Jump to content

பாம்பின் கை பாம்பறியும்! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)


Recommended Posts

பாம்பின் கை பாம்பறியும்! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)

இளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள்.

கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன.

அனுபவங்களின் ஆரம்பப் படிகளில் நின்று கொண்டு, எதையும் எப்படியாவது செய்து விடத் துடிக்கும் துறுதுறுப்பு நிறைந்த அந்தக் காலம்தான் மனித வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை முதல் அத்தியாயமாக நம் ஒவ்வொருவரினதும் சரித்திர நூலில் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றது.

எத்தனையோ விதமான அனுபவங்கள், இன்பங்கள், துன்பங்கள், மன உளைச்சல்கள், சந்திப்புக்கள், இனிமைகள், கவலைகள்!

273_img.jpg

கொஞ்சக் காலமே இருக்கும் அந்தப் பருவம் மாறி, இல் வாழ்க்கை என்றும் வயதிற்கேற்பவும் சிந்தனைக்கேற்பவும் வேறு விதங்களிலும் விடை பெற்ற பிற்பாடு, ஒரு பெரிய, அரிய மகிழ்ச்சியை இழந்து விட்ட துக்கம் நம்மை அவ்வப்போது உறுத்துவதுண்டு.

வளர, வளர வாழ்க்கையின் புது அத்தியாங்கள் தொடரத் தொடர மனிதன் தன்னையும் அறியாமல் அவ்வப்போது அந்தப் பசுமைக்கால அனுபவங்களை அசைபோட்டு, அதில் இலயிப்பதில் இருந்த சுவையை உணர்ந்து, அனுபவிப்பதில்தான் தற்போதைய வாழ்க்கையின் அழுத்தத்துக்கு அவன் ஆறதல் தேடுகிறான்.

எனக்கு இப்படியான அனுபவ உணர்வுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. வெளிநாட்டு வாழ்க்கையின் தனிமை உணர்வு கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எனது கடந்த காலங்களின் சில சிரிப்பூட்டும் சம்பவங்களை நான் என் மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் போது சொல்லிச் சிரித்து மகிழ்வதுண்டு.

என்னைப் பார்த்து எனது பிள்ளைகள் அப்போது சிரிக்கின்ற சிரிப்பு இருக்கின்றதே! அது கோடி பெறும்.

இனிக் கதைக்கு வருவோம்.

எனக்குப் பதினைந்து வயதிருக்கும். கொழும்பு மாநகரில் டவர் டாக்கீஸ் என்ற ஒரு திரைப்பட மண்டபம் இருந்தது. (தற்போது அதைக் கலாலயமாக அரசு மாற்றியிருப்பதாகக் கேள்வி).

அந்த வயதில் இந்த அடல்ட்ஸ் ஒண்லி (adults only) என்ற வார்த்தை இருக்கிறதே! அதற்கு ஏகப்பட்ட மவுசு இந்த வயதுகளுக்கு மத்தியில் உண்டு.

உலகமறியாத வயதினிலே படங்களுக்கு, அதுவும் ஆங்கிலப் படவிளம்பரங்களுக்குக் கீழே இந்த வார்த்தைகளைக் கண்டு விட்டால் போதும், விளம்பரப் போஸ்டரையே பிய்த்து விழுங்கிவிடும் சென்னைத் தெருவோர மாடுகளைப்போல ஆதங்கத்தோடு அவற்றினருகில் அந்த வயது இளசுகள் நடமாடுவதுண்டு.

இளசுகளுக்குத்தான் இந்த நிலை என்றால் கிழடுகளைக் கேட்க வேண்டுமா? சமுதாயச் சட்ட திட்ட இறுக்கங்களால்; கவர்ச்சிக் காட்சிக்கு வழிகளின்றி, ஏங்கி நிற்கும் பல மறுவுலக டிக்கட் வயது வரிசைவாசிகளும் இதில் அகப்பட்டுத்தான் இருந்தார்கள்.

எங்கள் குழாமில் சுமார் ஒன்பது பேர் இருந்தோம். ஒன்றாகவே எங்கும் போவதும் வருவதும் எங்கள் வழக்கம். அன்றொரு நாள் என் வகுப்பில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது.

வெள்ளவத்தை சவோய் தியேட்டரில் ஒடிக் கொண்டிருந்த ஒரு அடல்ட்ஸ் ஒண்லி படம் இந்த வாரம் டவர் டாக்கீசுக்கு வருகிறதாம்.

முழு வகுப்பிலும் ஒரே பரபரப்பு. எங்கள் குழுவோ ஏகப்பட்ட ஆர்வத்தில் திளைத்தது. அன்று மாலையே எங்கள் படை துவிச்சக்கர வண்டிகளில் தியேட்டரை வட்டமிட்டது.

போஸ்டரில்…

“என்னடா ஒரே ரோமன் படைகள் மாதிரி இருக்குது? இதுக்கு ஏன் அடல்ஸ் ஓண்லி?"

ஒருவன் தனது சந்தேகத்தை முன் வைத்தான்.

“டேய் சும்மா அப்புடி இப்புடிக் காட்டாமல்..... வந்து பாரடா என்றுதான் போடவில்லை”

ஒரு குறும்பன் பதிலிறுத்தான் சிரிப்புடன்.

எல்லார் மனதிலும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு. சரியாகத் தெரியாவிட்டாலும் ஆர்வம் மட்டும் குறையவில்லை.

போஸடர் படத்தின் ஒரு மூலையில் ஒரேயொரு பெண்ணுருவம் மெல்லிய கண்ணாடிச் சீலையுடன் கால் தெரிய…

எங்கள் எல்லார் மனங்களையும் கிள்ளி விட்டுக் கிளுகிளுப்பூட்டியது அந்தப் படம். நேராகப் பார்க்கத் துணிவில்லாமல் கடைக்கண்ணால் பார்ப்பதும் பார்க்காத மாதிரி நடிப்பதுமாக ஒரே.. குளுகுளுகுளு.

ஒருவருக்கொருவர் ஏதோ காணக் கூடாததைக் கண்டு விட்டவர் போல மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டு, கடைக்கண்ணால் ரசித்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து பறந்தோம்.

இரண்டு நாட்களில் படம் வரும். சுமார் 8 கி.மீ. தூரம். பஸ்ஸில் போய்விடலாம். ஆனால் படம் முடிந்து வீடு திரும்பும்போதுதான் பிரச்சினை.

நடந்தேதான் வீடு திரும்ப வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பஸ்ஸொன்று வரும். அதைத் தவற விட்டால் வேறு வழியே கிடையாது.

இரவு 9.30 மணி காட்சிக்குத்தான் போக வேண்டும். ஆறரை மணிக் காட்சிக்கு போனால் தெரிந்தவர்கள் யாராவது நுழைவுச் சீட்டு வரிசையில் நிற்பதைக் கண்டு வீட்டுக்கு “டிப்” கொடுத்து விட்டால் எலும்பு முறியுமே! என்று எல்லாருக்குமே அச்சம். ஆகவே தூர நடை என்றாலும் பரவாயில்லை. லேட் ஷோவே பாதுகாப்பு என்று முடிவாயிற்று.

அதன் பிறகுதான் இன்னொரு புதிய பிரச்சினை பற்றிய ஐயத்தை ஒருவன் கிளப்பினான்.

“டேய் நாமெல்லாம் பதினாறு வயசு பசங்களாயிற்றே! பதினெட்டு வயதுக்கு மேலே இருந்தால்தானே உள்ளே விடுவான்?”

மீண்டும் குழு கூடிக் கொண்டது.

“நான் என் அக்காவின் கண்மை டப்பாவைக் கொண்டு வருகிறேன்.எல்லோரும் மீசை வரைந்து கொள்ளலாம்.”

பெரிய அறிவாளி போன்று நான் ஐடியா சொன்னேன்.

“டேய் அங்கே வருகிற கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு போகும்போது வியர்த்துக் கொட்டும். உன் மீசை அப்புடியே வடிந்து போய் வாயால் வழியும். பிறகு தியேட்டர்காரன் கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளுவான் அல்லது பொலிஸ்காரன் கையிலே பிடித்துக் கொடுப்பான்.அதைவிட படம் பார்க்கப் போகாமலே இருந்துவிடலாம்.”

அவ்வளவுதான்! அறிவுப் பெட்டகம் அப்படியே அழுங்கிக் கொண்டது. (நான் தான்)

யோசித்து, யோசித்து ஒன்றும் சரிவரவில்லை. கடைசியாக எல்லாரும் ஒன்றாகவே போவது. ஒருவனுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் எல்லாரும் திரும்பி விடுவது என்று முடிவெடுத்தோம்.

கிடைக்கும் டிக்கட்டை மீண்டும் விற்று விடுவதில் சிரமமிருக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.

அடல்ட்ஸ் ஒண்லி அறிக்கையின் பெருமை அப்படிப்பட்டது. ஆகவே பணத்துக்குக் காப்புறுதி உறுதி.

பட்டுப்போகப் போகும் படுகிழவர்களையும் பதுங்கி நுழைய முற்படுத்தும் மந்திரக் கோல் போன்றது அந்த அடல்ஸ் ஒண்லி போர்டு.

ஆகவே பெருங் கூட்டம் டிக்கட்டுக்காக அலை மோதப் போவது உறுதியிலும் உறுதியென்று எங்களுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

படம் திரையிடப்பட்ட இரண்டாம் நாள் சனிக்கிழமை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.

“மொத்தமாக ஒரே பொய்யைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஒருவன் அகப்பட்டால் அவனால் எல்லாருக்குமே ஆபத்து” என்று எங்களில் ஒரு மேதாவி மொழிந்த தத்துவத்தை வேதவாக்காகச் சிரமேற்கொண்டு, எல்லாருமே அவரவர் வீட்டில் பின்வருமாறு சொல்லியிருந்தோம்.

“இன்றைக்குக் கந்தையா மாஸ்டர் வீட்டில் வெள்ளையடிக்கிறார்களாம். அவருக்கு இரண்டு மகள்கள் மட்டுமே இருப்பதால் வீட்டை ஒதுக்கி உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். இதனால் அவர் வீட்டுக்குப் போகிறோம். இராத்திரி கொஞ்சம் பிந்தினால் அவரே வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போவாராம்” என்று நாங்கள் விட்ட “வோல்சேல்” கதை, எங்கள் வீடுகளில் அம்மாமார்களின் ஏகோபித்த அனுமதியை வாங்க வைத்து விட்டது.

அந்த நாட்களில் ஆசிரியர்களுக்கு பெரும் மதிப்பும் கவுரவமும் இருந்த காலம். எல்லாப் பெற்றோருமே தங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ வரப்பிரசாதம் கிடைத்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சியுடன் மாஸ்டரின் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் இனிப்பும் கொடுத்து அனுப்பினார்கள்.

எங்கள் ஐடியா மேதாவியை வாயாரப் பாராட்டிக் கொண்டோம்.

“டேய் கந்தையா மாஸ்டரை மட்டும் நம் அப்பா, அம்மா யாரும் சந்தித்துவிடாமல் பாத்துக் கொள்ள வேண்டும். விஷயம் தெரிந்ததோ! அவரும் உதைப்பார். வீட்டிலேயும் நவராத்திரி பூசை நடக்கும். ஜாக்கிரதை.”

நமது மேதாவியே இரண்டாவது அறிவுரையையும் தந்தருள் புரிந்தார். ஆமைகள் போல அனைவரும் தலைகளை ஆட்டிக் கொண்டோம். உண்மைதானே!

இரவு ஏழு மணியளவில் அந்நாளைய பழங்கால லண்டன் டபுள்டெக்கர் பேருந்தில் கொட்டாஞ்சேனையிலிருந்து பேருவகையுடன் எங்கள் குழு புறப்பட்டது.

தியேட்டருக்கு எதிர்ப்புற தரிப்பிடத்தில் பஸ் நின்றபோது, நான் தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். கூட்டமோ கூட்டம். அப்படியொரு கூட்டம்.

டிக்கட் வழங்கவே இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறதே! அதற்குள் இவ்வளவு கூட்டம் என்றால் இன்னும் அரை, ஒரு மணி நேரத்தில்?

பெரிய பரபரப்பாக இருந்தது எங்களுக்கு.

“சரிவராதடா இன்றைக்கு. இன்னொரு நாள் வருவோம்” ஒருவன் சொன்னான்.

“மடையா! இன்னொரு நாளும் கந்தையா மாஸ்டர் வெள்ளையடிப்பாராடா?”

முதல் குரல் அமுங்கிவிட்டது.

“இப்போ என்னடா செய்வது?”

“டேய! நேரத்தோடே வீட்டுக்குப் போனாலும் விபரம் கேட்பார்கள். பிந்திப் போவது என்றாலும் எங்கே போய் சுற்றுவது? அதைவிட பேசாமல் இப்போதே போய் நாமும் நின்று கொள்வோம். அதுதானடா சரி.”

ஓர் இடை அறிவாளி விடுத்த அந்த அறிக்கையை எல்லாருமே ஏகமனதாக அங்கீகரித்தோம்.

வீடு திரும்ப யாருக்கு எண்ணம்? எல்லாருமே அடல்ஸ் ஒண்லி ஆர்வலர்களல்லவா!

“ஆமாமடா, அதுதான் சரி. எல்லாரும் போய் க்யூவிலே நின்று கொள்வோம்.”

கலரி ஐம்பது காசு. இரண்டாம் வகுப்பு 1.10 என்று அறிவிப்பு தெரிந்தது.

“டேய், டேய் கலரி சீப்டா. அதுக்குள்ளே புகுவோம்.”

“அடேய்! அதிலே ஒரே ரவுடிகள்தானடா இருப்பார்கள். நம்மை உதைத்து, விரட்டி விட்டு அவன்கள் புகுந்து கொள்வான்களடா!“

“அப்புடியென்றால்? எல்லாருமே வண் டென்னுக்கு (ஒன்று பத்துக்கு -அதாவது இரண்டாம் வகுப்புக்கு-) போவோம்.”

“ஆமாம், அதுதான் சரி.”

எல்லாரும் க்யூவை நெருங்கினோம். கலரியில் ஒரே அடி பிடி மாதிரி சத்தமும் நெருக்குதலும்.

இங்கே அப்படிச் சத்தம்தானில்லையே தவிர, ஏகப்பட்ட நெரிசல்.

பலம், சொத்தி, இளம், கிழடு என்று பலரகப்பட்ட பலகாரங்களும் எங்கள் க்யூவில் நெருக்கியடிக்க, எங்கள் குழுவும் நன்றாகப் புகுந்து கொண்டு, வளைந்து நெளிந்தவாறே காத்து நின்றது.

அத்தியேட்டரின் முகப்பிலிருந்த கடிகாரத்தை அடிக்கடி கண்கள் பார்ப்பதும் இன்னும் கொஞ்ச நேரந்தான், இன்னும் கொஞ்ச நேரந்தான் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டு பொழுதைக் கழிப்பதுமாக நின்று கொண்டிருந்தோம்.

கந்தையா மாஸ்டரின் பிள்ளைகளுக்காக வீடுகளில் தந்துவிட்டிருந்த இனிப்புக்கள் நேரப் போக்கிற்கு நன்றாக உதவிக் கொண்டிருந்தன.

அப்போது தான்.

ஒரு வண்டியில் கொண்டைக் கடலை அங்கே வந்து நின்றது. ஒரு அலுமினியத் தொட்டி போன்ற சட்டியில் சுடச்சுடக் கடலை. அடியில் ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருக்க, கடலைக்காரர் பேப்பர் சுருளில் எடுத்து எடுத்து சுடச் சுட வழங்கிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கும் வாய் ஊறியது. அந்த நெருக்கடிக்கிடையில் அதை ருசிப்பதிலும் ஓர் இன்பம் இருப்பதாக உணர்ந்ததால் நாங்களும் கடலை வாங்க முற்பட்டோம்.

அந்த வண்டியையே புரட்டி விடுமாப்போல நாலா பக்கங்களிலிருந்தும் கைகள் நீட்டிக் கொண்டிருக்க, கடலை வியாபாரி சாவகாசமாகவும் இலாவகமாகவும் விற்பனையில் மூழ்கியிருந்தார்.

நானும் எனது கையை நீட்டி, ஒரு சுருளுக்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டு இருக்கும் போதுதான்.….

ஒரு பாம்புக் கை கடலை வண்டிப் பக்கமாக நீண்டது தெரிந்தது.

இது என்னடா? இது நமக்குத் தெரிந்த கை மாதிரி இருக்கிறதே!

என் மனம் பக்பக்கென்று அடித்துக் கொண்டது. உறுதிப் படுத்த அவசியமே இல்லை.

பாம்பின் கால் பாம்பறியுமாமே! அந்தப் பாம்பின் கையை மட்டும் இந்தப் பாம்புக்குப் புரியாதோ?

யாருடைய கை அது என்று நினைக்கிறீர்கள் நீங்கள்?

சாட்சாத் என் அப்பாவினுடைய கையேதான் அது.

அந்த கோடைக்கால சூட்டிலும் எனக்குள் வின்ட்டர் குளிர் வீசத் தொடங்கிவிட்டது.

மிக மெல்லிய குரலில் அருகிலிருந்த நண்பனிடம் சொன்னேன்.

“டேய்! என் அப்பாவும் வந்திருக்கிறராரடா! பேசாமல் கலரிக்குப் போயிருந்தால் தப்பியிருப்போம். இப்ப என்னடா பண்ணுவது?” எழுபது வயது தாத்தாவின் குரல் போல எனது சொற்கள் தத்தளித்தன.

“அவர் உன்னைப் பாத்தாராடா?”

“அப்படித் தெரியவில்லை!”

“அப்போ ஒன்று செய். எனக்குப் பின்னாலே ஒழிந்து கொள். நான் மறைத்துக் கொள்கிறேன். உன் அப்பாவுக்கு என்னை சரியாகத் தெரியாது.”

ஆபத்பாந்தவன். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்று படித்தோமே! அது சரிதான்.

டெங்கு காய்ச்சல் பேஷன்ட் மாதிரி நானும் அவனுக்குக் கீழ்ப்படிந்து பதுங்கிக் கொண்டேன்.

டிக்கட் எடுத்த பின் சிறிது தூரம் கடந்துதான் தியேட்டர் உள் வாயிலை அடைய வேண்டும்.

இந்த டென்சிங் இமயமலை ஏறினாராமே! அவர் பட்டிருக்கக்கூடிய சிரமம் என்ன சிரமம்?

நானல்லவா அன்று அப்படியொரு…

அன்றைய எனது இமயமலை உச்சியின் தூரம் சுமார் பதினைந்தடி மட்டுமே! ஆனாலும் டென்சிங் தோற்று விட்டார் போங்கள்.

என் நண்பனுக்குப் பின்னால் என்னை மறைத்தவாறே டிக்கட் கிழிப்பவரை நெருங்கினேன். எங்களை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார் அவர்.

சில கணங்கள் எங்களுக்குள் ஒரே கிடுகிடுகிடு.

பிறகு என்னவோ, அந்தக் கர்ணபிரான் உள்ளே செல்ல வழி விட்டார். பாய்ந்தோடி நுழைந்தோம்.

எங்கள் துரதிர்ஷ்டம் ஒன்றாக அமரும்படியாக ஒரே வரிசையில் ஆசனங்களே காலியாக இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகவே இருந்தன. அதற்குள் மேலும் மேலும் கூட்டம் நுழையத் தொடங்கவே, கிடைத்த இடத்தில் இடம் கிடைத்தவன் இருந்து கொண்டான்.

நாங்கள் மூன்று பேர் மட்டும் இடம் தேடி அரை இருட்டில் அலைந்து கொண்டிருந்தோம்.

ஒருவன் ஒரு சீட் பிடித்து அமர்ந்து விட்டான். சிறிது கழித்து மற்றவன் ஓடி வந்தான்.

“டேய் அங்கே ஒரு சீட் இருக்கிறது!”

“எங்கேடா?”

“அதோ பார்.”

நான் பார்த்தேன்.

ணொங்ங்ங்ங்…

ஒரு முனியாண்டி சாமி சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில்தான் ஒரு சீட் காலியாக இருந்தது. அதற்குள் இன்னொரு சீட்டைத் தேடிக் கூட நின்றவனும் ஓடிப்போய் அமர்ந்து கொண்டான்.

எனக்குள்.… ஏதோ புளியைக் கரைக்குமாமே! அப்படி இருந்தது. எதனால் தெரியுமா?

அந்த சுருட்டுக்குரிய முனியாண்டிசாமி வேறு யாராகவுமல்ல, என் அப்பாவாக இருந்ததால்தான்.

கடைசி சீட் பிடித்த நண்பனிடம் ஓடினேன். கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியும் அவன் எழும்பவே முடியாதென்று மறுத்து விட்டான்.

தன்னை அடையாளம் கண்டு கொண்டு, அவனது அப்பாவிடம் இவர் ஏதாவது சொல்லி விட்டால்? தற்காப்புக்கு வேறு வழியே இல்லையே! அவன் நிலைமை அப்படியாக இருந்தது.

எனக்கு? ஆப்பிழுத்த குரங்கு நிலை இதற்கு எவ்வளவோ மேல்.

என்னால் ஆனமட்டும் இருட்டை ஊடுறுவி, ஊடுறுவி வேறொரு இடம் தேடினேன் கண் வலித்ததுதான் மிச்சம்.

முதலாம் மணி அடித்து விட்டது. விளம்பரங்கள் ஓடத் துவங்கின. இருட்டு இன்னும் அதிகரித்தது.

இரண்டாம் மணி அடிக்க சில விநாடிகள் இருக்கும். தியேட்டரில் பணிபுரியும் ஒருவர் கையில் டார்ச் லைட்டுடன் நான் நின்று கொண்டிருப்பதை அவதானித்துவிட்டு, நெருங்கி வந்து கொண்டிருந்தார்.

கழுத்து அறுபடப் போகிற ஆடு, தான் கட்டப்பட்டுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டோடப் படாத பாடு படுமாமே! அப்படியொரு நிலைமை. ஆனால் எங்கேதான் ஒடுவது?

பாவி ஏதாவது வேறிடத்தில் இடம் பிடித்துத் தர மாட்டானா என்ற நப்பாசையுடன் நான் நிற்கவும் கடைசி மணியொலியுடன் படம் துவங்கவும் சரியாயிருந்தது.

வந்த டார்ச் லைட் என்னருகில் வந்து என்னை அழைத்தது. வேறு வழி?

பின்னாலேயே சென்றால்… பாவி என் அப்பா அருகிலேயா கொண்டு போய் நிறுத்துவான்?

படக். படக. படக.

டங்டிங்டுங்

புங்பிங்புங்

எனக்குள் ஏகப்பட்ட பிசாசுத் திரைப்படங்களின் பயங்கர இசையொலிகள் நிறைந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

சில விநாடிகள் அப்படியே கழிந்தன.

இருட்டிலே அப்பாவுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் அப்படியே இருந்து விட்டு, இடைவேளை லைற் போடுமுன் எழுந்து மாறிவிடுவோம் என்று தீர்மானித்தவாறே கடல் கன்னி ஸ்டைலில் வளைந்து, அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்.

“ஆண்டவனே! ஒரு கெட்ட காட்சியும் அதுதூன் இந்த நாசமாய்ப் போகிற அடல்ஸ் ஒண்லி காட்சிகள் எதுவுமே வந்திடக் கூடாது. இந்த அப்பா அடித்தாரென்றால் இரும்படிதான். அதனாலே… கடவுளே! ஆடல்ட்ஸ் ஒண்லியைக் குழந்தைகள் ஒண்லியாக தயவு செய்து மாற்றி என்னைக் காப்பாற்றும்.”

கதை வசனங்களோ காட்சிகளோ தலைக்குள் நுழையவே முடியாத சித்திரவதை நிலையில் நானிருந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்தப் புதுமை நடந்தது.

"படம் பாக்க வந்தாயா?“

ஒரு மின்சாரக் கம்பமே சரிந்து, என் மேலே விழுந்து விட்டது போன்ற அதிர்ச்சி.

ஆனால்…கோபத்துக்குப் பதிலாக ஒருவித மென்மை தெரிகிறதே! என்னடா இது?

பயத்துடன் வியப்பும் எனக்குள் புகுந்து கொண்டது.

கிணற்றடியில் வைத்து குளிக்கவா வந்தீர்கள் என்று கேட்டால்? மொக்குத் தனமான கேள்வியல்லவா? அதுவும் படத் தியேட்டருக்குள் வந்து இருந்து கொண்டு, படம் துவங்கும்போது படம் பார்க்கவா வந்தாய் என்று கேட்கின்றாரே!

ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டவர்? எனது அப்பாவல்லவா!

எப்படி....எடுத்துரைப்பேன்?

"ம்“

ஒரே எழுத்தில் பதில் சொல்லி விட்டேன். தமிழன்னையே அநநேரம் விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.

ஒரு சிறிய கனைப்பின் பிற்பாடு, அதே குரல் சிறிது கம்மியாக மீண்டும் ஒலித்தது.

"சரி... நான் படம் பாக்க வந்திருந்ததாக அம்மா கிட்டே சொல்லி விடாதே! என்ன?“

குற்றவாளியைப் பிடிக்க வேண்டிய போலீஸ்காரரே குற்றவாளியிடம் அபயம் கேட்பதா?

அடி சக்கை. நடக்கக் கூடிய காரியமா இது?

ஐரேபாப்பவில் அகதி அந்தஸ்து கோரிட, சம்பந்தா சம்பந்தமில்லாத அறிக்கைகளை விட்டு விட்டு முழிப்பவரைப் போலில்லை?

அநியாயம் சொல்லப்படாது. கடவுள் இரக்கமுள்ளவர்தான். நான் கேட்டுக் கொண்ட வேண்டுகோள் உடனடியாகவே ஏற்கப்பட்டு விட்டது போலத் தெரிகிறதே!

எந்த பதிலும் சொல்லாமல் நான் அமைதியாகவே இருந்து கொண்டேன்.

எத்தகைய காட்சிக் கனவுகளோடே தியேட்டருக்குள் நுழைந்தேனோ, அப்படியான காட்சிகளேதுமே இல்லாமல் படம் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரே தடபடதடபடதான்.

மனதிலிருந்து, எதிர்பார்த்து வந்தவை எதுவும் எதிர்ப்படவே கூடாது என்று இறைவனிடம் ஒரே வேண்டுதல்தான்.

ஒரேயொரு காட்சியில் மட்டும் அடிமைப்பட்டுவிட்ட கதாநாயகனிடம் ஒரு பெண் அனுப்படுவதும் அவள், அவன் முன் தனது ஆடையைக் களைவதுமாக… அவளது முதுகுதான் தெரிந்தது. அதற்குள் நான் சீட்டுக்கடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா? யாருக்குத் தெரியும்?

அன்று வயதுக் கோளாறினால் தியேட்டருக்குள் புகுந்து விட்டு, பட்ட பாடு! போதும் போதும் என்றாகி விட்டது.

இடைவேளை வந்தது. இனி எழும்பி ஓடி என்ன பயன்?

கற்சிலை போல இருந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர்கள்?

ஒரு பயல் கூட அந்தப் பக்கம் வரவே இல்லை. பொந்துக்குள்ளிருந்து நரிக்குப் பயந்த முயல்கள் எட்டிப் பார்ப்பதைப் போல…

படுபாவிகளே! சரியாக மாட்டி வைத்துவிட்டு பதுங்கவா செய்கிறீர்கள்?

செங்கதிர் சுடர்போலே என்கரம் நீண்டிருந்தால்…

ஒவ்வொருத்தன் கழுத்தையும் – உங்கள்

ஒவ்வொருத்தன் கழுத்தையும்..

இங்கிருந்தே நெரிப்பேன்...

இடைவேளை ஆரம்பித்ததுடன் அப்பா வெளியேறியதைக் கூட நான் கவனிக்கவில்லை என்பதை அவர் அது முடிய திரும்பி வந்து அமர்ந்த போதுதான் நான் உணர்ந்தேன்.

குற்றவுணர்வுகள் உடம்பின் இயக்கத்தையே தடுத்துத் தடுமாற வைத்து விடுகின்றனவே!

“இந்தா சாப்பிடு” திரும்பிப் பார்த்தேன்.

ஐஸ் சொக்!

"ஹாட் அட்டாக்“ அளிக்கும் அடுத்த அதிர்ச்சி.

அப்பா என்ற அந்த மேகம் ஐஸ் சொக்காக அன்பு மழை பொழிகிறதே!

அதுவும் அடல்ட்ஸ் ஒண்லி ஆபத்துணர்வில் அங்கமெல்லாம் அஞ்சி நடுங்கும் இந்த நேரத்திலே! ஏனாம்? புரியவேயில்லை.

இயந்திரத் தலையாக உயிரின்றி எனது முகம் திரும்பியது.

ஐயா ஐஸ் வேறு வைக்கிறாரே!

வேறு நேரமாயிருந்தால்... அப்பா கழுத்தில் இந்நேரம் இந்த உடலம் தொங்கிக் குதித்திருக்கும்.

“நீங்களெல்லாம் எப்படி வீட்டுக்குப் போகப் போகிறீர்கள்? பஸ்ஸிலேயா?”

என் மீதுதான் எத்தனை அக்கறை என் அப்பாவுக்கு.

அப்பாடா!

அது சரி, பன்மையில் இழுக்கிறாரே! மற்றவர்களையும் பார்த்து விட்டாரா?

பலே! நம் கிழட்டு ஜேம்ஸ் பொண்ட் அப்பா வாழ்க!

“ஆம்”

இப்போது ஓரெழுத்து முதல் பதில் இரண்டெழுத்து இரண்டாம் பதிலாக எனது உதடுகளிலிருந்து விழுந்தது.

“படம் முடிந்ததும் டக்கென்று பஸ் ஸ்டாண்டுக்குப் போய் விடுங்கள். இல்லையென்றால் பஸ் நிறைந்துவிடும். உங்களை ஏற்றாமலே போனாலும் போய்விடும். கவனம்.”

“சரியப்பா”

அக்கறையோடே வழி சொன்ன அப்பா தனது ஐஸ் சொக் பாசத்தின் அடிப்படையை அப்போதுதான் விடுத்தார்.

“நான் இரவு வேலைக்கு வந்தேனல்லவா? கொஞ்சம் நேரம் கிடைத்தது. அதனாலேதான் படம் பாத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அம்மாவுக்குத் தெரிந்தால் சும்மா சத்தம் போடுவாள். அதனாலே… நீயும் சொல்லாமல்தான் வந்திருப்பாயென்று நினைக்கிறேன். நானும் சொல்ல மாட்டேன். சரியா?”

அதுவரை குளிராயிருந்த ஐஸ் சொக் இப்போது சுடத் துவங்கி விட்டது.

சிவபெருமானே!

இதுவும் உனது நவீன திருவிளையாடலா?

எனக்குத் தலையே சுற்றுவது போல ஓர் உணர்வு.

அடச் சை! அந்த ஆறுமுக நாவலர் இந்த நேரத்தில் இல்லாமல் போய்விட்டாரே! இப்போதிருந்து இதைக் கேள்விப்பட்டால் அழகாகத் திருவிளையாடல் புராணத்துக்கு இன்னொரு புதிய அத்தியாயம் எழுதி வைத்திருப்பாரே! சிவ சிவா!

“சரியப்பா! நான் அம்மா கிட்டே சொல்ல மாட்டேன்.”

அப்பா “அப்பாடா!” என்று பெருச்சு விடுவது இருட்டில் புரிந்தது. நானும் அதே நிலையில்தானே!

சமரசம்… உலாவும்… இடமே… நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே…”

படம் முடிய, நெருக்கிக் கொண்டு வெளியேறிய கூட்டத்துடன் அப்பா கலந்து, மறைந்து, பறந்தே விட்டார்.

என் நண்பர்கள் என்னிடம் விசாரித்த போது, முழுக் கதையையும் நான் சொல்ல, எல்லாருக்கும் ஏதோ ஒரு பெரிய நகைச்சுவைப் படத்தையே பார்த்து மகிழ்ந்த மகிழ்ச்சியும் சிரிப்பும். ஒருவருக்குமே ஆபத்தில்லாமல் அனைவருமே தப்பித்துக் கொண்டோமே! சும்மாவா?

ஆனால் எல்லாரும் ஒன்றை மட்டும் ஒரே தொனியில் சொன்னார்கள்.

“டேய்! உன் அப்பாவைக் கண்ட பிறகு, படம் பார்க்கிற மூடே போயிட்டதடா! உனக்கு ஐஸ் சொக் கொடுத்தாரே! அது எதற்காக என்று யோசித்து, யோசித்து படத்தையே மறந்து விட்டோம்.”

அப்பா நாணயமான மனிதர். கடைசி வரை அம்மாவிடம் என்னைப் பிடித்துக் கொடுக்கவே இல்லை.

நான் மட்டும்?

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

பிழை, பிழை. பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?

நானும் அவ்வண்ணமே கடைசி வரைக்கும் நடந்து கொண்டேன்.

மியாவ்! மியாவ்!

அந்தப் படத்தின் பெயர் ஸஸ்பாட்டகஸ் (Spartakus).

பார்க்கக் கிடைத்தால் பயமின்றிக் குடும்பத்தோடு பாருங்கள்.

அந்நாளைய தியேட்டர்காரர்கள் பொது மக்களை இழுக்க விரித்திருந்த வலைகளில் ஒன்றுதான் கண்ட கண்ட படத்துக்கெல்லாம் இந்த வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கின்ற விளம்பரத்தைப் போட்டு வந்தது என்பதும் தியேட்டர்காரன் எங்களின் பிஞ்சில் பழுத்த உருவ வளர்ச்சியைப் பார்த்த பிறகும் விரட்டியடிக்காமல் உள்ளே விட்டானே, அது ஏன் என்பதும் கூட இப்போதுதானே தெரிகிறது?

http://www.tamilamutham.com

Link to comment
Share on other sites

அந்தப் படத்தின் பெயர் ஸஸ்பாட்டகஸ் (Spartakus).

பார்க்கக் கிடைத்தால் பயமின்றிக் குடும்பத்தோடு பாருங்கள்.

ஓ.... Spartakus பார்க்க போகவா இவ்வளவு பெருந்திட்டமெல்லாம்.... :unsure:

பழைய படம் தான். ஆனால், நல்ல ஒரு படம்

Link to comment
Share on other sites

படத்தை விட

இந்த கதையால் படங் காட்டியது சுப்பர்.

இருந்தாலும் இவ்வளவு இழுத்திருக்க வேணாம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனா! அடல்ஸ்ஒன்லி போடுவது ஆபாசப் படத்துக்கு மட்டுமல்ல பயங்கரப் படத்துக்கும் போடுவார்கள். உங்கள் அனுபவத்தைப் பொறுத்தமட்டில் அடல்ஸ்ஒன்லி சூப்பர். :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நூணாவிலன்

எனக்கும் இதே சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது நுவரேலியாவில் ஒரு தடவை சுற்றுலா என்று சொல்லி நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம் அன்று போகும் அந்த போஸ்டரை பார்த்து விட்டோம் பிறகென்ன நமது படையும் விட்டு வைக்க வில்லை.அதுக்குள் ஒருத்தன் சொன்னான் திரையில் பார்க்கும் போது சூப்பராக் இருக்கும் என்று சரி நாங்களும் திரையரங்குக்கு சென்றோம் அங்கு போனால் உரிமையாளர் சொல்கிறான் ஆட்கள் காணாதாம் அடுத்த நாளைக்குதான் படமாம் என்று சொல்ல அவரை விடவில்லை நீங்கள் போடுங்கள் நாங்கள் உங்களுக்கு அதிக பணம் தருகிறோம் என்று சொல்ல சம்மதித்து விட்டார் பின்பு ஒருவன் சொல்கிறான் நாங்கள் பால்கனியில் இருந்துதான் படம் பார்ப்போம் என்று சொல்ல அவரும் ஒன்றும் சொல்லவில்லை படத்தை போட்டார் பருங்க எங்கட முகத்தையெல்லாம் பார்க்க இயலாது நாலு பொண்ணுங்கள் வந்து கடலில் குளித்துக்கொண்டு கதைத்து இருப்பதும் குளிப்பதுமாக இருந்த்தது எங்களூக்கும் கடுப்பாக உரிமையாளரை பிடித்து போஸ்டரில் உள்ள படத்தை ஏன் போடவில்லை என்று கேட்க அதுஎல்லாம் போடமுடியாது என்று அவர் சொல்ல அவருடன் வாக்குவாதப்பட்டு பின் விடுதிக்கு சென்றதுதான் போகும் போது இந்த ஜடியா தந்தவனுக்கு கொஞ்சம் கை விசேடம் கொடுக்கப்பட்டது[அடி ,குத்து]

அதன் பின்பே தெரிந்து கொண்டோம் யாரும் அந்த படத்திற்கு செல்லவில்லை என்றும் எல்லாம் வியாபார யுக்தி என்றும் வீணா பணம் செலவானதுதான் மிச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலயும் அப்படி தலையங்கம் போட்டால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்குதுங்கோ......

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான் உங்கள் இணைப்பிற்கு.

இதனை நான் ஏற்கனவே இன்னொரு தளத்தில் வாசித்திருந்தேன். நீங்களும் தமிழழுதத்திலிருந்து இங்கே இணைத்துள்ளீர்கள். ஆனால் பலர் இதனை உங்கள் அனுபவம் என்று நினைத்து கருத்தெழுதுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான் உங்கள் இணைப்பிற்கு.

இதனை நான் ஏற்கனவே இன்னொரு தளத்தில் வாசித்திருந்தேன். நீங்களும் தமிழழுதத்திலிருந்து இங்கே இணைத்துள்ளீர்கள். ஆனால் பலர் இதனை உங்கள் அனுபவம் என்று நினைத்து கருத்தெழுதுகின்றார்கள்.

வசம்பு, எனது அனுபவமாக கூட எடுத்துக்கொள்ளலாம். :lol:

Link to comment
Share on other sites

வசம்பு, எனது அனுபவமாக கூட எடுத்துக்கொள்ளலாம். <_<

நுணாவிலான் தாங்களா சிந்தனைச் செல்வர் எழிலனா?

ஏற்கெனவே இவ் ஆக்கம் இடம்பெற்ற இடம் www.tamilamutham.com அல்ல, http://www.tamilamutham.net :unsure:

Link to comment
Share on other sites

சொழியன், நான் எழுதியதாக சொல்லவில்லையே? மேலே எங்கிருந்து பெற்றது என குறிப்பிட்டிருந்தேனே. ஆனால் எனது அனுபவமும் கதையில் வந்தது போன்றது தான் என குறிப்பிட்டிருந்தேன். பிழையாக விளங்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

நான் உங்கள் கருத்தை சரியாக விளங்கிக் கொண்டேன்.. ஆனால் ஆக்கத்தில் எழுதியவரது பெயர் தவறியுள்ளதால், ஏனையவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலேயே அப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டதை பாத்துப்போட்டு பெரிய அந்தமாதிரி எதிர்பார்ப்போடை வந்த சோழியண்ணைக்கு பெரிய இடி :)

Link to comment
Share on other sites

நிச்சயமாக கு.மா அண்ணா. இன்னுமொருவரின் தலைப்பை மாற்ற எந்த உரிமமும் எனக்கு இல்லையப்பா. இதுக்குளே என்னை சொழியனும், ஈசும். டன்குவாரும் வாரவென்றே கிளம்பிட்டாங்கள் அப்பா. என்ரை குருவாயுரப்பா ,சும்மா சொல்லக்கூடாது பிச்சுப்போட்டாங்கள் பிச்சு. :):lol:

Link to comment
Share on other sites

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டதை பாத்துப்போட்டு பெரிய அந்தமாதிரி எதிர்பார்ப்போடை வந்த சோழியண்ணைக்கு பெரிய இடி :)

நீங்க ஒன்று.. தமிழமுதத்திலே ஆகக் கூடுதலாக வாசிக்கப்பட்ட ஆக்கம் அதுதாங்க.. அதனால எல்லா ஆக்கத்துக்கும் கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டும் எனப் போடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தமாதிரியோ..? அது இங்கை இருக்கு.. http://www.yarl.com/articles/node/219 :lol:

Link to comment
Share on other sites

யாழிலை பெடியள் அட்வான்ஸா தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் சோழியன். மேலும் எனக்கு தலைப்பை மாற்றும் அதிகாரம் இல்லை என்பதை தெரிவிக்கிறேன். இது நிச்சயமாக ஆட்களை கவரும் நோக்கமல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொழியன், நான் எழுதியதாக சொல்லவில்லையே? மேலே எங்கிருந்து பெற்றது என குறிப்பிட்டிருந்தேனே. ஆனால் எனது அனுபவமும் கதையில் வந்தது போன்றது தான் என குறிப்பிட்டிருந்தேன். பிழையாக விளங்க வேண்டாம்.

உங்கட அனுபவம் என்ன?

Link to comment
Share on other sites

உங்கட அனுபவம் என்ன?

கதையோடு கிட்ட தட்ட ஒட்டியது தான் எனது கதை . எனவே திருப்பி எழுத தேவையில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37424

இங்கு மட்டும் என்ன வாழுதாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் முகக்குறி பார்த்தபின்தான் புரிகிறது நான் சொல்ல வந்த கருத்தே வழுக்கிவிட்டது என்பதை....

கவர்ச்சிக்குக்குக் கிடைக்கும் மதிப்பு மற்றைய எதற்கும் கிடையாது என்பதைத்தான் கூறமுனைந்தேன் வெண்ணிலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களின் பிஞ்சில் பழுத்த உருவ வளர்ச்சியைப் பார்த்த பிறகும் விரட்டியடிக்காமல் உள்ளே விட்டானே, அது ஏன் என்பதும் கூட இப்போதுதானே தெரிகிறது?

என்ன தெரியுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.