திசைக்கு பிள்ளைகளை வழிகாட்டுகின்றன...!

இந்தியா இலங்கையில் சனத்தொகை அப்படி பெருகிக் கிடக்க இதுவும் ஒரு காரணம். கற்பனை மிகுதி.. பாலியல் வேட்கையை இயற்கையின் அளவை விட அதிகரிக்கச் செய்கிறது. அதன் விளைவு வேண்டாத குழந்தைகள் உருவாக்கம். இந்த அடிப்படை அறிவைப் புகட்டும் மேற்குநாடுகளில் பிறப்பு வீதம் ஒரு சதவீதத்திலும் வெகு குறைவாக இருக்க வழி செய்கிறது. அபோசனை விடுங்கோ. அதுவும் மேற்கோடு ஒப்பிடும் போது இந்தியாவில் அதிகம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய செய்முறை விளக்கத்திற்கு நன்றிகள்.

என்ரை சிவனே!

இனி இஞ்சை என்னென்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகுதோ??????????????????

எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்

Link to comment
Share on other sites

படங்களுடன் கூடிய செய்முறை விளக்கத்திற்கு நன்றிகள்.

என்ரை சிவனே!

இனி இஞ்சை என்னென்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகுதோ??????????????????

எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்

இனி குழந்தை வயசுக்கு வரும். மீண்டும் கலவி தொடரும். வேறென்ன நடக்கப்போகிது? ரொம்பத்தான் பயப்படுறீங்கள் போல இருக்கிது. ஆனாலும் ஒரு விசயம்.. மேலுள்ள தகவல்கள் ஜேர்மன்காரனிடம் இருந்து பெறப்பட்டு இருக்கிது. உதன்படி போய் கடைசியில இரால் மாதிரி வெள்ளையாய் ஜேர்மன் குழந்தை மாதிரி ஒண்டு பிறக்கக்கூடாது என்று சிவனை வேண்டிக்கொள்ளுங்கோ. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் யாரவது சின்னப் பிள்ளையள் இருக்குறார்களா?

இது எல்லாம் இங்க உள்ள சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும்.பேரப்பிள்ளை கானும் வயதில் உள்ளதுகளுக்குதான் தெளிவான விளக்கம் இல்லை.இது முதியோர் கல்விக்கும் உதவியாக இருக்கும்.இணைப்புக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மாப்பு!

இஞ்சை அஞ்சாம் வகுப்பிலையே எங்கடை இளைஞன் காட்டினமாதிரி வரைபடத்தோடை வைச்சு குஞ்சுகுருமனுக்கு படிப்பிக்கிறாங்கள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால்..............

என்ரை மூத்ததுக்கு படிப்பிச்ச ரீச்சர் (அஞ்சாம் வகுப்பிலை) செக்ஸ் பாடத்தை மூண்டுகிழமையாய் வைச்சு இழுத்ததுதான் மகா கொடுமையாய்ப்போச்சு

மூத்தபெடி பள்ளிக்கூடத்திலை படிச்சதை வீட்டிலை சொல்ல .... சொல்ல ...... சொல்ல....

இப்ப வீட்டிலை அடுத்தது தவழ வெளிக்கிட்டுட்டுது :mellow:

Link to comment
Share on other sites

மூத்தபெடி பள்ளிக்கூடத்திலை படிச்சதை வீட்டிலை சொல்ல .... சொல்ல ...... சொல்ல....

இப்ப வீட்டிலை அடுத்தது தவழ வெளிக்கிட்டுட்டுது :mellow:

முருகன் சிவபெருமானுக்கு வேதம் படிப்பிச்சவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றன்... இப்ப கு.சா வுக்கும் அதே மாதிரி நடந்திருக்குது

Link to comment
Share on other sites

  • 7 months later...

நல்ல வேளை இந்தப்பதிவை கலியாணம் முடிக்கக்கு முன்னம் பார்த்து விட்டேன்.. :wub:

அல்லது நானும் கடவுள் தருவார் தருவார் எண்டு காத்திருக்க கள்ளக்கடவுள் வந்த்து தந்துவிட்டு போயிருப்பார் நல்ல வேளை தப்பித்து விட்டேன் .... :wub: :wub: :lol:

பதிவுக்காக இளைஞன் அண்ணாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் என் சார்பில்.. :wub: :wub:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற பதிவுகள் எமது பெண் பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக அறிகிறேன்

கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

Link to comment
Share on other sites

இதுபோன்ற பதிவுகள் எமது பெண் பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக அறிகிறேன்

கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

பெண்கள் எந்த விதத்தில் அதிருப்திக்குள்ளாகின்றனர் என்பதை உங்களால் விளக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இளைஞன் அண்ணா! நல்ல முயற்சி! சில குறைகள் இருப்பதாக நினைக்கிறேன்.

ஒரு முழுமையான பாலியல் கல்வியாக இது அமையவில்லை. பாலியல் கல்வி வழங்க விரும்பினால், பருவம் எய்துதல் பற்றிய குறிப்புகளும் அவசியம். திருமணம், யாருடன் உடலுறவு கொள்ளலாம், உடலுறவு கொள்ள தகுந்த வயது, பிள்ளை பெற தகுந்த வயது போன்றனவும் அவசியம். இவற்றை தாமாக தெரிந்து கொள்வார்கள் என்று விவாதிக்க வேண்டாம்.

எந்த வயது முதலான குழந்தைகள் இதனை விளங்கிக்கொள்வார்கள் என நீங்கள் நினைகிறீர்கள் அண்ணா?

இளம் வயதினர் எதையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வம் உடையவர்கள். அவர்கள் இதையும் பரீட்சித்துப் பார்க்க முற்பட்டால்.?

அது சரி அப்பா, அம்மா என்ற இருவர் சேர்ந்தால் மட்டும் தான் குழந்தை வருமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.