Jump to content

தட்சிணாமூர்த்தி தத்துவம் என்ன?


Recommended Posts

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

தட்சிணாமூர்த்தி

daksh.gif

"கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்"

- பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம்.

சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத்தண்மையை அருளுகின்றனர். ஞானமே வடிவமாக விளங்குவது சிவம்.

அவரை ஞானத்தாலேயே தொழ வேண்டும். ஆலமர் செல்வனாக அருந்தவர் நால்வருக்கும் மெளனமாயிருந்து சொல்லாமற் சொல்லி - உபதேசிக்கும் ஞானமூர்த்தியே தட்சிணாமூர்த்தி. இவர் ஆசாரியர்களுக்கெல்லாம் பரமாசாரியர். சிவத்தினிடம் சக்தி அடங்கிய வடிவம் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்தி வடிவைச் சிவாலயங்கள் அனைத்திலும் காணலாம். கருவறையின் தென் சுவரில் வெளிப்புறம் தெற்கு நோக்கி இவர் எழுந்தருளி நம்மை எல்லாம் தன் மோனத்தால் அழைத்து சிவஞானத்தைத் திருநோக்காலே தந்தருளுகின்றனர். இவரது வடிவமே தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

திருமேனி:

பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.

வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்:

அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.

திருக்கரத்திலுள்ள நூல்:

இது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.

திருக்கரத்தில் உருத்திராக்கமாலை:

36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.

Link to comment
Share on other sites

இடக்கரத்தில் அமிர்தகலசம்:

அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.

சின்முத்திரை:

ஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.

புலித்தோல்:

தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்.

தாமரை மலர்மீது அமர்தல்:

அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.

நெற்றிக்கண்:

காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.

Link to comment
Share on other sites

ஆலமரமும் அதன் நிழலும்:

மாயையும் அதன் காரியமாகிய உலகமும்.

தென்முகம்:

அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.

அணிந்துள்ள பாம்பு:

குண்டலினி சக்தியைக் குறிப்பது.

வெள்விடை:

தருமம்

சூழ்ந்துள்ள விலங்குகள் :

பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.

முயலகன்:

முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு.

god2b.jpg

"மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்

அம்மலர்த் தாணிழல் அடங்கும் உண்மையை

மைகம்மலர் காட்சியிற் கதுவ நல்கிய

செம்மலை யலதுளஞ் சிந்தியா தரோ."

போதில் மாதவா குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற்கீழ் அறம் பகர்ந்து, நல்லறமுரைந்து ஞானமோடு பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனைப் பணிந்து பேரின்பம் எய்துவோம்.

திருச்சிற்றம்பலம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17 MAY, 2024 | 09:53 PM (நா.தனுஜா) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியிருக்கும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள்,  உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது என பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் நேர்மைத்தன்மை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இவ்வாறானதொரு பின்னணியில் இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சுவீடன், பின்லாந்து, அவுஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளை தளமாகக் கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் கலாநிதி ஷரிகா திரணகம, பிரிட்டன் பர்மிங்ஹாம் சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் மொஹமட் ஷஹாபுதீன், பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஃபரா மிலர், லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரன் க்ரெவல், பிரிட்டன் பாத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஒலிவர் வோல்ற்றன், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைசார் நிபுணர்களான கலாநிதி கேப்ரியேல் டியெட்ரிச், கலாநிதி ரோஹினி ஹென்ஸ்மன், கலாநிதி குர்மீற் கௌர், கலாநிதி சுஜாதா பட்டேல் உள்ளடங்கலாக 72 பேரின் பெயர்கள் இதில் உள்ளடங்குகின்றன.  அதன்படி, மேற்குறிப்பிட்ட சட்ட வல்லுநர்கள், துறைசார் நிபுணர்களின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:  உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தற்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.  இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போரின் மிகையான தாக்கத்துக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக அமைப்புக்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் பின்னணியிலேயே நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றோம். குறிப்பாக, ஆணைக்குழுவுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கி சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி இடைக்கால செயலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன. சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கையின்மை, கடந்த காலங்களில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் நீதியை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளமை, தற்போதைய தலைமைத்துவத்தின் கடந்தகால செயற்பாடுகள், காணாமல்போனோர் பற்றி அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் தோல்வி, அரச மீறல்கள் தொடர்ந்து மறுதலிக்கப்படல் போன்ற விடயங்கள் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. கடந்தகால மீறல்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்வதற்குத் தனிநபர்கள் கொண்டிருக்கும் உரிமையானது உடன்பாட்டு அடிப்படையிலான ஐ.நா அமைப்புக்கள், ஐ.நா விசேட அறிக்கையிடல்கள், பிராந்திய நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச, உள்ளக நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  போரின் பின்னரான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது மிக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூகங்களை மீள் இணைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தீர்வினை வழங்குவதற்கும் உதவக்கூடும். இருப்பினும் அப்பொறிமுறையானது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதும், அனைவரையும் உள்ளடக்கியதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை வலுவூட்டக்கூடியதும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி முன்னகர்த்திச்செல்லக்கூடியதுமான முறையில் அமையவேண்டியது மிக அவசியமாகும். அத்தோடு குறித்த நாடு உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்குத் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதன்படி உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முற்படும் அரசாங்கம் முதலில் கடந்தகால மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுப்பதற்குத் தாம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோர் சார்ந்த தமது அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் தற்போதைய அரசாங்கத்துக்கு இருந்தபோதிலும், அதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.  அடுத்ததாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது பரந்துபட்ட அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை மீறல்கள், தொடர் கண்காணிப்பு, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடியின் பின்னர் மக்களின் பொருளாதார மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை போன்ற விடயங்களுக்காகத் தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியிலேயே உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்டோரும், சாட்சியாளர்களும் உத்தேச பொறிமுறை மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணங்கவேண்டும். ஆனால் இலங்கையில் நிலைமாறுகால நீதி உறுதிப்படுத்தப்படவேண்டிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இப்பொறிமுறையை வலுவாக எதிர்ப்பது, இப்பொறிமுறை ஸ்தாபிக்கப்படக்கூடாது என நாம் வலியுறுத்துவதற்கான காரணமாகும்.  இவ்வாறானதொரு பின்னணியில் முற்றுமுழுதான உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது எனவும், ஆகவே உள்ளக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேசத்தின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையுடன் இணைந்து பணியாற்றுமாறும் அரசாங்கத்தைக் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183814
    • ஏன் எனது பதிவு , cvk சாதி  வெறியர் அல்ல என்பதற்கு, ஆதாரத்துடன் கொடுத்த பதிவு நீக்கப்பட்டது. அதில் எந்த சாதியின் பெயர் கூட இல்லை.    பொட்டுவின் சாதியை சொல்லி வாதிட்ட பக்கதுக்கு (அவர்களின் சாதி உயர்ந்தது  என்ற அர்த்தத்தில்) எதிராக , அதாவது பொட்டுவின் சாதிக்காரருக்கு CVK நியாயத்தை கதைத்தாகவே பதியப்பட்டது. (இந்த பதிவில் எந்த ஒரு பிறழ்வும் இல்லை. நீக்க வேண்டிய அவசியமும் இல்லை). அதில் இருந்த வரலாறற்றை கூட விடாமல் - நாயன்மார் கட்டு (சித்த) வைத்தியசாலை இலங்கைத் தீவில் முதல் அமைக்கப்பட்ட (பொது சேவை, மக்களுக்கான) வைத்தியசாலை., பரராசசேகரம்  காலத்தில் போர் வீரர்களுக்காக திறக்கப்பட்டது (முன்பு அரச குடும்பத்துக்கு மட்டும் என்று இருந்து இருக்கலாம்), பின்பு மக்களுக்கும் திறந்து  விடப்பட்டது.   (மறுவளமாக, cvk  சாதி வெறி பிடித்தவர் என்பதற்கு பகிரங்க ஆதாரம் இருக்கிறதா?)  
    • ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் மூன்று அணிகள் அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி இருக்கும் முன்னரே லீக் ரேஸில் வென்று பிளே ஆஃபில் காலடி எடுத்து வைத்துவிட்டன.  குஜராத், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டன. மீதமுள்ள ஒற்றை இடத்துக்கு நான்கு அணிகள் போட்டிபோடுகின்றன. ஆனால் இதில் டெல்லி அணிக்கு போட்டிகள் முடிந்துவிட்டன. அது 14 புள்ளிகளை எடுத்திருக்கிறது. லக்நௌ அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசி போட்டி மீதமிருந்தது. இந்த போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் இவ்விரு அணிகளும் மிக மோசமான ரன் ரேட் வைத்திருப்பதால் பிளே வாய்ப்பு வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது.  ஆக மீதமிருக்கும் ஒற்றை இடத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நாளை மல்லுக்கட்ட உள்ளன.   
    • 17 MAY, 2024 | 08:56 PM அமெரிக்காவிலிருந்து தபால் விமானச் சேவை மூலம் சீதுவையில் உள்ள களஞ்சியசாலை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்களானது பொதிகளாக்கப்பட்ட வாகன உதிரிப்பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள 25 வயது இளைஞரொருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரான இளைஞர் இந்த பொதிகளை எடுப்பதற்காக சென்றிருந்த போது அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதிகளில் இருந்த வாகன உதிரிப்பாகங்களிலிருந்து 3 கிலோ 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.  இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183803
    • 2011 இல் எனது தம்பி guillain barre syndrome ஆல் எழுந்து நடக்க முடியாதவாறு பாதிக்கப்பட்டுவிட்டான். அவன் ஏற்கனவே Muscular dystrophy ஆல் பாதிப்படைந்து/பலவீனமடைந்து இருந்ததால் மீள நடக்க முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். சாதாரண மனிதர்களுக்கு guillain barre syndrome வந்தால் அவர்கள் படிப்படியாக வழமைக்குத் திரும்புவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.