Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply

யார் இந்த நித்தியா? :roll:

:lol: காதலனின் காதலி

கவிதை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகளை நித்தியா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்தியாவின் கவிதைகள் எனக்கும் பிடித்திருந்ததால் தான் இங்கிட்டேன். அவரின் காதல் பற்றிய பார்வை வித்தியாமானதாகவும், அதேநேரம் வெறும் கற்பனைக் காதலாக அல்லாமல் உண்மைக்காதலை உண்மையான உணர்வோடு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நித்தியா கவிதை படிக்கும் அழகும் தனி அழகு. உணர்ந்து படிப்பார். கேட்டுப் பார்க்கப் போகிறீர்களா? கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :wink:

இங்கே அழுத்திக் கேளுங்கள்:

[url=http://www.vannithendral.net/soundclips/kilakkilkavi.mp3]கிழக்கில் கவி

Link to comment
Share on other sites

ம்ம்ம் நல்ல அழகா கவிதையை உணர்ந்து வாசிக்கிறா..கவிதையும் நல்லாருக்கு, குரலும் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

கவிதையை குரல் வடிவில் கேட்க நன்றாக இருக்கின்றது. பின்ணணி இசை இடையூறு செய்வதால் கவிதையின் வரிகள் மீதான அவதானிப்பு குறைகின்றது. அதனால் பின்ணணி இசையை பாடலாக இல்லாமல் கவிதையோடு இணைய கூடிய வெறும் இசையாக தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்,

Link to comment
Share on other sites

ஓம் மதன். பின்னணி பாடலாக இருப்பதால், பாடல் கவனத்தை அதிகம் ஈர்ப்பதாக உள்ளது.அதனை தனி இசையாக இட்டால், அல்லது பின்னணி பாடல் ஒலியின் அளவை கொஞ்சம் குறைத்தால் இன்னும் சிறப்பாக அமையும்.

இதோ இன்னொரு ஒலிவடிவக் கவிதை:

[url=http://www.vannithendral.net/soundclips/nijamkavi.mp3]நிஜம்

Link to comment
Share on other sites

ம் இந்த கவிதை ஒலிப்பதிவு கூடுதல் தெளிவாக இருக்கின்றது, இதன் பாடல் வரிகளையும் தாருங்கள், மேலும் அடுத்த கவிதையை தனி இசையுடன் தந்தால் என்ன வேறுபாடு மேலும் சிறப்பாக இருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

உனக்காக

338_crying_woman2b_523.gif

அன்று

உன் பெயர் நான்

அறியவில்லை - அதுதான்

ஒருவரி விட்டுவிட்டு

"............................

உனக்காக உருவெடுத்தேன்"

என இரண்டாவது வரியில்

எழுதிக்கொண்டேன்...

இன்று

உன் பெயர் அறிந்தபோது

"உன்னவளை எழுதத்தான்"

என என் கண்ணீரால்

நிரப்பிக் கொண்டேன்

அந்த முதலாவது வரியை...

எழுதியவர்: நித்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: காதலனின் காதலி

கவிதை படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகளை நித்தியா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்தியாவின் கவிதைகள் எனக்கும் பிடித்திருந்ததால் தான் இங்கிட்டேன். அவரின் காதல் பற்றிய பார்வை வித்தியாமானதாகவும், அதேநேரம் வெறும் கற்பனைக் காதலாக அல்லாமல் உண்மைக்காதலை உண்மையான உணர்வோடு வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நித்தியா கவிதை படிக்கும் அழகும் தனி அழகு. உணர்ந்து படிப்பார். கேட்டுப் பார்க்கப் போகிறீர்களா? கேட்டுவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். :wink:

இங்கே அழுத்திக் கேளுங்கள்:

[url=http://www.vannithendral.net/soundclips/kilakkilkavi.mp3]கிழக்கில் கவி

நித்தியாவின் கவிதைகளும் குரலும் அழகாக இருக்கிறது...அது சரி இளைஞன் அண்ணா...காதலனின் காதலி என்றால் என்ன? (கேட்டதற்கு கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) :wink: :wink: :wink: 8)

Link to comment
Share on other sites

வாவ்...என்ன கவிதை..சூப்பர்..ரொம்ப நல்லா இருக்கு..

நல்ல வரிகள்..கவிதைக்கு சொந்தமானவர் கவிதைகள் நிறைய எழுதி எழுதி இருப்பார் போல.....அவருடைய..வார்த்தைகள் ரொம்ப அருமையாக இருக்கு..

இதை எல்லாம் கேட்கும் போது ..நாம எல்லாம் எந்த மூலை

ரொம்ப நன்றி மழலை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள்? எழுதியது நித்தியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள் நல்லா இருக்கே :shock:

ஆனா எப்பதான் உந்த காதல் தோல்வில இருந்து வெளில வரப்போறிங்களோ தெரியல :roll:

எல்லாருமே காதல் கவிதை எழுதினா யார் என்னப் பற்றி மியா மியா கவிதை எழுதுறது :cry:

Link to comment
Share on other sites

எனக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள்? எழுதியது நித்தியா.

நான் நன்றி சொன்னது..இப்படி அருமையான கவிதைகளை நான் வாசிக்க தந்தமைக்கு..மழலை

Link to comment
Share on other sites

ஓ..சொறி..2 நாள் களம் வரல..அதோட விளைவு தான்..எல்லாரும் எழுதினாங்களா..நான் குழம்பிட்டன் :lol:

Link to comment
Share on other sites

அது சரி இளைஞன் அண்ணா...காதலனின் காதலி என்றால் என்ன? (கேட்டதற்கு கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) :wink:  :wink:  :wink:  8)

காதலனின் காதலி சரி. காதலன் யார் இளைஞன்? ***** :wink: 8)

Link to comment
Share on other sites

அடுத்த பாடலை பின்ணணி இசை பாடலாக அல்லாமல் தனி இசையுடன் இணைத்தால் எப்படி இருக்கின்றது என்று கேட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

காதலனின் காதலி சரி. காதலன் யார் இளைஞன்? ***** :wink: 8)

என் மனம் திருடிய

தமிழ் பேசும்

அழகான என் காதலன்

என் காதலன்

கண்ணைவிட்டு

ஒருபோதும் நீங்குவதில்லை..

ம்.. ஆமாம்

மிக நுட்பமான வடிவத்தில்

கண்ணோடு மணியானதால்

என்ன மதன் உங்களுக்குத் தெரியாததா,அது தான் கவிதயில சொல்லி யிருக்கே :wink: :lol:

Link to comment
Share on other sites

இதோ மதன் கேட்டபடி தனியிசையை மட்டும் பின்னணியாக சேர்த்து செய்யப்பட்ட ஒலிவடிவக் கவிதை. நல்லா இருக்குதா?

[url=http://www.vannithendral.net/soundclips/vilamparam.mp3]விளம்பரம்

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக இருக்கிறது இளைஞன்... :P :P

தன் காதலன் யார் எண்டு அவங்கள் கடசிவரை சொல்லேல்ல அதுவும் நிஜம்.. :P :P :P

Link to comment
Share on other sites

:lol: கவலைப்படாதீர்கள் தல - நித்தியா ஒருநாள் உண்மை சொல்லித்தானே ஆகவேண்டும். நிசம் எதுவென்று நித்தியா சொல்லும்வரை காத்திருப்போம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.