Jump to content

தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு


Vasampu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப் பொங்கலை பல இடங்களில் கொண்டாடுகின்றார்கள். தேவாலங்கள,; மசூதிகள் போன்றவற்றிற்கு முன்னால் பொங்கலிட்டு இதைக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் கொண்டாடுவார்கள்.

இதில் சூரிய வழிபாடு ஒரு அங்கமே தவிர, அதுவே எல்லாம் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் பலவிதமான அம்சங்களோடு இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

தைப்பொங்கல் என்பது உணவுக்கு வழிசமைத்த சூரியனுக்கு நன்றி சொல்வதற்காக என்று விட்டு. அதில் சூரியனே முக்கியத்துவம் இல்லை என்றால் என்ன கதை? இல்லை அது தேவையில்லை என்றால், தைப்பொங்கலைச் சிதைக்கின்ற உங்களின் ஆரம்ப அடையாளமே அது.

நீங்கள் சூரியனை வழிபடத் தயாரா? நாஸ்திக்கக் கொள்கை என்னாகும் என்ற கேள்விக்கு நழுவலான பதில்கள் வேண்டாம். வழிபடுவேன், மாட்டேன் என்ற பதில்களை மட்டும் சொல்லுங்கள்.

கிறிஸ்தவர்களில் சில தேவாலயங்கள் மட்டும் தான் கொண்டாடுகின்ற, முஸ்லீம்கள் அறவாக்க கொண்டாடுவதில்லை. சிலதேவாலயங்களில் இந்துக்கடவுளைக் கூட வைத்து வழிபடுகின்றார்கள். அதற்காக அது இந்து ஆலயம் ஆகிவிட முடியுமா என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

நான் எதையும் வழிபட மாட்டேன். ஆனால் நான் பொங்கலைக் கொண்டாடுவேன்.

எந்தத் தேவாலயத்தில் இந்துக் கடவுளை வைத்து வழிபடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாமிய மக்களும் மசூதி வாசலில் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது பற்றி சென்ற ஆண்டும் செய்தி வந்தது. இந்த ஆண்டும் வரும்.

Link to comment
Share on other sites

நான் எதையும் வழிபட மாட்டேன். ஆனால் நான் பொங்கலைக் கொண்டாடுவேன்.

எந்தத் தேவாலயத்தில் இந்துக் கடவுளை வைத்து வழிபடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாமிய மக்களும் மசூதி வாசலில் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது பற்றி சென்ற ஆண்டும் செய்தி வந்தது. இந்த ஆண்டும் வரும்.

தைப்பொங்கல் இந்து முறைமையான கால அட்டவணையில்(கலண்டர்) கொண்டாட படுவதால் நீங்கள் பொங்கல் கொண்டாடுவது தவறு...

அதோடு போன வருடம் 17ம் திகதி வந்த பொங்கலை பாப்பான் சதி செய்து இந்தமுறை 15ம் திகதியாக்கி போடாங்களாம்... பாப்பானின் சதியில் வந்த பொங்கலை நீங்கள் கொண்டாடலாமோ...???

கூடவே கூடாது...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை புதுசாய் வாற ஆக்கள் இந்த பந்திபந்தியாய் வாற சமாச்சாரங்களை கண்டு பயந்து ஓடீடாதேங்கோ :( உப்புடித்தான் தைப்பொங்கலுக்கு பந்திபந்தியாய் எழுதி சண்டப் பிடிப்பம்.அதுக்குப்பிறகு சித்திரைப்பொங்கலுக்கும் பக்கம்பக்கமாய் எழுதி குத்துப்படுவம். :D

அதுக்குப்பிறகு ஆடிப்பிறப்பு தீபாவளி கந்தசஷ்டி இப்புடியெல்லாம் எல்லாம் வரும் அப்பவும் நாங்கள் இப்புடித்தான் குத்துப்படுவம் அதை விட இன்னொரு விசேசம் மாவீரர் நாளும் வரும் அதுக்கு இந்தவருசம் வித்தியாசமாய் இழுபறிப்படுவம் :lol:

சோ லேடிஸ் அன்ட் ஜென்ரில்மன் நாங்கள் வருசாவருசம் அரைச்ச மாவையேதொடர்ந்து அரைச்சுக்கொண்டிருப்பம் இதை யாரும் கண்டு கண்டுகொள்ளக்கூடாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்,

தாய் மொழி தமிழை நீச மொழியென்றும் சமிஸ்கிருதத்தை தெய்வ மொழியென்று போற்றும் கூட்டத்தோடு பேசி ஏதாவது பயனிருக்கப்போகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யனவரி முதலாம் திகதி இலங்கை நேரம் 12.00 மணிக்கு இங்குள்ள சிங்களத் தொலைக்காட்சியில் தைப்பொங்கல் ஒத்ததாய் பொங்கல் பொங்குவதை காட்டியிருந்தார்கள்.

சிங்களவர்களும் பொங்குவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யனவரி முதலாம் திகதி இலங்கை நேரம் 12.00 மணிக்கு இங்குள்ள சிங்களத் தொலைக்காட்சியில் தைப்பொங்கல் ஒத்ததாய் பொங்கல் பொங்குவதை காட்டியிருந்தார்கள்.

சிங்களவர்களும் பொங்குவார்களா?

நக்கல்?

Link to comment
Share on other sites

தூயவன் முன்னே சொன்னது போல், தைத்திரு நாள் கணிக்கப்பட்டதே தமிழ்ப்புத்தாண்டிலிருந்துத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்,

தாய் மொழி தமிழை நீச மொழியென்றும் சமிஸ்கிருதத்தை தெய்வ மொழியென்று போற்றும் கூட்டத்தோடு பேசி ஏதாவது பயனிருக்கப்போகிறதா?

தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொன்னவரின் கொள்கையைத் தூக்கிக் கொண்டு திரிந்தால் மட்டும் பலன் இருக்கப் போகுதாக்கும். :D:lol:

Link to comment
Share on other sites

உண்மை தான் இதைப்பற்றி அவர்கள் தயாரித்த குறும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. சனி கிரகத்திற்கு அருகாமையில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில் ஏதோ பேசுவது போல் உள்ளது. இந்து சமயத்தில் சொல்லப்படுபவை அத்தனையும் ஏதோ காரணத்தோடு தான் சொல்லப்பட்டுள்ளன.

சனிபகவான் கொட்டாவி விட்டு இருப்பார். :lol::D:)

சனிபகவான் கொட்டாவி விட்டு இருப்பார். :(:lol::D

அல்லது கெட்ட ஆவிகளின் விளையாட்டாய் இருக்கும். :):(:(

Link to comment
Share on other sites

இஞ்சை புதுசாய் வாற ஆக்கள் இந்த பந்திபந்தியாய் வாற சமாச்சாரங்களை கண்டு பயந்து ஓடீடாதேங்கோ :( உப்புடித்தான் தைப்பொங்கலுக்கு பந்திபந்தியாய் எழுதி சண்டப் பிடிப்பம்.அதுக்குப்பிறகு சித்திரைப்பொங்கலுக்கும் பக்கம்பக்கமாய் எழுதி குத்துப்படுவம். :D

அதுக்குப்பிறகு ஆடிப்பிறப்பு தீபாவளி கந்தசஷ்டி இப்புடியெல்லாம் எல்லாம் வரும் அப்பவும் நாங்கள் இப்புடித்தான் குத்துப்படுவம் அதை விட இன்னொரு விசேசம் மாவீரர் நாளும் வரும் அதுக்கு இந்தவருசம் வித்தியாசமாய் இழுபறிப்படுவம் :lol:

சோ லேடிஸ் அன்ட் ஜென்ரில்மன் நாங்கள் வருசாவருசம் அரைச்ச மாவையேதொடர்ந்து அரைச்சுக்கொண்டிருப்பம் இதை யாரும் கண்டு கண்டுகொள்ளக்கூடாது :D

ஓ இதுவா சங்கதி கு. சா தாத்தா நானும் ஏதோ அறிவுபூர்வமாக கதைக்கீனம் என்று வந்து பார்த்தா ஒரு இலவும் விளங்கவில்லை நீங்க சொன்னா பிறகு நல்லா விளங்குது :) .....அப்ப அரைத்த மாவை அரைப்போம் துவைத்த துணியை துவைப்போம் என்று சொல்லுறியள் சரி அரைகட்டும் அரைகட்டும் :) .....இப்ப அரைத்து பழகினா தானே கல்யாணம் கட்டினா பிறகு ஈசியா இருக்கும் என்ன தாத்தா நான் சொல்லுறது சரி தானே :( ...இப்ப நான் சொல்லுறேன் தீர்ப்பு தமிழர்களின் புதுவருசம் ஏப்பிரல் 1 திகதி (ஆங்கில கலண்டர் படி)...ஏனென்றா அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடி எங்கடை எல்லா பண்டிகைகளையும் புனித நாட்களையும் பண்பாடுகளையும் மட்டந்தட்டி ஒரு மாதிரி அழிச்சுப்போடுங்கோ.

மேலைத்தேயத்திற்கு சோரம் போனவர்களே நாத்தீகவாதிகளே உங்களால் எப்படி எங்கள் கலைகலாச்சாரம் நியதிகளை மாற்றியமைக்கமுடியும்?

பரிணாமவளர்ச்சி எனும் பெயரில் தாயின் மடிசுகத்தைவிட்டு மாற்றானின் மடி சுகத்தை அனுபவிக்க துடிக்கும் முதுகெலும்பில்லா ஜென்மங்கள் :D

Link to comment
Share on other sites

அனைவருக்கும் தமிழ்த் தை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

:( :( :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்( திருவள்ளுவர் ஆண்டு 2039).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

-தஞ்சை நாராயணசாமி

பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் சித்திரை முதல் நாளை ஆண்டு துவக்க நாளாகக் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டிருக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் இந்த நாளை விஷு புண்ணிய காலம் என்பர்.

வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் தெலுங்கு தேசத்தில் ஆண்டு தொடக்க நாளை யுகாதி என்றும் கொண்டாடுகிறார்கள். வருஷப் பிறப்பு என்பது சில தெய்வீகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்ற பண்டிகைகளைப் போன்றே புத்தாண்டு தினத்திற்கும் தெய்வ வழிபாட்டு நியதிகள் உண்டு. தெலுங்கு தேசத்தவர் வருடப் பிறப்பன்று எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தி வடை போளி பாயசத்துடன் சமையல் செய்து பண்டிகை கொண்டாடுவர். கேரளத்தில் முதல் நாள் நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது அய்தீகம். இதை விஷுக்களி காணுதல் என்பர். கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம். வருடத் தொடக்கத்தில் குருவாயூரப்பன் முகத்திலேயே விழிக்க வேண்டும் எனும் ஆவலோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூர்க் கோயிலில் முதல் நாள் இரவில் காத்திருப்பார்கள். காலை 2 மணிக்கு அல்லது 3 மணிக்கு கதவுகள் திறந்ததும் குருவாயூரப்பனை தரிசிக்கும் வழக்கம் இன்றும் உண்டு. தமிழ் நாட்டிலும் புத்தாண்டு தினத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் வழக்கம் பல இடங்களில் உண்டு.

தமிழகத்தில் பரவலாக புத்தாண்டு தினத்தில் வீட்டை மெழுகி கோலம் செம்மண் இட்டு வாயிற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து வழிபடுவதோடு அன்று பூஜையில் புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி வந்து அதற்கும் குங்குமப் பொட்டு வைத்து மலர்சூடி பூஜையை முடித்துவிட்டு பெரியவர்கள் பஞ்சாங்கப் பலனை வாசிக்க மற்றவர்கள் கவனமுடன் கேட்பது வழக்கம்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது அய்தீகம்.

பஞ்சாங்கம் திதிவாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற பஞ்ச அங்கங்கள் சேர்ந்தது பஞ்சாங்கம். இந்த அய்ந்து அங்கங்களையும் பார்த்து அறிவதால் அஷ்ட அய்சுவரியங்களும் பெருகும் என்பது சாஸ்திரங்களின் கூற்று.

திதி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுவது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடைப் பட்ட தூரமே திதி தினமும் திதி பார்ப்பதால் சம்பத்துகள் பெருகும்.

வாரம் பார்த்து அறிவதால் ஆயுள் விருத்தி ஏற்படும்.

நட்சத்திரம் நான்கு பாதங்களுடன் திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் அறிவதால் தீவினைகள் அகலும்

யோகம் சூரியனும் சந்திரனும் சுற்றிக் கொள்ளும்போது ஏற்படுவது யோகங்கள். ஒவ்வொரு யோகத்துக்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தினம் யோக விசேஷன் காண்பதால் பிணிகள் நீங்கும்.

கரணம் திதியில் பாதி கரணம். திதி பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரிய சித்தி உண்டாகும்.

மகத்துவம் மிக்க பஞ்ச அங்கங்களையும் அனுதினமும் வாசித்தலை முதன் முதலாகக் தொடங்கும் நோக்கில் புது வருடத்தன்று வழிபாட்டோடு பஞ்சாங்கம் வாசிப்பார்கள். இது போன்றே புத்தாண்டு தினத்தில் ஏழைகளுக்கு நீர்மோர் விசிறி தானம் செய்வதால் சுபமங்கள வாழ்வு பெறலாம். (தினகரன் அருள்)

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள். சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்பர்.

சித்திரரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.

சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.

சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்தால் என்று தேவி பாகவதம் கூறுகிறது.

சித்திரை பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பூஜையின் போது இந்திரன் சித்திரகுப்தனை வழிபடுவதாக அய்தீகம்.

சித்திரை முதல் தேதி கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற அய்ந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் லட்சுமியின் அருளும் வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும் நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீருவதும் யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும் கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் ஏற்படும்.

(குமுதம் பக்தி ஸ்பெஷல்)

(சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாம். பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் தமிழ் வருடங்களாம். ஒன்று கூட தமிழில் இல்லை. எல்லாம் வட மொழியிலேயே உள்ளன. இதற்கு ஒரு கதை. நாரதன் பெண் ஆசை கொண்டு கிருஷ்ணனிடம் வந்து நீ நிறையப் பெண்களை வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு பெண்ணைக் கொடு என்று கேட்டானாம். நான் எந்த வீட்டில் இல்லையோ அங்கு உன் எண்ணத்தை நடத்திக் கொள் என்றானாம். நாரதன் எல்லா கோபிகைகளின் வீடுகளுக்கும் சென்று பார்த்து எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் இருக்க திரும்பி அவனிடமே வந்து தன் இச்சையைத் தெரிவித்தானாம். கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். அவைதான் பிரபவ முதல் அக்ஷய வரையான வருடங்களாம். ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ் தானே வரும். எப்படி பிள்ளைகள் பிறந்தன? நல்ல வேடிக்கை.

வேறு இடங்களில் புத்தாண்டுகள் வேறு வேறு நாட்களில்தான் உள்ளன. சித்திரை முதல் நாள் புத்தாண்டு அல்ல. தமிழர்களுக்கு புத்தாண்டு ஆரம்பம் தை முதல் நாள்தான். பார்ப்பான் அதில் தன் வேலையைக் காட்டி சித்திரை முதல் நாள் என்றும் 60 ஆண்டுகளும்

12 மாதங்களும் வடமொழியாகவே மக்கள் மனதில் திணித்து நடந்து வருகிறது.

கேரளத்தில் கண்ணாடி பார்ப்பதும் குருவாயூர் கோயிலில் முதல் நாளே சென்று காத்திருந்து குருவாயூரப்பனை வணங்குவதும் பழக்கத்தின் அடிப்படையிலேதான். தமிழ்நாட்டில் வீடுகளில் தோரணம் முதலியன கட்டி அலங்கரித்து வழிபடுவதும் பஞ்சாங்கம் தானும் படித்து மற்றவர்களுக்கும் வாசிக்க வேண்டுமாம். பஞ்சாங்கம் அய்ந்து அங்கங்களாம். திதி பார்த்தால் செல்வம் பெருகுமாம். வாரம் ஆயுள் அதிகரிக்கவும் நட்சத்திரம் தீவினைகள் தீர்க்கவும் யோகம் பிணிகள் நீங்கவும் கரணம் காரிய சித்திக்கும் படிக்க வேண்டுமாம். அதற்காகவே தினமும் பஞ்சாங்கம் படிக்கும் நோக்கில் ஆண்டின் முதல் நாளில் படித்து நலம் அடைய வேண்டுமாம். மக்களின் ஆசையைத் தணிக்க இவை உதவும் என்று பொய் சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்துவிட்டனர். மக்களும் சிந்திக்காமலே பார்ப்பான் விரித்த வலையில் வீழ்ந்து மானமும் அறிவும் அற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த மூடப்பழக்கங்கள் மாறவேண்டும்.

-விடுதலை (13.4.2007)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?

மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?

தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?

உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?

சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.

இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

- வ. வேம்பையன்

- உண்மை(ஜனவரி 16-30, 2007)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, உழவர்களின் பொங்கலைக் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள் இந்த்த திராவிட வாதிகள்.

அவர்களுக்கும், சூரியனுக்கும் கொடுக்கின்ற மரியாதையைக் கெடுக்கப் போகின்றார்கள்.

ஏற்கனவே புதுவருடம் என்று ஒன்று இருக்கின்றபோது, இதை மாற்றுவதன் மூலம், காலங்காலமாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கலின் மரியாதை அழிந்து போய்விடுமா??

அழியத் தான் போகின்றது.

இது புதுவருடமாக மாற்றினால் பொங்கலின் கதி.

இந்த இலட்சண்ததில் தமிழ்ப் பாதுகாவலர்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, உழவர்களின் பொங்கலைக் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள் இந்த்த திராவிட வாதிகள்.

அவர்களுக்கும், சூரியனுக்கும் கொடுக்கின்ற மரியாதையைக் கெடுக்கப் போகின்றார்கள்.

ஏற்கனவே புதுவருடம் என்று ஒன்று இருக்கின்றபோது, இதை மாற்றுவதன் மூலம், காலங்காலமாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கலின் மரியாதை அழிந்து போய்விடுமா??

அழியத் தான் போகின்றது.

இது புதுவருடமாக மாற்றினால் பொங்கலின் கதி.

இந்த இலட்சண்ததில் தமிழ்ப் பாதுகாவலர்களாம்.

சேற்றில் கிடப்பவனுக்கு என்னத்துக்கு ஒரு தனித்துவம்.. அவைக்கு என்று ஏன் ஒரு பொங்கல். நகரத்தில் இருக்கும் நாங்கள் எஜமானர்கள் தீர்மானிக்கிறதுதான்.. அறிவியல்...??! சட்டம், சம்பிரதாயம். அதுதான் நாங்களே மதுபானக் கடைகளைத் திறந்து புதிய தமிழ் கலாசாரம் வளர்க்கிறமே தெரியல்லையா..??! :(:D

அவையும் அவையிட அறிவியலும்.. அங்கால இங்கால போனா திராவிடம் என்றதை விட்டா இவைக்குப் பிழைப்புக்கு வழி கிடையாது. திராவிடத்தை வைச்சு.. அறிவியல் என்று பேசுறதே அறிவிலித்தனம்..! காரணம்.. திராவிடம் என்பதே தமிழரின் தனித்துவத்தை குலைக்க என்று புகுத்தப்பட்ட ஒரு சொல்லே தவிர... அதற்கு அறிவியல் ரீதியான எந்த விளக்கமும் கிடையாது..!

இவர்களால் வலிந்து புகுத்தப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் மக்களுக்குக் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை சேற்றில் கிடக்கும் மக்களுக்கான இப்பெருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடுவனே தவிர... இடையில புகுத்திறதுகளை, அநாவசிய இடைச் செருகல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

இப்படித்தான் இந்து தர்மமும் இடையில் எழுந்த மாற்று மதத்தவராலும் ஆட்சியாளர்களாலும் திரிபுகளை.. இடைச் செருகல்களை சந்தித்து.. அதன் ஆழமிக்கம் ஆன்மீக மெய்யியல் தன்மை மறைக்கப்பட்டு.. அதற்கு தூசண விளக்கம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...! இப்படியான இடைச் செருகல்களை ஏற்றுக் கொள்ள ஒட்டு மொத்த தமிழனும் இழிச்ச வாயல் இல்லை.

உலகுக்கு என்றுள்ள புதிய ஆண்டு ஜனவரி 1 இல் உதயமாகிறது.. அதன்படிதான் உலகமே கருமமாற்றுகிறது. அதைத் தொடர்வோம். அதற்காக அதுதான் தமிழர் புத்தாண்டு என்று வரையறுக்கப் போவதில்லை.

சித்திரைதான் எமது மக்களின் முழு இளவேனில்... அவர்கள் அதில் தமிழ் புத்தாண்டை வரவேற்கட்டும்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்கள் அறிவியல் என்று சும்மா சுத்துமாத்து கட்டுரைகளை கொண்டு வருகிறீர்கள்.

எனவே உங்களிடம் ஒரு கேள்வி.. வள்ளுவர் இத்தனையாம் ஆண்டுதான் பிறந்தார் என்பதை எப்படித் தீர்மானித்தார்கள்..??! எந்த அறிவியல் வழிமுறைகள் அதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கத்தை எங்காவது இருந்து பெற்றுத்தர முடியுமா..???!

வள்ளுவன் என்ற தமிழன் வாழ்ந்தான் என்பது உண்மை. அவன் உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழில் தந்தான் என்பதும் உண்மை. ஆனால் வள்ளுவன் எப்போது எத்தனையாம் மணித்தியாலத்தில் எத்தனையாம் நிமிடத்தில் எத்தனையாம் செக்கனும் பிறந்தான் என்பதை எப்படி அறிந்தனர் என்பதுதான் கேள்வியே..???! :(:D

விகிபிடியாவின் தகவலின் படி.. குறித்த கால இடைவெளிக்குள் வள்ளுவன் பிறந்திருக்க வேண்டும் என்று எதிர்வு கூறப்படுகிறதே தவிர.. அவனின் பிறந்த திகதி நேரம்.. அச்சொட்டாகக் கூறப்படவில்லையே ஏன்..???!

Thiruvalluvar's period (based on the Thirukkural per se) is between the second century BCE and the eighth century CE. [3]

http://en.wikipedia.org/wiki/Thiruvalluvar

Link to comment
Share on other sites

அறுவடை திருநாளில் புத்தாண்டு கொண்டாட தமிழர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை.

இந்துக்களின் 60 வருடங்களில் தமிழ் பெயர் இல்லை என்று கூறும் மேதாவிகளே சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்கள் மட்டும் தமிழ் பெயர்களா? அவையும் வடமொழி பெயர்கள் தான்.

தமிழுக்கென்று எத்தனையோ பெருமைகள் உள்ளன. ஆனால் உங்கள் பொய்யாலும் புரட்டாலும் இல்லாதை இருப்பதாக கூறுவதால் தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லை. சேறு பூசுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தமிழ் ஆண்டுகள் மட்டும் அல்ல, தை, மாசி, பங்குனி முதலிய மாதங்களின் பெயரும் புதன், சனி போன்ற கிழமைகளின் பெயரும் சமஸ்கிருத சொற்கள் தான் ஐயா?

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா?

நாடார் சங்கத்தையும், வன்னியர் சங்கத்தையும் ஒன்று சேர்த்து தமிழர் சங்கம் செய்யுங்கள். அதற்கு ஒரு தமிழனை தலைவன் ஆக்குங்கள். இன்னும் எத்தனை நாளைக்கு நாடான் என்றும் வன்னியன் என்றும் தமிழனை கூறு போட்டே வயிறு வளர்க்கப் போகிறீர்கள். இதில் உங்களை போன்றவர்களுக்கு பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு பட்டம் வேறு

அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை?
சமஸ்கிருத சொற்களாக தை, மாசி, பங்குனி, போன்ற மாதங்களின் பெயரும் புதன், சனி போன்ற கிழமைகளின் பெயரும் இருப்பதை நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை.

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

ஐயா பெரியவரே மஞ்சை வசந்தன்! வசந்தன் என்ற உங்கள் பெயர் கூட சமஸ்கிருத சொல் தான். அது மட்டும் எப்படி உங்களுக்கு அவமானத்தின் அடையாளமாகத் தெரியவில்லை!

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

என்ன சித்திரை முதல் நாள் புத்தாண்டாக கொண்டாட எந்த அடிப்படையும் இல்லையா :( ? vernal-equinox, sidereal days போன்ற வானியல் நிகழ்வுகளை பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுபோன்ற கட்டுரைகள் எழுத முன்பு கொஞ்சம் வானியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தெரியும் சித்திரைக்கும் தமிழர்கள் வாழும் புவி மத்திய கோட்டை அண்டிய அயணமண்டல பிரதேசங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

:(:(:(

ஐயா பெரியவரே! இந்த ஆங்கில புத்தாண்டுக்கும் தை பிறப்புக்கும் இடையிலான 12 நாள் வித்தியாசம் எல்லாம் 2 செப்டெம்பர் 1752 இல் இருந்து தான். அதற்கு முன் பிரிட்டிசாரின் வழக்கிலிருந்த ஜூலியன் கலண்டருக்கும் தை பிறப்புக்கும் கிட்டத்தட்ட 23 நாள் வித்தியாசம் வரும்.

ஜூலியன் கலண்டரில் இருந்து பிரிட்டிசார் தற்போதை கிரகோரியன் கலண்டருக்கு மாறிய 2 செப்டெம்பர் 1752 அன்று 11 நாட்களை கூடுதலாக சேர்த்து 2 செப்டெம்பர் 1752 இன் அடுத்த நாளை 14 செப்டெம்பர்1752 ஆக மாற்றியதை அறிவீர்களா? எதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல், கேள்விகள் எதுவும் கேட்காமல் வாசிக்க சில அப்பாவிகள் கிடைப்பார்கள் என்ற தைரியத்தில் கையில் பேனை கிடைத்ததும் நினைத்ததை எல்லாம் கிறுக்கித் தள்ளுவது தான் பகுத்தறிவா? :(

இவ்வளவு தப்பும் தவறுமாக எழுதிவிட்டு உங்கள் கட்டுரையை "அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு" என்று அழைக்கிறீர்கள். இதை எங்கு போய் சொல்வது? :D

Link to comment
Share on other sites

வெற்றிவேல்!

இன்றைக்கு எங்களுடைய பெயர்களும், எங்களுடைய கொண்டாட்டங்களும், எங்களுடைய மாதங்களும், வருடங்களும் எதுவுமே தமிழ் இல்லை என்று எமக்குத் தெரியும்.

ஆனால் வருகின்ற தலைமுறைகளாவது தமிழர்களாக வாழட்டும் என்று போராடுகின்றோம். அதன் ஒரு வடிவம்தான் மத சார்பற்ற நிகழ்வான தைப் பொங்கலை தமிழர் புத்தாண்டு என்று பிரகடனப்படுத்தும் முயற்சி.

இன்றைக்கு பல தமிழர்கள் தைத் திருநாளை புத்தாண்டாக மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றர்கள்.

ஏப்ரல் 14 இல்லாது போய்விட்டால் தங்களுடைய ஒரு நாள் பிழைப்பு இல்லாது போய்விடுமே என்று பார்ப்பனர்கள்தான் இதைத் தடுக்க துடியாய் துடிக்கின்றார்கள்.

தைத் திருநாளே தமிழர்கள் கொண்டாடக் கூடிய புத்தாண்டு

அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்பதில் கந்தன் அப்பு என்பது கூட, ஸ்கந்தன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாகும். பெயர் வைத்திருப்பதில் தவறு என்று சொல்லவில்லை. ஆகலும், நுணுக்கம் பார்க்கப் போனால் தமிழன் என்று யாருமே கிடைக்கப் போவதில்லை.

ஏப்ரல் 14ம் திகதியை அழிப்பது மட்டுமல்லாமல், தைப் பொங்கலையும் அழிக்கவல்லவா முனைகின்றனர் இந்தத் திராவிட வாதிகள். தைப் பொங்கல் எதற்காகக் கொண்டாடுகின்றோம் என்ற நோக்கம் அழிந்து போய், கடைசியில் புதுவருடம் என்ற போலித்தனத்தை அதற்குள் புகுத்தி எல்லாத் தமிழரின் அடையாளங்களையும் சிதைக்க முனைகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.