Jump to content

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)


Recommended Posts

தூயா,

என்னை மறந்து போனியள்..! :D:D:D

இல்லையே :lol::D:lol::unsure::lol:

Link to comment
Share on other sites

  • Replies 235
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் மதிக்கும் கள உறவுகளில் நீங்களும் ஒருவர். :lol:

அந்த மதிப்பை தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறேன். :unsure:

Link to comment
Share on other sites

தூயா, நீங்கள் அடிக்கடி உங்கள் லிஸ்ட்டை edit செய்வது போல் தோன்றுகிறது?? :-)

Link to comment
Share on other sites

பகுதி 3

sunrise.jpg

இணைந்தது எப்படி?

ஆரம்ப பகுதியாக, நான் யாழை பற்றி எப்படி அறிந்தேன். எப்படி இணைந்தேன் என்பதை எழுத விரும்புகின்றேன். ஒரு தடவை தாயகத்திற்கு மாமாக்களை பார்ப்பதற்கான சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் என வன்னியில் பல இடங்களுக்கு சென்று கொண்டிருந்த போது, ஒரு மாமா வீட்டில் யாழை பற்றி விவாதித்தார்கள். நான் என் பாட்டில் பக்கத்திலிருக்கும் நெல்லிக்காய் மரத்தில் யாரை கேட்டு நெல்லிக்காய் பறிக்கலாம் என தீவிரமான சிந்தனை செய்து கொண்டிருந்தேன். இடையில் என்னை பார்த்து எனக்கு யாழை தெரியுமா என் கேட்டார்கள். நான் மனசுக்குள்ளே "ஏன் இப்படி கரைச்சல் குடுக்கிறாங்கள், நானே நெல்லிக்காய் எப்படி பறிக்கலாம் என்று யோசிச்சு கொண்டிருக்கிறன்" எனவும் வெளியே சிரித்துக்கொண்டு இல்லை எனவும் பணிவா தலையாட்டி வைத்தேன். அப்பொழுதே ஒரு பேப்பரில் யாழில் இணைய முகவரியை தந்து, வீடு திரும்பியதும் யாழை பார்க்க சொன்னார்கள். நானும் ஒஸ்திரேலியா வந்ததும் யாழுக்கு வந்தேன். பார்த்தால் அனைத்தும் தமிழில். எனக்கு தலைசுத்தாத குறை தான். அந்நாட்களில் எனக்கு இப்போது தெரியும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. உடனே எனக்கு யாழ் சுவாரசியம் என தோன்றவில்லை. காரணம் மொழியறிவு எனக்கு இல்லாமல் இருந்தது தான். ஆனாலும் வாரத்திற்கு ஒரு முறை வந்து படிக்க ஆரம்பித்தேன். நேர்வேயில் இருக்கும் அத்தானும் யாழில் இருப்பதால், இருவரும் யாழ் பற்றி பேசுவோம். அப்படித்தான் யாழில் என் பயணம் ஆரம்பமாகியது.

என் அறிமுகம்

என் அறிமுகப்பதிவு: பார்க்க இதிலேயே அமுக்கவும் : தூயாவின் வணக்கம்

என் அறிமுகப்பதிவிலேயே களத்து புலிகள் பலரை பார்க்கலாம். முதன் முதலில் என்னை வரவேற்றது கானாபிரபா அண்ணா தான். (நான் இணைவதற்கு 5 நாட்கள் முதல் தான் கானாஸ் இணைந்தார்) ஆனால் நானும் வரும் போது சும்மா வரலையாக்கும். மோகன் அண்ணாவுக்கு என்னை பற்றிய கொஞ்சமா சொல்லி, அவரின் வாழ்த்தோடு தான் முதல் பதிவை எழுதினேன். (களத்தின் பிரமாண்டத்தை பார்த்து ஒரு சிறு தயக்கம் தான்) அப்பதிவில் பார்த்திங்கள் என்றால் இளைஞன் அண்ணா, மதன் அண்ணா என நிர்வாகத்தில் இருந்தும் வரவேற்றிருந்தனர். முதலில் களத்தில் பங்கெடுத்து வந்தார்கள். இப்போது இல்லை என்பது கஸ்டமான விடயம் தான். இதில் சண்முகி அக்கா, இளைஞன் அண்ணா எல்லாம் 2003 இல் இணைந்தவர்கள். இன்றோடு பார்த்தால் 5 வருடங்கள் அவர்கள் யாழோடு பயணித்துள்ளார்கள்.

அரவணைப்பு

யாழைப்பற்றி அறிந்து, நானும் இணைந்தாயிற்று. இதில் எனக்கு நன்மை தான். ஆனால் இங்கிருந்தவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும் என எனக்கு தோன்றவில்லை. தமிழில் எத்தனையோ பிழைகள், எழுத்துப்பிழைகள். உடனுக்குடன் சுட்டிக்காட்டினார்கள். அதனால் நானும் பலவற்றை திருத்திக்கொண்டேன். தவிர, வந்த புதிதில் கொஞ்சம் விளையாட்டுத்தனமாகவே என் பதிவுகளும், பதில்களும் இருக்கும். அவற்றை விளையாட்டாகவே பார்த்தார்கள். அதனால் நான் தப்பித்தேன். காரணம் இன்று அவற்றை படிக்கும் போது "தனிமனித தாக்குதல்" போன்றே எனக்கு தோன்றுகின்றது. ஆனால் அதை தாக்குதலாக எடுக்காமல், திருத்தியுள்ளனர். களத்தில் சொல்லி என்னை வருத்தாமல், பல தடவைகள் தனிமடலில் விளக்கிக்கூறியுள்ளனர். தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில் அந்த நேரத்தில் உறுப்பினர்கள் குறைவாக இருந்ததால், இப்படியான அரவணைப்புகள் அதிகமாக இருந்ததோ என தோன்றுகின்றது. எப்படியாகினும், நாமும் புதிதாக இணையும் உறவுகளை வரவேற்று, உதவி செய்யணும் என்று மட்டும் முடிவு எடுத்துள்ளேன். ஆனால் எனக்கு அடிக்கடி குருவிபபா சொல்றது நினைவுக்கு வரும். யாரோடு என்றாலும் அளவாக பழகணும் என ஒரு முறை சொல்லியிருக்கார். ஆக ரொம்ப நெருங்காமலும், ரொம்ப தூரமா இருக்காமலும் இருப்பது தான் நல்லது என நினைக்கின்றேன்.

இந்த ஐந்து வருடத்தில் யாழ் தந்த உறவுகளை பற்றியும், அவர்கள் எந்த அளவு என்னுள் பாதிப்புகளை ஏற்படுத்தினர் என அடுத்த பகுதியில் எழுத நினைக்கின்றேன்...

ஒவ்வொருத்தரிடமும்ம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கு என்பதை ஒத்துக்கொண்டேயாகணும். கற்றவை தொடரும்...

Link to comment
Share on other sites

தூயா நினைவு மீட்டல் நன்றாக இருகிறது. தொடருங்கள். களத்தில் இணைந்திருந்த பலர் இப்போது வாசகர்களாக எப்பவாவது இருந்திட்டு கருத்தெழுதுவதோட நிறுத்திக்கொள்கிறார்கள். அப்போது இருந்த உறவுகளுக்கிடையே ஏதோ ஒரு வகையில் நெருக்கம் இருந்தது. ஒவ்வொருவரது தவறுகளையும் சுட்டிக்கட்டும் போது அதை புரிந்துணர்வுடன் ஏற்று கொண்டார்கள் என்று நினைக்கிறேன். யாழ் நல்ல நண்பர்களை தந்திருக்கிறது. ஆனால் இப்போது முன்னர் போல அதிகம் யாழுடன் இணைந்திருக்க முடியாதிருக்கிறது. கிடைத்த நண்பர்களுடனும் அதிகம் பேச முடியாதிருக்கிறது. ஆனால் கிடைத்த நட்பு வட்டத்தை இழக்காது பேண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உங்கள் ஆக்கத்தை தொடருங்கள். ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறான்

Link to comment
Share on other sites

ஒய் டுயா பழையபடி ஆட்டேகிராப்பா??ஆரம்பத்தில் சியாம் எண்ட பெயரிலை வந்து பிறகு சாத்திரியாய் மாறினது நான் தானெண்டு யாழிலையே சொல்லிட்டன். ஆனாலும் சாத்திரியை விட யாழிலை பலபேருக்கு பழைய சியாமைத்தான் பிடிக்கும்.ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :lol:

Link to comment
Share on other sites

ஒய் டுயா பழையபடி ஆட்டேகிராப்பா??ஆரம்பத்தில் சியாம் எண்ட பெயரிலை வந்து பிறகு சாத்திரியாய் மாறினது நான் தானெண்டு யாழிலையே சொல்லிட்டன். ஆனாலும் சாத்திரியை விட யாழிலை பலபேருக்கு பழைய சியாமைத்தான் பிடிக்கும்.ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :lol:

புலம்பலும், நினைவுமீட்டலும் இருந்தா தான் தூயா என ஒத்துக்கொள்கின்றார்கள் ;)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் டூயா பிள்ளை தொடருங்கோ

உங்கள்

அறிமுகப்பதிவு பார்த்தேன் அடியேனின் பழைய பதிவும் உள்ளது ... பழைய ஞாபகம் வந்தது

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவுக்கு ஞாபக சக்தி அதிகமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

வணக்கம் தங்கச்சி..உங்கள் யாழ் அனுபவ பயணத்தில் ஒரு மூலையில் இருந்து நானும் பிரயாணிக்கிறேன் ஆவலுடன் :o ..பயணத்தில் "சடின் பிரேக்" வேண்டாம் சொல்லிட்டன்.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அந்த மதிப்பை தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறேன். :)

:lol: :lol:

தூயா, நீங்கள் அடிக்கடி உங்கள் லிஸ்ட்டை edit செய்வது போல் தோன்றுகிறது?? :-)

களசகோதரன் ஒருவர் சில உறவுகளை நான் தவறவிட்டிருப்பதாக கூறி, மாற்ற சொன்னார். அதன் விளைவு தான் :lol:

ஆனால் கிடைத்த நட்பு வட்டத்தை இழக்காது பேண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இதற்காக தான் இந்த பதிவே குளம்ஸ்.. :)

Link to comment
Share on other sites

தூயா

ஆரம்பமே அசத்தலாகவுள்ளது. தொடர்ந்து அசத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நானும் இங்க இருக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி :unsure: தூயா உங்ஙள் அறிமுக பதிவைப்பார்த்தேன்.அப்பவே அது தான் வந்த உடனயே கலக்கின நீங்கள் இப்ப சொல்லவா வேண்டும்.உங்கள் சகல பணிகளும் யாழில் தொடர எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பியையும் நினைவில் வைத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க

Link to comment
Share on other sites

அழகான நினைவு மீட்டல் தூயா....

எவ்வளவு இனிய நாட்கள் அவை

ஆயிரம் உறவுகளை அள்ளி கொடுத்த யாழ் வாழ்க வாழ்கவே !!!!

Link to comment
Share on other sites

இன்னும் சில மணி நேரத்தில் கந்தப்பு :D

Link to comment
Share on other sites

ஏணெண்டால் சாத்திரி ஒரு துன்பம் பிடிச்ச ஆள் எண்டு எல்லாரும் சொல்லினம். :D

ஆனால் உங்கட பகிடிகளைப்பாத்தா அப்பிடி தெரியேல்ல..

தூயா தொடருங்கோ! புலத்தில பிறந்து இப்படி தமிழ் எழுதுவதென்பது மிகப்பெரிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பகுதி 4 எப்பொழுது வரும் தூயா?

இன்னும் சில மணி நேரத்தில் கந்தப்பு :unsure:

:unsure::unsure:என்ன தூயாவின் மணிக்கூடு நிண்டிட்டுது போல??? :unsure::unsure:

Link to comment
Share on other sites

தூயா நலமா...? யாழைப்பற்றிய அறிமுகம் எல்லாம் அழகா எழுதிருக்குறீங்க.....அடுத்த பகுதியையும் இணையுங்க தூயா...... வாசிக்க ஆவலாயிருக்கு ...! :unsure:

Link to comment
Share on other sites

பகுதி 4

முக்கிய குறிப்பு: இங்கு நான் எழுதவிருப்பது அனைத்தும் நான் அவதானித்த விடயங்கள் / அவர்களுடன் களத்தில் கதைத்த/அறிந்த விடயங்கள் தான். உரியவர்கள் தவறான விபரங்கள் எழுதியிருந்தால், உடன் தனிமடலில் தொடர்பு கொண்டு என்னை திட்டலாம். புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி உறவுகளே. சில உறவுகளை பற்றி அதிகமும், சிலரை பற்றி குறிப்பிட்ட சில விடயங்களை எழுதவுள்ளேன். அதற்கு காரணம் எனக்கு எந்த அளவு தெரியுமோ, அதை எழுத நினைப்பது தான். வேறு எந்த பாகுபாடும் இல்லை.

சென்ற பகுதியின் முடிவில் கள உறவுகளை பற்றி எழுத எண்ணுகின்றேன் என சொல்லியிருந்தேன். அதன்படி எழுதலாம் என எண்ணும் போது தான் யாரில் இருந்து ஆரம்பிப்பது என்ற பெரும் குளப்பம் எழுந்தது. தற்போதைய யாழ்களம் 10 வருடங்கள் கூட வரும் உறுப்பினர்களையும், புதிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. பழையவர்களில் இருந்து ஆரம்பிப்பதோ, புதியவர்களில் இருந்து ஆரம்பிப்பதோ நன்றாக இருக்காதே என என்னும் போது தான் யாழ்கள அப்புக்களின் நினைவு வந்தது. அவர்களில் ஆரம்பிக்கலாமே என தோன்றியதை செயல்படுத்தியுள்ளேன்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சி*5 (சின்னப்பு)

143848752842e0e961dfc0b.jpg

அப்புக்கள் இல்லாத யாழ்களம் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அதிலும் சின்னப்பு யாழ்களத்தில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து வைத்துள்ளார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. சின்னப்புவின் கருத்துக்களை பார்த்து களத்தில் இணைந்தவர்கள் பலர் இங்குள்ளனர். சின்னப்புவின் அறிமுகமே கலக்கலான அறிமுகம். வந்த உடனே தன்னை எப்படி அழகாக யாழோடு தன்னை இணைத்துக்கொண்டார் என்று பாருங்களேன்: "சின்னப்பு அறிமுகம்". அதன் பின்னர் 100 கருத்துக்களை ஒரே நாளில் எழுதிவிட்டு அதற்கும் பதிவு போட்ட ஒரே அப்பு, எங்கட சின்னப்பு தான். [ சின்னப்புவின் 100 பதிவு ]

* இணைந்தது: 20-November 04

* சின்னப்பு அதிகம் எழுதிய பக்கங்கள்: வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்,

சமையல், அரட்டைஅரங்கம், பாட்டுக்கு பாட்டு

* குடும்பம்: மனைவி: சின்னாச்சி ; மைத்துனன்: டக்கிளஸ்

* நண்பர்: ஒட்டகப்பால் "முகத்தார்"

* ஒருவரை ஒருவர் மனதார நாங்கள் இன்று அனைத்திற்கும் பாராட்டுகின்றோம். அந்த கலாச்சாரத்தை ஆரம்பித்தது எங்க சின்னப்பு தான். 100 ஆவது பதிவாகட்டும், 1000 பதிவாகட்டும், சின்னப்புவின் வாழ்த்து இல்லாமலா எனும் நிலை இன்றிலிருந்து 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. ஒருவரை பாராட்டுவதற்கும், வாழ்த்துவதற்கும் நல்ல

மனது வேண்டும். எந்த வித பந்தாவோ, பாகுபாடோ இல்லாமால் வாழ்த்த சின்னப்புவிடம் இருந்து தான் படிக்க வேண்டும். அதிலும் அக்கியை வாழ்த்தி ஒரு கவிதை போட்டார் பாருங்கள். எங்கட குருவியையே கலவரப்படுத்திட்டார். "தமிழினி பாராட்டு கவிதை"

* வாழ்த்துவதோடு நில்லாமல் ஒருவர் சிலநாட்கள் களத்திற்கு வரவில்லை என்றால் உடனே தேடும் பழக்கம் சின்னப்புக்கு உண்டு. அதில் தோன்றியது தான் எங்கட "காணவில்லை" பகுதி. 2006 ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த இந்த பதிவு இன்று 1300 பதில்களோடு வளர்ந்து நிற்கின்றது.

* யாழில் இன்று நான் இத்தனை சமையல் குறிப்பு எழுதுகின்றேன் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் சின்னப்பு தான். நான் யாழில் இணைந்த புதிதில் சின்னப்பு தான் அதிக சமையல் குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தார். அதில் மிகவும் சுவாரசியமான சில இணைப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்:

* யாழில் முதன் முதலாக "ரோயல் பமிலி" என ஒரு குடும்பத்தை உருவாக்கிய பெருமையும் சின்னப்புவையே சேரும். அவர்களுக்கென ஒரு இணையதளத்தையும் வடிவமைத்துள்ளார். பார்வையிட விரும்புபவர்களுக்காக: ரோயல் பமிலி

* சின்னப்புவுக்கென இருக்கும் தனித்தன்மைகளில் ஒன்று நகைச்சுவை. இதை அவரில் ஒவ்வொரு பதிவிலும், மறுமொழிகளிலும் இருந்து நீங்கள் பார்க்கலாம். அடுத்த நல்ல குணம் அவரின் தைரியம் தான். நிர்வாகத்தை கேள்வி கேட்பதில் சின்னப்புவை மிஞ்சமுடியாது. அதை நான் சொல்வதை விட, நீங்களே பாருங்கள்: "ஓய் மோகன் என்ன லொள்ளா"

* சின்னப்பு என்றாலே மறக்கமுடியாத பெயர் "இராவணன்". எங்களின் மதிப்புக்குரிய ஒரு மட்டுனத்துனர். சின்னப்பு எழுதுவதும், இராவணன் அண்ணா வெட்டுவதும் யாழில் ஓர் அங்கமாக மாறும் அளவிற்கு இருந்தது. சின்னப்புவோ "வெட்டுறத வெட்டும்மா, நான் எழுதிட்டு இருப்பேன்" என்றும், இராவணன் அண்ணா "எழுதறத எழுது கண்ணா, நானும்

வெட்டிட்டே இருப்பேன்" என்றும் இருந்தார்கள். ஆனால் ஒருவரை ஒரு தாக்கியோ, அல்லது இதை விவாதமாக எடுத்ததோ இல்லை. சின்னப்புவை போல ஒருவரை காண்பது நிச்சயம் இலகுவல்ல.

* சின்னப்புவை எதற்காக நான் சி*5 என் அழைப்பேன் என தெரிந்துகொள்ள இங்கே போய்பாருங்கள். "பெயர்மாற்றம்". அதில் இராவணன் அண்ணாவின் வெட்டையும் பார்க்க தவறாதீர்கள். கிகிகிகிகி

* சின்னப்புவின் 1000 ஆவது பதிவின் கொண்டாட்டம். எங்கட ஆட்கள் எப்படியெல்லாம் கள்ளையும்,மப்பையும் வைத்து அப்புவை வாழ்த்தியுள்ளனர் என்றும் பாருங்கள். ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒவ்வொரு வைரமுத்து ஒளிந்திருக்காங்கப்பா! "சின்னப்புவின் 1000 பதிவு"

* மேலே நான் குறிப்பிட்டுள்ள சில சொற்கள் யாழில் பிரபலமாக காரணமும் சின்னப்பு தான். அதே போல அந்த சொற்கள் யாழில் தடைசெய்யப்பட காரணமும் சின்னப்பு தான். ஏன் என்றால் நாங்க அனைவரும் அச்சொற்களை சொல்லி சொல்லி, நிர்வாகத்தை கடுப்பேற்றியல்லவா தடை செய்ய வைத்தோம்.

தற்போது சின்னப்பு அதிகம் களத்தில் கருத்துக்கள் எழுதாதது எங்களின் துரதிஸ்டமே. எப்போதோ சின்னப்பு எழுதிய பல கருத்துக்கள் இன்றும் வாய்விட்டு சிரிக்க வைக்க கூடியவை. சின்னப்பு தொடர்ந்து எங்களுடன் யாழில் இருக்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுகொள்கின்றேன். எங்களில் பலரை சிரிக்க வைத்து; யாழில் எங்கள் ஒவ்வொருத்தரையும் வாழ்த்தி பாராட்டிய சின்னப்புவை இந்த பகுதியில் அனைவரும் வாழ்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

சின்னப்புவிற்கான குறிப்பு: யாழில் எங்களுடன் தொடர்ந்திருங்கள்...வழமை போல் எங்கள் சி*5 ஆகுங்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பி.கு: அப்புக்கள் அனைவரையும் ஒரே பகுதியில் எழுத வேண்டும் என்றே ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பல குணாதிசயங்கள். அவர்களை பற்றி எழுத அதிகம் உள்ளது. அவர்களுக்கான ஒரு நேரமாக இதை கொடுக்க விரும்புவாதால் சின்னப்புவை பற்றி மட்டும் இப்பகுதியில் எழுதியுள்ளேன். நான் புதிதாக இணைந்திருக்கும் வேலையும் சற்றே நேரத்தை சாப்பிடுவதும் அடுத்த காரணம். நேரம் கிடைக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பற்றி எழுதுவேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சின்னாவை பிடிக்காதவர் யார் இங்கு இருக்கின்றார்கள்.சின்னாவின் இரசிகர்களில் நானும் ஒருவன். :D

எடியே சின்னா உனக்கு உடம்பு முழுக்க மச்சமடி :D

Link to comment
Share on other sites

சின்னா அப்பு ,நகைச்சுவையான மனிதன் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. பிரத்தியேகமாக கு. மா அண்ணாவுடன் அடிக்கும் அரட்டை சொல்லி வேலையில்லை.நன்றி தூயா.,நினைவுகளை பகிர்ந்தமைக்கு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சின்னப்புவா கொக்கா?...............கிகீகிகீ :D:D:D:D

Link to comment
Share on other sites

:D:Dஎன்ன தூயாவின் மணிக்கூடு நிண்டிட்டுது போல??? :D:D

கிகிகிகி வேலைக்கு திடீரென போய்விட்டதால் மணிக்கூடு நின்றுவிட்டது வசம்ஸ் ;)

தூயா நலமா...? யாழைப்பற்றிய அறிமுகம் எல்லாம் அழகா எழுதிருக்குறீங்க.....அடுத்த பகுதியையும் இணையுங்க தூயா...... வாசிக்க ஆவலாயிருக்கு ...! :)

நலம் அனிதா..நீங்க?

உண்மைதான் சின்னாவை பிடிக்காதவர் யார் இங்கு இருக்கின்றார்கள்.சின்னாவின் இரசிகர்களில் நானும் ஒருவன். :)

எடியே சின்னா உனக்கு உடம்பு முழுக்க மச்சமடி :D

எடியேவா? எடேய் தானே? ;)

சின்னா அப்பு ,நகைச்சுவையான மனிதன் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. பிரத்தியேகமாக கு. மா அண்ணாவுடன் அடிக்கும் அரட்டை சொல்லி வேலையில்லை.நன்றி தூயா.,நினைவுகளை பகிர்ந்தமைக்கு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அந்த நாட்களில் சின்னா முகத்தாருடன் அடிக்கும் அரட்டைகளும் அதே ரகம் தான்...சிரித்து சிரித்து எங்களுக்கு தான் வயிறு புண்ணாகும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.