Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

நடுநிசி எலிகள்..
எல்லோரும் தூங்கிய பின்
சமையலறைக்குள் நுழையும்..
பிடித்ததெல்லாம்
பிரியமாய் தின்னும்..
வந்த தடம் தெரியாமல்
மீண்டும் தூங்கச்செல்லும்...
புத்திசாலி எலிகள் பற்றி
கண்டுகொள்வதில்லை
ஒவ்வொரு வீட்டு அம்மாக்களும்..

 

அதிகாலை ..
அழகான கனவு ..
புல்லின் மேல் பூக்கள் ஆடும் பொழுது...
தெளிந்த வானம் பார்த்து சுகந்து கிடக்க ..
கால்களில் சலனம் ..
கீழே பாக்கிறேன் ...
புல் எல்லாம் கட்கள் ஆகும் அதிசயம் ...
எழுந்து பாக்கிறேன்
பஞ்சு மெத்‌தை கூட பாறயை போல் ..

மீன்கடைகாரர் தந்த
பாக்கிபண
நோட்டில்..
சந்தனச்சுவடுகள்..
கோவில் ஐயரிலா
ஐயம்கொள்வது?

 

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயரில் ஐயம் வேண்டாம்

அன்பரே - அம்பாளுக்கு

அர்ச்சனை செய்த அஞ்சுகம்

அப்படியே மீன் வாங்கி

போயினள் காண்...!

Link to comment
Share on other sites

On 1/17/2016 at 10:48 AM, suvy said:

ஐயரில் ஐயம் வேண்டாம்

அன்பரே - அம்பாளுக்கு

அர்ச்சனை செய்த அஞ்சுகம்

அப்படியே மீன் வாங்கி

போயினள் காண்...!

:rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீருக்கும் மண்ணுக்கும்
நெருப்புக்கும் காற்றுக்கும்
இரையாகும் உடலே 
உனதும் எனதும்...

நான் கோடி ஆண்டுகளும்
நீ கோடி ஆண்டுகளும் 
வாழ்வதுமில்லை..

வீழவைக்க நினையாது
வாழவைக்க பார்க்கலாமே..
மகிழ வைத்து புன்னகையை ரசிக்கலாமே
உண்ணவைத்து நெஞ்செல்லாம் நிறையலாமே..
துயர்கள் துடைக்க கைகள் முன்வரலாமே..
வன்மம் அழிய அன்பு பரவலாமே

மறந்தும் மன்னித்தும்
மனிதனாய் வாழலாமே..

Link to comment
Share on other sites

இருள் மூடி
பொருள் தேடி
அருள் நாடி நின்றே

குறை கண்ட
நிறை கொண்ட
சிறை மீண்ட பின்னே

சிலை போல
நிலை வாழ
கலை சூழ நானே

எனை மாற்றி
தமிழ் ஊற்றி
ரசிக்கின்றாய் மானே..

 

 

Link to comment
Share on other sites

பிறர் அழத் தானுமழுது
பிறர் சிரிக்க தானும் சிரித்து
பெண்ணுக்கு பெண்ணாகி
ஆணுக்கு ஆணாகி
குழந்தைக்கு குழந்தையாகி
ஊர் தூங்கப் போனபின்னும்..
தான் தூங்கப்போவதில்லை
இந்த நிலைக் கண்ணாடி..

 

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

ஒரு பூங்காவை விட்டுவிட்டு
காணாமல் போனாய்
நினைவுகளின் நறுமணத்தில்
மயங்கி கிடந்தவன்-எழுந்து
பார்க்கிறேன்..விரல்களில்
நகங்கள் முட்களாய்..
ரோமங்கள் வெண் புட்களாய்..
நான்..சருகுகளோடு சருகாய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

அசத்துறீங்கள் விகடகவி....!

Link to comment
Share on other sites

13 hours ago, suvy said:

கண்ணிருந்தும் ஒளியில்லா..
காதல் ஒரு மாயைகாடு
அறிவிருந்தும் சொல்கேளா
இளமை ஒரு எருமைமாடு

 

அசத்துறீங்கள் விகடகவி....!

நன்றி.

Link to comment
Share on other sites

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்பாய்

நீ வேண்டியது வார்த்தையல்ல

வாழ்க்கையென்று ஏன்

சொல்லவில்லை?

 

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்டாய்

நீ கேட்டது

கருத்தை அல்ல

காதலை என்று

ஏன் சொல்லவில்லை?

 

கவிதை வேண்டும்

கவிதை வேண்டும்

என்று கேட்டாய்

நீ யாசித்தது

எழுத்தையல்ல

என்னையென்று

ஏனடி சொல்லவில்லை

 

முட்டாள் இவனுக்கு

மூவாறு தை முன்னே

தெரிந்திருந்தால்

சுபம் விழுந்திருக்கும்

இவன் கிறுக்கல் ஆர்வத்திற்கே!

Link to comment
Share on other sites

  • 1 month later...

அச்சம்..மடம்...நாணம். பயிர்ப்பு..

முன்னோர்கள் நான்கு பக்கம் எழுப்பிய சுவர்களுக்குள்

ஆண்களை மகிழ்விக்கும்

உன் புற அழகை பூசி மெருகேற்றும் பெண்ணே..
ஆண்கள் வர்க்கத்தையே

வெட்கப்பட வைக்கும்

வெறியர்களை வீழ்த்த

வீரம் கற்றுக்கொள்..


உன்னை உயர்த்தும்

கலையை கற்றுக்கொள்..


நீயே ஆளலாம்

நீதியை கற்றுகொள்..


பூமியை ஆளலாம்

புன்னகை கற்றுக்கொள்..

 

அம்மாவாய்..அக்காளாய்..தோழியாய்..

காதலியாய்..மனைவியாய்..மகளாய்..

உறவுகளாய்..ஆணின் வாழ்வில்

அர்த்தங்களாய் நிறைந்த பெண்கள் வாழ்க.

Link to comment
Share on other sites

காலையிலும் தூங்குகிறாய்
கனவுகளை வாங்குகிறாய்..
கண்களை நான் திறந்தபின்னும்
காற்றலையில் நீந்துகிறாய்
ஏழைமகன் குடிசையிலே
பொன்மகளே உலவுகிறாய்..
ஏக்கங்களை மூடிவைத்தேன்..
புன்னகையில் பூட்டுடைத்தாய்

Link to comment
Share on other sites

  • 4 months later...

திரும்பி பார்க்கின்ற
கணங்களை
திருப்பி பார்க்கின்றேன்..
திருத்தி எழுதப்படாமல்
எழுத்துப் பிழைகள்
நிறைந்த
என் காப்பியத்தின்
கதாநாயகி
ஒரு கோழை..

Link to comment
Share on other sites

முகமூடியை தொலைக்கின்ற
போதெல்லாம்
தோற்பதனாலோ என்னமோ
கழற்ற மறுத்து..நிஜமுகம்
மறந்து நிற்கிறேன்..
என் நண்பனும்..
என் சகோதரனும்..
என் அம்மையப்பனும்
என்னாசானும்..
என் உறவுகளும்
உற்றவரும்
கொண்டாடிய..நானா
மாறிப்போய் நிற்கிறேன்..
வெற்றி என்ற வெற்றிடத்துக்காக..

எல்லாம் இழந்தபின்
தான் எதுவோ கிடைக்குமென்றால்..
தோல்விகளை சுகந்து
நான் நானாகவே
இருந்திருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கஜந்தி said:

அருமை!!! நல்லகவிஞ்ஞன் ஒய்வில்ல அலைகள் போன்றவன்!!!

நல்ல கவிதையை ரசிக்க ஆட்கள் இல்லை  
அது நவீன நேரம் போகும் உலகில் போய்க்கொண்டிருக்கிறது :unsure:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நீரில் நாம் மூழ்குவதற்கும்..
தீயில் நாம் மாய்வதற்கும்..
முன்னோரே..காரணம் என்று
நாளையும் சொல்வார்கள்..
நம் சந்ததிகள் !!

Link to comment
Share on other sites

சாரல் நனைத்த..
மழை ரசித்த..அவள்
நிலா முகத்தின் ஈரம்
தசாப்தங்களாய்
இன்னும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
எனக்குள்!

Link to comment
Share on other sites

மனிதன்..
உணர்வுகளற்ற
இயந்திரனாக
மாறிக்கொண்டிருக்க
நேரம்தான் காரணமாம்..
பாவம் கடிகாரம் மட்டும் 
இப்போதும்..
அப்போதும்..
ஒரே வேகத்திலேயே
ஓட ?
 

 

Link to comment
Share on other sites

கொஞ்சம் மழை..
கொஞ்சம் வெயில்..
நிறைய பாசம்..
குறைய பேசும்
இன்றைய வாழ்க்கை!!

Link to comment
Share on other sites

அறிவு வளர்ந்தபின்..
அறிந்த மதங்களை
கொண்டாடும் மனிதா..
உன் போலவே
ஊனோடும் உணர்வோடும்
உயிர்வாழும்-சக 
மனிதனை கொண்டாட
மறந்தாயே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலிக்காமல் எழுதும் கவி நம்ம விகடகவி.tw_thumbsup:
தொடருங்கள்....தொடர்ந்து வாசித்து வருபவன் நான்.,

Link to comment
Share on other sites

  • 1 month later...

காற்றின் பலாத்கார
கரங்களில்..
துகிலிழந்த மரங்கள்...
சிந்தும் கண்ணீரில்
நிறைந்த பள்ளங்களை..
பார்த்து பரிகசித்து
நகர்கின்றன..
வில்லத்தனத்துடன்
கறுப்பு மேகங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றைத் துச்சாதனனாக்கி கார்மேகத்தை ரகுவரானாக்கும் வித்தகர் நீங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.