Jump to content

பாலை குறுந்தகடு = வ.ஐ.ச.ஜெயபாலன் New Message


Recommended Posts

Bank Adress

Postbanken,

N-0021 Oslo,

Norway.

Shanmugampillai Jayapalan

Bank Account no. 0532 51 18328

Payment from abroad,

use the IBAN number NO9705314490942,

and BIC-code (Swift-address)

DNBANOKK.

நன்றி ஈசன், எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்புங்கள். நட்பை வேட்கிறேன்

Link to comment
Share on other sites

பல நூற்றுக்கணக்கானோர் உங்கள் பாடல்களை தரவிறக்கம் செய்துள்ளார்கள் என்றால் இது பல நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் உங்கள் படைப்பை மேடை யேற்றியதற்கு சமானமாகும். இது ஒரு கவிஞருக்கு கிடைத்த வெற்றியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன், கவிஞர், வங்கிக் கணக்கு இலக்கங்களை இப்படி விளாவாரியாக ஒரு பொதுக் களத்தில் பரிமாறிக் கொள்வது எவ்வளவு பாதுகாப்பானதோ தெரியாது.

Link to comment
Share on other sites

கடன் மட்டுமே வலைத் தானம் அல்ல. - நோர்வே யாழ்கள நண்பர்களே. வரும் 20ம் திகதி பாலை இசைத் தொகுப்பு வெளியீடு இடம்பெறுகிறது. பாலையில் உள்ள சில பாடல்களுக்கு தமிழக முன்னணி நடனக் கலைஞர் நர்த்தகி நடராசன் நடனம் ஆடுகிறார். பாலையில் உள்ள வேறுசில பாடல்களுக்கு நர்தகி நடராசனின் தயரிப்பில் தமிழினி சிவலிங்கமும் அவரது மாணவர்களும் நடனமாடுகிறார்கள்.

நான் பாலை பாடல்களை வாசுகிக்குத் தெரியாமல்தான் யாழில் இணைத்தேன். வாசுகிதான் கடன்பட்டு பணம் முதலீடு செய்தாள். பலர் பாடல் பிரதி வைத்திருக்கிறதாகவும் பாடலை யாழில் பெற்றதாகச் சொன்னபோது மனச்சோர்வுடன் என்னைத் தொடர்புகொண்டாள். நோர்வே யாழ்கள நண்பர்கள் எல்லோரும் படலை வலைப்படுத்தியிருந்தாலும் நிச்சயமாக விழவில் சிடி வாங்குவார்கள் என்று சொன்னேன். தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள். பாலை இசைத்தொகுப்புப் பாடல்கள் உங்களுக்கும் உங்களிடமிருந்து பிரதி பெறுகிறவர்களுக்கும் என்னால் கடனாகவே வளங்கப் பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஈசன் முதல்வராக இந்த கலைக் கடனைத் தீர்க்க முன்வந்தமைக்கு நன்றி. இதுபற்றி நான் எனது அடுத்த நூலில் பதிவுசெய்வேன்.

ஈசன் முன்பணமின்றி நம்பிகையின் அடிப்படையில் ஒரு தரமான இசைத்தொகுப்பு கொள்பவர்களது நாணயத்தை நம்பி சுடச் சுட வலையில் வளங்கப் படுவது படுவது இதுவே முதல்த் தடவை என்று கண்ணன் உட்பட விமர்ச்சகர்கள் சொல்கிறார்கள். அற்புதமான பாலை இசைத்தொகுப்பை வலைத்தானம் செய்துவிட்டதாகக் கவலைப்பட்ட ஒரு இந்திய விமர்சகருக்கு இது வலைத் தானம் அல்ல, யாழில் பலர் தானம் பெறுகிற நிலையில் இல்லை இது வலைக் கடன் மட்டுமே என்றும் பதிலளித்தேன்.. நேற்று 12.09.2008 கலையில் டெல்கியைச் சேர்ந்த CNN IBN தொலைக் காட்சியினர் என்னை பேட்டி எடுத்தார்கள். இந்திய வெள்யுறவுக்கொள்கை, பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் தெரியாமல் சோனியா அம்மையார் வீட்டில் வத்து இலங்கை அரசுக்கு இராணுவ ஆதரவு வளங்கும் முடிவுகளை எடுத்தல், எம்.கே.நாராயனன் போன்று பல விடயங்கள் தொடர்பாக ஆணி அடிக்கும் விமர்சனங்களுடன் பேட்டி கொடுத்திருக்கிறேன். எதுவும் நிகளலாம். ஈசன் நீங்கள் எனது இசைத்தொகுதிக்காக அனுப்பிய பணம் எனக்கு நிச்சயம் பெரிய காரியங்களைச் செய்ய உதவும்.

நன்றி ஈசன் நம்து செயல்பாடுகலால் வலைக் கடனாகச் சிருஸ்டிகலை வலங்குதல், பெற்ற வலைக் கடனை செலுத்துதல் என்கிற புதிய கருத்தாகத்தை தமிழ் கலைப் படைப்பாளிகளுக்கும் இரசிகர்களுக்கும் ஆக்கித்தந்த்ருக்கிறோம். ஜஸ்ரினுக்கும் எனமது நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20ம் திகதி பாலை இசைத் தொகுப்பு வெளியீடு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே! வணக்கம்.

கனடா, அமெரிக்க யாழ்க்கள நண்பர்களின் ஒத்துழைப்புடன் நானும் இணைந்து உங்களுடைய பாலை இறுவட்டை பெற்றுக் கொள்ளவிரும்புகிறோம். எங்களுக்கு 25 இறுவட்டுகள் கிடைக்கக்கூடியவாறு வழி செய்யமுடியுமா? இது உங்கள் இலக்கியப் பணிக்காக, யாழ்க்கள நண்பர்வட்டத்தில் இணைந்திருக்கும் உங்களுக்கு நாங்கள் செய்யும் எம்மாலான ஒரு உற்சாகமூட்டலே. நன்றி.

Link to comment
Share on other sites

அன்புக்குரிய சக கவிஞர் வல்வை சாகராவுக்கு, பாலை இசைத்தொகுப்புத் தொடர்பான தோழமைமிக்க தாங்கள் பாராட்டுக்கள் தொலைபேசி ஆதரவில் தொனித்த சத்தியம் தொடர்ந்து தாங்கள் எடுத்துள்ள முயற்ச்சிகள் யாவற்றுக்கும் நன்றி. முதலில் வலையில் பிரதி பண்ணிக் கொள்ளுங்கள். வலையில் ஏற்றியதால் வினியோகத்தர்கள் பின்வாங்குவதால் கனவுகாணும் ஏழைக்கவிஞனின் தலையில் சம்பந்தமில்லாத உற்பத்தி வினியோகப் பணிகள் விழுந்துள்ளது.

நான் பல்வேறு நெருக்கடிகளில் இருப்பதால் பிரதிகள் தயாரித்து அனுப்ப அவகாசம் வேண்டும். இதோ இப்பவே

அனுப்புகிறேன் என வாக்களிக்க முடியவில்லை.

நாளை செவ்வாய்க் கிளமை CNN IBN தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் இனகொலைக்கு உதவுவதாக ----------- குற்றம்சாட்டும் என் கடுமையான பேட்டியின்பின்னர் இங்கு இருக்க முடியுமா அல்லது எங்கிருக்க நேருமோ என்பது தெரியவில்லை. உடைந்துபோகலாம் என்கிற பயத்தில் புக்லாண்ட் போன்ற புத்தகக் கடைகள் அஞ்சலில் சிடி அனுப்பும் பொறுப்பை ஏற்க்க மறுக்கிறார்கள். பிரதிகள் தயாரிக்க ஈசன் அனுப்பும் பணத்தை முடக்கவுள்ளேன். கனடாவில் இருந்து யாரும் வந்தால் கொடுத்துவிடலாம். அல்லது எனக்கு அவகாசம் தாருங்கள்.

என்னுடைய கலை உழைப்பை என்னுடைய முதலீட்டை இலவசமாக எடுத்துக்கொள்ள விரும்பாத உங்கள் நல்மனசை வாழ்த்துகிறேன். எதற்க்கும் முதலில் வலைஊடாக நீங்களே பிரதிகள் எடுத்துக்கொள்ளுங்கள் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்புக்குரிய கவிதயினி,

தொலைபேசியில் சொன்னதுபோல 25 பிரதி செய்துகொள்ளுங்கள். பணம் கிடைத்தால் வசதியாய் இருக்கும். சிடி நகல் பதிவு செய்யவேனும். பணமுள்ளபோது சிடி அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். தயவுசெய்து உங்கள் முகவரியையும் எனது ஈமெயிலுக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.

சிடி பெற்விரும்புகிற அனைவர்ம் இந்த நடைமுறையைக் கைகொள்ளவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர் ஜெயபாலன் அவர்களுக்கு, இங்கு நான் தனிமடலில் தொடர்பு கொண்ட உறுப்பினர்களில் நால்வர் மாத்திரமே ஒவ்வொரு பிரதி வாங்குவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களும் உங்கள் பதிலைப் பார்த்திருப்பார்கள். ஆதலால் அவர்கள் நீங்கள் கூறியதுபோல் தாமே பதிவு செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். தங்கள் பங்களிப்பை அவர்கள் உங்களுக்கு நேரடியாகவே செய்வார்கள் என்றும் நம்புகிறேன். அடுத்து நீங்கள் கனடா வருவதாகக் கூறினீர்கள் அப்போது உங்களுடைய ஆக்கங்களை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன். வீணான அஞ்சல் செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா.

Link to comment
Share on other sites

URGENT அன்புகுரிய ஈசன் தயவுசெய்து மன்னியுங்கள். நான் பிழையான IBAN இலக்கத்தை தந்துவிடேன்.. சரியான இலக்கம் NO 6105325118328

(NO நேர்வேயின் குறியீடு.

தயவுசெய்து உங்கள் கொடுபனவை மீழப்பெற்று திருப்பி அனுப்புங்கள். கவிஞர் வல்வைசாகரவும் இதனைக் கவனியுங்கள்)

Link to comment
Share on other sites

வணக்கம் வசி,

தமிழினியும் நீங்களும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள். நமக்குள் இதெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உன்னுடைய புதிய இசைத்தொகுப்பும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இசைப் பாடல்களே வாழ்வாய்த் திளைக்கும் உனக்கும் உன் காதல் மனைவிக்கும் திருமணபரிசாக எனது இசைத்தொகுப்பை வாசுகி தந்தது பொருத்தமானதே. நல்வாழ்த்துக்களுடன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இதுவரை எனக்கு சிறிரஞ்சினி ஸ்ரெபான் மற்றும் கி.கோகிலா அவர்கள் அனுப்பிய பணம் கிடைத்துள்ளது. இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • 7 months later...

வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சாம்பல்மேடாகப் போவதை முன்னுணர்ந்து பாடுகமனமே http://www.yarl.com/forum3/index.php?showtopic=53138 கவிதையை எழுதினேன். மேற்படி கவிதை கலங்காதே தாய்மண்ணே என்ற தலைப்பில் இவ்வாரக் குமுதத்தில் வெளிவந்துள்ளது. நமது வாழ்வையும் போராட்டத்தையும் அதன் வரலாற்றுக் காவியத் தன்மை கெடாமல் எழுதுவதையே எனக்கு எங்சியுள்ள பணியாகக் காண்கிறேன். கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என இன்னொரு இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

இந்த பக்கதில் உள்ள எனது பாடல்களின் தொடர்புச் சுட்டிகள் கிளிக் பண்ணும்போது செயல் படவில்லை. அதனை எப்படி மீண்டும் செயல்ப்பட வைக்கலாம் என்று யாராவது கூறுவீர்களா. அல்லது இந்த இணையத் தளத்தில் கேட்க்கலாம். http://voiceofthf.blogspot.com/2008_03_01_archive.html

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Link to comment
Share on other sites

கடன்கள் அடைத்ததும் கலங்காதே தாய்மண்ணே என இன்னொரு இசைப் பேழை ஒன்று தயாரிக்கும் கனவு உள்ளது.

அன்புடன்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

அதனை தயாரிக்கும் போது தேவையேற்படின் உதவி கேட்கவும். முடிந்தால் உங்களுக்கு உதவ நான் உட்பட பலர் இருக்கின்றனர். அடுத்த முறையாவது 'வியாபார தந்திரம்' சிலவற்றையாவது செய்யவும். ஓசியில கவிதை கேட்டுவிட்டு காசு கொடுக்க மறுக்கும் சனம் அவ்வளவு கெதியில் திருந்தாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி சொன்னது போல அடுத்ததடவையாவது சில வியாபார நுணுக்கங்களை கவிஞர் கையாள்வது நல்லது. தனிப்பட்ட ரீதியில் நான் வாசகர்களை - ரசிகர்களை குறைசொல்ல மாட்டேன். நாம் சரியா விதத்தில் அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.

வடலி என்னும் பதிப்பகம் + இணைய வழி நூல் வணிகத்தை ஆரம்பித்த கடந்த 3 மாதத்தில் இணைய வழியாக புத்தகங்கள் வாங்கியோரின் எண்ணிக்கை சராசரியாக தினத்திற்கு 3 ஆக இருக்கிறது. online sale 100 புத்தகங்களை தாண்டி செல்கிறோம். உண்மையில் நமது தமிழர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இது எனக்கு உணர்த்தியது.

கவிஞர் அடுத்த தடவை படைப்பாக்க முயற்சிகள் செய்யும் போது அகிலனைத் தொடபு கொள்ளுங்கள். உதவ தயாராயிருக்கிறோம்

இயலுமாயின் இங்கு சென்று பார்க்கவும்

www.vadaly.com/shop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் திரு ஜெயபாலன் ஐய

நான் உங்களின் கவிதைகளை யாழ்ப்பாணத்திலிருந்த காலம் தொட்டு

இரசித்துவந்த சிறியவன் .மீண்டும் இங்கு வாசிக்ககிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி .

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இந்தவேளைகளில்

உங்களின் வரிகள் ஆதரவும் தேறுதலும் தருகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் அத்தனையும் இதமாய் ஈரக்கிறது தொடரட்டும் உங்கள் பனி

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி, நாம் என்றும் சந்தித்ததில்லை எனினும் நீ நீண்டகாலமாகவே நலன் நாடும் தோழன், நெற்குளதானுக்கும் சேகுவேராவுக்கும் நன்றி. நான் வடலி அமைபினை தமிழகம் சென்றதும் சந்திப்பேன். என் கலைப் பணி தொடர வாழ்த்தும் உங்கள் மனசுக்கு நன்றி. எனினும்ொரு ஈழத் தமிழ் கலைஞனுக்கு கலைப் பணியைத் தொடர்வது எவ்வளவு கெட்ட கனவு என்பது எங்களுக்குத்தான் தெரியும். நான் எந்த ஈழத் தமிழ் கலைஞனையும் பெரும் விலை கொடுத்து உங்கள் கலைப்பணியைத் தொடருங்கள் என்று வற்புறுத்த மாட்டேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி, நாம் என்றும் சந்தித்ததில்லை எனினும் நீ நீண்டகாலமாகவே நலன் நாடும் தோழன்,

நாம் பலதடவை சந்தித்துள்ளோம். வாசுகி அக்காவின் தேனீரும் அதை ஒட்டிய சம்பவமும் இன்னும் நினைவுகளில் இருக்கு. அது நான் சரிநிகரில் தொங்கிக் கொண்டிருந்த காலம். பல்கலைகழக அனுமதி பெற்றும் போக முடியாது மிரண்டு போய் இருந்த கெட்ட காலம்

Link to comment
Share on other sites

உண்மையில் நமது தமிழர்களை குறைத்து மதிப்பிட முடியாது என்பதை இது எனக்கு உணர்த்தியது
.

நன்றிகள் சயந்தன் வாசகர்களாகிய எமக்காக குரல் கொடுத்தமைக்கு

Link to comment
Share on other sites

இந்த நாட்களின் இழப்பையும் இழவையும் எஞ்சியுள்ள நம்பிக்கைகளையும் பதிவுசெய்யும் முயற்ச்சியில் உள்ளேன். மேலும் பொருளாதாரம் இடம்கொடுக்கும்போது வெளியிட பாடல்களும் எழுதி வருகிறேன். உங்கள் பார்வையில் இந்த நாட்களின் இருளையும் நட்சதிரங்களையும் பற்றிய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். எழுதினால் மகிழ்வேன்

Link to comment
Share on other sites

இந்த நாட்களின் இழப்பையும் இழவையும் எஞ்சியுள்ள நம்பிக்கைகளையும் பதிவுசெய்யும் முயற்ச்சியில் உள்ளேன். மேலும் பொருளாதாரம் இடம்கொடுக்கும்போது வெளியிட பாடல்களும் எழுதி வருகிறேன். உங்கள் பார்வையில் இந்த நாட்களின் இருளையும் நட்சதிரங்களையும் பற்றிய கருத்துக்களை அறிய விரும்புகிறேன். எழுதினால் மகிழ்வேன்

உண்மையான தேடல் அடிப்படையிலான விவாதங்களும் பங்களிப்புகளும் மேல்லோங்க வேண்டிய தருணமிது. அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமன்றி ஆய்வுபூர்வமான தேடல்கள் கலைக்கும்கூட அவசியமாகியுள்ளது. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீரனின் மனசு ஒவ்வொரு படைபாளிக்கும் அவசியம். இக்காலக்கட்ட படைபாளிகளின் கவனத்துக்குரிய விடயங்கள் பற்றிக் கருத்துகள் எழுதப்பட்டால் மகிழ்ந்து வாழ்த்துவேன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.