Jump to content

ஆதரவு கேட்கும் ராமேஸ்வரம்


AJeevan

Recommended Posts

அடடா.. ஈரம்.. வெளிவந்து ஒரு வருடமாகிறது... ஆனால் எனக்கு இதுவரை தெரியாதே.. ஒன்றை உருவாக்கும்போது எவ்வளவு உழைக்க வேண்டுமோ.. அதேபோல அதை பிரச்சாரப்படுத்தவும் ஒரு உழைப்பாளி கிடைக்கவில்லையா..

எனக்கு ஒரேயோரு இறுவட்டை அனுப்பினால், அதற்கான செலவை அனுப்புவேன். மற்றும்படி, மற்றவர்களுக்கு விற்பது வாங்குவது போன்ற திறமை என்னிடம் இல்லை.. :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

நன்றி சுகன்.

சோழியன் பிரச்சனை கிடையாது.

அனுப்புகிறேன்.

இந்தியா - சிங்கை - மலேசியா ஆகிய நாடுகளில்

நண்பர்கள் இறுவட்டு வெளியீடு செய்ய இருக்கிறார்கள்.

ஒரு விடயத்தில் கவனம் தேவை சோழியா? :unsure:

தனியே எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

சில சின்ன பிரச்சனைகளை

நெடு தூரம் என்று விவாதித்தால்

நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருக்க முடியும்.

பல வேளைகளில் நாமே நமக்கு எதிரி.

வேறு யாருமில்லை?

உதாரணமாக

இலங்கையில் உள்ள பலருக்கு

இந்த யுத்தம் எதுக்கென்றே தெரியாது?

நாமே அப்படி இருக்கும் போது

அடுத்தவர்களை நொந்து ஒரு பயனுமில்லை.

நாம் ஒருவருக்கு உதவினால்தான்

மற்றவர் நமக்கு உதவுவார்.

ஒருவன் தன்னால் முடிந்த விதத்தில்

உதவ நினைக்கும் ஒருவனை

அதைக் கூட செய்யவிடாது தடுத்துக் கொண்டே

உதவவில்லை என்பது

நாம் செய்யும் பெரும் தவறு!

இலங்கையில் இருந்து எத்தனை தமிழ் படங்கள் உருவாகின்றன?

சிந்தித்தால் வருடத்தில் ஒன்று கூட இல்லை.

நம்மவரால் அதை எப்போது செய்ய முடியும் என்று வருகிறதோ

அன்று அதை பார்ப்போம்?

இந்திய சினிமாவை தடுப்பதால்

எதையும் யாராலும் சாதிக்க முடியாது.

கலை வேறு

அரசியல் வேறு

மக்கள் வேறு

அரசியல்வாதிகள் வேறு

எல்லாவற்றையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது.

புலம் பெயர் நாடுகளில் வந்த

தொலைக் காட்சிகள்

புலம் பெயர் கலைஞர்களை வளர்க்கவேயில்லை.

அது அனைவருக்கும் தெரியும்.

முதலாளிகளும் வால் பிடித்தவர்களுமே வளர்ந்தார்கள்.

என்ன?

அவர்கள் கூட

தமிழக நிகழ்வுகளைத்தான்

கொட்டினார்கள்.

நம் கலைஞர்களை எத்தனை சதவீதம் எட்டிப் பார்த்தார்கள்?

இன்றும் இந்திய நிகழ்ச்சிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிகள் கூட இல்லாவிட்டால்

தொலைக்காட்சியில் வானோலி நிகழ்ச்சிதான் நடத்த வேண்டும்.

அதற்கும் அவர்களது பாடல்களைத்தான் ஒலிக்க வைக்க வேண்டும். :lol::lol:

நமது அனைத்து படைப்புகளையும்

ஒன்றாக சேர்த்தால் கூட

ஒரு மாதம் கூட தொடர்ந்து நிகழ்ச்சிகளை தர முடியுமோ நானறியேன்? :unsure:

புலம் பெயர்ந்தவர்கள்

நிகழ்வுகள் எதுவுமே தரமாக வர வாய்ப்பில்லை.

காரணம்

இங்கு செலவு செய்யும் தொகையில்

1 சதவீதம் கூட இங்குள்ள தொலைக் காட்சிகள் தராது.

அண்ண

நீங்க செய்ற புரோகிராம் எல்லாம் பார்க்கிறன் சுப்பர் என்று

காக்கா வடைக் கதை போல ஏதாவது நரித்தனம் பண்ணினால்தான் வரும்.

தொலைக் காட்சிகளில் என் நண்பர்கள் இருக்கிறார்கள்.

அதற்காக நான் பொய் பேசுவதில்லை.

அவர்களிடம் எழுதுவதை விட திட்டுவது அதிகம்.

அவர்களும் என்ன பண்ண

அதிபர்கள் கருணை காட்ட வேண்டும் என்கிறார்கள்.

நான் எப்பவோ

தமிழ் படைப்புகளை விட்டு

ஜெர்மன் படைப்புகளுக்கு போய் விட்டேன்.

நான் இருந்தால்தான்

கலையும் கத்தரிக்காயும்.

தமிழ் என்றால் சட்டி எரியாது

முடிதான் இன்னும் கொட்டும்? :lol:

.

இவை எல்லாம் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

என் அனுபவத்தில் பேசுகிறேன்.

இது பொய்யல்ல : உண்மை.

வட்டங்களுக்குள் இருப்போர் அழிந்தே போவார்கள்.

அதை எவராலும் தடுக்க முடியாது.

அது குறித்து கவலைப்படக் கூடாது.

முதலில் தரமான படைப்புகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் வழியை தேட வேண்டுமே தவிர

எதற்கெடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டால்

நாம்தான் முட்டி மோதிக் கொள்வோம்.

ஆணிவேரில் முக்கிய பங்காற்றியவர்கள்

இந்தியர்கள்தானே?

ஏன் அதற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கவில்லை.

மரண பயம்தானே?

உங்கள் வீட்டில் வானோலியில்

இந்திய இசை கேட்டால் நிறுத்தி விடுங்கள்.

நாம் வணங்கும் தெய்வத்தை தூக்கி எறிந்்து விடுங்கள்

நமக்கென்று தெய்வங்கள் உருவாகும் வரை?

மன்னிக்கவும்

உண்மை பேசுவதற்காக.................

நன்றி!

முதலில் நீங்கள் ஒரு மட்டுறுத்துனர் இல்லையென்று மறுக்கமுடியுமா?

உங்கள் கருத்துக்கு எதிராக வந்த ரிசானாவின் விடயத்தில் உங்கள் கருத்துக்கு எதிராக வந்த கருத்துக்களை நீங்கள் அகற்றவில்லையா?

சரி நீங்கள் அகற்றவில்லையென்றால் அந்த கருத்துக்களை மீண்டும் இணைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளமுடியுமா உங்களால்?

சாதாரணமான யாழிலையே கருத்து சுதந்திரம் இலலையென்றால் தொலைக்காட்சிகளில் எப்படி எதிர் பார்க்கமுடியும்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதே ஒரு கலைஞனுக்கு அழகு. விவாதம் என்று வந்துவிட்டால் மட்டுறுத்துனர் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விவாதிக்க வரக்கூடாது.

எந்த ஒரு கலைஞனும் நான் தரமானவன் என்று கூறிக்கொள்ள கூடாது. என்னால் ஏன் முடியவில்லை என்று ஆராய வேண்டும். விவாதத்திற்காக உருவாக்கப்பட்ட யாழ் களத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை. காரணம் இங்குள்ள மட்டுறுத்துனர்களுக்கு அளவுகோல் தெரியாது. அதுபோல்தான் தொலைக்காட்சிகளிலும்.

புத்திசாலி ஜெயித்துவிடுகன்றான்.

மன்னிக்கவேண்டும் உண்மையை எழுதியதற்கு

ஒரு வேண்டுகோள்.

எந்த ஒரு மேதாவி மட்டுறுத்துனராவது இந்த கருத்தை உடனடியாக அகற்றிவிடுங்கள்

Link to comment
Share on other sites

முதலில் நீங்கள் ஒரு மட்டுறுத்துனர் இல்லையென்று மறுக்கமுடியுமா?

உங்கள் கருத்துக்கு எதிராக வந்த ரிசானாவின் விடயத்தில் உங்கள் கருத்துக்கு எதிராக வந்த கருத்துக்களை நீங்கள் அகற்றவில்லையா?

சரி நீங்கள் அகற்றவில்லையென்றால் அந்த கருத்துக்களை மீண்டும் இணைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளமுடியுமா உங்களால்?

சாதாரணமான யாழிலையே கருத்து சுதந்திரம் இலலையென்றால் தொலைக்காட்சிகளில் எப்படி எதிர் பார்க்கமுடியும்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதே ஒரு கலைஞனுக்கு அழகு. விவாதம் என்று வந்துவிட்டால் மட்டுறுத்துனர் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விவாதிக்க வரக்கூடாது.

எந்த ஒரு கலைஞனும் நான் தரமானவன் என்று கூறிக்கொள்ள கூடாது. என்னால் ஏன் முடியவில்லை என்று ஆராய வேண்டும். விவாதத்திற்காக உருவாக்கப்பட்ட யாழ் களத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை. காரணம் இங்குள்ள மட்டுறுத்துனர்களுக்கு அளவுகோல் தெரியாது. அதுபோல்தான் தொலைக்காட்சிகளிலும்.

புத்திசாலி ஜெயித்துவிடுகன்றான்.

மன்னிக்கவேண்டும் உண்மையை எழுதியதற்கு

ஒரு வேண்டுகோள்.

எந்த ஒரு மேதாவி மட்டுறுத்துனராவது இந்த கருத்தை உடனடியாக அகற்றிவிடுங்கள்

நான் எங்கும் மட்டுறுத்துனர் இல்லை.

அதை அவர்களிடம் கேளுங்கள்.

ஒரு முறை கேட்டார்கள்.

அதுவும் குறும்பட பகுதிக்கு

நான் மறுத்தது அவர்கள் அறிந்ததே.

மட்டுறுத்துனராக இருந்தால்

நான் இங்கு கருத்தே எழுத மாட்டேன் :lol:

அது அனைவரும் அறிந்ததே!

எழுதுவதிலும் ஒரு வகை உண்டு.

யதார்த்தத்தை எழுதும் விதத்தில் எழுதினால்

யாரும் நிச்சயம் தூக்க மாட்டார்கள்.

களத்துக்கும் பிரச்சனை இருக்கிறது.

அது தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

எனவே கவனம் தேவை என்பது நியாயம்.

எனது கருத்துகளும் தூக்கப்பட்டிருக்கின்றன.

அது சரி என்பதால் ஏற்றுக் கொள்கிறேன்.

என் நண்பர்கள் எங்கும் இருக்கிறார்கள்.

எதிரிகள் என்போர் கூட என் நண்பர்களாவதுண்டு.

நான் சொல்வது ஆரம்பத்தில் கோபத்தை பலருக்கு வரவழைத்தாலும்

அவர்களே பின்னர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

புத்திசாலியை விட கூழைக் கும்பிடு போடுபவன் ஜெயிக்கிறான்.

இது பார்க்க கூடியது.

ஆனால் அது தொடராது.

இதுவே உண்மை.

என்னை சந்திப்போரிடம்

இதை விட மோசமாக

நேரடியாக கருத்துகளை வைக்கிறேன்.

ஆனாலும் என்றும் அவர்கள் என் நண்பர்களாக இருக்்கிறார்கள்.

நான் பேசுபவற்றை கேட்ட ஒரு தொலைக்காட்சி நிலையத்தார்

நீங்கள் ஒரு படம் செய்தால் கூட உதவ மாட்டோம் என்றார்.

பணம் கொடுத்து விளம்பரம் தந்தாலும் போட மாட்டீர்களா என்றேன்?

விளம்பரமாக தந்தால் போடுவோம் என்றார்.

பணம் பிணத்தையும் வாய் திறக்க வைக்கும்.

சுவிஸ் விளம்பரங்கள் நான் செய்பவை அதிகம்.

நிறுவனங்கள் என் நண்பர்களுடையது.

பணத்தை விட 17 வருட நட்பு பெரிது.

http://www.anischag.com/house.html

http://www.anischag.com/

இதுதான் நிலமை .............

நன்றி வன்னியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களை மறக்க முடியவில்லை - ஜீவா

ஒரு கலை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்ற நடிகர் ஜீவாவை, கொழும்பு ஏர்போர்ட்டில் வழிமறித்து பாராட்டு மழையில் நனைய வைத்தார்களாம் இலங்கை தமிழர்கள். 'ஈ', 'ராம்' படங்களை பற்றி பேசினாங்க. கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களையும் சந்தித்தேன். இப்ப நான் நடித்துள்ள 'ராமேஸ்வரம்' படம் பற்றி ரொம்ப நேரம் பேசினாங்க. அவங்களோட ஆதங்கம், ஏக்கம், சொந்த ஊர் பற்றிய சோகம்... போன்றவற்றையெல்லாம் என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க. 'இராமேஸ்வரம்' படத்தோட பாடல்கள் வெளிநாடுகளில் அதிகமா விற்பனையாயிருக்கு என்கிறார் இப்படத்தில் அகதியாக வரும் ஜீவா.

- நக்கீரன்

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா,நான் இருக்குமிடத்தில் அவ்வளவு தமிழர்கள் இல்லை.என்ற போதும் உங்களின் முதல் 5 தொகுப்பு டிவிடிக்களை வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.