Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

நன்றி உங்கள் பதிவுக்கு..

ம் ம்

அது ஏன் என்று தெரியல்லை அருவி தம்பி :wink:

கவிதை எழுத நினைத்தாலே

சோகமாகத்தான் வருது :? :lol:

நீங்க ஒரு தலைப்பு சொல்லுங்கோ

கிக்கா வருதா என்று பார்க்கிறேன் :lol:

:lol::lol: பட் ரகசியமாய் சொல்லுங்கோ...

எழுத வராட்டி தப்பிக்களாம் பாருங்கோ ?? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 220
  • Created
  • Last Reply

goodbye.jpeg

ஸ்பரிசங்கள்

பரிமாறிய என்

காதலன் முகம்

முழு நிறை சந்திரன் போல

பிரகாசமானது..

ஆயிரம் நட்சத்திரம்

சேர்ந்த நீர்குமிழ் போல்

மின்னும் ஒவ்வேரு

விழியும்..

வானவில்லின் வளைவு

எடுத்து முத்துக்களால்

தொடுத்தது போல் அவன்

புன்னகை..

வானத்தையே நான்

வார்த்தை தேடும்

அளவு பரந்தது

அவன் மார்பு..

என் தோள் பற்றியபோது

ராமன் எந்த வீரத்தால்

வில் உடைத்தான் என

அறிந்தேன்..

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

உடைந்து போய்விட்டது

பொருத்த முடியாமல்.

Link to comment
Share on other sites

ஆயிரம் நட்சத்திரம்

சேர்ந்த நீர்குமிழ் போல்

மின்னும் ஒவ்வேரு

விழியும்..

காதல் உடைந்து போய் விட்டது என்பதை முதலிலே நீர்க்குமிழினுடன் ஒப்பிட்டுக் காட்டிவிட்டீர்கள்

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

முதற்தடவையில் விளங்கல பிறகு திரும்பவும் படிக்கும்போது விளங்கிக்கொண்டேன்.

Link to comment
Share on other sites

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

உடைந்து போய்விட்டது

பொருத்த முடியாமல்.

நித்தியா கவி நல்லா இருக்கு மேலும் தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

letter.jpg

நினைத்துப் பார்த்ததுண்டு

சூரியன் அஸ்தமிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

தென்றல் உறங்கிடும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

நிலப்பரப்பு எல்லாம் நெருப்பாகும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

என் உயிர் மரணிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

ஆனால் காதலனே..

நம் விழிகள் சந்திக்கும்

கடைசி நாள்

உன் கரங்களுக்குள் சிறைப்படும்

கடைசி நாள்

உன் முத்தம் பதிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்க்காமலே..

நினைவில் மட்டுமல்ல

நிஐத்திலும் வந்ததுண்டு..!

நினைவுள்ளவரை

-நித்தியா..

ஒலிவடிவில் கேட்க

http://www.acidplanet.com/components/embed...6&T=9179

Link to comment
Share on other sites

கவிதை சூப்பர் நித்யா... உங்க குரலில் கேக்கவும் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் கவிதைகளை வாசிக்கவும் , ஒலிவடிவில் கேக்கவும் ஆவல்.... தொடருங்கள் .. :P

Link to comment
Share on other sites

wuther-m.jpg

அழகான கவி வரிகளை

மிருதுவான குரலில்

தேடி எடுத்த பாடல்களோடு

கேட்பது இனிமை...........

வாழ்த்துக்கள் நித்யா.

தொடர்ந்து படையுங்கள்.............

Link to comment
Share on other sites

நல்லாயிருக்கு ,திறமையானவர் நீங்கள்.

ஏன் இன்னும் காதலனுக்குள்ளும்,காதலுக்குள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÐ ¿¡Á ¯í¸ ÅçÅüÒ À̾¢Ä À¾¢îºÐ. ´Õ §Å¨Ç «í¸ ¸ñÎ츧Äñ½¡, þí¸ ¸ñÎìÌí¸!

Ò¾¢¾¡ö ´Õ «ò¾¢ô â...

±ô§À¡§¾¡ ±í§¸¡ âìÌõ

«ò¾¢ô â¨Å Å¢¼,

¿¢ò¾Óõ ÓüÈò¾¢ø

âòÐî ¦º¡Ã¢Ôõ

¿¢ò¾¢Â ¸ø¡½¢ô âÅ¡ö þÕí¸û

¡ú ¸Çò¾¢üÌ!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியா கவிதைகள் மிக நன்றாக இருக்கு வாழ்த்துக்கள். மேலும் உங்கள் குரலில் கவிதைகளை தாருங்கள்

Link to comment
Share on other sites

þÐ ¿¡Á ¯í¸ ÅçÅüÒ À̾¢Ä À¾¢îºÐ. ´Õ §Å¨Ç «í¸ ¸ñÎ츧Äñ½¡, þí¸ ¸ñÎìÌí¸!

Ò¾¢¾¡ö ´Õ «ò¾¢ô â...

±ô§À¡§¾¡ ±í§¸¡ âìÌõ

«ò¾¢ô â¨Å Å¢¼,

¿¢ò¾Óõ ÓüÈò¾¢ø

âòÐî ¦º¡Ã¢Ôõ

¿¢ò¾¢Â ¸ø¡½¢ô âÅ¡ö þÕí¸û

¡ú ¸Çò¾¢üÌ!!!

நன்றி கவிதன் சாணக்கியன்

நாரதர் மற்றும் அனிதா

அஜிவன்..!

உங்கள் பாராட்டுக்கு நன்றி..!

சாணக்கியன்

நித்தியகல்யாணி ம் ம் அழகான

பெயர்தான் பூவும் அப்படித்தானா?

நாரதரே..

காதலுக்குள்ளும் புரட்சி இருக்கல்லவா?

சிறையேல்லாம் நான் என்னை வைக்கவில்லை..

நன்றி

Link to comment
Share on other sites

நன்றாக இருக்குது அக்கா,

உங்க கவிதை மட்டுமல்ல அதற்காக நீங்க தேர்ந்தெடுத்த பாடலும் கூட.

Link to comment
Share on other sites

  • 3 months later...

uu.jpg

எங்கு வந்தாய்..?

மறந்துவிட்டேன்

இறந்துவிட்டேன் என்று

பார்க்க வந்தாயா..?

காதலாகி கசிந்து நீ

எனக்கு வரைந்த காதல்மடல்கள்

இதோ இந்த மூலையில்தான்

கிடக்கின்றன..

நான் மறக்கவில்லை..

புகைந்தது என் வாழ்வு

என்று நீ விட்டெறிந்த நம்

திருமணப் "புகை"ப்படம்

இங்குதான் சிதறிக்கிடக்கிறது..

நான் மறக்கவில்லை...

எந்தப் புடவை எதற்காக

எரித்தாய் என்று இன்னும்

திகதியுடன் கூறுவேன்..

நான் மறக்கவில்லை..

எந்தத் தழும்பு எப்போது

போட்டாய் என்று உன் கைரேகைகளை

ஞாபகம் வைத்திருக்கும் அதே

தேகம்தான் இது

நான் மறக்கவில்லை..

மன்னித்துவிடு

நான் மாறிவிட்டேன்

இனியும் ஒருதடவை -உன்

பின்னால் வரமுடியாது..

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்தவும் :-)

http://www.acidplanet.com/components/embed...D=700430&T=5764

Link to comment
Share on other sites

அற்புதமான கவிதை நித்யா!

வெளிப்பேச்சுக்கு மட்டும் பெண்விடுதலை பேசும் ஒருசிலர்-அணிந்திருக்கும் முகமூடியை - இழுத்து பறித்து - நிஜமுகத்தை அம்பலப்படுத்துகிறது- உங்கள் வரிகள்! 8)

Link to comment
Share on other sites

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:

Link to comment
Share on other sites

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து

மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:

ஏன் சகோதரா- அந்த வரிகள் சுட்டி நிற்பது வக்கிரத்தையா?

தெரியல- நித்யா வந்து சொல்லட்டும்-!

நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சகோதரா- அந்த வரிகள் சுட்டி நிற்பது வக்கிரத்தையா?

தெரியல- நித்யா வந்து சொல்லட்டும்-!

நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே! 8)

ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý.

Link to comment
Share on other sites

ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý.

இது சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வக்கிரம் என்பதைவிட விரகம் என்பது பொருத்தமாக இருக்கும். இறுதி நான்கு வரிகளையும் கவிதையுடன் படிப்பதற்கும், தனித்து படிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குபட்டது, ஒரு பெண்னின் விருப்பமின்றி ஒருவன் அந்த பெண்ணுடன் சேர்வதை வக்கிரம் என்பதா? விரகம் என்பதா? :wink:

Link to comment
Share on other sites

ஆகா..

நல்லா இருக்கே..

ஆனால் எல்லாரும் ஓரே கருத்ததைத்தான் சொல்கிறமாதிரி இருக்கு..

"ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-)

"நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே!"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-)

"இது சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வக்கிரம் என்பதைவிட விரகம் என்பது பொருத்தமாக இருக்கும். இறுதி நான்கு வரிகளையும் கவிதையுடன் படிப்பதற்கும், தனித்து படிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குபட்டது, ஒரு பெண்னின் விருப்பமின்றி ஒருவன் அந்த பெண்ணுடன் சேர்வதை வக்கிரம் என்பதா? விரகம் என்பதா?"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-):-)

வக்கிரம் என்பதா? விரகம் என்பதா? :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.