Jump to content

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்


Recommended Posts

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள்.

தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள்.

சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் தன் காதலி தருகின்ற முத்தத்தின் போதும்...

நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல்லது காதலி உங்களை பிரியும் பொழுதும்...

மிக முக்கியமாக... காதலியின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. நுகரும் போதும் ஆண்கள் பரவசைமடைகிறார்கள்.

http://femina.mywebdunia.com/2008/09/10/1221046704753.html

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அதே காதலியை திருமணம் செய்தபின் கதையே வேற ! நான் அனுபவப்பட்டவன் ! இதற்காக நான் இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை. வாழ்க்கை எல்லாவற்றையும் மாற்றிவிடும் !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை வாசிக்கவே பரவசமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

:):):wub::lol::):)

Link to comment
Share on other sites

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்.

Link to comment
Share on other sites

[ஃஉஒடெ நமெ='ஆதிபன்' டடெ='ஸெப் 15 2008, 10:07 ஆM' பொச்ட்='446172']

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்.

[/ஃஉஒடெ]

முனிவர் எல்லாம் துறந்தவராக்கும். அவர் பரவசப்பட மாட்டார். மற்றவர்களை பரவசப்படுத்துவார்.

Link to comment
Share on other sites

ஏம்பா அதிபா,

இருக்கிற பலத்தையும் இல்லாமல் ஆக்கிறதென்டே முடிவு பண்ணிட்டீரா?

உள்ளதிலேயே ரொம்பப் பலவீனமா இருந்து நொந்து நூலாகி........... அங்கால நெடுக்கு சொல்லுவார்.

அதென்ன முனி முற்றும் துறந்தவர் எண்டா.... ஆணவம், கன்மம், மாயையா? அல்லது வேற ஏதாச்சுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aathipan Posted இன்று, 03:07 PM

முனிவர் ஐயா எதுக்கு திரு திரு என்று முளிக்கிறீங்ககள்? உங்க அனுபவங்களை எடுத்துவிடுங்க. காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கூட எழுத ஆசைப்படுறார்

என்னத்த சொல்ல அனுபவப்படவில்லை

இருந்தாலும் காதலித்தேன் அவளிடம் போய் விருப்பத்தை கேட்டேன் புராணம் பாடி விட்டாள் :unsure:

அன்றைக்கு ஏத்தின கொடிதான் இன்னும் இறக்கவில்லை காவி உடுப்பும்

முனிவர் எல்லாம் துறந்தவராக்கும். அவர் பரவசப்பட மாட்டார். மற்றவர்களை பரவசப்படுத்துவார்

சரியாக சொன்னீர்கள் ஈஸ் இருந்தாலும் இன்னும் முற்றும் துறக்க வில்லை சில ஜந்துக்கள் உள்ளன :wub::lol:

அதென்ன முனி முற்றும் துறந்தவர் எண்டா.... ஆணவம், கன்மம், மாயையா? அல்லது வேற ஏதாச்சுமா

ஆதி வந்துட்டயல் போல தேன் எடுக்க போனதாக கேள்விபட்டேன் என்ன எடுத்தாச்சா நிறைய இடத்தில் தேன் பூச்சு குத்தியதாக கேள்வி பட்டேன் உன்மையோ மருந்து போட ஆச்சிரமத்துக்கு வாரது எல்லாத்தையும் துறக்க முடியாது தெரியும் தானே உங்களுக்கு :):unsure:

Link to comment
Share on other sites

பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்

தலைப்பு நல்லா தான் இருக்கு... விஷயங்களும் தான்.

அது சரி..., யாராவது ஆண்களிடம் பெண்கள் பரவசமடையும் தருணங்கள் என்ற தலைப்பில் ஏதாவது எழுதகூடாதா? பசங்கள் நன்றியுடன் பாராட்டுவாங்கள். :unsure:

Link to comment
Share on other sites

ஆதி வந்துட்டயல் போல தேன் எடுக்க போனதாக கேள்விபட்டேன் என்ன எடுத்தாச்சா நிறைய இடத்தில் தேன் பூச்சு குத்தியதாக கேள்வி பட்டேன் உன்மையோ மருந்து போட ஆச்சிரமத்துக்கு வாரது எல்லாத்தையும் துறக்க முடியாது தெரியும் தானே உங்களுக்கு :wub::lol:

ஓய் முனியாரே!

அது தேன் பூச்சு இல்லை தேனீ....

திட்டுத் திட்டா வீங்கி ஆதி பட்ட வேதனையைச் சொல்லி மாளாது. :lol:

ஆசிரமத்திற்கு வாரதோ..... வேண்டாம்டா சாமி.

எனக்கென்டாலும் தேனீதான் கொட்டிச்சு.....

உம்மை ஆசிரமத்தில வச்சு கரடிகள் உருட்டி உருட்டி நக்குவதாகக் கேள்விப்பட்டன் உண்மையோ முனி? :):unsure::lol:

அதெப்படி...... தேனில் குதித்து நீச்சலடிக்கவும் ஆசிரமத்தில் படிப்பிக்கிறீரோ? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='Mallikai Vaasam'

அது சரி..., யாராவது ஆண்களிடம் பெண்கள் பரவசமடையும் தருணங்கள் என்ற தலைப்பில் ஏதாவது எழுதகூடாதா? பசங்கள் நன்றியுடன் பாராட்டுவாங்கள். :unsure:

Link to comment
Share on other sites

வேற என்ன நகையும் உடுப்பும் வாங்கிக்கொடுக்கும் போதுமட்டும் தான் :unsure:

சயீவா அப்பிடியே உங்க திருவுருவத்தையும் இங்கு போட்டு விடுங்க......அப்பத்தானே மகளிர் அணி அடையாளம் கண்டு சாத்த முடியும். :wub:

Link to comment
Share on other sites

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

தெரிஞ்சதை எழுதினால் இங்க மட்டுறுத்தினர்மார் பரவசப்பட்டுடுவினம்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் முனியாரே!

அது தேன் பூச்சு இல்லை தேனீ....

திட்டுத் திட்டா வீங்கி ஆதி பட்ட வேதனையைச் சொல்லி மாளாது. :unsure:

ஆசிரமத்திற்கு வாரதோ..... வேண்டாம்டா சாமி.

எனக்கென்டாலும் தேனீதான் கொட்டிச்சு.....

உம்மை ஆசிரமத்தில வச்சு கரடிகள் உருட்டி உருட்டி நக்குவதாகக் கேள்விப்பட்டன் உண்மையோ முனி? :wub::lol::)

அதெப்படி...... தேனில் குதித்து நீச்சலடிக்கவும் ஆசிரமத்தில் படிப்பிக்கிறீரோ? :unsure:

அதற்காக தனி வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன் ஆதீ தேனில் குளிப்பது எப்படி என்று ஆனால் என்னை தேடி நிறைய தேனீகள் வருகின்றன என்ன செய்யலாம்

ஓ கரடியோ அது நக்கு வதில்லை கடிக்கிறதாக்கும் உங்களுக்கு தெரியாததா என்ன நமக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களை ஒருக்கா கரடியிடம் கொடுத்து பின்பு பூசைக்கு எடுத்து கொள்வதுதானே இந்த ரகசியத்தையெல்லாம் வெளியில் சொல்லாதீங்கோய் ஆதீ

ஆதிவாசியின் ............. பக்கங்கள் நிறைய வீங்கியுள்ளதாக கேள்வி பட்டேன் அதனால் அவர் ..........அலைவதாக சற்று முன் தெரியவந்தது ஜயோ பாவமே

Link to comment
Share on other sites

  • 2 months later...

உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்

தெரிஞ்சதை எழுதினால் இங்க மட்டுறுத்தினர்மார் பரவசப்பட்டுடுவினம்..! :wub:

ஹிஹி :wub: நல்ல பகிடி டங்குவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Before the marriage:

He: Yes. At last. It was so hard to wait.

She: Do you want me to leave?

He: NO! Don't even think about it.

She: Do you love me?

He: Of course!

She: Have you ever cheated on me?

He: NO! Why you even asking?

She: Will you kiss me?

He: Yes!

She: Will you hit me?

He: No way! I'm not such kind of person!

She: Can I trust you?

He: Yes.

Now after the marriage you can read it from below to up!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எதக்கன்டு பரவசமடையிறது பென்களைப்பார்த்தாலே இப்ப பயமாக்கிடக்கு இதில நாங்கள் எங்க பரவசம் அடையிறது எங்க எங்களைக்கொண்டுபோய் பாதாளத்தில விழுத்திடுவாங்களோ (இவன் சின்னப்பிள்ளையா என்டெல்லாம் கேடகக்கூடாது) என்டுதான் பயமாக்கிடக்கு. சரி பார்ப்பம் ம் இனியும் பரவசத்த எப்ப பார்க்கிறது ம் இங்க பரவசத்தை பார்த்தாக்கள் கனபேர் இருக்கினம் சொன்னா நாங்களும் கொஞ்சம் றை பன்னலாமெல்ல

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :)

முதல்ல நீங்கள் சொல்லுங்கோ பேந்து நெடுக்கிட்டபோவம் நீங்களும் பரவசமடைஞ்சனியலா

சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

அழகையா ஓங்கி நாலுஅப்அப்பனாத்தான் சரி

காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது...

அடப்பாவி தொலைஞ்சது சனியன் என்டு போன்நம்பரை மாத்திடுவமெல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலைப்பு ஆனா பதில் தான் தெரியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு. நெடுக்கை இந்தப்பக்கம் காணவில்லையே :unsure:

வர வேணாம் என்று தான் பார்த்தன்.. விடமாட்டியலே.

பரவசம்னா என்னங்கோ

ஊரில பெண்கள் சாமி ஆடுவினம்.. உங்க பெண்கள் வைன்.. பியர் குடிச்சிட்டு ஆடிவினம்.. அது. :D

-----------

என்ர அனுபவத்தைச் சொன்னால் பரவசம் என்றதை விட ஊரில நம்மட அண்ணமார் சொல்லுற கிளுகிளுப்பு என்ற பதம் தான் நல்லது என்று நினைக்கிறன்.

நான் யுனில முதலாம் ஆண்டு (போன புதிசு) படிக்கேக்க... சிங்களப் பெட்டை ஒன்று படிச்சது. அது கண்டியில இருந்து கொழும்புக்கு வாறது. ஏல் கொழும்பில படிச்சது என்ற படியால். அந்தப் பெட்டை நல்ல அழகு. அவள் கூட கதைக்கவே ஒரு சிங்களக் கூட்டம் அலையும். ஆனால் அவள் பெரிசா கதைக்கிறதில்லை.

நான் இரசாயனவியல் பிரக்டிக்கல் போக.. அந்தப் பெட்டையும் எங்கட (4 பேர் ஒரு குறூப்பில) குறூப்பில வந்து சேர்ந்திச்சு. அந்த நாலு பேருக்கையும்.. சோடி சோடியா பிரிச்சு வேற விட்டாங்க.. . அந்தப் பெட்டையை என் கூட சோடி சேர்த்துவிட்டாங்க. (நான் சேர்ந்த முதற் சோடி... ஏனென்றால் நான் ஆண்கள் பாடசாலையில படிச்சிட்டு.. யுனிக்குப் போனனான் எல்லோ)

ஆரம்பத்தில ஆகா ஒரு அழகான பெட்டை நம்ம குறூப்பில இருக்கே.. என்று ஒரே கிளுகிளுப்புத்தான். அவள் கிட்ட வந்து கதைச்சா கிளுகிளுப்பு.. அவளுக்கு நீண்ட கூந்தல் அது பறந்து முட்டினா கிளுகிளுப்பு.. போட்டிருக்கிற சட்டை முட்டினா கிளுகிளுப்பு.. தற்செயலா கை முட்டி.. உடல் உரசுப்பாட்டா.. அவளோ.. நானோ "சொறி" கேட்டால் கிளுகிளுப்பு..(கவனிக்கவும்.. நானே அவளோ.. வேண்டும் என்றெல்லாம் முட்டுறதில்ல)..மிகவும் ஆரம்பத்தில் அவள் சிரிக்கிறதே ஒரு கிளுகிளுப்பு..பின்னர் அது மறைஞ்சிட்டுது.. உதுகளில கவனம் செலுத்தப் போய்.. அவள் மெசரிங் சிலிண்டரை உடைக்க நான் குறுசிபிளை உடைக்க.. அதுக்கு தண்டம் கட்டி...ஐயோ ஐயோ பட்டபாடு.

அதுமட்டுமா.. ஆண் demonstrators பார்வையெல்லாம் நம்ம குறூப் மேல. ரெம்பக் கஸ்டமாப் போச்சுது. சுத்துமாத்தும் பண்ண ஏலாது...

சரியென்று.. பிரக்டிக்கல் செய்து முடியுற கட்டத்தில.. எல்லாரும் அவரவர் பெற்ற செய்முறை முடிவு மாதிரிகளை கையளிக்க வேணும். ஆரம்பத்தில பொதுவா சேர்ந்து செய்தாலும்.. இறுதிக்கட்டத்தை தனித்தனியதான் செய்யனும். ஆனால் அந்தப் பெட்டைக்கு றிசல்ட் சரியா வரல்ல. அது எங்கிட்ட வந்து உண்ட விடை மாதிரில கொஞ்சத்தத் தா என்றாள்.

அப்பதான் நான் விழிச்சுக் கொண்டன். அடிபாவி.. என்னை மாட்டிவிடுற பிளான் என்று. சரி.. இவளுக்கு என்ன செய்யலாம்.. கெல்ப் பண்ணுறதாயும் இருக்கனும்.. பிடியும் படக்கூடா.

பின்ன என்ன செய்தன்.. பிரக்டிக்கல் மேசையில படிஞ்சிருந்த ஊத்தையை சுரண்டி.. என்ர மாதிரி கொஞ்சத்தில கலந்து போட்டு அவளிட தலைல கட்டிவிட்டன். பாவமாத்தான் இருந்திச்சு. அவளும் சொன்னாள் பறவாயில்லை தா என்று.

பிறகு பார்த்தா.. அந்த மாதிரிக்கும் 10க்கு 7.5 .. எனக்கு 10 க்கு 8... எப்படி இருக்கும். ஒரு 0.5 தான் வித்தியாசம்.

அந்தப் பிராக்டிக்கலே.. ஆரம்பம் முதல் ரிப்போட் எழுதிக் கையளிக்கிறது வரை.. ரெம்ப கிளுகிளுப்பா இருந்திச்சு. அப்புறம் கண்டால் எல்லாம் கதைப்பாள். ஆனால்.. இறுதியில சோ சாட்.. கட்டுநாயக்கா அடியோட அவள் என்னைக் கண்டாலும் சிரிக்கிறது கூட இல்ல..! அதுவும் ஒரு இழப்புத்தான்.. கட்டுநாயக்கா தாக்குதலால எனக்கு ஏற்பட்டது. :D

இது ரகசியம். வீட்டுக்கே தெரியாத சங்கதி. (யுனில என்ன நடந்தாலும் நான் அம்மாவிடம் சொல்லிடுவேன். ஆனால்.. இதையெல்லாம் சொல்லேல்ல) உங்களுக்கு சொல்லுறன். ரகசியம் காக்கவும்.. ம்ம்ம் செய்வியள் செய்வியள்..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இவ்வளவு விசயம் நடந்திருக்கா இத யாருட்ட சொல்லுவம்? :D

ஆதியையும் காணல்ல ,டங்குவாரையும் காணவில்லை :unsure:

அது சரி அந்த சிங்கள பெண் கோபத்தில கந்தகத்தை கொழுத்தி போட்டிருந்தா நம்ம நெடுக்ஸ்சின் கெதி ?? :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவசம்னா என்னங்கோ

இதத்தான் நானும் கேற்கிறன் எனக்க கடுப்பாயெல்ல இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதத்தான் நானும் கேற்கிறன் எனக்க கடுப்பாயெல்ல இருக்கு

புஸ்.. நீங்கள் எப்பவாவது விபத்தில் சிக்கி நினைவிழந்து இருந்திடுக்கிறீங்களா. ஏன்னா அப்படியானவங்களுக்கு.. இப்படியான சின்னச் சின்ன உணர்வுகளை மூளை உணராமல் போகலாம்..! :D:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்.. நீங்கள் எப்பவாவது விபத்தில் சிக்கி நினைவிழந்து இருந்திடுக்கிறீங்களா. ஏன்னா அப்படியானவங்களுக்கு.. இப்படியான சின்னச் சின்ன உணர்வுகளை மூளை உணராமல் போகலாம்..! :D:unsure:

அடப்பாவி கடைசியில என்னப்போய் அவனோட சேர்த்துப்போட்டியல் அதில நான் புலி என்னத்த செய்யுறது எங்க இப்படி புருவத்தில சாஞ்சு போட்டு முதுகில குத்திடுவாளவேயோ என்டு தான் பெரிய பயமாக்கிடக்கு முந்தியென்டால் ஓரளவுக்கு நம்பலாம் ஆனா இப்ப படுமோசமெல்ல பாப்ம் எங்களுக்கும் பரவசம் வரத்தான வேனும்.

நெடுக்ஸ் நீங்கள் நிகனக்கிற ஆள் நான் இல்ல :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.